Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 30 டிசம்பர், 2010

புதன், 29 டிசம்பர், 2010

முத்தரையர் சுரேஷ் தனது facebook ல் பதிவு செய்தது

Muthirayar Suresh
facebook

இனத்தை வெளிபடுதலமா?
11 மணி நேரம் முன்பு ·விருப்பம்விருப்பமின்மை · கருத்து · (1) பின்னூட்டங்களை பார்வையிடுகபின்னூட்டம் (1) மறை



Muthirayar Suresh எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்நது கொள்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு எனபனி நிமதமாக ஒருநிறுவனத்துக்கு சென்று இருந்தேன் .



அதில் ஒரு எடு படி செய்யும் ஒரு முதியவரை பார்த்து எனிடம் என் நண்பர் கூறினார், இவர் உங்கள் ஏரியா என்றார். பிறகு ...நான் ஓய்வாக இருக்கும் போது அவரிடம் நலம் விசரிதன் அவர் எனிடம் நீங்கள் எந்த சாதி என்றார் . நான் அம்பலக்காரர் என்று கூறினேன்



அதற்கு அவர் உங்கள் இனத்தில் உங்களை போல் படித்தவர் இருகிறர்களா என்று வியந்தார்.



எனக்கு கோவம் வந்தது .பிறகு நினைத்தேன். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று.



என்னெனில் அதே நிறுவனத்தில் நம் இனத்தவர் உயர் அதிகாரியாக இருக்கிறார், எனக்கு தெரியும். அவருக்கு தரியவில்லை!



காரணம் நம் இனத்தவர் உயர்ந்த இய்டதிற்கு சென்ற பிறகு வேறு ஒரு சாதியை சொன்னால் தான் மதிப்பு என்று நினைகிறார்கள்



இதன் காரணமாக நாம் சிருமைபடுகிறோம்



நாம் நமைபற்றி உண்மை சொல்வதே , நம் இனத்துக்கு செய்யும் உதவி .



நாம் யோசனைபன்ந தேவைeல்லை எல்லா ஊர், நகரம், மற்றும நிருவனங்களில் நம் இனத்தவர் இருகிர்ரர்கள். நாம் திஎரியமாக நம்மை வெளிபடுதல்ம்.



இதன் மூலம் நாம் நம் இனத்தவரை அடையாளம் காணமுடியும் ,மற்ற நம் சகோதர இனத்தவரும் நமைபற்றி உயர்வாக நினப்பார்கள..........

சனி, 25 டிசம்பர், 2010

இன்று குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் சேவை சாதிப்பு- தினமலர்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் இன்று தோன்றி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.



ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த ஆறாம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கடந்த 17ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சொர்க்கவாசலை தரிசித்தனர்.



தற்போது, ராப்பத்து விழா நடந்து வருகின்றது. விழாவின், எட்டாம் நாள் விழாவான வேடுபறி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் மாலை 4.30 மணிக்கு சந்தன மண்டபத்தில் இருந்து புறப்படுகின்றார். மாலை 5.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் வையாளி கண்டருள்கிறார்.



முத்தரையர் குல மரபில் வந்தவரும் ஆழ்வார்களில ஒருவருமான திருமங்கை ஆழ்வார் கோவில் திருப்பணி செய்வதற்காக வழிபறியில் ஈடுபட்டு வந்தான். இதை தவறு என்று உணர வைக்க மகாவிஷ்ணு திருமங்கை முன் தோன்றி ஞானம் பெற்ற நிகழ்ச்சியும் ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010,03:00 IST


இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீரெங்கநாதர், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அலங்காரம் அமுது செய்யதிரையும், அரையர் சேவையும் நடந்தது. உபயக்கார மரியாதைக்கு பிறகு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.



ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்



மூலவர் : நரசிம்மர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருக்குறையலூர், சீர்காழி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு




பாடியவர்கள்:

-


திருவிழா:

நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி


தல சிறப்பு:

நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர் - 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.


போன்:

+91- 94435 64650, 94430 07412.


பொது தகவல்:

சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு இத்தலத்தின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.இதன் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர்.குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.




பிரார்த்தனை
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.



தலபெருமை:
தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.அமாவாசை நாட்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார், வைணவ ஆச்சாரியார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.




தல வரலாறு:

சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

ஆழ்வார் அவதார தலம்: திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதி அகோபிலம்: தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். "திருப்பல்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும். மிகவும் பழமையான இத்தலத்தை "ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம க்ஷத்திரம் என்பதால் "தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள்.பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.




சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.



நன்றி: தினமலர்

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில்



மூலவர் : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர் : திருவாலி நகராளன்
அம்மன்/தாயார் : பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : இலாட்சணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆலிங்கனபுரம்
ஊர் : திருவாலி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

மங்களாசாஸனம்
குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை உரையாயே.

-திருமங்கையாழ்வார்



திருவிழா:

வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று


திறக்கும் நேரம்:


காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்


போன்:

+91-4364-256 927, 94433 72567


பொது தகவல்:

இத்தலத்தை சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன். திருநகரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன.

இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும். இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.




பிரார்த்தனை
ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


தலபெருமை:
பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.



தல வரலாறு:
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

நன்றி: தினமலர்

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்



மூலவர் : பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர் : பத்தராவிப்பெருமாள்
அம்மன்/தாயார் : என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
தல விருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : வருண புஷ்கரணி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தின்னனூர்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்


ஏற்றினை இமயத்து ளெம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய கூற்றினை குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினைப் புணலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்.

-திருமங்கையாழ்வார்


திருவிழா:

பங்குனியில் திருவோண விழா, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருநட்சத்திரங்கள், சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.

தல சிறப்பு:

குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.


திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் -602 024 திருவள்ளூர் மாவட்டம்

போன்:

+91- 44-5517 3417


பொது தகவல்:

இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இங்கு பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் உத்பல விமானம். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சமுத்திரராஜன், வருணன் ஆவர்.

பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்கள் ஆகும்.



பிரார்த்தனை

திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.


ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.



நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

பெயர்க்காரணம்: பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு "திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் "திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், ""பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றான். அதற்கு பெருமாள், ""நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்''என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே "என்னைப்பெற்ற தாயார்' எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்''என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்' ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே' என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயில் அமைப்பு: விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.




தல வரலாறு:

திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக சென்றார். ஆனால், இத்தலத்தை பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். "நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே' என்று பாடினார் ஆழ்வார்.


இதன் பொருள்: "எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்' என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார். பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,""என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?'' என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.


நன்றி: தினமலர்

அ.தி.மு.க. Vs முத்தரையர்கள்! -பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டப் புயல்!




மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அடுத்தடுத்து ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட¢டங்களை நடத்திவரும் ஜெயலலிதா... அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையைக் கண்டித்து, பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட¢டம் என அறிவித்தார்.

அறிவித்த சில நாட்களிலேயே அதிரடியாக ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்யுமாறு ஜெயலலிதா உத்தரவிட, பட்டுக்கோட்டை அ.தி.மு.க.வினரிடையே குழப்பத் தீ!

ஆர்ப்பாட்ட அறிவிப்பு... ஆர்ப்பாட்ட ரத்து... இதற்கு இடையே என்ன நடந்தது என அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.




‘‘தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.செந்தில். இவர் கழக பணியாற்றாமல் அடிதடி, கட்ட பஞ்சாயத்து, கூலிக்கு ஆள் அனுப்புவது, கட¢சியில் கழக பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் வசூலிப்பது என கட்சிக்கு விரோதமான போக்கில் செயல்பட்டு வந்தார்.

இதனாலேயே இவர் ஒன்றியச் செயலாளராக உள்ள மதுக்கூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வசமிருந்த சேர்மன் பதவி பறிபோய்விட்டது. மதுக்கூர் காவல்நிலையத்தில் ரவுடிகள் லிஸ்டில் இவரது பெயர் முதலில் உள்ளது. மாஜி அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கில் காவல்துறை இவரை விசாரணைக்கு அழைத்தது. அப்போது காவல் துறைக்கு ஒத்துழைக்காமல், காவல்துறை தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக புகார் கூறினார். மேலும், எங்கள் தலைமைக்கு உண்மைக்கு புறம்பான தகவலைச் சொல்லி தனக்கு நெருக்கமான மன்னார்குடி வகையறாக்களின் முக்கிய புள்ளியின் மூலம் பட்டுக்கோட்டையில் 21.11.2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் தேதி வாங்கிவிட்டார்.





இந்த அறிவிப்பைக் கண்டதும் அ.தி.மு.க.வில் பெரும்பகுதி வாக்காளர்கள் உள்ள முத்தரையர் சமுதாயத்தினரும், அ.தி.மு.க.வின் முத்தரையர் அனுதாபிகளும் அதிர்ச்சி அடைந்தனர். செந்திலின் சுயநலத்துக்காக கட்சியின் பெயரில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தால் அ.தி.மு.க.வுக்கு முத்தரையர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் நிலைமை உருவானது.

இதையடுத்து கட்சி பொறுப்பில் உள்ள முத்தரை-யர்கள் அம்மாவுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் புகார் மனுக்களை அனுப்பினர். இதையடுத்து விசாரணையில் இறங்கியது தலைமை. உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்ட ‘அம்மா’ ஆர்ப்பாட¢டத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்’’ என்று சொல்லி முடித்தனர்.

மேலும், ‘‘பட்டுக்-கோட்டையில் மெகா சைஸில் வைக்கப்பட்டிருந்த பிளக்சில் அம்மா பேரவை இருப்பதுபோல, துரை.செந்தில் பேரவை என்று வைக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல். மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் செந்திலை நீக்கவேண்டும்’’ என்றும் தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.

ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண¢டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் மூர்த்தியிடம் பேசினோம்.

‘‘எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 75 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறோம். ஆனால், அ.தி.மு.க.வால் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அழிந்து கொண்டுதான் வருகிறது. வாக்களிக்க மட்டுமே முத்தரையர்களை பயன்படுத்திக் கொள்ளும் அ.தி.மு.க., எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் கொலை, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகர் இரங்கல் கூட்டத்துக்கு வந்து 3 மணி நேரம் இருந்து விட்டுச் சென்றார். ஆனால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த லோக்கல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாருமே வரவில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கை பற்றி அடிக்கடி பேசும் ஜெயலலிதா, வெங்கடாசலம் கொலை பற்றி பேசவேயில்லையே ஏன்? தொடர்ந்து முத்தரையர்களைப் புறக்கணித்து வரும் அ.தி.மு.க.வுக்கு இந்த முறை வாக்களிக்க போவதில்லை’’ என்றார் ஆவேசமாக.

இத்தனை குற்றச்சாட்டுகளின் பின்னணியாக கருதப்படும் செந்திலை அவரது செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டும் ‘சுவிட்சுடு ஆப்’ என்ற பதிலே கிடைத்தது.





இதுபற்றி, தஞ்சை மாவட்ட அ.தி.மு.க.வின் செயலாளர் வைத்திலிங்கத்திடமே பேசினோம்.

‘‘ஆளும் கட்சியின் போலீஸ் அ.தி.மு.க.வின் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் துரை. செந்தில் மீது பொய்யான புகார்களை ஜோடிக்-கிறது. இதனால்தான் கண்டன ஆர்ப்-பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் சிலரது சூழ்ச்சியால் தலைமை ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டது.

முத்தரையர்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராக நடந்ததில்லை. அதற்காக போலீஸின் பொய் புகார்களையும் சகித்துக்கொள்ள முடியாது. இதே கோரிக்கைகளுடன் இன்னும் சில கோரிக்கைகளையும் சேர்த்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்-பாட்டத்தை மீண்டும் நடத்தத்தான் போகிறோம்’’ என்றார் வைத்திலிங்கம்.

பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தை மையமாக வைத்து முத்தரையர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உரசல் உண்டாகியிருப்பது என்னவோ உண்மை!




ராம்

நன்றி: தமிழக அரசியல்

இந்த பதிவினைக் காண தமிழக அரசியல் இதழின் கிழ்க்கண்ட லிங்கில் செல்லவும் http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2169&rid=98

சனி, 11 டிசம்பர், 2010

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்… ” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.

அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.

அவசரத்திற்கு உதவிய நூல்கள்:

1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )

சனி, 4 டிசம்பர், 2010

பாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் உயிரிழப்புசுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல் - தினமலர்

கோவை:""பாம்பு கடிபட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் உயிரிழக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் உயிரிழக்கின்றனர்,'' என, சூழலியலாளர் ஆனந்த் தெரிவித்தார்.கோவை தமிழ்நாடு ஓட்டலில் "ஓசை' அமைப்பின் சார்பில் நடந்த "சூழல்-சந்திப்பு' நிகழ்ச்சியில், "பாம்புகள்-பயம் வேண்டாம்' என்ற தலைப்பில் ஆனந்த் பேசியதாவது:
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லியாக இருந்தவை, பரிணாம வளர்ச்சியில் பாம்புகளாக மாறியுள்ளன. பாம்பின் பழமையான புதைப்படிவம், சகாரா பாலைவனத்தில் உள்ளது. உலகில் 2,700 வகையான பாம்புகள் உள்ளன.



இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகள் உட்பட 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன; இவற்றில், 62 பாம்புகள் மட்டுமே, விஷத்தன்மை கொண்டவை.கட்டு விரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதரைக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை உண்டு. இந்தியாவில், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர், பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் இறக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் சாகின்றனர்.விஷப்பாம்புகள் எல்லாக் கடிகளிலும் விஷத்தை உமிழ்வதில்லை. நாகப்பாம்பை விட, கட்டு விரியனின் விஷம், 15 மடங்கு வீரியமுள்ளது. கட்டு விரியன் கடித்தால், 45 நிமிடங்களில் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். கருப்பு உடலில் சீரான இடைவெளியில் இரட்டை வெள்ளைப்பட்டைகள் இருப்பதே, இதன் அடையாளம். கண்ணாடி விரியனின் விஷம், ரத்த அணுக்களை சேதப்படுத்தும்.சுருட்டை விரியன், ஒரே கடியில் 12 மில்லி விஷத்தை உமிழும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் ராஜநாகம், தரையில் வாழும் விஷப்பாம்புகளில் மிக நீளமானது. மொத்தம் 19 அடி வரை இருக்கும்.



இது ஒரு கடியின்போது ஏழு மில்லி விஷத்தை உமிழும். ஒரு மனிதன் இறப்பதற்கு, 0.3 மில்லி விஷமே போதுமானது. இருப்பினும் இது அரிதிலும் அரிதாகவே மனிதரைக் கடிப்பதால், பெரும்பாம்புகள் பட்டியலில் இல்லை.கூர்மையான பார்வை கொண்ட ராஜநாகம், தூரமாக மனிதர்கள் வரும்போதே பார்த்து ஓடிவிடும். எனவே, இதனை "ஜென்டில்மேன் ஸ்நேக்' என்பார்கள். இரவு அல்லது அதிகாலை நேரங்களில்தான், பாம்புக்கடி ஏற்படுவதால், எந்த வகையான பாம்பு கடித்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதைக்கண்டு பிடிக்க சில அடையாளங்கள் உள்ளன.விஷப்பாம்புகள் கடித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்; கண் இமை மூடி விடும்; தூக்கம் வரும்; நாக்கு மரத்துப் போகும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால், கடிபட்ட இடத்தில் எரிச்சலும், ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்படும். விஷப்பாம்பு கடித்தால், இரண்டு பற்களின் அச்சு பதிந்திருக்கும்; விஷமற்ற பாம்பு கடித்தால், பிறை வடிவில் பற்கள் பதிந்திருக்கும்.பாம்பு கடித்தவுடன், கடித்த இடத்துக்கு மேலே கட்டுப்போடுவது, காயத்தைக் கீறி ரத்தத்தை உறிஞ்சுவது ஆபத்தானது. ரத்த ஓட்டம் தடைபட்டு, நிலைமை மேலும் சிக்கலாகும். காயத்தைக் கீறுவதால், ரத்தம் அதிகம் வெளியேறியும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து, மிக விரைவாக மருத்துவமனை செல்வதே சிறந்தது; பயப்படுத்தாமல், நம்பிக்கை ஏற்படுத்துவது மிக முக்கியம்.பாம்புகள், உட்செவிகள் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் ஒலியை உணர்கின்றன.



மெல்லிய அதிர்வைக் கூட, பாம்புகள் உணர முடியும். ஆண் பாம்பைக் கவர, பெண் பாம்பு வாசனைத் திரவத்தை உமிழும். மனிதர்களால் பெண் பாம்பு கொல்லப்படும்போது, இந்த வாசனை வெளிப் பட்டே அங்கு ஆண் பாம்பு வரும். இதை பழி வாங்க பாம்பு வந்ததாக கதை பரப்புகின்றனர்.பாம்பு பால் குடிக்கும்; கண்ணைக் கொத்தும்; பழி வாங்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மூட நம்பிக்கை. மரங்களில் வாழும் விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு,கடித்தவர் இறந்து விட்டாரா என்று சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மூடநம்பிக்கையே.இவ்வாறு சூழலியலாளர் ஆனந்த் பேசினார். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் நடராஜ் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்றார்; செயலாளர் அவை நாயகன் நன்றி கூறினார்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஜாதிகள் உள்ளதடி பாப்பா - DINAMALAR

ஆர்.ரங்கராஜ் பாண்டே


இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.



"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.



கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.



தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.



பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'



"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?



டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :



ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.



தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.



முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:



இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.



விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.



இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.



"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

வியாழன், 25 நவம்பர், 2010

‘யாப்பருங்கலம்’ - நூலிலிருந்து....!!

ஒழிபு இயல் 553


இதுவும் முதலடி பதினேழெழுத்தாய், இரண்டாமடியும், நான்கா மடியும் பதினைந்தெழுத்தாய், மூன்றாமடி பதினாறெழுத்தாய் வந்தமை யால், அளவழிப் பையுட் சந்தம். இதனைப் பாதிச் சமப் பையுட்சந்தம் என்பாரும் உளர்.


[அறுசீர் விருத்தம்]


‘என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவர் என்று (15)
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும் (17)
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க ஆங்கோர் (16)
கொன்னவில் பூதம் போலும் குறண்மகள்1 இதனைச் சொன்னாள்.’1 (16)


இது முதலடி பதினைந்தெழுத்தாய், இரண்டாமடி பதினேழெழுத் தாய், பின் இரண்டடியும் பதினாறெழுத்தாய் வந்தமையால், அளவழிச் சந்தப் பையுள்.


பிறவும் இவ்வாறு வருவனவற்றை எல்லாம் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்குக.


என்னை?


‘வந்த முறையாற் பெயர்கொடுத் தெல்லாம்
தந்தம் முறையாற் றழாஅல் வேண்டும்.’


என்பது இலக்கணமாகலின்.


தாண்டகமும் இவ்வாறே கொள்க.


‘ஒன்றென முடித்தலென்
றின்ன வகையால் யாவையும் முடியும்.’


என்பவாகலின்.


‘குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவையும், யாப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம்; முதற்கண் நேரிசை வரின் ஓரடி



--------------------------------------------------------------------------------

1. சூளா. சீய. 107.
பி - ம். 1 குறமகள்.

அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்






மூலவர் : திருக்கடையுடைய மகாதேவர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சித்தாம்பிகா

தல விருட்சம் : -

தீர்த்தம் : -

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : -

ஊர் : திருச்சென்னம்பூண்டி

மாவட்டம் : திருவாரூர்

மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில் திருச்சென்னம்பூண்டி-613 105, (கோயிலடி அருகில்) தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91

பொது தகவல்:


சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் அற்புதமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாலயம், கி.பி.9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்க வர்மன், முத்தரையர் கோ, இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில் துர்க்கை, சண்டீஸ்வரர் சன்னதிகள் உள்ளன.



பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர், அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.



தல வரலாறு:

சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.



இருப்பிடம் :
திருச்சியிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ள கல்லணை வந்து அங்கிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டு பள்ளி செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும். கோவிலடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி


அசோக வனத்து சீதை


திருக்கடையுடைய மகாதேவர்


மேற்கண்ட செய்திகளை கொண்ட தினமலர் நாளிதளின் தொடர்பிற்கு இங்கே சொடுக்கவும் http://temple.dinamalar.com/New.aspx?id=1311

நன்றி: தினமலர்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

நக்கீரன் செய்தீ....!!!!!

ஜெ செய்த சமாதானம்- குருபெயர்ச்சி-தலைவர்கள் போடும் கணக்கு
உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு


""ஹலோ தலைவரே... ... ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள், அவர் ராஜினாமா செய்தபிறகும் அதேபாணியில் அமளி செய்து, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பண்ணிக்கிட்டிருக்கே...''

""ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பா நாடாளுமன்றக்கூட்டுக் குழு விசாரணை நடத்தணும்னும், ஸ்பெக்ட்ரம் தொடர்பா உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு பிரதமர் பதிலளிக்கணும்னும் சொல்லி எதிர்க் கட்சிகளின் அமளி தொடருதுப்பா..''

""எதிர்க்கட்சிகள் எதையெல்லாம் ஊழல்னு சொல்லுதோ, அது பற்றியெல்லாம் சி.பி.ஐ.விசாரணை நடந்துக்கிட்டிருக்குது. அதனால, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையில்லைங்கிறது காங்கிரஸ் கட்சியோட நிலை. ஆனா, எதிர்க்கட்சிகள் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் நாடாளுமன்றத்தை நடத்தவிடுவோம்னு உறுதியா இருக்கு. ஸ்பெக்ட்ரமை பொறுத்தவரைக்கும் பிரதமரும் அவரது அலுவலகமும் மேற்கொண்ட செயல்பாடுகள் பற்றி உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய சட்டப்பூர்வமான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இதுபற்றியெல்லாம் ஆலோ சிக்கத்தான் நவம்பர் 18-ந் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக்கூட்டம் நடந்தது.''

""நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையில் லைங்கிறதுதான் காங்கிரசின் முடிவு. தற்போதைய நிலையே நீடிக்கட்டும். சபையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ரகளை செய்தால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பா.ஜ.க. ஆட்சி நடந்த 1998-லிருந்து விசாரணை நடத்தலாம்ங் கிறதுதான் காங்கிரசின் நிலை.''

""ஸ்பெக்ட்ரம் பற்றி டெல்லி வட்டாரத்திலிருந்து கிடைச்ச இன்னும் சில தகவல்களைச் சொல்றேங்க தலைவரே.. ... புது நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கு எதிரா மறைமுக வேலை பார்த்தவர் ஏர்டெல் நிறுவன அதிபர் பாரத் மிட்டல். ஆனால், மக்களுக்கு ஈஸியான சேவை கிடைப்ப தற்காக புதிய அலைக்கற்றைகளை விதிமுறைப்படி ஒதுக்க முடிவு செய்தார் ராசா. உடனே இதை ஒரு புகாரா பிரதமருக் குத் தெரிவித்தார் மிட்டல். ஒருநாள் இரவு 9.30 மணிக்கு இது பற்றி விளக்கம் கேட்டு ராசாவுக்கு கடிதம் அனுப்பினார் பிரதமர். ராசாவோ, இதுபற்றி 12.30 மணிக்கெல்லாம் விளக்கமா பதில் கொடுத்துவிட்டார். சட்டப்பூர்வமான முறையில் நடைபெறும் ஒதுக்கீடுகள் பற்றி அதில் தெரிவிக்கப்பட்டிருக்குது. ராசா பதிலில் பிரதமருக்கு டவுட் இருந்திருந்தால் உட னடியா தொடர்பு கொண்டிருப்பார். அல்லது மேலும் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியிருப்பார். அப்படி எதுவும் நடக் கலை. அதனால, சட்டப்பூர்வமா மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்குப் பதில் தருவது பற்றி உயர் மட்டக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கு.''

""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைச்சிட லாம்னு இப்பவரைக்கும் பலரும் காய் நகர்த்திக் கிட்டிருக்காங்க. ஆனா சோனியாகாந்தியைப் பொறுத்தவரை ராசா விவகாரம் வேற, கூட்டணிங்கிறது வேற. தி.மு.க-காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் இல்லைங்கிறதில் உறுதியா இருக்காருங்கிறதும் அந்த உயர்மட்டக்கூட்டத் தில் வெளிப்பட்டிருக்குதுப்பா.''

""தலைவரே... பரபரப்பான இந்த சூழ்நிலையில் கலைஞர் ஒரு நாள் ஓய்வெடுத்தது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுது. துரைமுருகன், ஜெகத்ரட்சகன் சகிதமா மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஓட்டலுக்குப்போன கலைஞர் ஒரு வித இறுக்கத்தோடே இருந் திருக்கிறார். எல்லாம், ராசா விவகாரம்தான். அன்னைக்கு நைட் அவருக்கு உடல்நலனும் பாதிக்கப்பட்டிருக்குது. அதனால, மதுரைக்குப் போய் கல்யாணத்தில் கலந்துக்க முடியுமாங்கிற டவுட்டும் வந்திடிச்சாம். செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் கலைஞர்கிட்டே பேசி, அவரோட வருகையை உறுதிப்படுத்தியிருக்காங்க.''

""பா.ம.க நிறுவனர் ராமதாசும் மதுரை கல்யாணத்துக்கு உறுதியா போறதுங்கிற எண் ணத்தில்தான் இருந்தாராம். ஆனா, அவருக்கு யாரோ ஒரு மூன்றாம் நபர் மூலமா அழைப்பிதழ் கொடுக்கப் பட்டதில் வருத்தம் ஏற்பட்டு, முடிவு மாறிடிச்சாம். அன்பு மணிக்கு அழகிரி மகள் கயல்விழியும் அவர் கணவரும் அழைப்பிதழ் கொடுத்திருந்தாங்க. ஆனா, தனக்கு ஏதோ கொரியர் அனுப்புறதுபோல அனுப்பிட்டதா வருத்தப்பட்ட ராமதாஸ், தி.மு.கவை கடுமையா எதிர்க்கிற விஜயகாந்த்துக்கு செல்வி அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்னு தெரிஞ்சதும் இன்னும் டென்ஷனாகி, அன்புமணியையும் போகவேண்டாம்னு சொல்லிட்டாராம்.''

""விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் வருத்தம் இருந்ததுங்க தலைவரே.. கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வரை திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படலை. கட்சியிலிருந்து ஞாபகப்படுத்திய பிறகுதான் அழைப்பிதழ் வந்திருக்குது. கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பை அறிவாலயத்தில் இருக்கும் சிலரிடம் அழகிரி ஒப்படைச்சதாலதான் இந்த குழப்படிகளாம். ரஜினி, கமல் போன்றவர்களை வீடு தேடிப்போய்ப் பார்த்து பத்திரிகை வைத்த அழகிரி, கட்சித் தலைவர்களுக்கும் நேரில் இன்விடேஷன் கொடுத்திருக்கலாம்னு கட்சி நிர் வாகிகள் சொல்றாங்க.''

""ராமதாஸ் சொல்றமாதிரி, தி.மு.க எதிர்ப்பு விஷயத்தில் விஜயகாந்த் ரொம்பக் கடுமையா இருக்காரே.. மறுபடியும் தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடமாட்டேன்னு காஞ்சிபுரத்தில் பேசியிருக்கும் விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங் களில் 22 மந்திரிகளை அழைத்து ஒரேநாளில் மந்திரி பொன்முடி நடத்திய பொதுக்கூட்டத்துக்குப் போட்டியா 22 ஒன்றியங்களில் தே.மு.தி.க.வின் மாநில நிர்வாகிகள் 22 பேரை வைத்துக் கூட்டம் போட்டி ருக்கிறாரே..''

""ஆமாங்க தலைவரே.. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேகம் பிடிக்கிறப்ப, காங் கிரஸ்-தி.மு.க கூட்டணி உடையும்ங்கிறது விஜய காந்த்தோட கணக்காம். அப்ப காங்கிரஸ் தன் பக்கம் வரும்னு எதிர்பார்க்கிறார். கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆங்கிலப் பத்திரி கைக்கு கொடுத்த பேட்டியிலும் காங்கிரஸ் வெளியே வந்தால் அதனுடன் கூட்டணி, இல்லைன்னா அ.தி.மு.க.வோடு கூட்டணி, எங்க நோக்கம் தி.மு.கவைத் தோற்கடிக்கணும்ங்கிறதுதான்னு சொல்லியிருக்காரு. ஜனவரியில் சேலத்தில் தே.மு.தி.க. மாநில மாநாட்டை நடத்த ரெடியாயிட்டார். 21-ந்தேதி நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சி தே.மு.தி.க.வுக்கு சாதகமாக இருக்கும்னும் வெற்றிக்கூட்டணியில் இருப்போம்னும் சொல்லும் விஜயகாந்த் தன்னோட விருதகிரி படம் ரிலீசானால் மக்களிடம் பெரிய புரட்சி ஏற்படும்னும் அந்தப் புரட்சி மூலம் தி.மு.க ஆட்சி மாறும்னும் கட்சியின் முக்கியஸ்தர்கள்கிட்டே சொல்றாராம்.''

""என்னை வச்சி காமெடி கீமெடி பண்ண லையே...''

""அரசியல்வட்டாரத்தில் பேசுற விஷயங்களைத் தான் சொல்றேங்க தலைவரே... .. குருப்பெயர்ச்சியை ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க. ஜெ. தன்னோட ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்லா இருக்கும்னும் அடுத்தது தன்னோட ஆட்சிதான்னும் நம்புறாராம். கலைஞர் குடும்பத்தினரோ, ஜெ. ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சரியா இல்லைன்னும் கலைஞர்தான் 6-வது முறையும் முதல்வர்னு நம்புறாங்க. பெரிய கட்சிகளிலிருந்து சின்னக் கட்சிகள் வரைக்கும் எல்லா இடத்திலும் குருப்பெயர்ச்சி கணக்குதான் ஓடிக்கிட்டிருக்கு. அந்தந்தத் தலை வரின் ஆஸ்தான ஜோதிடர்களும் அவங்கவங் களுக்குத் தகுந்த மாதிரி குருப்பெயர்ச்சி பலன் சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""குருப்பெயர்ச்சி இருக்கட்டும் கூட்டணியிலிருந்து சி.பி.எம். இடப்பெயர்ச்சி ஆகும்னு பேசிக்கிட்டோமே... இப்ப நிலவரம்?''

""காங்கிரசுக்கு ஜெ அழைப்பு விடுத்ததால், சி.பி.எம் தரப்பிலிருந்து அதிருப்தி அறிக்கை வெளிவந்தது. அவங்களை சமாதானப்படுத்துற பொறுப்பை ஓ.பி.எஸ்ஸிடமும் செங்கோட் டையனிடமும் ஒப்படைத்திருந்தார் ஜெ. சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்த இருவரும், காங்கிரசை சி.பி.எம் ஆதரிச்சப்ப.. மதவாத பா.ஜ.க ஆட்சிக்கு வந்திடக்கூடாதுன்னு காரணம் சொன்னீங்க. அதுபோல ஒரு டாக்டிஸ்தான் இதுவும். ராசா மீதான நடவடிக் கையில் ஆட்சி கவிழ்ந்திடும்ங்கிற பயம் வேணாம். நாங்க இருக்கோம்னு ஒரு டாக்டிஸாகத்தான் இதை எங்கம்மா சொன்னார். மற்றபடி, காங்கிரசோடு கூட்டணி ஏற்படுத்துற நோக்கமெல் லாம் இல்லைன்னு சொல்லி யிருக்காங்க. ஜி.ஆர் எந்த ரியாக்ஷனும் காட்ட லையாம்.''

""ஜெ டெல்லிக்குப் போய் காய் நகர்த்தப் போறதா தகவல் வருதே?''

""விசாரித்தேங்க தலைவரே.. .. 26ந் தேதி சென்னையில் ஸ்பெக்ட்ரம் ஆர்ப்பாட்டத்தை ஜெ நடத்து றார். அடுத்த மாதம் முதல் வாரத்தில், டெல்லியில் ஒரு போராட்டம் நடத்த தேவகவுடா, அஜித்சிங் ஆகியோரோடு பேசிக்கிட்டிருக்கிறார். போராட்டம் உறுதி யானால்,டெல்லிக்குப் போய் நேஷனல் மீடியாக்களோட கவனத்தைக் கவர திட்ட மிட்டிருக்கிறாராம்.''

""பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவில், ஒரு சோகமான செய்தி... கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன் உடல்நல மில்லாமல் இரண்டரை வருடம் போராடி, 17-ந் தேதியன்னைக்கு மரணமடைஞ் சிட்டாங்க.''

""நரம்புத்தளர்ச்சியாலும் நினைவாற்றல் இழப்பாலும் பாதிக்கப்பட்டிருந்த ஜாய்ஸ் பாண்டியன், தா.பா.வின் அரசியல் வாழ்க்கை முழுவதும் ஒருசேரப் பயணித்தவர். அவருக்கு உடம்பு முடியலைன்னதும், தன்னோட அரசியல் பணிகளுக்கு நடுவிலும் மாலை நேரங்களில் மனைவிக்குத் துணையாக இருப்பதையே கடந்த இரண்டரை வருஷமா கடைப்பிடித்திருக்கிறார் தா.பா. மனைவிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும்னு கவிஞர் பாடியதுபோல தா.பா-ஜாய்ஸ் பாண்டியன் வாழ்க்கை இருந்ததுன்னு தோழர்கள் சோகத்தோடு சொல்றாங்க.''

""கம்யூனிஸ்ட் தோழர்களிடம் சோகம்னா, கார்த்தி சிதம்பரம் தரப்பில் சந்தோஷம். அவரோட 39-வது பிறந்தநாள்விழா நடிகர் சங்கத்தில் படு அமர்க்களமா கொண் டாடப்பட்டது. திராவிட கட்சித் தலைவர் களின் பிறந்தநாள் பாணியில் விழாவை சிறப்பா ஏற்பாடு செய்திருந்தவர் கராத்தே தியாக ராஜன். சில படங்களில் அவர் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்தில் உறுப்பினரா இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் அரசியல் பிர முகரின் பிறந்தநாள் விழாவை அங்கே நடத்த அனுமதி வாங்கினாராம். இந்தப் பிறந்தநாளில் 2 காரியங்களை கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் செய்திருக்காங்க. ஒண்ணு, அவரோட வயதைக் குறிக்கும் வகையில் , ஆதரவற்ற குழந்தைகள் 39 பேருக்கு கல்வித் தொகையாக தலா 5000 ரூபாய் டெபாசிட் செய்து, அதற்கான ஆவணங்களை கார்த்தியின் கையால் கொடுக்க வைத்தார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ் சீவி. இரண்டாவது, காலேஜ் மாணவி கள் 200 பேர் கொண்ட குழுமூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையை முழுமையா சுத்தப்படுத்தி யிருக்கிறார் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான ருக்மாங்கதன். இந்த இரண்டுபேரோட செயல்பாடுகளை யும் குறிப்பிட்டு ப.சிதம்பரம் வாழ்த்தி யிருப்பதால் கார்த்தியும் அவர் ஆதரவாளர்களும் கூடுதல் சந்தோஷத் தில் இருக்காங்க.''

""வாசன் தரப்பினர் வருத்தத்தில் இருக்காங்களாமே?''

""போனமுறையே நாம பேசிக் கிட்ட விஷயம்தான். வாசன் ஆதர வாளரா கொங்கு மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மயூரா ஜெயக்குமார், ப.சியை சந்தித்ததோடு, கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளிலும் வாழ்த்து தெரிவித்தார். அவர் அணி மாறியதை, கட்சி மாறியதுபோல பதட்டத்தோடு பார்க்கிறது வாசன் தரப்பு. மயூராவோடு யார்யார் பேசிக்கிட்டிருக்காங்க. அவர் மூலமா ப.சி பக்கம் யார்யார் போகப்போறாங்க, அந்த லிஸ்ட்டில் எம்.எல்.ஏக்கள் யாராவது இருக்காங்களா என்றெல்லாம் பதறிப்போய் ரகசிய விசாரணை நடத்தி, லிஸ்ட் எடுத்துக்கிட்டி ருக்காங்களாம் வாசன் ஆட்கள்.''

""தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியா இருந்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசாவுக்கு ஆபத்து ஏற்படலாம்னும் அதனால அவரோட பாதுகாப்பை பலப்படுத்தணும்னும் சுப்ரமணியசாமி சொல்லியிருக்காரே?''

""அது பற்றி நான் சொல்றேன்.. இதே எச்சரிக்கை யை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் முறைப்படி நடந்தப்பவே ஆ.ராசாகிட்டே சரத்பவார் சொல்லியிருக்கிறார். செல்போன் சேவையில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுவனத்திற்கு, புதிய நிறுவனங்கள் வந்ததால் 21ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம். பிசினஸில் இழப்பு வந்தால் பெரும் முதலாளிகள் எந்த எல்லைக்கும் போவாங்கங்கிறது, மும்பைக்காரரான சரத்பவாருக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அவர் அப்பவே ஆ.ராசாகிட்டே இதுபற்றி சொல்லி எச்சரித்திருக்கிறார். இப்ப சு.சாமியும் அதைத்தான் சொல்றார். இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் ராசாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.''


மிஸ்டுகால்!


ரகசியமாய் கஞ்சா தோட்டம் போட்டு போலீஸ் கண்டு பிடித்ததால் தலைமறைவாகிவிட்ட முன்னாள் டி.எஸ்.பி. அய்யாசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ""அது கஞ்சா செடியே அல்ல. மூலிகை செடி'' எனத் தெரிவித்துள்ளார். டான்சி சில விவகாரத்தில் தன் கையெழுத்தே அல்ல என்ற ஜெ. போலவே அவரது பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி.யும் செயல்படுகிறாரே என்கிறார்கள் காக்கிகள்.
காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வரும் 22-ந் தேதி மாஜிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஜெ. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க மாஜி வெங்கடா சலத்தின் படுகொலை விஷயத்தில் காவல்துறைக்கு எதிராக போராட்ட அறிவிப்பு எதுவும் செய்யாத ஜெ, இதுவரை கண்டன அறிக்கையும் வெளியிடாதது வெங்கடாசலத்தின் சமுதாயத்தவர்களான முத்தரை யர் சமுதாயத்திடம் அதிருப்தியை உண்டாக்கி யுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவ கங்கை மாவட்டத்தில் உள்ள முத்தரையர் இனத் தைச் சேர்ந்த ர.ரக்களே, வரும் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.கவைப் புறக்கணிப்போம் என்கின்றனர்.திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக 19-ந் தேதி மகாரதம் வடம் பிடிக்கப்பட்டது. தேர் புறப்பட்ட சில நிமிடங்களி லேயே அதன் சக்கரத்தில் சிக்கி 3 பேருக்கு கால் பாதிக்கப்பட்டது. இதை அபசகுனமாக பக்தர்கள் நினைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட, தேர் பணிகளைக் கவனிக்கும் தச்சர் கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேரோட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் மாலை வரையிலும் மகாரதம் அதே இடத்திலேயே நின்றது.
நக்கீரன்



--------------------------------------------------------------------------------

முத்தரையர் பற்றிய இன்றைய செய்திகள்....!!!

முத்தரையர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், நவ. 15: முத்தரையர்கள் சமூகத்துக்கு அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டுமென தஞ்சாவூர் மாவட்ட முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் செயல் விளக்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சிகளிலும் முத்தரையர் சமூகத்துக்கு அரசியல் உரிமை மற்றும் அங்கீகாரம் பெறுவது, உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கும் அரசியல் கட்சியை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது, முத்தரையர் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்துவது, முத்தரையர்களுக்கென தனி இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடுவது, பல்வேறு பெயர்களில் சிறு சிறு அமைப்பாக செயல்படுவதை ஒன்றாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலர் பி. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை மாநில அவைத் தலைவர் புலவர் கூ. மாரிமுத்து தொடக்கி வைத்தார். பொதுச்செயலர் எஸ்.எம். மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாநில சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஆர். சிவனேசன், மாநில இளைஞர் அணிச் செயலர் ஏ.எம். புகழேந்தி, இணைச் செயலர் டி.எம். தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பி. வீரமணி, ஏ. கலியமூர்த்தி, சுப. சின்னையா, ந. சின்னையன், எஸ். தியாகராஜன், ஏ. கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில் அனைத்து கட்சி உண்ணாவிரதம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றக் கோரியும், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு நடந்த இந்த துணிகர படுகொலை, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் தனிப்படை போலீசார், கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன், முத்துக்குமார், முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். படுகொலையை தொடர்ந்து வன்முறை மூலம் பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வடகாடு மற்றும் ஆலங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் தயங்குவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும், படுகொலை சம்பவத்தை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அப்பாவி மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் நேற்று முத்தரையர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

பழைய பஸ் ஸ்டாண்டு அருகே நடந்த போராட்டத்துக்கு முத்தரையர் சங்க தலைவர்கள் விஷ்வநாதன், செல்லையா, திருஞானம், எம்.எல்.ஏ., ராஜசேகரன், அ.தி.மு.க., மாவட்டச் செயலர் கருப்பையா, ம.தி.மு.க., மாவட்டச் செயலர் சந்திரசேகர், பா.ம.க., மாவட்டச் செயலர் தரணி ரமேஷ், மக்கள் தமிழகம் கட்சி நிறுவனர் புரட்சி கவிதாசன் உட்பட முத்தரையர் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி புதுகையில் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை, நவ. 20: முன்னாள் அதிமுக அமைச்சர் அ. வெங்கடாசலம் கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் இச்சம்பவத்தின் எதிரொலியாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுக்கோட்டையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முத்தரையர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு,
அந்தச் சங்கத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குழ. செல்லையா தலைமை வகித்தார்.
ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ராஜசேகரன், அதிமுக மாவட்டச் செயலர் த. கருப்பையா, மதிமுக மாவட்டச் செயலர் க. சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன், மக்கள் தமிழகம் கட்சி நிறுவனர் புரட்சிக்கவிதாசன், நாம் தமிழர் இயக்க நிர்வாகி கரு. காளிமுத்து, பாமக நிர்வாகி ரமேஷ், நடிகர் பரதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அரசன் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திருச்சி ஆர். விஸ்வநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துவைத்தார்.
இப்போராடóடத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்




மனோகர் என்றொரு மனிதர்
அத்தியாயம் 8
மனோகர்
தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆருக்கு அமைந்ததைப்போல ஒரு வில்லன் கூட்டணி வேறு யாருக்கும் அமைந்ததில்லை. நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது? இவர்களில் ஆர்.எஸ். மனோகரது கதை கொஞ்சம் மாறுபட்டது.
சினிமா உலகில் வில்லனாக அறிமுகமாகி, அதன் பிறகு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பத்துப் பதினைந்து படங்களுக்குப் பிறகு வில்லன் பாத்திரங்கள் ஏற்று நடித்தவர் ஆர்.எஸ். மனோகர். அவர் சினிமாவில் வில்லன் என்றாலும் கூட அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான கதாபாத்திரங்களுக்கும் புதுப்பரிமாணம் கொடுத்து ஹீரோவாக்கி அந்தப் பாத்திரங்களில் பிரகாசித்தவர் அவர். எனது பத்திரிகையுலக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் முதல் அவரது மறைவுக்கு சில மாதங்கள் முன்பு வரை அவரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன்.
மனோகரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருடைய அப்பாவுக்கு தபால் இலாகாவில் உத்தியோகம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது அப்பாவுக்கு ஒரு வருட காலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரிக்கு மாற்றலானது. அங்கே இருந்தபோது நிறைய கன்னட, தெலுங்கு நாடகங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெல்லாரியில் இருந்த ராகவாச்சாரி ஷேக்ஸ்பியரது நாடகங்களை மேடையேற்றுவார். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் மனோகருக்கு இன்ஸ்பிரேஷன்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மனோகர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மிருச்சிகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது. எப்படி? ஹீரோவாக நடிக்க வேண்டிய மாணவனுக்கு திடீரென்று அம்மை போட்டுவிட, அவனால் நடிக்கமுடியாது போனது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று சமஸ்கிருத பேராசிரியர் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோது மனோகர் “சார்! எனக்குக் கூட நடிக்க ஆர்வம் உண்டு. அந்த ரோலில் நானே நடிக்கிறேன்” என்று சொல்லி நடிக்க, எல்லோரும் மனோகரது நடிப்பைப் பாராட்டினார்கள். அதன் பிறகு சுகுண விலாச சபாவில் தோட்டக்காரன் நாடகத்தில் நடித்தபோது, அவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியவர் நாடகத் தந்தையான பம்மல் சம்மந்த முதலியார்.
படிப்பை முடித்துவிட்டு அப்பாவைப் போலவே தபால் இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமி நாராயணன். கானல் நீர் என்ற படத்தில், கோட்டு, சூட்டு அணிந்துகொண்டு ஒரு படித்த கதாநாயகன் ரோலில் நடிக்க பர்சனாலிடியான, உண்மையிலேயே பட்டதாரியான ஒரு இளைஞரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது சாய்ஸ் லட்சுமி நாராயணன். அவரிடம் சினிமாவுக்காக உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றபோது, தான் கல்லூரியில் மிருச்சிகடிகா சமஸ்கிருத நாடகத்தில் ஏற்று நடித்த கேரக்டர் பெயரையே வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அன்று முதல் லட்சுமி நாராயணன் ” மனோகர்” ஆனார். மத்திய அரசாங்க வேலையில் இருக்கும்போது, சினிமாவில் நடித்தததற்காக பணம் வாங்கிக்கொண்டால் பிரச்னை ஏதாவது வருமோ என்று மனோகர் பயப்பட, தயாரிப்பாளரை அன்பளிப்பாக ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார். அடுத்து தாய் உள்ளம் படத்திலும் ஹீரோ ரோல். அடுத்தடுத்து ஒரு டஜன் படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அடுத்து வந்ததெல்லாம் வில்லன் ரோல்கள்தான்.
“நான் சொந்தமாக நாடக்குழு ஆரம்பிக்கக் காரணம் டி.கே.எஸ். சகோதரர்கள்தான்” என்பார் மனோகர். அவர்களது நாடகங்களைப் பார்க்கும் மக்கள் நேரடியாக கைதட்டி ரசிப்பதைப் பார்த்து, சினிமா பணமும், புகழும் கொடுத்தாலும், நாடகத்தில் நடித்தால்தான் மக்களின் நேரடியான பாராட்டுக் கிடைக்கும் என்பதுதான் மனோகரை 1954ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று ‘நேஷனல் தியேட்டர்’ என்ற தன் நாடகக் குழுவை துவக்கத் தூண்டியது. ஏராளமான வரலாற்று, புராண கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர் நாடகங்கள் போட்டு, பெரும் புகழ் பெற்றாலும், அவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.
2005ல், கல்கி தீபாவளி மலருக்காக சதாபிஷேகம் (80 வயது) முடிந்த மனோகரை பேட்டி கண்டேன். “மனோகரது நாடகம் என்றல் குறிப்பிட்ட நேரத்தில் மணியடித்து, நாடகத்தை ஆரம்பித்துவிடுவார்” என்று பெயர் வாங்கி இருக்கிறீர்களே! அது எப்படி சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோது, “இதற்கு அடிப்படையான காரணம் நான் படித்த சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளிக்கூடம்தான்” என்றார். “அங்கே எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பக்தி,ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகள் என் வாழ்க்கையில் வளம் சேர்க்கக் காரணமாக இருந்தன. நாடகத்தைப்பொறுத்தவரை நேரம் தவறாமைக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். நாடகத்தை ஆரம்பிப்பதில் மட்டுமில்லாமல், நடிகர், நடிகையர் அரங்கத்துக்கு குறித்த நேரத்துக்கு வருதல், மேக் அப் போட்டுக் கொண்டு தயாராதல் போன்றவற்றில் கூட கால தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருப்பேன். அது மட்டுமில்லாமல், என் நாடகங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் பல தந்திரக் காட்சிகள் அரங்கேறும். எனவே, ஒரு வினாடி தாமதம் ஏற்பட்டாலும், ஆ! என ஆச்சரியத்தில் வாய் பிளப்பதற்கு பதிலாக ஆடியன்ஸ் ‘ஹா ஹா’ என்று சிரித்துவிடுவார்கள். எனவே, டை, டைமிங் விஷயத்தில் நான் என்றைக்குமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்” என்றார்.
‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே!. அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள்? அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா?” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும், பல சபாக்களில், நாடகத்துக்குக் கொடுத்திருந்த தேதிகளை கேன்சல் செய்துவிட்டார்கள். “என்னடா! பெரும் முதலீடு செய்து தயாரித்த புராண நாடகம் நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் போல இருக்கிறதே!” என்று மிகவும் கவலைப் பட்டேன். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப்போனேன்” என்றார்.
குழம்பிய மனோகர், காஞ்சீபுரம் சென்று பரமாச்சாரியாரை தரிசித்து, விஷயத்தைச் சொன்னபோது, அவர் ரொம்ப கூலாக, “நீ தப்பா ஒண்ணும் சொல்லிடலையே! கவலைப்படாதே!” என்று சொல்லி ஆசிர்வதித்தார். சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து கொழும்பு நகரில் ஒரே அரங்கத்தில் 21 நாட்கள் இலங்கேஸ்வரன் நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது. நாடகம் பார்த்துவிட்டு, ஸ்ரீலங்கா மக்கள் மனோகரைப் பாராட்டினது மட்டுமில்லாமல், அவருக்கு ‘இலங்கேஸ்வரன்’என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்கள். மனோகரது நாடகங்களிலேயே மிக அதிக தடவைகள் மேடையேறிய பெருமையும் இலங்கேஸ்வரனுக்குத்தான் உண்டு. ஆயிரத்து எண்ணூறு தடவைகளுக்கு மேல் அந்த நாடகத்தைப் மேடையேற்றி இருக்கிறார் மனோகர். ம.பொ.சி., சி.சுப்ரமணியன், ஆர், வெங்கடராமன் போன்றவர்கள் மட்டுமின்றி தந்தை பெரியார் கூட அந்த நாடகத்தைப் பார்த்து, ரசித்து மனோகரைப் பாராட்டி இருக்கிறார்.
இலங்கேஸ்வரனில் சீதை ராவணனின் மகள் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினாற்போல, துரோணர் நாடகத்தில் ஒரு விஷயத்தைப் புகுத்தினார் மனோகர். துரோணர், ஏகலைவனிடம் அவனுடைய கட்டை விரலை குருதட்சிணையாகக் கேட்பதாகக் காட்டாமல், “உனக்கு மிகவும் பிடித்ததை நீ குருதட்சிணையாக எனக்குக் கொடு” என்று கேட்க, ஏகலைவன் தனது வில் வித்தை குருவுக்கு தானாக முன்வந்து தன் கட்டை விரலை காணிக்கையாக்குவதாகக் காட்டினார். அவர், சாணக்கியனாக நடித்த ‘சணக்கிய சபதம் 725 தடவைகள் மேடையேறிய வெற்றி நாடகம். சுக்ராச்சாரியார் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டுமே சக்கைப் போடு போட்டன.
மனோகர் புத்தபிட்சுவாக நடித்த உப குப்தன் என்ற நாடகம் வெற்றி பெறவில்லை. “இலங்கேஸ்வரனாக பள பளா காஸ்டியூமில், ராமாயணக் கதை சொல்லிவிட்டு, அடுத்து காவி உடையில் புத்த பிட்சுவாக நான் வந்தபோது, மக்கள் அதை ரசிக்கவில்லை” என்றார். ஆனால் அவரது சூரபத்மன், சிசுபாலன், விஸ்வமித்திரர், துரியோதனன், நரகாசூரன், பரசுராமர், துர்வாசர், திருநாவுக்கரசர், மாவீரன் கம்சன், இந்திரஜித், மாலிகாபூர் என்று எல்லா நாடகங்களும் பிரம்மாண்டமான தயாரிப்புகள்; இவற்றில் இடம்பெற்ற தந்திரக் காட்சிகள் மக்களை ஆச்சரியப்படுத்தின. “மேடையில் நொடிப்பொழுதில் நிகழ்ந்தாலும், தந்திரக் காட்சிகள் நாடகம் பார்க்கிற மக்கள் மனதில் ஏற்படுத்தும் ஆச்சரியம் பல காலம் தங்கி இருக்கும்” என்பது அவரது லாஜிக்.
மனோகர் ஒரு பர்ஃபக்ஷனிஸ்ட். மேடையில் எல்லாம் துல்லியமாக நடக்க வேண்டும் என்பதற்காக செம்மையாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைப்பார். அவரது ஒவ்வொரு நாடகத்துக்கும் முப்பது நாட்கள் ரிகர்சல் நடக்கும். இதில் கடைசி பதினைந்து நாட்களில் தினம் மூன்று முறை மேக் அப், சீன், செட்டுடன் ரிகர்சல் நடக்கும். அரங்கேற்றத்துக்கு முன்பாக இப்படிச் செய்வதால்தான் துளியும் பிசகில்லாமல் அவரால் நாடகத்தை நடத்த முடிந்தது.
கோவையில் ஒரு திறந்த வெளி அரங்கில் மனோகரது காடக முத்தரையன் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாதி நாடகத்தில் திடீரென கடும் மழை. மக்கள் கலைந்து ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகு, திரண்டு வந்து நாடகத்தைத் தொடரும்படிக் கேட்டுக்கொள்ள, மனோகரும் நாடகத்தைத் தொடர்ந்தார்.
சினிமா உலகில் பிசியாக இருந்தாலும், நாடகம் நடத்துவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மனோகர். ஒரு சமயம், சேலத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடகம். அதே நேரம் சென்னையில் எம்.ஜி.ஆர்.பட ஷூட்டிங். மனோகர் எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பார். அப்புறம் காரில் சேலத்துக்குப் புறப்படுவார். மாலை சேலம் போய்ச் சேர்ந்து, நாடகத்தில் நடித்துவிட்டு, இரவே சேலத்திலிருந்து மறுபடி புறப்பட்டு காலையில் சென்னை!
கல்கி தீபாவளி மலர் பேட்டி முடிந்தவுடன், அவரது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக எழுதும் என் விருப்பத்தை மனோகரிடம் சொன்னேன். “புது வருஷம் பிறக்கட்டும். உட்கார்ந்து பேசலாம். அதற்குள் நானும் பழைய புகைப்படங்கள், நியூஸ் பேப்பர் கட்டிங்குகள், டைரி, எல்லாவற்றையும் ரெடி பண்ணிவிடுகிறேன்” என்றார். புது வருஷம் வந்தபோது நிமோனியா வந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். அதன் பின் நான் சந்திக்க வாய்ப்பில்லாமேலேயே மறைந்தார். (10 ஜனவரி 2006)

சனி, 20 நவம்பர், 2010

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை சம்பத்தில் காவல்துறை நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் - நக்கீரன்

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை சம்மந்தமாக காவல்துறை நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.



கடந்த மாதம் 7ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்படுவதாகவும், கொலை சம்மந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள், முத்தரையர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது.



முத்தரையர் சங்க தலைவர் செல்லையா தலைமையிலும், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் விஸ்நாதன் முன்னிலையிலும் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை மற்றும் பல பகுதிகளில் இருந்து முத்தரையர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை நகரத்தில் பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வியாழன், 18 நவம்பர், 2010

உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க கோரி ஆர்ப்பாட்டம் - தினமலர்

ஆலங்குடி: பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல். ஏ., செல்லையா வெளியிட்ட அறிக்கை : மாஜி அமைச்சர் வெங்கடாசலம் அவரது வீட்டில் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்ததை கண்டித்தும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் துறைக்கு கோரிக்கை வைத்தும், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் அதன் தொடர்பாக அப்பாவிகள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். அதை வலியுறுத்தி நவம்பர் 20ம் தேதி புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் மாபெரும் அளவில் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முத்தரையர் பாடல்கள்...!!!

அன்பான உறவுகளே...!! முத்தரையர் புகழ் பரப்பும் MP3 பாடல்களை நண்பர் வடகாடு திரு. வெங்கடேஷ் M.Sc., அவர்கள் தனது தளத்தில் பதித்துள்ளார்கள் http://mutharaiyar1.blogspot.com/2010_11_01_archive.html என்ற முகவரியில் சென்று தரவிறக்கம் செய்து கேட்டு மகிழவும். நன்றி: திரு. வெங்கடேஷ் M.Sc.,

திங்கள், 15 நவம்பர், 2010

தினமணியில் இளம் சிங்கங்கள்...!!!

அன்பான உறவுகளே...!! தினமணியில் உங்கள் இளம் சிங்கங்கள்....!!!! http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tanjore&artid=66276&SectionID=116&MainSectionID=116&SEO=&Title=

புதன், 10 நவம்பர், 2010

ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை : பாலையம்பட்டியில் மாவட்ட முத்தரையர் புனரமைப்பு சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அழகுமலை தலைமை வகித்தார். வரும் சட்டசபை தேர்தலில் திருச்சுழி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவது என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய், 9 நவம்பர், 2010

வேலை வாய்ப்புத் தகவல்கள் - (நன்றி: ரமேஷ் விஸ்வநாதன்)

If you think it would be useful for any other friend of yours kindly forward.

PERSONAL SECRETARY

· Location: National Paints Roundabout, Sharjah
· Looking for a fresh candidate, aged 24??25 yrs
· Preferably Indian
· Training will be provided
· Salary: AED 3000 + transport and accommodation also provided if required
· Timings: 9:00am - 6:00pm (6 days a week)
Interested candidates, please email your CVs to Shirley Vaz at shirleyvaz@rediffmail.com


TEMP ACCOUNTANTS
Profile: Payables background
Duration: 6 months
Salary: AED 6000
Gender: Preferably male
Interested candidates, please email your CVs to Odelia Coutinho at
Odelia.Coutinho@gmail.com


INVENTORY CONTROLLER
Must have 4-5 years of gulf experience in the field of hydraulics, hydraulic
equipments and power transmissions for a company based in Jebel Ali.
Interested candidates, please email your CVs along with your salary expectations to
Shivananda Salian at shivananda.salian@gatesfleximak.com


IMPORT & EXPORT COORDINATOR (TEMP)
Duration: 3 months
Under the supervision of the Logistics Manager, the Import & Export – Coordinator will
ensure timely clearance of incoming and outgoing shipment, analyse, recommend and
Implement the Most cost effective mode of transportation to various destinations in the
area. He will negotiate and recommend contracts for clearing and forwarding. And will also
review the letters of credit and recommend amendments where necessary and comply with
the required Documentations for the Distributors.
Responsibilities
1) Import:
· Coordinate Documents from Planning for incoming shipment.
· Check the Correctness of Import of Import Documents
· Follow up with the Freight Forwarder/Shipping Line for the Arrival of the vessel
· Authorize & ensure timely clearance of incoming container and liaise with the
W/H
Ramesh Viswanathan (Social Service) ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com, +971 50 5865375
2) Export Documentation:
· Prepare documents for the Letters of Credit for Negotiation
· Prepares Documents for Customers
· Send Documents on timely Basis to the Customer for Shipment Clearance
· Maintain Export Files for Internal/Customs Audit
· Checks letters of Credit and recommends amendments where necessary
· Sign the invoices
Requirements
· Excellent Interpersonal & communication skills
· Experienced in Handling Letters of Credit independently
· Experience in Clearing, Forwarding & Shipping Line activities
· Knowledge of Customs Documentation
· University Degree in Commerce with a min of 4 Years experience in the Field
· Candidates on husband's/ father's visa are encouraged to apply
Salary: AED 10,000 per month
Interested candidates, email your CVs to Shoble Perumal at shoble@congruushr.com


PAYROLL ADMINISTRATORS
A multinational company in Dubai ?? UAE is looking to hire capable Financial Graduates to
perform Payroll Administrators role, payroll functions on SAP which includes processing
payroll, checking accuracy of taxes and pension, developing various reports, maintaining
confidential payroll records, and collation of financial information used in audits.
Responsibilities
Maintaining payroll information by collecting, calculating and entering data, Updating payroll
records and maintaining payroll files, employee updates, sick leave payments, benefit
adjustments, assisting with payroll, overtime and bonus audits.
Maintaining records and filing system in a confidential manner. Resolving payroll
discrepancies by collecting and analyzing information. Providing payroll information by
answering employee questions and requests. Maintaining payroll operations by following
Company policies and procedures. Report any needed changes. Other duties as assigned.
Requirements
Should hold a Bachelor Degree in Accounting with 5-6 years of experience in a computerized
accounting environment, SAP ERP platform preferred, preference will be given to personnel
having UK/Australian Payroll and Tax knowledge.
Salary: AED 9000 to 9500 + Family medical insurance, annual vacation and ticket.
Interested candidates, email your CVs to cvdeposit@yahoo.com


OPERATIONS MANAGER
A leading commodities and trading company, is currently seeking to recruit an Operations
Manager to be based in the UAE. You will plan and coordinate all operations of execution in
Middle East area. Organize, supervise and report all international flow in coordination with
organization??s execution team at origin.
Be the link between execution hubs at origin, execution team and traders in Middle East.
Other responsibilities ·
• Organize, supervise and report all domestic execution operation in Middle East
• Build up processes in coordination with Execution teams at origin, execution, trading,
control team in Dubai
• Monitor process, and ensure that information flows smoothly between execution hubs,
Dubai team and customers. Support in case of issues
• Manage the Dubai execution team and ensure correct and timely work by local team
within the process
• Organize process for the domestic operations in Middle East to ensure efficient operation
and accurate controls
• Monitor the flows to ensure accuracy in contracts, stocks, movements, costings and
correct data flow to finance
• Manage the domestic execution team
• Ensuring the cover of International and Domestic cargo insurance
• Reporting of monthly cargo declarations to Company??s Office in Geneva
• Liaison with other Organization??s offices in respect of operations and logistics
• Responsible for the necessary liaison with Government departments
• Ensure that the necessary documented operating work process/procedures are in place
• Responsible for development and coaching of employees
• Insure back up of member of the team during their vacation
• Ongoing performance management (KPI)
Requirements
The successful candidate should hold a University Degree with minimum of 5+ years
experience in International Trade Operation and 3+ years experience as Manager and in a
process oriented position preferably in the Agricultural industry.
Superior interpersonal and leadership skills with the ability to drive organizational change
along with the ability to organize multiple responsibilities, prioritize workload and perform
multiple tasks simultaneously will be essential for this role.
Proficiency in computer applications MS Office is mandatory. Excellent communications skills
in English is a must and Arabic would be an added advantage. In addition, you must be able
to identify/control weaknesses and implement process improvements.
Flexibility in Travelling in the Middle Eastern Region, including Iran, Pakistan and Yemen is
required. If you are a self starter and able to work independently then this is the job for
you!

Package offered: is open for discussion depending on your qualification/experience and turn
out of your interview. Location: UAE
Interested candidates, email your CVs to Florendo Padilla florendo.padilla@manpowerme.
com


ACCOUNTANT (FEMALE)
Nationality: Filipino only
• Candidate should be from an accounting background (with at least 2 years experience)
• Should possess good MS office skills, excel in particular
• Navision system knowledge is an absolute must
• Candidate should be a self starter and should be able to work with minimum supervision
at times when required
• BIG 4 experience is preferable but not a must
• Should have a working experience in managing AP, Bank recs, Cash management,
Balance Sheet file etc
• Should possess good inter-personal and communication skills and be a team player
Salary: AED 8000
Interested candidates, email your CVs to Jubal Rodrigues at jubal89@gmail.com


EXECUTIVE SECRETARY
Salary: AED 8000
Must be female
Tasks
· Arranging meetings
· Taking the minutes of the meeting
· Diary management
· Business correspondence
Interested candidates, email your CVs to Jubal Rodrigues at jubal89@gmail.com


VARIOUS VACANCIES (Filipino)
1) Personal Assistant / Executive Secretary
Filipina, with UAE experience working as PA preferably in a Trading business firm, Proficient
in English both Oral & written communication, Articulate, confident, good in presentation,
well verse in organizing tasks, with knowledge in Shorthand/ Stenography preferred but not
required.
Salary range: AED 5,000-6,000
Send CV to jobs@jobtrackme.com
2) HR / Admin Assistant / Receptionist
Filipina, Proficient in English both Oral & written communication, Articulate, confident, good
in presentation, organized, creative, with call centre experience preferred but not required.
Proficient in Microsoft Word, Excel & Windows application.
Excellent computer skills. Salary range: AED 2,500-3,500
Send CV to jobs@jobtrackme.com
Customer Service
Filipina, with call centre experience preferred but not required, Proficient in English both
Oral & written communication, good in presentation, Articulate, confident, organized,
Proficient in Microsoft Word, Excel & Windows application.
Excellent computer skills. Salary range: AED 2,500-3,500 Send CV to jobs@jobtrackme.com


Junior Accountant
Filipina with minimum 2-3 years working experience in Accounts, well versed in handling
accounts payable and receivables Excellent computer skills.
Salary range: AED 4,000-4,500 – Send CV to jobs@jobtrackme.com


Bilingual Secretary
Arabic & English fluency is required. With gulf experience as PA/ Executive Secretary in a
trading company preferred but not required, confident, articulate, Excellent computer skills,
Salary range: AED 5,000-7,000
Location: Sharjah, Industrial Area 2
Working Days: Sunday to Thursday ?? from 8am to 5pm. Saturday (half day) from 2pm to
6pm
Day off: Friday
Interested candidates, email your CVs to Simon D'Souza at jobs@jobtrackme.com


PURCHASING CLERK
A reputed retail business group in Dubai is looking out for a Clerk for their Purchasing
Department.
Salary: AED 4000 - 5000
Candidates should be comfortable with performing arithmetic calculations and should be
proficient in computers. Candidates with around 2 +years of job experience wil be
preferred, Candidate must possess good communication & interpersonal skills.
Interested candidates, email your CVs to Nitesh Monteiro at
recruitment.bme@mohebi.com


SALES ASSISTANT / SALES SUPPORT
Qualified candidates must have the following:
1) Relevant working experiences with Airlines or Travel agency.
2) Good Command on English and knowledge of Arabic is advantageous.
3) Presentable, energetic, cordial, Polite, Self Motivated, Team Player, and willing to work in
pressure.
4) Preferable Philippines / Indian National.
5) Salary for experienced staff AED 6,000-6,500
Interested candidates, email your CVs to czdubai@csair.ae


SECRETARY (INDIAN)
MBR World Wide Group
Looking for an Indian Secretary with 2-3 yrs of experience
Please send CVs to Jessy Lobo at jessy@mbrworldwide.com
VARIOUS (VAR HR CONSULTANCY)
1) Accountant
• 3+ years of experience in Tally
• Good communication skills
• Preferable from service industry
• Experience in building accounts till audit
• Salary: AED 4000
Please send CVs to Kevin Rodrigues at varhrm@gmail.com


Van Sales Supervisor
• Be responsible for van sales operations of mobile phones throughout UAE.
• Lead a team of van sales executives to achieve sales targets.
• Be responsible for day to day van operations by ensuring team follows fixed journey
plans.
• Ensure coverage of all potential customers in the assigned territory
• Ensure servicing of the customer base on a daily or weekly basis
• Relationship management with the customers and proper MIS reporting Requirements:
• About 3-4 years relevant experience in the telecom industry in UAE is a must in mobile
van sales operations.
• Strong analytical mind with high level of maturity
• Self-driven and resulted oriented and able to lead a sales team
• Valid UAE license
• Good communication skills and computer literate and up to date on mobile industry
trends.
Please send CVs to Kevin Rodrigues at varhrm@gmail.com
Van Sales Executives
• Sell mobile phones and accessories to dealer market as per journey plan area wise in
UAE.
• Achieve sales targets as per the region.
• Ensure servicing of the customer base on a daily or weekly basis
• Relationship management with the customers and proper MIS reporting
Profile:
• About 3 years relevant experience in the telecom industry in UAE.
• Passion for selling and pushing products to dealers
• Self-driven and resulted oriented
• Valid UAE license
• Good communication skills and computer literate and up to date on mobile industry
trends.
• Ability to speak in Tamil, Malayalam, English & Hindi.
Please send CVs to Kevin Rodrigues at varhrm@gmail.com


VARIOUS (MANPOWER MIDDLE EAST)
Senior Office Administrator
Location: Abu Dhabi
Industry: Oil and Gas
Requirements:
· Female Bi-lingual candidate
· With at least 5 years work experience in oil and gas
· Either worked as a technical assistant / office administrator
· A degree holder / preferably with an engineering background
· Knowledgeable of technical terminologies in oil and gas
· Willing to work from 9AM to 6PM, Sunday to Thursday


Legal Secretary
· For an international law firm in Dubai
· Female candidate with strong command of English language
· At least 2 years of work experience as a Legal Secretary
· Strong familiarity of UAE law terminology is highly needed
· Strong typing speed - min of 60GWAm
· Experience in audio typing is a must
· Willing to work from 9AM to 6PM
· Willing to work with a team of lawyers
· Even candidates based outside UAE are welcome to apply


Assistant Legal Counsel
· For a local group of companies in Abu Dhabi
· Female Bi-lingual candidate preferably, Lebanese
· Law degree graduate
· Have at least a total of 5 years work experience in the same capacity
· Have at least 2 years of work experience in the UAE in a real estate and property
industry is a must
· Strong familiarity in UAE laws and systems needed
· Have experience in making legal researches and translations
· Able to draft legal documents
· Able to represent in courts


Assistant Legal Counsel
· For a local group of companies in Abu Dhabi
· Male bi-lingual candidate
Ramesh Viswanathan (Social Service) ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com, +971 50 5865375
· Law degree graduate
· Have at least 2 years of work experience in the UAE
· Strong familiarity in UAE laws and systems needed
· Have experience in making legal researches and translations
· Able to draft legal documents
· Able to represent in courts


Administrative Assistant (Emirati National only)
· For a healthcare organization in Abu Dhabi
· With at least a year of experience in administration
· Strong command of English language
· Willing to work from 8AM to 5PM, Sunday to Thursday
· Salary package is AED14,000 to AED16,000


Executive Secretary (Emirati National only)
· For a healthcare organization in Abu Dhabi
· with at least 4 years of work experience in the same capacity
· strong command of English language is needed
· willing to work from 8Am to 5PM, Sunday to Thursday
· Salary package is AED18,000 to AED22,000
email your CVs to florendo.padilla@manpower-me.com


Customer Service Manager (Emiratisation)
· For a telecommunication company in Abu Dhabi
· Open to different nationalities
· Have at least 8 years senior management experience
· Note this is not a Recruitment position; client needs someone from the Senior
Management
· Experience in handling employment of Emirati nationals
· Knowledgeable in telecommunication
· Have experience in business development
· Salary package is AED40,000 to AED55,000
Candidates interested in the above 7 positions, email your CVs to Florendo Padilla at
florendo.padilla@manpower-me.com


SALES CONSULTANT
One of the largest Insurance brokerage firms in the Middle East urgently requires Sales /
Insurance consultants, full time to sell financial products and services.
Details:
• Minimum 4 years experience in sales.

திங்கள், 8 நவம்பர், 2010

ராஜ ராஜ சோழன்

RAJA RAJA CHOLAN
ராஜ ராஜ சோழன்


இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க .



தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது



மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்
1 சங்க கால சோழர்கள்
2 விஜயால சோழர்கள்

3 சாளுக்கிய சோழர்கள்


நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.


விசயாலய சோழன்
விசயாலய சோழன் (கி.பி. 850-880) என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான்.விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர்.இதே கால கட்டத்தில் சோழர்களைப்போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்டமுடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.
திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.


முதலாம் ஆதித்தன்
மாவீரன் விசயாலய சோழன், சோழர்குலம் மீண்டும் சோழநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கு அடிக்கல் நாட்டினான்.விஜயால சோழன் பல்லவர்களை வெற்றி கொண்டு தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தைய் நிறுவினான் .விஜயால சோழனுக்கு பின் அவனது மகனான ஆதித்ய சோழன் ஆட்சிக்கு வந்தான்.பிறகு ஒரு போரில் ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் அபராஜிதன் மீது முதலாம் ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்று தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான். இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும்.


முதலாம் பராந்தகன்
ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஆட்சி ஏற்றவுடன் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் இராசசிம்மன் உடன் போரிட்டான்.இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான்.போரில் பாண்டியர்களை வென்று தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்


தக்கோலப் போர்

முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்ததால் இராஷ்டிரகூடர்களின் வளர்ச்சி அதிகமாயிற்று.திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.அரக்கோணத்திற்கு அருகில் உள்ளல் தக்கோலம் என்ற இடத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசாதித்தனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். இதனால் சோழ படை தோல்வியுற்று தனது பகுதிகளை இழந்தது. ஏழத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது.வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான்


கண்டராதித்த சோழன்

தக்கோலப்போரில் இராசாதித்த சோழன் மாண்டதால் முதலாம் பராந்தகன் தனது இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனை முடி சூடச் செய்தார் . கண்டராதித்தன் தான் பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலயே அரிஞ்சய சோழனை இளவரச பட்டமேற்கச் செய்தான்.அப்பொழுது கண்டரதித்தனுக்கு புதல்வர்கள் கிடையாது.கண்டராதித்தான் போர்களில் ஈடுபடுவதை காட்டிலும் கோவில் கட்டுவதிலயே அதிகம் ஈடுபாடு கொண்டார்.தொண்டை மண்டலம் தொடர்ந்து இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழே இருந்தது.அதை மீட்பதற்கு சிறிது கூட முயலவில்லை என்றே கூற வேண்டும்.இக்காலகட்டத்தில் சோழ இராணுவம் வலிமை குறைந்து, கடல் வாணிபம் செழிப்புற்று விளங்கியது. சிதம்பரம் கோவிலில் உள்ள திருவிசைப்பா என்ற சைவ பாடலை பாடியவர் இவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.


அரிஞ்சய சோழன்
அரிஞ்சய சோழன் முதலாம் இராசாதித்த சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும்,தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன்,மிகக் குறுகிய காலமே ஆண்ட இவன் சோழ நாட்டின் வடக்குப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியில் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.
சுந்தர சோழன்
அரிஞ்சய சோழன் இறந்தவுடன் அவனது மகனான சுந்தர சோழன் பட்டமேற்றான். கண்டராதித்தன் மகனாகிய உத்தம சோழன் பட்டத்துக்கு உரிமை பெற்றவனாயினும் அவனது இளம் பிராயத்தை கருதி தனது மூத்த பேரனை சுந்தர சோழனை பட்டமேற்கச் செய்தான் முதலாம பராந்தகன் என்று கருத்து உண்டு.இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட சுந்தர சோழனக்கு ஆதித்ய கரிகாலன்,அருண் மொழி தேவன் , குந்தவை என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர் . இவன் ஆட்சிக்கு வந்த பொழுது தெற்கே பாண்டியர்களும் வடக்கில் இராஷ்டிரகூடர்களிடம் மிக வலுவாக இருந்தனர்.இவன் முதலில் உள்நாட்டு கலகக்காரர்களை அடக்கியத்துடன் பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை மன்னன் மகிந்தனை அடக்க கொடும்பாளூர் வேளாள இளையவர் தலைமையில் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினான் . குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட படையாலும், ஆயுத மற்றும் தானிய குறைபாடு காரணமாகவும் சோழ படைகளால் இலங்கை படையை வெல்ல முடியவில்லை .இப்போரில் கொடும்பாளூர் வேளாள இளையவர்போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்.
சோழப் படைகள் இலங்கையில் தோல்வியுற்றவுடன் வீர பாண்டியன் மீண்டும்மறைந்து இருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் இம்முறை சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் படை நடத்தி சென்றான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனும் வீர பாண்டியனும் நேருக்கு நேர் மோதினர்.இப்போரில் சுந்தர சோழன் யானைகளை கொன்று இரத்த ஆறை ஓட வைத்தான் என்றும், போரின் இறுதியில் வீர பாண்டியன் படைகள் தோல்வியுற்று வீர பாண்டியன் பக்கத்தில் உள்ள மலையில் சென்று ஓளிந்து கொண்டதாகவும் அவனை ஆதித்யன் தேடி சென்று தலையைக் கொய்ததாகவும் கருத்து உண்டு. அல்லது இவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் எப்படியும் "ஆதித்யன் வீரத்துடன் போரிட்டு ,வீர பாண்டியனை வென்று அவனுடைய தலையைக் கொய்ததாக" திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இப்போரில் வென்றாலும் சுந்தர சோழனால் முழுமையாக பாண்டிய நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிய வில்லை.
இப்போர் முடிந்தவுடன் ஆதித்யன் வடக்கில் ஆக்கிரமித்து கொண்டிருந்த இராஷ்டிரகூடர்களிட போரில் ஈடுபட்டான் . இப்போரில் இவர்களால் இராஷ்டிரகூடர்களை முழுமையாக வடக்கிலிருந்து விரட்ட முடிந்தது.இலங்கை போரில் ஏற்ப்பட்ட தோல்வியை துடைக்க மீண்டும் இலங்கை மீது படை எடுக்க சுந்தர சோழன் தீர்மானித்தான்.ஆனால் இம்முறை யார் தலைமையில் படை நடத்தி செல்வது என்ற விவாதம் ஏற்ப்பட்டது.அப்போதுஆதித்ய கரிகாலன் இராஷ்டிரகூடர்களுடன் காஞ்சியை நிலைப்படுத்த தீவிரமான போரில் ஈடுப்பட்டிருந்தான்.இந்நிலையில் சுந்தர சோழனின் இளைய மகனான அருண் மொழி தேவன் (ராஜ ராஜான்) படைகளை நடத்த முன் வந்தான்.அப்போது அவனுக்கு வயது 19.

ஆதித்த கரிகாலன் கொலை

சுந்தர சோழன் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன .உத்தம சோழன் பதவி ஏற்றவுடன் அருண்மொழிவர்மனை இளவரசு பட்டமேற்கச் செய்தான் .


உத்தமச் சோழரின் காலத்தில் வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் விளங்குகிறது. சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்கதானத்தில் அமர வழியேற்பட்டது.


போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.


கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.


மலை நட்டு போர்
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.


ஈழப் போர்

பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.



வடக்கு போர்கள்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின் இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.


மேலைச் சாளுக்கிய போர்

காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன்.


வேங்கிப் போர்

இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.


கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து


மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.



சோழ சாம்ராஜ்யம்
மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம் (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை






























தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்






















நிர்வாகம்



இராணுவம்

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.

இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது


தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்


நிலசீர்திருத்தம்

ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.


சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..


கிராமசபை

இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.


இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.


பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.


சமூகம்


ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.


பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர்.


தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.


ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.


அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.




சமயம்


ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.


தஞ்சை கோவில்



தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது


.



























தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!

வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது



தெனிந்திய அரசுகள் மற்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய ஒரு நிழற்படம்








கல்கியின் பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள குந்தவை மற்றும் நந்தினி படங்கள்.




























கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )



சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.