Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

முத்தரையர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010,00:57 IST

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


சேதுபவாசத்திரம் யூனியன் துணைத்தலைவர் ராமையன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். யூனியன் கவுன்சிலர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் குழசெல்லையா பேசினார். மூன்று பிரிவாக செயல்படும் முத்தரையர் சங்கங்கள் ஒரே தலைமையின் கீழ் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது. முத்தரயைர் அனைவரையும் ஒரே தலைமையின் கீழ் எம்.பி.சி., என அறிவிக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சனி, 28 ஆகஸ்ட், 2010

புதிய வேலை வாய்ப்புத் தகவல்கள் - 28.08.2010

Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
SALES ASSOCIATE
• 10 positions to be recruited
• Salary: AED 3,600 - 4,000 maximum
• Location: Dubai, Sharjah and Abu Dhabi
• Retail Timings: Working in the shopping mall as per mall timings on a roster basis
(Friday is never a holiday)
• Work Environment: Very encouraging and satisfactory with store managers
investing time in coaching employees.
• Commission: If the store meets targets, there is additional commission on slab
basis.
• Requirement: Arabic Speaking ideally (but not necessary) – open to all other
nationalities.
• Experience: 6 months + in any retail but ideally selling sports related, fashion
related or shoes related.
• Even a well spoken, smart, presentable candidate from Customer Service
background, please send the profile to me.
• Training will be provided.
Candidates who fit the profile ONLY, please email your CVs to
Simon D’Souza at jobs@jobtrackme.com with the job title
in the email subject box.

Urgently Required Female Promoters for Carrefour in Dubai and Sharjah.
Please send your details with Full size picture. Details of the job as below
No. of Days : 24days
Days : Wed Thursday Friday
4 Hours a day. Aed 3,000 for 24 days
Please send your FULL length picture if you would like to take this promotion job to
info@eventiczone.com


Requirement :
ARABIC SPEAKING FEMALE PROMOTERS
JOB : PROMOTING A SERVICE
LOCATION : MALL OF THE EMIRATES
DATES : 3 DAYS OF EID
TIMINGS : 6 HOURS ( 1000 TO 1600 HOURS OR 1600 TO 2200 HOURS)
TWO SHIFTS TOTAL..EACH GIRL HAS TO DO ONE SHIFT EACH DAY..N IT HAS TO BE
SAME SHIFT FOR ALL THREE DAYS
casting on TUESDAY 24th August 2010 in MOE at 1930 hours...
RATES : AED 50/- HOUR.....AED 50/- HOUR....AED 50/- HOUR...
Interested arabic speaking female promoters please send in your cv/ full shot
picture and contact details to promoters@mediasqr.com with subject MOE
#2 - Girls still eager to join us in abudhabi as our new team there, who will be used
as our face in abudhabi . email us your Cv & pictures (pictures shouldn't be in your
CV, should be out as attachments) to promotersparadise.hr@gmail.com with subject
" ABUDHABI TEAM "
Monthly Package: 5000 - 6000 Dhs!
(Depends on your experience & client approval)
Strictly Females Only! NO Nationality Barrier!!


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
#3 - Guys Guys Guys!! we still are looking for a few more guys who can speak
arabic, no matter which nationality & have previous experience in working at retail
shops like zara, pull & bear, fendi, axiom or any shop!!
send us your CV & pictures asap to promotersparadise.hr@gmail.com with subject "
retail job "
Salary: 3500-4000 (Depends on your experience!)
MAGAZINE PROMOTION
A publishing house is looking to recruit 2 girls to promote their magazine.
The job specifications are:
Timings: 9pm - 1am
Venue: Expo Centre Sharjah
Description: Promote the magazine, sell subscriptions
Remuneration: 2000 AED
Dates: 21st August - 11th September 2010
Please send CVs with photographs to publishinguae@gmail.com


DRIVERS / IT JOBS
1. Drivers (2 positions)
2. Network Cabling Technicians (3 positions)
3. Network Engineers with minimum 1 year experience (2 positions)
Please send CVs to hr@unison.ae


HR / FINANCE VACANCIES (HABTOOR HOTELS)
Habtoor Hotels is looking for 2 co-ordinators in HR/Finance on an urgent basis.
Female, presentable, preferably graduates for finance.
Salary: AED 2,500/- plus food and accommodation
Please send CVs to ar@habtoorhotels.com
IT HELPDESK EXECUTIVE (FEMALE)
• Location: Abu Dhabi
• Salary – 5500AED
• Must experience in IT Helpdesk Support or Call Centre
• Experience in trouble shooting IT systems or remote support
Additional Qualifications: A+
• IT related technical Diploma or equivalent work experience
• Fluent in English (Arabic is a plus)
Specific Job Outline
• The candidate is expected to work in the IT Helpdesk (call centre) to support ADAC
Group users (2000 users) and Abu Dhabi International Airport tenants.
• The candidate will also manage incidents, service requests related to the IT
systems and will assist users over the phone from a call centre.
• The candidate will be working on 12-hour shifts (day or night), under the
supervision of the team leader.
Please send your CVs to careermove08@yahoo.com


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com

CUSTOMER SERVICE REPRESENTATIVE (FEMALE)
• Good communications skills are critical
• Must have prior experience with car rentals
Please send your CVs to sales@premierdubai.com
MANAGING ASSISTANT
Functions:
• To manage and execute all administrative work for GM, Sales Team (WS/Retail)
• Assists the GM and Sales Team on decisions based on delegation of tasks and
budgets.
• To serve as an information and coordination hub of Sales Emerging Markets incl.
regular update of the planning calendar.
• To plan and coordinate all travel bookings and meetings for the GM, Sales Team
(WS/Retail), Customer Service and Merchandising Team.
• To support preparation of contents for meetings and conferences by writing,
formalizing and fine-tuning ppt or word documents for the GM.
• To follow up on the commitments of direct and indirect reports of the GM regarding
deliverables and timelines.
• To handle season sample receipts, distributions and documentations.
• To organize all meetings and conferences of Sales jointly with the Key Accounts
Manager, Head of Sales and Exports and Marketing.
Controlling:
• To measure progress on own KPIs
• To report to all superiors along EMEA guidelines.
• Preparation of weekly Sales-KPI Reports.
• Collection of monthly comments from reports.
Requirements:
• Must be female between the ages of 35 and 45
• Strong personality
• Advance on MS Office (PowerPoint)
• Excellent communication skills
• Nationality – Open
• Salary: AED 15,000 + benefits
Candidates who fit the profile ONLY, please email your CVs to Simon D’Souza at
jobs@jobtrackme.com with the job title in the email subject box.


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
SALES ASSOCIATE
• 10 positions to be recruited
• Salary: AED 3,600 - 4,000 maximum
• Location: Dubai, Sharjah and Abu Dhabi
• Retail Timings: Working in the shopping mall as per mall timings on a roster basis
(Friday is never a holiday)
• Work Environment: Very encouraging and satisfactory with store managers
investing time in coaching employees.
• Commission: If the store meets targets, there is additional commission on slab
basis.
• Requirement: Arabic Speaking ideally (but not necessary) – open to all other
nationalities.
• Experience: 6 months + in any retail but ideally selling sports related, fashion
related or shoes related.
• Even a well spoken, smart, presentable candidate from Customer Service
background, please send the profile to me.
• Training will be provided.
Candidates who fit the profile ONLY, please email your CVs to Simon D’Souza at
jobs@jobtrackme.com with the job title in the email subject box.


Promoters
A publishing house is looking to recruit 2 girls to promote their magazine.
The job specifications are:
Timings: 9pm - 1am
Venue: Expo Centre Sharjah
Description: Promote the magazine, sell subscriptions
Remuneration: 2000 AED
Dates: 21st August - 11th September 2010
Please send CVs with photographs to publishinguae@gmail.com
Promoters Required from 1st September - 30th November
Weekends only (Thursday, Friday & Saturday)
7pm to 11pm
50 - 60 an hour
Send CVs to promo.promotions.dubai@gmail.com
Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
Bilingual Executive Secretary
Reference Number: 22227
Industry: Aerospace
Requirements:
• Female Arabic nationals
• Living and willing to work in Dubai
• 28-35 years old
• With transferrable visa
• Knowledge/experience in translation
• Worked with Senior Managers eg. VP, CEO, GM, MD, President, Board of directors
• Flexible to work longer hours
• AED 8,000 to AED 12,000


Temporary Administration Assistant
Reference Number: 21832
Industry: Hotel and Hospitality
Requirements:
• Female / any nationalities
• Living in Abu Dhabi
• On relative’s visa – husband/father/mother/brother
• Can start immediately
• Previously worked as admin/secretary in a construction company
• Willing to work for two weeks then, company will review your performance
• Can become a permanent position
• 9AM to 6PM
• AED 6,000 to AED 8,000


Leasing Executive
Reference number: 22223
Industry: Real Estate/ Investment
Requirements:
• Male / Female / any nationalities
• Strong command of English
• Knowledgeable in UAE real estate market, laws and system
• Has previously worked in facilities management / real estate / property
management
• Have experience managing villas, handling tenancy contract
• Has valid UAE driving license
• Can start by 1st week or 2nd week of September 2010
• With valid UAE driving license
• AED 8,000 to AED 10,000 with free air ticket once every two years


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
HR Director
Reference number: 22218
Industry: Diversified group of companies
Requirements:
• Open only to Arabic nationals
• Living / willing to relocate to Qatar
• With 10 years of Senior Management experience in HR
• Qualified / certified / MBA holder
• Has previous experience working with a diversified group of companies
• AED 35,000 to AED 45,000


Legal Researcher
Reference number: 21857
Industry: Legal Firm
Requirements:
• Open to male / female
• Accepting candidates even based outside UAE - For English speakers based outside
UAE, a relocation package will be provided
• Have at least 3 years of research experience in law firm
• Law degree or qualified
• Have 2 years research experience in UAE
• Familiar with UAE law and systems
• AED 15,000 to AED 18,000
Personal Assistant


Reference number: 22136
Industry: Telecommunication
Requirements:
• Female Arabic national
• Aged 28-38 years old
• Excellent command of English language; Turkish skill is a plus
• Strong administration and translation experience
• Previous experience in handling personal matters of CEO/President
• Worked with CEO/President/Managing Director/ Board of Directors
• Not jumping every year from one job to another
• Willing to travel when needed
• Living and working in Dubai
• AED 15,000 to AED 17,000


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
Legal Translator – 1 for Dubai and 1 for Abu Dhabi
Reference number: 22189
Industry: Legal
Requirements:
• Have 3 years experience legal translation experience in UAE
• Familiar and knowledgeable of legal terminology
• Arabic nationals
• Law degree or qualified
• Willing to work either in Dubai / Abu Dhabi
• AED 15,000 to AED 17,000


Male Executive Secretary / Office Manager
Reference: 21685
Industry: Manufacturing
Requirements:
• Male / any nationality
• Aged 28 to 38 years old
• Willing to work in KSA
• Worked with international / multinational organization
• Worked with Senior Management
• Excellent command of English
• Salary is negotiable
• With transferrable Iqama, if based in KSA


Account Manager / Sales Executive
Reference: 21580
Industry: Printing
Requirements:
• Male / female / any nationality
• With driving license
• Living / willing to work in Dubai
• Preference will be given to someone who can start immediately
• Previous experience in large formatted print materials
• AED 5,000 to AED 8,000


Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com rameshvis@gmail.com
Temporary Legal Secretary
Reference number: 22098
Industry: Legal
Requirements:
• Female / any nationality
• Previously worked as a legal secretary
• Living in Abu Dhabi
• With 60 wpm typing speed
• Experience in audio typing
• AED 12,000 to AED 16,000
• On husband/father/mother visa

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

Source : http://www.technopark.org/job-search


Job Title Company Closing Date
Web Designer/Developer (Code: WD-2010) Visionics India Pvt. Ltd. 10/20/2010
Executive – Receivables and Reporting Services Alamy Images India Pvt Ltd 08/27/2010
E-learning Calculus Content Expert PIT Solutions Pvt. Ltd. 10/19/2010
Software Engineer Dotnet - PIT PIT Solutions Pvt. Ltd. 10/19/2010
Software Engineer - PHP. Focal3 Software Pvt. Ltd. 09/15/2010
Customer Care Executive GD Innovative Solutions Pvt Ltd 09/20/2010
SOFTWARE ENGINEER - PHP OptioLogic Technologies Pvt. Ltd 10/18/2010
Web Developer Fresher/Beginner (Asp.net) Dev Web Services India Pvt Ltd 09/30/2010
Data Analyst RM EDUCATION SOLUTIONS INDIA PVT.LTD 09/06/2010
Software Engineer Focal3 Software Pvt. Ltd. 09/15/2010
PHP DEVELOPER 3E IT Solutions P Ltd 08/30/2010
PHP Programmer Integrated Dynamic Solutions India Pvt Ltd 10/30/2010
Jr. Systems Administrator Integrated Dynamic Solutions India Pvt Ltd 10/30/2010
Java Programmer Integrated Dynamic Solutions India Pvt Ltd 10/30/2010
Technical Lead / Project Lead Integrated Dynamic Solutions India Pvt Ltd 10/30/2010
Senior Software Engineer .Net Integrated Dynamic Solutions India Pvt Ltd 10/30/2010
Software Engineer – Q/A Fischer Systems India Pvt. Ltd. 09/06/2010
Content Writers Aptara Learning Private Limited 08/31/2010
SOFTWARE ENGINEER OptioLogic Technologies Pvt. Ltd 11/30/2010
Front Office Executive – On Contract PIT Solutions Pvt. Ltd. 09/30/2010



Electrical Engineering E-Learning Subject Expert PIT Solutions Pvt. Ltd. 10/30/2010
Civil Engineering E-Learning Subject Expert PIT Solutions Pvt. Ltd. 10/30/2010
Mechanical Engineering E-Learning Subject Expert PIT Solutions Pvt. Ltd. 10/30/2010
Sr. Software Engineer Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
iPhone Developer Exalt Integral Solutions P Ltd 08/30/2010
Tech Lead (Php / Magento specialist) Sandblue Software Pvt. Ltd. 08/28/2010
Sr.J2ee Developer/J2ee Architects McFadyen Consulting 08/29/2010
Sr. PHP Programmer Flip Media Pvt Ltd. 09/22/2010
PHP Programmer Flip Media Pvt Ltd. 09/22/2010
SQA Analyst Integrated Dynamic Solutions India Pvt Ltd 09/06/2010
Associate – Marketing PIT Solutions Pvt. Ltd. 08/30/2010
Customer Support Engineer Exalt Integral Solutions P Ltd 09/01/2010
Application Engineer (Code: AE-2010) Visionics India Pvt. Ltd. 09/01/2010
Technical Writer (Code: TW-2010) Visionics India Pvt. Ltd. 09/01/2010
Software Engineer (Silverlight developer) Exalt Integral Solutions P Ltd 09/15/2010
3D Game Developer Integrated Dynamic Solutions India Pvt Ltd 08/30/2010
Software Engineers/ Senior Software Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Software Engineers/Senior Software Engineers/Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Sr. Software Engineer Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Software Engineer/ Sr. Software Engineer Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010



Software Engineers/ Senior Software Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Senior Software Engineers/ Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Senior Software Engineers/ Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Senior Software Engineers/ Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Senior Software Engineers/ Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Senior Software Engineers/ Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
Software Engineers/Senior Software Engineers/Lead Engineers Network Systems & Technologies (P) Ltd [NeST] 09/30/2010
QA Specialist Flip Media Pvt Ltd. 10/03/2010
Senior Java Programmer Rain Concert Technologies Pvt.Ltd. 09/23/2010
Sales Executive Transversal e Networks (P) Ltd 08/25/2010
iPhone, Apple SDK, UI Development, iPad Platform Developers Captech Solutions India Pvt Ltd 09/15/2010
Android Developers Captech Solutions India Pvt Ltd 09/15/2010
Head of Software Development / Software Development Manager Captech Solutions India Pvt Ltd 09/15/2010
Consultant / Senior Developer with XML Integration, SOAP (Part time /Freelancer) Dev Web Services India Pvt Ltd 09/08/2010
Software Engineer – Typo-3 PIT Solutions Pvt. Ltd. 08/25/2010




For more details, please visit http://www.technopark.org/job-search





__._,_.___

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தலையங்கம்: பாவம், கறவை மாடுகள்



தலையங்கம்: பாவம், கறவை மாடுகள்

First Published : 26 Aug 2010 12:00:00 AM IST

Last Updated : 26 Aug 2010 12:13:13 AM IST

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.










செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

முற்கால பாண்டியர்

முற்கால பாண்டியர்
Friday, 20 August 2010 15:48 வரலாறு - தமிழர் வரலாறு .பாண்டியர்

கி.பி. 1200ல் பாண்டியரின் ஆட்சியின் பரப்பு

'அரசமொழிகள் தமிழ்
தலைநகரங்கள் முதற்சங்கம் -
தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - மதுரை
மணவூர்
உபதலைநகரம் - கொற்கை


ஆட்சிமுறை முடியாட்சி
முன்னிருந்த ஆட்சி தகவல் இல்லை
அடுத்து அமைந்த ஆட்சிகள் தில்லி சூல்தான் ஆட்சி, நாயக்கர், விஜயநகர ஆட்சி
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
குடுமி
கடைச்சங்க காலப் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.பி. 50-60
மதிவாணன் கி.பி. 60-85
பெரும்பெயர் வழுதி கி.பி. 90-100
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100-120
இளம் பெருவழுதி கி.பி. 120-130
அறிவுடை நம்பி கி.பி. 130-145
பூதப் பாண்டியன் கி.பி. 145-160
நெடுஞ்செழியன் கி.பி. 160-200
வெற்றிவேற் செழியன் கி.பி.200-205
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215
உக்கிரப் பெருவழுதி கி.பி. 216-230
மாறன் வழுதி கி.பி. 120-125
நல்வழுதி கி.பி. 125-130
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130-140
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140-150
குறுவழுதி கி.பி.150-160
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160-170
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170-180
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.


பாண்டிய நாடு
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

பாண்டியரின் தோற்றம்
சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி

“ "முன்னீர் விழவின் நெடியோன்


நன்னீர் மணலினும் பலவே"

−(புறம் - 9)


அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

பாண்டியரைப் பற்றிய பதிவுகள்
இராமாயணத்தில்
பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.

மகாபாரதத்தில்
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.

அசோகனின் கல்வெட்டுக்களில்
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாவம்சத்தில்
இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.

பிற நாட்டவர் பதிவுகள்
கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.

சங்க காலப் பதிவுகள்
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

இமயம்வரை பாண்டியரின் ஆட்சி
மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி
களப்பிரர் ஆட்சி
வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும்,சேர,சோழ,பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர்.களப்பிரரைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.

சோழராட்சி
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

மகமதியர் ஆட்சி
மகமதியர் வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குப் படையெடுத்து வந்தனர். கோவில்களைக் கொள்ளையடிப்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை திரட்டி வந்த கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1830 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுடீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-

மன்னன் ஆட்சிக்காலம்
மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1314-1346
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1315-1347
மாறவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1334-1380
மாறவர்மன் பரக்கிரம பாண்டியன் கி.பி. 1335-1352

இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் விரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயர்களின் ஆட்சி
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜய நகரப் பேரரசாட்சி
கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜய நகரப் பேரரசு ஆண்டது.நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர,சோழ,பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.

பரக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.
கி.பி. 1384-1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.
கி.பி. 1401-1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியர் ஆட்சி இயல்
நாட்டியல்
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

“ "முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு"

−(புறம்-110)

“ "வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை


முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"

−(புறம்-242)


என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.

பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும் ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.

இரணிய முட்டநாடு குடநாடு புறப்பறளைநாடு ஆரிநாடு களக்குடி நாடு திருமல்லிநாடு
தென்புறம்புநாடு கருநிலக்குடிநாடு வடபறம்புநாடு அடலையூர்நாடு பொங்கலூர்நாடு திருமலைநாடு
தென்கல்லகநாடு தாழையூர்நாடு செவ்விருக்கைநாடு கீழ்ச்செம்பிநாடு பூங்குடிநாடு விடத்தலைச்செம்பிநாடு
கீரனூர்நாடு வெண்புலநாடு களாந்திருக்கைநாடு பருத்திக் குடிநாடு அளநாடு புறமலை நாடு
துறையூர்நாடு துருமாநாடு வெண்பைக் குடிநாடு இடைக்குளநாடு நெச்சுரநாடு கோட்டூர்நாடு
சூரன்குடிநாடு பாகனூர்க்கூற்றம் ஆசூர்நாடு தும்பூர்க்கூற்றம் ஆண் மாநாடு கீழ்வேம்பநாடு
மேல்வேம்பநாடு தென்வாரிநாடு வடவாரிநாடு குறுமாறைநாடு குறுமலைநாடு முள்ளிநாடு
திருவழுதிநாடு முரப்புநாடு தென்களவழிநாடு வானவன் நாடு கீழ்களக்கூற்றம் கானப்பேர்க்கூற்றம்
கொழுவூர்க்கூற்றம் முத்தூர்க்கூற்றம் மிழலைக்கூற்றம் மதுரோதயவளநாடு வரகுண வள நாடு கேளர சிங்கவளநாடு
திருவழுதி வளநாடு வல்லபவள நாடு பராந்தகவள நாடு அமிதகுண வளநாடு

(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.

குடும்ப இயல்
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.

கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆட்சி இயல்
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.

1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.

2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.

3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.

4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு:-

அரையன் பேரரையன் விசையரையன் தென்னவன் பிரமராயன் தென்வன் தமிழவேள் காவிரி
ஏனாதி பஞ்சவன் மாராயன் பாண்டிய மூவேந்தவேளான் செழிய தரையன் பாண்டிப் பல்லவதரையன் தொண்டைமான்
பாண்டிய கொங்கராயன் மாதவராயன் வத்தவராயன் குருகுலராயன் காலிங்கராயன்

காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ,மோதிரம்,இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.

அரசின் வரி
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.

நில அளவியல்
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.

இறையிலி
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.

அளவை இயல்
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன செவிடு,ஆழாக்கு,உழக்கு, உரி,நாழி, குறுணி போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.

எடுத்தல் அளவை

10 கர்ணம் - 1 கழஞ்சு
100 பலம் - 1 துலாம்
முகத்தல் அளவை

5 செவிடு - ஒரு ஆழாக்கு
2 ஆழாக்கு - ஒரு உழக்கு
2 உழக்கு - ஒரு உரி
2 உரி - ஒரு நாழி
6 நாழி - ஒரு குறுணி
16 குறுணி - ஒரு கலம்
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.

நாணய இயல்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.

சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊரவை
பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு:-

சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.
தோட்ட வாரியம் - நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
பஞ்சவாரியம் - குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.
அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும்.புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது. மருதனிள நாகனார்,

“ "கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்


பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்"

−(அகம் - 77)


என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்பதனை அறியலாம்.நெல்லையில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] ஆவணக்களரி இயல்
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

படை இயல்
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை,தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்"

சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] வணிகவியலும் தொழிலியலும்
பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை,கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.
வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.
வணிகர்கள் கோவேறு கழுதை,மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர்.வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி' என்றழைக்கப்பட்டனர்.
பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
“ "மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்


கொற்கையம் பெருந்துறை முத்து"

−(அகம்-27)

“ "பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை


அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து"

−(அகம்-201)


இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன.மேலும் மதுரைக்காஞ்சி,சிறுபாணாற்றுப்படை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

[தொகு] பல்வகைத் தொழில்கள்
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.

“ "நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்


பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து


நறும்படி செறிந்த அறுவை வீதியும்"

−(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)


முத்து,பவளம்,மிளகு,பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து குதிரைகளும்,மது வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வணிகத்திலும்,கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.

[தொகு] கல்வி இயல்
பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண்,பெண் இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக

“ "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்


பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!


ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்


மூத்தோன்வருக என்னாது அவருள்


அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்!"

−(புறநானூறு)


என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்,

“ "பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க என்


நிலவரை"


என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.

“ "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க


அதற்குத்தக!"


என்றும்,

“ "கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு


கல்வியே!"


என்றும் வள்ளுவர் கூறினார்.இவை அரங்கேற்றமானது பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி புறம்பாடிவளாவாள்.செல்வமும் ஒருங்கே பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு ஆவாள்.பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள் புலமை காட்டும்.

“ "நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்"

−(புறம்-72)


என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில் வல்லமை பெற்று விளங்கியிருந்தான்.அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி குறிஞ்சி,வருதம் பாடுவதில் வல்லவனாக விளங்கினான்.சங்க காலப் புலவர்களிலும் மேலாக கவிதை பாடிய பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.

“ "கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து


பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்"


என்னும் பாடல் சான்றாகும். சிவனே பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும் பாண்டியன் மகள் தான். "பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்" என்று அவ்வையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "வியாத தமிழுடையான் பல்வேல் கடல்தானைப் பாண்டியன்" என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.

நல்லூர் நத்ததனார்,

“ "தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்


மகிழ்நனை மறுகின் மதுரை"

−(சிறுபா-66-67)


என்று பாடியுள்ளார்.

“ "தமிழ் வையத் தண்ணம் புனல்"

−(பரிபாடல் - 6 - வரி - 60)


என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள்,சேக்கிழார்,கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர்.தொல்காப்பியம்,திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர் புலவராகவும் இருந்தனர்.குருவே தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.

ஆன்மீக இயல்
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும்.பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் வைணவம்,சமணம்,புத்த மதம் போன்ற பிற மதங்களும் இருந்தன.சிவன் கோயிலில் விண்ணகரங்கள்,அருகன் கோட்டங்கள்,புத்த பள்ளிகள் போன்றனவையும் அடங்கியிருந்தன.அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.பாண்டிய அரசர்கள்,அமைச்சர்கள்,அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன.சங்க காலத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில் கோயில்களில் விழா எடுத்து மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.தேவாரம்,திருவாய் மொழிகள் போன்றன ஓதப்பட்டன.இயல்,இசை, நடனம்,கூத்து முதலியன நடைபெற்றன.செங்கற் கோயில்கள்,கற்றளிகள்,செப்புத் திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு அணிகலன்களினை வழிபாடு செய்யத் தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள்,பணம் சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின் பொதுப்பணம் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.புத்தகசாலைகள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர் தண்டனையும் பெற்றனர்.கோயிலில் அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன.கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.

பாண்டியர் பழக்க வழக்கங்கள்
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும்,பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன்.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது."மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்

“ "பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்"


என்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை. பாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக

“ "பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர்"


எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“ "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்"


எனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.

“ "அவரவர் வேண்டிய அவரவர்க்கு அருளியவன்"


பராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.

பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்
எயினன் கணபதி சாத்தஞ்சாத்தன் தீரகரன் மூர்த்தி எயினன் சங்கரன் சீதரன் காரி
கண்டன் காங்கேயன் திருக்கானப்பேருடையான் குருகுலத்தரையன் புள்ளன் எட்டிச்சாத்தன்

உசாத்துணை
என்.கே வேலன், பாண்டியர் ஆட்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.
தே. ப. சின்னசாமி,பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு, 2001.

தமிழகத்தில் ஆதிசங்கரர் இருந்தது எப்படி எக்காலத்தில் உணர்ந்திருக்கக்

கடந்த மார்ச் மாதம், 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும்
தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய
கருத்தரங்கம் நடந்தது. அதில் வாசிக்கப் பட்ட ஆய்வுகட்டுரைகள், ஒரு
புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.

அதில், கீழ்காணும் கட்டுரை, "பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?" என்ற
கட்டுரைக்கு சம்பந்தம் உள்ளது என்பதால், அதை இங்கு படிவு செய்கிறேன்.


1. அட்டவணைகள் சரியாக பதிவாகவில்லை. வார்த்தைகள் சிதறியுள்ளன.


2. அடிக்குறிப்புகள் பதிவாகவில்லை.


3. பாடல்களும் தெரியவில்லை.


4. நமது குழுவில், "எடிட்டிங்" வசதி உள்ளதா, என்று தெரியவில்லை.
---------------------------------------------------------------------------­-------------------------------------------------------------------


தமிழகத்தில் ஆதிசங்கரர் இருந்தது எப்படி எக்காலத்தில் உணர்ந்திருக்கக்
கூடும்?


கே. வி. ராமகிருஷ்ண ராவ்


முன்னுரை: ஆதிசங்கருடைய காலம் பண்டிதர்களாலும் சரித்திர ஆசிரியர்களாலும்
நடப்பு சகாப்தத்திற்கு முன்பு 6ம் நூற்றாண்டில் (6th cent.BCE) மற்றும்
நடப்பு சகாப்ததின் 9வது நூற்றாண்டில் (9th cent.CE) இருந்திருந்ததாக பல
ஆதாரங்களின் மீதான எடுத்துக் காட்டப்பட்ட கருத்துகள் இன்றளவிலும்
வந்துள்ளன. இடைத்தவிர மிகவும் மாறுபட்ட தேதிகளை 32nd cent.BCE மற்றும்
14th cent.CE எனவும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இருப்பினும்
ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய காலக் கணக்கிடுகளை சுருக்கமாக, இலக்கிய,
சமகால, வானியல், கல்வெட்டுகள் மற்ற ஆதாரங்களின் மீதுள்ள இரு தேதிகளில்
அடக்கலாம், அவை முறையே 509-477 BCE மற்றும் 788-820 CE என்பனவாகும்,


ஆதிசங்கரரால் ஏற்படுத்தப் பட்ட மடங்கள் என்று சொல்லப்படுபவை 509-477 BCE
காலத்தைதான் பின்பற்றுகின்றன . ஆதிசங்கரர் பிறந்தது, வளர்ந்தது,
படித்தது, சிறு வயதிலேயே சந்நியாசியாகியது, பல பண்டிதர்களுடன் வாதிட்டு
வென்றது, பல நம்பிக்கை முறைகளை அறுசமயங்களில் அடக்கியது முதலிய மற்ற
அவரது வாழ்க்கைக் குறிப்புகளைக் கவனிக்கும்போது, அவையெல்லாம்
பழந்தமிழகத்தில் அல்லது தென்னிந்தியாவில் நிகழ்ந்திருக்கவேண்டும்.
ஆகையால் அவரது சமகால நண்பர்கள், பண்டிதர்கள் மற்றவர்கள், அவர் இருந்ததை,
அவரது பிரபலமான அத்வைத தத்துவத்தின் தாக்கத்தை உணர்ந்திருக்காமல்
இருக்கமுடியாது. அந்நிலையில் கீழ்காணும் விவரங்களை கருத்தில்
கொள்ளவேண்டியுள்ளன:


1. ஆதிசங்கரர் தமிழகத்தில் பிறந்திருந்ததனால், அத்தகைய பல இடங்களுக்குச்
சென்று வந்த, மிகவும் செயல்பாடுள்ள, அவரை சமகாலத்து ஆட்சியாளர்கள்,
தத்துவ அறிஞர்கள், துறவியர், புலவர்கள், மற்றவர் மொத்தமாக தமது
எழுத்துகளில் குறிப்பிட மறந்திருக்க முடியாது.
2. அதுவும் பற்பல இந்திய நம்பிக்கையாளர்களை அறுவகை சமய பிரிவுகளில்
கொண்டு வந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளனர் . அவையாவன:
எண் முக்கிய வழிபடும் தெய்வம் நம்பிக்கை மற்றும் வழிபடும் தெய்வங்கள்,
தேவதைகள் முதலியன
1 காணபத்யம் கணபதி, வினாயகர் முதலியன
2 கௌமாரம் குமரன், முருகன் முதலியன
3 வைணவம் விஷ்ணு, திருமால் முதலியன
4 சௌரம் சூரியன், அக்னி முதலியன
5 சாக்தம் சக்தி, கொற்றவை, இலக்குமி முதலியன
6 சைவம் சிவன், பசுபதி, ருத்ரன் முதலியன
இத்தகைய ஒன்றுசேர்த்த செயல்பாடு பரந்த பாரத தேசத்தில் நடந்திருந்ததால்
மேற்குறிப்பிடப் பட்ட இரு காலத்தைய இலக்கிய, அகழ்வாய்வு
ஆதாரங்களினின்றுத் தப்பித்து இருக்க முடியாது.
3. அத்தகைய ஒன்றுபடுத்திய முயற்ச்சிகளில், அவர் பற்பல சாகைகள், அவற்றின்
தலைவர்கள், மாறுபட்ட பிரிவினர், முதலியோரை எதிர்கொண்டிருக்கவேண்டும்,
அவர்களும் தமது நூற்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
4. இவற்றையயல்லாம் விட, புத்தமதம் இந்தியாவிலிருந்து துரத்திவிட அல்லது
மறந்துவிட இவர்தாம் காரணம் என்று குற்றஞ்சாட்டப் படுகிறார் .
அவ்வாறாகயிருப்பின் பௌத்தர்கள் அத்தகைய தமது எதிரியை விட்டு வைத்திருக்க
மாட்டார்கள். மேற்குறிப்பிடப் பட்ட இருகாலகட்டங்களிலும் புத்தமத
இலக்கியங்களில் நிச்ச்சயமாக குறிப்பிடப்பட்டிருப்பார்.


ஆகவே பழந்தமிழ் இலக்கியங்களில் அவரைப் பற்றிய அல்லது அவரது அத்வைத
தத்துவத்தின் தாக்கம் முதலியவற்றைப் பற்றி ஏதாவது நேரிடை அல்லது மறைமுக
குறிப்புகள் உள்ளனவா என்று மேற்கண்ட விவரங்கள் மனத்திற்கொண்டு
ஆராயப்படுகின்றது


சங்க-இலக்கியத்தில் “சங்கர” என்ற வார்த்தை உள்ளதா? “சங்கர” என்ற
சொற்பிரயோகம் சங்க-இலக்கியத்தில் இல்லை. சங்கருடணன் = “சங்கர்ஷண”,
என்பதனை தமிழ்படுத்தி “கருங்கண் வெள்ளை” என பரிபாடலில்
குறிப்பிடபட்டுள்ளது. வாசுதேவன்-சங்கருடணன்-பிரத்தியும்னன்-அநிருத்தன்
என்ற நால்வரும் -


செங்கட் காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (பரிபாடல். 3.80-81)


என்று பரிபாடலில் குறிப்பிடப்படுகின்றனர். இங்கு சங்கருடணன் என்றால்
எல்லாவற்றையும் தன்னுள் ஈர்ப்பவன், இழுப்பவன், சேர்ப்பவன் என்ற பொருள்
வரும். சமஸ்கிருதத்தில் சங்கர, ஸங்கர, ஷங்கர முதலிய வார்த்தைகளுக்கு
கீழ்கண்டவாறு பொருள் உள்ளது :


• சம்கர = மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, இன்பத்தை
உண்டாக்குடகின்றவன்
• சங்கர / ஷங்கர = சிவனைக் குறிக்கும் பொதுப்பெயர்; பிரபலமான குரு,
மதத்தலைவர், அதாவது ஆதிசங்கரர்.
• ஸங்கர = 1. கலவை, எல்லாம் சேர்ந்தது, குழுமம்.
2. எல்லாவற்றையும் சேர்ப்பது, இணைப்பது.
3. குழப்பம், பலசாதிகள் கலப்பு, கலப்பு-விவாகங்களினால்
ஏற்படும் பற்பல கலப்பு-சாதிகள்.
4. இரண்டு வார்த்தைகள் சேர்ந்தது, “சம்ஸ்ருஸ்டி” என்பதற்கு
எதிரானது.
5. பொடி, தூள்


“சங்கவருணர்” என்ற நாகரியர், புலவராக இருக்கலாம் என சில தமிழ்
உரையாசிரியர்கள், ‘தந்துமாறன்’ (புறம்.360) என்ற புறநானூற்றுப் புலவனைக்
குறிப்பதாக கூறுகின்றனர். வையாபுரிப் பிள்ளை இவரை மரபாற் பெயர் பெற்ற
புலவர் வரிசையில் சேர்த்துள்ளார். அவ்வை துரைசாமி “சங்கவர்ணன்” என்பதனை
வளைவணன் என்னும் தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் எனக்கொண்டு, வளைவணன் என்று
மணிமேகலையில் வருகின்ற நாகநாட்டரசன் என்ற பெயருடன் ஒப்பிட்டு, இவர்
பெயரும் ‘நாகரியர்’ என்றுள்ளமையால், அவனோடும் அந்நாட்டோடும்
தொடர்புபடுத்துவார். ஆனால், முக்கியமாக ‘தந்துமாறன்’ ஒரு ‘சங்கவருண’
அதாவது கலப்பு-சாதியை சேர்ந்தவன் என்பதனை நேரிடையாகக் குறிப்பிட
தயங்கியது தெரிகின்றது. எனவே சங்கருடணன், சங்கவருணன் முதலியவை “சங்கம்”
குழுமம், சேர்ப்பு என்ற பொருளில் உள்ளதை காணலாம்.


எனவே, சங்ககாலத்தில் அவ்வாறு “சங்கர, ஷ்ங்கர, ஷங்கர்ஸண” என்ற
வார்த்தைகளை அறிந்திருக்கலாம், ஆனால் மறைமுகமாகத்தான் குறித்துள்ளனர்.
நிகண்டுகள் நேரிடையாக சமஸ்கிருத பொருட்களை-அர்த்தங்களைக் கொடுத்துள்ளன.


“ஆதி” என்ற வார்த்தையின் உபயோகம்: சங்க-இலக்கியத்திலிருந்து முதல்
நூற்றாண்டுகளில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்கள் வரை காணப்படும் “ஆதி”
என்ற சொல், மிகவும் முக்கியத்துவமாகத் தோன்றுகிறது. திருவள்ளுவரின்
“ஆதிபகவன்” என்ற சொற்றொடரும் சிறப்பானதாகும். சங்க-இலக்கியத்தில் “ஆதி”
என்ற சொல், கீழ்கண்டவாறு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது:


1. ஆதி = பழமை (கலித்தொகை.96:36-37)
2. ஆதிமந்தி = ஆட்டன் அத்தி என்பவனது மனைவி, கரிகாலனின் மகள் (அகம்.45,
56, 236, 376, 306)
3. ஆதிமந்தியார் = குறுந்தொகை 31ம் பாடல் பாடிய புலவர்.
4. ஆதிபிரும்மம் = முதல் பிரும்மன் (பரிபாடல்.3.63)
5. ஆதிஅந்தணன் = நான்முகன், முதல் பிரும்மன் (பரிபாடல்.5.22-25)
6. ஆதிரை = நட்சத்திரங்களில் முதன்மையானது (பரிபாடல்.11.7)
7. ஆதிரையான் = ஆதிரை நாளுக்கு உரியவன், சிவன் (கலி.150:10)
8. ஆதிரை முதல்வன் = சிவன் (பரிபாடல்.8.6-7)
9. ஆதி வராஹம் / கேழல் = முதல் பன்றி மூழ்கிய உலகத்தை / வேதங்களை ஊழி
வெள்ளத்திலிருந்து வெளிகொணர்ந்தது (பரிபாடல்.8.6)


ஐம்பெருங்காப்பியங்களில் “ஆதி” என்ற சொல் மிகவும் பரவலாக ஜீனர்களையும்
புத்தர்களையும் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது.


1. ஆதிமுதல்வன் புத்தனைக் குறிக்கிறது மணிமேகலை.6:11, 10:61, 12:37,
12:108; 29:23
2. ஆதிபூதம் முதல் பூதம் , அதாவது முதன்மையான பூத வகையினர்
(சிலப்பதிகாரம்.22:36)
3. ஆதிமுனிவன் மணி.7:10
4. ஆதிசான்முனிவன் புத்தன் (மணி.7:19; 8:61)
5. ஆதிஜீனேந்திரன் புத்தரைக் குறிக்கிறது, அதாவது “ஆதி புத்தனை”க்
குறிக்கிறது (மணி.29:47)
6. ஆதிநாய்கன் கந்துக்கடன் = நாயகனுக்கு / கடவுளுக்கு செய்யப்படும் முதல்
கடமை (சீவகசிந்தாமணி.665)
7. ஆதிமுதுநாய்கன் முதல் முழு நாய்கன் (சீவ.1797)
8. ஆதியந்தமகன்ற நான்மைக்கொடி முதலும் முடிவும் இல்லாத அகலமான நான்கு
வகையான வெற்றிக்கொடிகள் (சீவ.3082)
9. ஆதிகாலத்து அந்தணமகன் முதல் அந்தணன் = பிரம்மன்.
பிரம்மனது மகன் = சுயாம்பு மனு (சீவ.366)
10. ஆதிக்கண் = ஆதிக்காலம், ரிஷபதேவர் தோன்றியதற்கு முன்பான காலம் (சீவ.
2713)
11. ஆதிவேதம் = ஜைனவேதம் (சீவ.1242)


“ஆதிவேதம்” என்பதை சைனர்கள் தமது மத-நூற்களுக்கு உபயோகப் படுத்துவது,
இங்கு “சீனேந்திரன்” என்ற சைனர்களின் வார்த்தையை பௌத்தர்கள் எடுத்தாள்வது
முதலியன எவ்வாறு முதலில் சைனர்கள் ஏற்கெனவே மக்ககளிடையே பிரபலமாக உள்ள
வேதமதச் சின்னங்களை உபயோகித்து, அவர்களைக் கவர எடுத்தாளுகின்றனர்
என்பதனைக் காணலாம். பிறகு வந்த, பௌத்தர்களும் அதே முறையைக் கையாண்டு
மற்றமத-நம்பிக்கைகளை எடுத்தாண்டு, தமக்குடையது போன்றத் தோற்றத்தை
ஏற்படுதியுள்ளனர் என்பதையும் காணலாம் . சீவகசிந்தாமணியின் நாயகன் எல்லா
வேதகால தேவதைகளயும் (பெண்-கடவுளர்கள்) வெற்றிக் கொண்டது போலச்
சித்தரிக்கப் படுகிறான் .


முன்பே குறிப்பிட்டபடி, திருக்குறளின் “ஆதிபகவன்”, அந்நூலாசிரியரின் தாய்-
தந்தயரைக் குறிக்கும் என பரவலான கருத்து உள்ளது. உரையாசிரியர்களின்
“ஆதிபகவன்” பற்றிய விவாதங்கள் மிகவும் பயனளிப்பதாக உள்ளது . இங்கு “ஆதி”
முதல் எனவும், “பகவன்” = பக + வன் = எல்லாவறையும் பெற்றுள்ள அல்லது
தன்னுள் அடக்கியுள்ள என்று பொருள்படும். ஆகவே “ஆதி” என்ற வார்த்தை தகுந்த
இடத்தில் அதன் பொருள் பெறுமாறு உபயோகித்ததை சங்காலத்திலிருந்தே காணலாம்.
ஆகவே, “சங்கர” என்பவரை அறிந்திருந்தால், அக்காலகட்டத்தில் அப்பெயர்
“சங்கர” என்றோ “ஆதிசங்கர” என்றோ உபயோகப் பட்டிருக்கும். ஆனால், அவ்விதமாக
காணப்படாதலால், அத்தகைய - “ஆதி” என்பதனை “சங்கர” என்பதுடன் சேர்த்து -
குறிப்பிடப்படும் வழக்கம், பிற்பாடு தோன்றிருக்கவேண்டும். ஒன்றிற்கும்
மேலான மடங்கள் நிறுவப்பட்டு, பல சங்கரர்கள் இருந்தபோது, முதல் சங்கரரை
எடுத்துக் காட்டும் முறையில் “ஆதி சங்கர” என்ற உபயோகம்
தோன்றிருக்கக்கூடும்.


“ஆதிசங்கரர்” தாக்கத்திலிருந்து வந்தவை தான் “ஆதிஜீனன்”, “ஆதிபுத்தன்”
முதலியன: நிச்சயமாக சங்கரருடைய பணியை அவரது சீடர்கள் தொடர்ந்து செய்து
வந்ததால், அவர்களது புகழ் பரவ ஆரம்பித்தது. இந்திய பாரம்பரியம் படி
பார்த்தால் ஒரு குருவின் வழியில், அவரது பெயரிலேயே நற்பணி தொடர்ந்து
வந்து கொண்டிருக்கும். எனவே, அவரை மற்றவரிடமிருந்து காட்ட “ஆதிசங்கரர்”
என்ற பதத்தை உபயோகித்து இருக்க வேண்டும். இதனாலேயே, பிறகு ஜைனர்களும்,
பௌத்தர்களும் இந்த “மஹாவீரர்” ஒரு தீர்த்தங்கர் தான், அவருக்கு முன்பு பல
தீர்த்தங்கர்கள் இருந்தனர் என்று தமது புராணங்களை எழுத ஆரம்பித்தனர் .
புத்தமததினரும் அத்தகைய “ஆதிபுத்தன்” என்ற கருத்தை தமது மதநூல்களில்
புகுத்திக் கொண்டனர் . எப்படி, விஷ்ணு அவதாரங்கள் எடுத்தாரோ, அதே மாதிரி
அச்சின்னங்களை உபயோகித்து அவர்களும் தங்களுடைய ஜீனர்களையும்,
புத்தர்களையும் ஏற்படுத்தினர் . இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள்
புத்தரையும் உரு அவதாரமாக்கி அதன் மூலம், புத்தமத்தத்தை கவர்ந்துவிட்டனர்
என்றெல்லாம், இக்கால சித்தாந்த-சரித்திர ஆசிரியர் மற்றவர் எழுதுவர்.
ஆனால், ஜைனர்கள் பத்தல்ல 24 அவதாரங்கள் உள்ளன என்று 24 தீர்த்தங்கர்களை
முன் வைத்தனர். பௌத்தர்களும் விடவில்லை, அவர்களும் 24 புத்தர்களை
முன்வைத்தனர் . அதுமட்டுமல்லாது, ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஆறு புத்தர்கள்”
தாம் என்றாலும், திடீரென்று 120 புத்தர்கள் உள்ளதாக தமது நூல்களில்
திருத்திக் குறிப்பிட்டனர் . இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஆறு புத்தர்கள்”
என்பதும், பிற்பாடு பிரபலமான ஆதிசங்கரருடைய “அறுமத” இணைப்பு தத்துவத்தை
எடுத்தாளும் முயற்ச்சி என்று நன்றாகத் தெறிகிறது.


சங்க இலக்கியத்தில் “அத்வைத / வேதாந்தக் கூறுகள்”: “பிரமம்” என்ற
வார்த்தை, சங்க-இலக்கியத்தில் காணப்படவில்லை என்றாலும், எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு நூற்களில் அத்தகைய சிந்தனைகள் உள்ளதைத் தெளிவாகக்
காணலாம்.


1. பிரம்மம் என்பது உண்மை.
2. இந்த உலகம் மாயை.
3. உடலிலுள்ள ஆத்மா பிரம்மமாகும், எனவே அது பிரம்மத்தை தவிர்த்து
வேறானதாகாது.


இத்தகைய கருத்துகள் சங்க-இலக்கியத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.
நிலையற்ற வாழ்க்கை, பிறப்பு-இறப்பு சுழர்ச்சி, பிறந்தவன் இறப்பது
நிச்சயம், உடலிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு, ஆத்மாவின் அழிவற்றத்
தன்மை எடுத்துக் காட்டும் . வாழ்க்கையென்பது நீர்குமிழி போன்றது, அது
எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம். மேலும் அது மழை பெய்யும்போது, நீரின்
மேலே மிதந்து செல்கிறது. அதாவது, அந்த குமிழி தானாக உடைவதைவிட, இன்னும்
துரிதமாக உடைய இயற்கையும் உள்ளது என்றெல்லாம், கீழ்காணும் பாடல் (புறம்.
192) எடுத்துக் காட்டுகிறது:


¡Ðõ °§Ã ; ¡ÅÕõ §¸Ç¢÷ ;
¾£Ðõ ¿ýÚõ À¢È÷¾Ã šá ;
§¿¡¾Öõ ¾½¢¾Öõ «Åü§È¡ ÃýÉ ;
º¡¾Öõ ÒÐÅÐ «ý§È ; Å¡ú¾ø
þÉ¢Ð±É Á¸¢úó¾ýÚõ þħÁ; ÓɢŢý,
þýÉ¡ ¦¾ýÈÖõ þħÁ; .Á¢ý¦É¡Î
Å¡Éõ ¾ñÐÇ¢ ¾¨Äþ, ¬É¡Ð
¸ø¦À¡ÕÐ þÃíÌõ ÁøÄü §À÷¡üÚ
¿£÷ÅÆ¢ô ÀÞ¯õ Ò¨½§À¡Ä, ¬Õ¢÷
Ó¨ÈÅÆ¢ô ÀÞ¯õ. ±ýÀÐ ¾¢È§Å¡÷
¸¡ðº¢Â¢ý ¦¾Ç¢ó¾Éõ ¬¸Ä¢ý, Á¡ðº¢Â¢ý
¦Àâ§Â¡¨Ã Å¢Âò¾Öõ þħÁ;
º¢È¢§Â¡¨Ã þ¸ú¾ø «¾É¢Ûõ þħÁ.


மறுபடி-மறுபடி பிறக்கும்-இறக்கும் “சுழர்ச்சி”, இறப்பது நிச்சயம்,
இருப்பினும் புகழொடு இறப்பது சிறந்தது என்பதெல்லாம் மாயாவாத
சிந்தனைகள்தாம்:


Á¡È¢ô À¢ÈôÀ¢ý þý¨ÁÔõ ÜÎõ;
Á¡È¢ô À¢ÈÅ¡÷ ¬Â¢Ûõ, þ¨ÁÂòÐì
§¸¡ÎÂ÷ó ¾ýÉ ¾õÁ¢¨º ¿ðÎò,
¾£¾¢ø ¡쨸¦Â¡Î Á¡ö¾ø ¾Åò ¾¨Ä§Â, (புறம்.214)


தண்டபாணி தேசிகர் திருக்குறளில் எவ்வாறு வேதாந்தக் கருத்துகள் உள்ளன என
எடுத்துக் காட்டியுள்ளார்.


ஆதிசங்கரர் நாயன்மார்களைக் குறிப்பிடுகின்றார? சங்கரது என்ற சொல்லப்படக்
கூடிய சுலாகங்களிலினின்று, சில குறிப்புகளை எடுத்து அவற்றிற்கு விளக்கம்
கொடுத்து, நாயன்மார்களைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதனால்,
அவர்களுக்குப் பிந்தான், அவர் இருந்திருக்கக்கூடும் என்ற வாதம் உள்ளது.
குறிப்பாக, சௌந்தர்யலஹரி என்ற சுலோகத்தில் காணப்படுல் “திராவிட
சிசு” (எண்.75) என்ற வார்த்தையினை எடுத்துக் கொண்டு, அவர்
திருஞானசம்பந்த்ரைத் தான் குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு குழுமமும்,
இல்லை, அவர் தம்மையே அவ்வாறு குறிப்பிட்டுக் கொண்டார் என இருவகை
கருத்துகள் நிலவி வருகின்றன. எனவே முன் கருத்தின் படி, ஆதிசங்கரர்,
திருஞானசம்பந்தருக்குப் பிறகு, அதாவது 8வது நூற்றாண்டில்
இருந்திருக்கக்கூடும் என வாதிடுகின்றனர்.


சௌந்தர்யலஹரி 63ம் சுலோகத்தில், “மார்க்கவர்த்தபாதுக பசுபதே: அங்காஸ்ய
குற்சயதே... ...” என்றுள்ளது. இது கண்ணப்ப நாயனாரைக் குறிப்பதாகும்.


சிவபுஜங்க ஸ்தோத்திரத்தில்,


“ந சங்க்ரேமி காந்த பர்துரோஹலேஸம் கதம் பிர்யசே த்வம் ந ஜனே கிரிஸா
தத ஹி ப்ரசன்னார்சி கன்யபி காந்தசுததுரோஹினோ வ பித்ருதுரோஹினோ வ||”


இதிலுள்ள குறிப்பிட்ட சொற்றொடர்களுக்கு கீழ்கண்டவாறு பொருள்
கொள்ளப்படுகிறது:


1. காந்த-துரோஹி = மனைவியின் எதிரி அல்லது மனைவிற்கு வேண்டாதவர்.
2. சுத-துரோஹி = மகனின் எதிரி அல்லது மகனுக்கு வேண்டாதவர்.
3. பித்ரு-துரோஹி = தந்தையின் எதிரி அல்லது தந்தைக்கு வேண்டாதவர்.


சிறுத்தொண்டர் தொகை மற்றும் பெரிய புராணத்தை அறிந்தவைகள், இவர்கள் யார்
என்று கீழ்கண்டவாறு அறிவர்:


உபயோகப்படுத்திய சொற்றொடர் தமிழ் இலக்கியத்தின் படி சமமாகக் கருதக்
கூடியவர் சுமாரான அவரது காலம்
காந்ததுரோகி சுந்தரமூர்த்தி நாயனார்
இயற்பகை நாயனார்
கழார்சிங்க நாயனார்
காலிகாம்ப நாயனார்
குங்கிலியகலய நாயனார் 7வது அ 9வது நூ.
12வது நூ.முன்பு
அவ்வாறே
அவ்வாறே
அவ்வாறே
சுததுரோகி சிறுத்தொண்ட நாயனார் 8வது நூ.
பித்ருதுரோகி சண்டேச நாயனார் 12வது நூ.முன்பு
கண்ணப்பர் நாயனார் 12வது நூ.முன்பு


சிவாநந்தலஹரி என்ற மற்றொரு சுலோகத்தில் சிவனைக் கல்லால் அடித்து
வழிபட்டதாகாக குறிப்பு உள்ளது. புராணங்களின்படி, அவ்வாறு, சிவனை
வழிபட்டவர் சாக்கிய நாயனார் அல்லது அர்ஜுனனாக இருக்கக்கூடும் அன
வாதிடுகின்றனர். அத்தகைய சுலோகங்களுடன் அல்லது அத்தகைய
கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டால், ஆதிசங்கரர் சாக்கிய நாயனார் (6ம் /
7ம் / 8ம் நூற்றாண்டிற்கு) அல்லது அர்ஜுனன் (3102 - 3050 BC) காலத்தில்
சங்கரர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இது சங்கரரை 32ம்
நூற்றாண்டு BCEக்கு எடுத்துச் செல்கிறாது. இங்கு குறிப்பிட வேண்டியது
என்னவென்றால், நாயன்மார்களது காலங்களை யாரும் முடிவாகக் குறிப்பிடவில்லை.
மேலும் 63 நாயன்மார்களும் ஒரே காலத்தில் இருந்தார்களா, தனிதனியாக
சரித்திர காலகட்டங்களில் இருந்தார்களா இல்லயா என்று எழும் கேள்வியாகும்,
ஏனெனில், அத்தகைய குறிப்புகள் அதிசயங்கள், மற்றும் ஆச்சரியப்படக்கூடிய
விவரங்களாக உள்ளன. எனவே. நாயன்மார்களின் காலத்தை தீர்மானிக்கமல், அவர்களை
சங்கரருடன் இணைத்துப் பேசமுடியாது. மேலும், மேற்குறிப்பிடப்பட்ட
சமஸ்கிருத சுலோகங்களை நுணுக்கமாக ஆராய்ந்தவர்கள் ஆதிசங்கரரால் எழுத/
பாடப் படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.


திருஞானசம்பந்தரும் ஆதிசங்கரரும்: இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல
இருந்தாலும், குறிப்பாக சில முக்கியமானவை நுணுக்கமாக அலசப்படுகின்றன:


1. சங்கர விஜயங்களின் உரையாசிரியர்கள், சுரேஸ்வரர் மற்றும் தோடகர் தமது
குருவை “திரவிட” அல்லது “திராவிட” என்று குறிப்பிடுவதாக எடுத்துக்
காட்டுகிறார்கள் . மேலும் அத்தகைய சொல் உரிச்சொல்லாக அல்லது சொற்கூறாக
அக்காலத்தில் உபயோகபடுத்தப்பட்டது, திரமிடாச்சார்ய, திரமிட தேச சங்கடன
(காரவேலன் கல்வெட்டு), பஞ்சத்திராவிட, பஞ்சகௌட முதலிய சொற்றொடர்களில்
காணலாம்.
2. தேவி / இறைவி அழும் குழந்தைக்கு பாலூட்டும் நிகழ்ச்சி இருவர்
வாழ்க்கையிலும் உள்ளது.
3. ஆகவே ஆதிசங்கரருடைய தேதியை திருஞான சம்பந்தருடன் தொடர்பு படுத்துவது,
தமிழ் தெரிந்த பண்டிதர்கள் “திராவிடசிசு” என்ற சொற்றொடரை அது
ஆதிசங்கரரைக் குறிக்கும் என்று அறிந்திருந்தும் திருஞானசம்பந்தருக்கு
உபயோகப்படுத்தும் முயற்சியிலிருந்து அறியலாம்.
4. மேலும் சம்பந்தர் தமது பாடல்களில் கடுமையாகச் சாடுவது
ஜைனமதத்தினரையேன்றி, புத்தமததினரை அன்று.
5. இருவருமே தமது தத்துவார்த்த எதிரிகளை தர்க்கத்தினால் வெற்றிகொண்டனர்
முறையே தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் வாதிட்டு வென்றனர். ஆனால்,
ஆதிசங்கரருக்குத் தமிழ் தெரியுமா எனத்தெரியவில்லை.
6. சங்கரருடைய ஒரு தேதி 8ம்-9ம் நூற்றாண்டுகளில் உள்ளதால் அவர்
சம்பந்தருடைய காலத்தைச் சார்ந்தவர் எனவும் கொள்ளலாம். அப்போது, அவர்
புத்தமதத்தை தென்னிந்தியாவிலிருந்து ஏன் இந்தியாவிலிருந்தே
விரட்டியிருக்க வேண்டும் என கொள்ளலாம்.
7. அதுமட்டுமல்லாது இருவரும் ஒன்று சேர்ந்தே செயல்பட்டு தமது 32 மற்றும்
16 வயதிற்குள் வெற்றிகொண்டனர் எனவும் கூறலாம்.
8. ஆனால், சங்கரருடைய எண்ணம் வேறுபடியாகவுள்ளதால், அவர் என்றுமே ஜைனர்-
புத்தர்களிடம் சேர்ந்து போகவில்லை. உள்ள நம்பிக்கையாளர்களின் குழுமங்களை
வேதமதம் / சனாதனமதம் என்ற குடையின் கீழ் “எல்லாம் ஒன்று” என்ற கொள்கயை
வலியுறுத்தி கொண்டுவர முனைந்தார்.


ஒரு உள்ளத்தாட்சி சம்பந்தர் ஆதிசங்கரருக்குப் பின் வந்திருக்கவேண்டும்
எனத் தெளிவாகக் காட்டுகிறது.


முன்னம் இருமூன்று சமயங் ளவையாகி
பின்னை யருள் செய்த பிறையாளன்
……..
ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன்.


என்றுக் குறிப்பிடும் போது, தமக்கு முன்னமேயிருந்த “ஆறுசமயத்தொகுப்பினை”
எடுத்துக் காட்டும்போது, அத்தகைய அமைப்பு தோன்றியப்பிறகு, இவர்
வந்திருக்க வேண்டும். சங்கரர் தாம் “ஷண்மத” அமைப்பிற்கு காரணம்
எனும்போது, சம்பந்தர் அவருக்கு முன்னம் இருந்திருக்க முடியாது. ஆகையால்
சம்பந்தருடைய இலக்கிய ஆதாரம் (7ம் நூற்றாண்டு) மற்றும் மஹேந்திரவர்மன் -
I (600-630 CE) காலத்து தொல்லியல் ஆதாரம், ஆதிசங்கரரை 6ம் நூற்றாண்டிற்கு
முன்பு எடுத்துச் செல்கிறது.


சம்பந்தரின் காலம் அல்லது அவருக்குக் கொடுக்கப்படுகின்ற தேதிகள்:
சம்பந்தருடைய தேதியை ஆதிசங்கருடைய தேதியுடன் தொடர்பு படுத்துவதால்,
சம்பந்தருடைய தேதியை சரியாக அறியவேண்டியுள்ளது. அவர் 16 வயதுகாலம் தான்
வாழ்ந்திருந்ததால், சிலர் அவர் இருந்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையும்
எழுப்பியுள்ளனர். ஆகவே, பண்டிதர்கள் கொடுத்துள்ள பல தேதிகளை
அட்டவணையிட்டுக் காட்டப்படுகிறது:


எண் ஆரய்ச்சியாளர் / குறிப்பு தேதி / காலம் முடிவுக்கு வர காரணம்
1 சைமன் காசி செட்டி 5வது நூ. சோழர்களுடைய “பூர்வ தாமிர பட்டயங்களில்”
குறிப்பிடப்பட்டபடி, சம்பந்தர், நாவுக்கரசர், நம்பொயூரார் சமகாலத்தவர்.
2 டெய்லர் 1320 BCE கூன்பாண்டியன்1320 BCE காலத்தை சேர்ந்தவனாதலால்,
சம்பந்தரும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்
3 C. W. தாமோதரம் பிள்ளை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூன்பாண்டியன் 2000
வருடங்களுக்கு முன்பு இருந்ததால், சம்பந்தரும் அதே காலத்தில்
இருந்திருக்க வேண்டும்
4 P. குமரசுவாமி விஷத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் கதை
சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. கயவாகுவின் சமகாலத்தின் படி 113-135
CE, அவன் சில வருடங்களுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.
5 ஹுல்ட்ஸ் சுமாராக முதல் நூ. கரிகாலன் மற்றும் கோச்செங்கனான் காலத்தில்
பெரும்பான்மையான பாடல்கள் பாடப்பட்டதால், அப்புலவர்களை அக்காலத்தில்
வைக்க எந்த மறுப்பும் இல்லை.
6 P. சுந்தரம் பிள்ளை 7வது நூ. ஆரம்பத்தில் “திராவிட சிசு” என்பதனை
சம்பந்தருடன் சம்பந்தபடுத்தி, அதனால், சங்கரர் அவருக்கு முந்தியவர்
என்றது.
7 துரைசாமி பிள்ளை 6வது நூ. ஹுல்ட்ஸ் திருகற்றலி கோவில் 550 CE
காலத்தைச் சேர்ந்தது என்கிறார். எனவே, திருமேட்ரலி கோவில் திருகற்றலியோடு
அடையாளங் கொண்டால், சம்பந்தர் அதே காலத்தைச் சேந்தவர் எனலாம்.
8 K. S. ஸ்ரீநிவாச பிள்ளை 609 மற்றும் 642 வருடங்களுக்கிடையில் 16
வருடங்கள்
9 P. சௌந்தர 638-656 CE சிறுத்தொண்டர், அப்பர் முதலியோரது காலத்தவர்.
10 M. ராஜமாணிக்கம் 640-656 அவ்வாறே
11 R. வெள்ளைவாரனார் 638-654 அவ்வாறே
12 அவ்வை S துரைசாமி பிள்ளை 639-655 அவ்வாறே


இதிலிருந்து எவ்வாறு சம்பந்தருடைய தேதிகள் 1360 BCE லிருந்து 7வது
நூற்றாண்டு CE வரையிலும் உள்ளன எனக் காணலாம். சங்கரர் நாயன்மார்களைக்
குறிப்பிட்டுள்ளார் என்தற்கு மேலே எடுத்துக் காட்டியபடி ஆதாரங்கள் இல்லை,
ஏனெனில் அம்முறை 3102 BCE வரைக்கும் செல்கிறது! ஆகவே ஆதிசங்கரரது காலம்
நாயன்மார்களின் காலத்திற்கு முன்பாகவுள்ளது.


கயவாகு கால-ஒப்புமை, அதன் ஆதாரமாக தமிழ் காலக்கணக்கீடு செய்து பெறப்பட்ட
சார்புடைய தேதிகள்: “கயவாகு கால-ஒப்புமை” (Gayavahu synchronism)
உபயோகித்து மேனாட்டு மற்றும் தமிழ் ஆய்வாளைகள் பல தமிழ்-
காலகணக்கீட்டிற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், மேனாட்டவரே
அம்முறையிலுள்ள குறைபாட்டினை எடுத்துக் காட்டியுள்ளனர். ஹெயின்ஸ்
பெகர்ட் என்பவர் புத்தரின் தேதியை நிர்ணயிக்கும்போது எவ்வாறு உள்ள
விவரங்கள் மற்றும் குறிப்புகளை தமதிச்சைக்கு ஏற்றவாறுத் திரித்து
கூறுகின்றனர் என எடுத்துக் காட்டும் போது, கிழ்க்காணும் உண்மைகளைத்
தருகிறார்:


1. காலகணக்கீட்டிற்கான தகவல்கள் மற்றும் அவற்றை உபயோகப்படுத்தும் விதம்
கவலைக்கு இடமாக உள்ளது.
2. புத்தரது தேதி நிர்ணய முயற்ச்சிகளில் எவ்வாறு காலகணக்கீட்டி-
அமைப்புகள் மற்றும் கால-ஒப்புமைகள் முதலியவை மாற்றியமைக்கப்படுகின்றன,
அதற்காக போலிகள் கொண்டு திரிக்கப்படுகின்றன என்பதை காணலாம் (fabrication
of chjronological constructions and synchronisms).
3. ஸ்ரீலங்காவின் ஆவணங்களை பொறுத்த மட்டிலும், கீழ் கணட உதாரணங்கள்
தரப்படுகின்றன:
1) விஜயனுடைய கால-ஒப்பீடு மற்றும் புத்தரது நிர்வாணம்.
2) “கயவாகு கால-ஒப்புமை”
3) காளிதாசர் மற்றும் குமரதாசர் இவர்களது சமகாலத்துவ நிலை.
4. “சிங்களவர்கள் தாம் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என
நியாயப் படுத்துவதற்காக, புத்தருடைய நிர்வாணம் மற்றும் சிங்களவரது
மூலமாக / தந்தையாக கருதபடக் கூடிய மாயத்தந்தை-“விஜய”வுடன்
சம்பந்தப்படுத்த சரித்திரவரைவாளர்கள் ஒரு கால-ஒப்புமை-அமைப்பை
உருவாக்கினார்கள்.
5. இரண்டாவது “கயவாகு கால-ஒப்புமை”, இதுதான் ஆரம்ப தமிழ்-
காலகணக்கீட்டிற்கு பயன்படுத்தப் படுகிறது . அனவே அத்தகைய சந்தேகமாகவுள்ள
“ஒப்புமையை” தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்துள்ளதை
ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள் என்பதனை
கவனிக்கவேண்டும்.
6. ஜி. ஒபெயஸிகெரெ என்பவர், இந்த “கயவாகு கால-ஒப்புமை”, சரித்திர
ஆதாரமில்லாமல் முழுமையாகக் கட்டுக்கதையின் மீது ஆதாரமாக
புனையப்பட்டுள்ளது, என எடுத்துக் காட்டுகிறார்.
7. மற்றொரு உதாரணம் காளிதாசருடைய தேதி . ஆய்வாளர்கள் காளிதாசர் மற்றும்
குமாரதாசர் அல்லது குமாரதாதுசேன என்பவர்கள் சமகாலத்தவரா என்று ஆய்ந்து-
அலசி அதன் மூலம் காளிதாசருடைய தேடியை நிர்ணயிக்க முயன்றுள்ளனர். ஜானகிஹரண
என்ற நூலின் ஆசிரியரான குமரதாசர், “குமாரதாதுசேன” என்ற மன்னனுக்கு பல
நூற்றாண்டுகளுக்குப் பின்வாழ்ந்தவன்! ஆனால், இந்த மொத்த கதையே பிற்காலக்
கண்டுபிடுப்பு !


ஆகவே “கயவாகு கால-ஒப்புமை”, புராணக்கதை/கட்டுக்கதைகளின் மீது ஆதாரமாக
உள்ளது, சரித்திர காலக்கணக்கு தமதிச்சைக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டது.
அதற்கேற்றார்போல கணக்குகள் திருத்தப் பட்டன என்பனவெல்லாம் சரித்திர-
மோசடிகள் ஆகும் . எனவே, அத்தகைய ஒப்புமை சரித்திர அத்தாட்சியாக எடுத்துக்
கொள்ளமுடியாது. ஏற்கெனவே தமிழ்நாட்டு சரித்திர நிகழ்ச்சிகளின் தேதிகளைக்
நிர்ணயிக்க இந்த “கயவாகு கால-ஒப்புமை”, உபயோகிக்கப் பட்டிருப்பதால்,
அத்தகைய காலக்கணக்கீட்டை முதலில் மறுபரிசீலனை செய்யவேண்டும். ஆகவே,
இந்நிலையில் நிச்சயமாக சம்பந்தருடைய தேதியை, சங்கரருடைய தேதியுடன் 7
அல்லது 8வது நூற்றாண்டுகளில் வைத்து இணைக்க முடியாது. ஆகையால் மற்ற
சரித்திர அத்தாட்சிகளை நாம் இங்கு பார்க்க வேண்டும்.


சேரநாடு - கேரளதேச பாரம்பரியம்: சங்க-இலக்கியத்தைப் பொறுத்த மட்டிலும்,
சேரநாடு/கேரளதேசம் தமிழகத்தின் பகுதியாகக் கருதப் பட்டது.
பதிற்றுப்பத்தின் படி சேர அரசர்கள் எப்படி வேதமுறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர் என்பதை காணலாம். இருப்பினும், அகழ்வாய்வு ஆதாரங்கள்
பிற்காலத்தைச் சார்ந்ததாகவே உள்ளன. கேரள / மலையாள ஆவணங்களில் “சங்கரர்”
காணப்படுவதில்லை.


மேலும் மலையாளத்திலுள்ள தொன்மையான ஆவணமே 9வது நூற்றாண்டைச் சேர்ந்தது
தான் என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் . எனவே மலையாள
இலக்கியம் அவரைப்பற்றி பேசாமல் அமைதியாகயிருந்தது ஆச்சரியமான விஷயமில்லை.
மேலும் கேரளத்தில், சமஸ்கிருத நூல்களின் தொன்மையே 7ம் நூற்றாண்டு
வரைத்தான் செல்கிறது . பிறகு எப்படி காலடியில் பிறந்த சங்கரர்
சமஸ்கிருதம் படித்து, வேதங்கள் படித்து, அம்மொழியில் தேர்ச்சி பெற்று,
தர்க்கம் பிரிந்து, அத்வைத தத்துவதை வழங்கி முதலிய பல காரியங்களை,
அதுவும் குறுகிய காலகட்டத்தில் செய்து முடித்திருக்க முடியும்? கேரள
சமஸ்கிருத நூல்கள் “சர்வஜனாத்மன்” (10th cent.CE),
“சங்கரஹிருதயாகம” (13th cent.CE), “துர்காபிரசாத்யதி” (14th cent CE)
முதலிய பிற்காலத்தைய நூல்கள்தாம் அவர் பெயரைக்குறிக்கின்றது. ஆனால், கேரள
வானியல் பாரம்பரியம்படி வரருசியை கவனத்தில் கொண்டால், அது மூன்றாவது
நூற்றாண்டிற்குள்ளது . அதுமட்டுமல்லாது, கேரள வானியல் மற்றும் கணக்கியல்
வல்லுனர்கள், ஆரியபடர் (ஆரியபட்டர் என்று குறிப்பிடுவது தவறு)
தம்முடையவர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆகவே இத்தகைய முரண்பாடுகளை
சரித்திர ரீதியில் நோக்கவேண்டியுள்ளது.


சங்கரருடன் தர்க்கத்தில் வாதிட்டதாகிய சமகாலத்தவர் என்பவர்கள் வெவ்வேறு
காலத்தில் உள்ளனர்:


1. தர்மகீர்த்தி 530-600 மற்றும் 600-660 CE.
2. குமாரில பட்டர் 7ம் நூற்றாண்டு ஆரம்பம், 600-660 CE முதலியன.
3. மண்டல மிஸ்ரர் 615-695 CE, 690-710 CE முதலியன.


அறிஞர்கள் ‘மத்யாமிக நாகார்ஜுனர்’ (2nd cent. CE) மற்றும் ‘தந்திரிக
நாகார்ஜுனர்’ (6ம்-7ம் நூற்றாண்டு CE) எனப்படுகின்ற இருவரும் வேறு என்று
எடுத்துக் காட்டியும், புத்த பாரம்பரியங்கள் இருவரும் ஒன்றே எனக்
கொள்கின்றன. இது, ஒரு நாகார்ஜுனர் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு
வாழ்ந்தார் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. ஆகவே புதியதாக ஏற்படுத்திக்
கொண்ட சங்கரருடைய தேதிகளுக்கு ஏற்ப மற்றவர்களையெல்லாம் அந்த காலத்தில்
செருகமுடியாது அல்லது சங்கரரை பலகாலங்களில் வாழ்ந்த அவர்களுடன் வைக்க
முடியாது. சங்கரர் வாழ்ந்ததோ 32 வருடங்கள் தாம், இதில் 16-20 வருடங்கள்
தாம் பண்டிதர்களுடன் தர்க்கங்களில் ஈடுபட்டிருப்பார்.
அப்படியிருக்கும்போது, பல காலங்களில் வாழ்ந்த பலருடன் இணைத்தால், அதாவது
அவ்வாறு செய்தால் நாகார்ஜுனரைப் போலவே சங்கரரும் பல நூற்றாண்டுகள்
600-850 வாழ்ந்திருக்கவேண்டும், எல்லாகாலத்தவர்களுடன் வாதித்தியிருக்க
வேண்டும் என்றாகிறது. அல்லது அவரவர் காலங்களில் “சங்கரர்” என்ற பெயரில்
மற்ற பண்டிதர் இருந்திருக்க வேண்டும் .


‘கேரளோத்பத்தி’ என்ற மலையாளத்தில் எழுத பட்டுள்ள கேரள வரலாற்று நூல், ஆதி
சங்கரருக்கு இரண்டு தேதிகளைக் கொடுக்கிறது - 400 CE மற்றும் 427 CE.
‘கொங்குதேச-ராஜா-கதா’, ஐந்தாம் நூற்றாண்டிற்கு மத்தியில் அவர்
பிறந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. ‘கேரள தேசத்து சரித்திரம்’ என்ற
நூல், 314-278 BCE காலத்தில் கேரளத்தை ஆண்டதாக சொல்லப்படும் சேரமான்
பெருமாள் காலத்தில் ஆதிசங்கரர் பிறந்ததாகக் கூறுகிறது . கேரளாவிலேயே அவர்
பிறந்த இடம் இருந்தும் இவ்வாறு கேரள பாரம்பரியம் அவரது பிறந்த காலத்தை
4ம் BCE முதல் 5ம் CE வரை நூற்றாண்டுகளில் ஆதிசங்கரருடைய பிறந்த தேதியை
வைக்கின்றது.


கருநாடக பாரம்பர்யம்: ஆதிசங்கரர் சிருங்கேரியில் ஒரு மடத்தை
நிறுவியிருந்தும் அங்குள்ள அதாவது உள்ளூர் இலக்கியமோ கல்வெட்டுகளோ அவரது
பெயர், அத்வைதம் அல்லது நூல்கள் பற்றி குறிப்பிடுவதில்லை. ஆனால்
சந்திரகுப்த மௌரியன், ஜைனமதத்திற்கு மாறியது, ஸ்ரவனபெலகோலாவிற்கு வந்து
வடக்கிருந்து இறந்தது முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அப்பகுதியில்
இருந்த புத்தர்களை விட அதிகமான ஆதிக்கத்தை ஜைனர்கள் கொண்டிருந்தனர்
என்பதனைக் காட்டுகிறது. ஆனால், ஆதிசங்கரர் பற்றியோ அவர் ஜைனர்களை
எதிர்கொண்டது பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. அதுமட்டுமல்லாது, மற்றொரு
பிரபலமான-ஆதிக்கத்தை கொண்டிருந்த வீர-சைவ இலக்கியமும் இவரைக்
கண்டுகொண்டதாக தெரியவில்லை.


ஸ்ரவனபெலகோலா, 7ம்-8ம் நூற்றாண்டுகளில் CE ஜைனர்களின் படிப்பிற்கு கல்வி-
பீடமாக அமைந்திருந்தது. காஞ்சிபுரத்தில், ஹிமசிதல என்பவனின் தர்பாரில்
தர்க்கம் நடந்தபோது “அகாலங்க” என்ற பண்டிதர் வரவழைக்கப்பட்டு
பௌத்தர்களுடன் வாதிட பணித்தனர். அகாலங்க அவ்வாறே பௌத்தர்களை 788 CE ல்
தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் . இந்நிகழ்ச்சி
மிகவும் கவனிக்கவேண்டியதாக உள்ளது, ஏனெனில் 788 CE தேதி மற்றும்
பௌத்தர்கள் காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றபட்டது, இரண்டுமே
ஆதிசங்கருடன் சம்பந்தப்பட்டுள்ளது. 788 CE அவர் பிறந்த தேதி, காஞ்சிபுரம்
அவர் சமாதியுள்ள மற்றும் அவரால் நிறுவப்பட்ட மடம் இருக்கும் இடம் ஆகும்!


ஆந்திரதேச பாரம்பரியம்: ஆந்திரபிரதேசம் பௌத்தர்களின் மிகவும் ஆதிக்கம்
கொண்டிருந்த பிரதேசம் ஆகும். தொல்பொருட் சான்றுகள் பெரருமளவில் அந்த
உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே அக்காலத்தில் சங்கரர்
இருந்திருப்பின் அவருக்கு இங்கு மிகவும் கடினமான நிலை இருந்திருக்கும்.
ஆனால், உள்ளூர் இலக்கியமோ கல்வெட்டுகளோ அவரது பெயர், அத்வைதம் அல்லது
நூல்கள் பற்றி குறிப்பிடுவதில்லை. பௌத்தர்களின் நூல்களும் அமைதியாகவே
உள்ளன.


மேலும் சரித்திர ஆதாரங்களினால் மிகவும் தெளிவாக உள்ள ஆந்திர சரித்திரம்
300 BCE-300 CE காலத்தில் வைதீக-பிராமண மத ஆதிக்கத்தில் உள்ளதாக
இருக்கிறது. சாதவாஹனரின் கல்வெட்டுகள் அவ்வாறான நிலையைக் காட்டுகிறது.
“அத்தகைய வெளிப்பட்ட பிராமணமத மறுமலர்ச்சி, யாக நெருப்பாக பௌத்தர்களை
தணித்தது மற்றும் ஜைனர்களை சுட்டெரித்தது” , என்று ஒரு சரித்திர ஆசிரியர்
எழுதுகிறார். அப்படியுருக்கும்போது, சங்கரர் அந்த காலத்திற்குப் பிறகு
தோன்றியிருக்க அவசியமே இல்லை, ஏனெனில் அவருக்கு வேலையே இல்லை.


சமகாலத்தைய தமிழக ஆட்சியாளர்கள் / அரசர்கள்: அரசியல் ரீதியில்
தென்னிந்தியா என்பது தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம் மற்றும் கேரளம்
கொண்ட பழந்தமிழகம் ஆகும். இருப்பினும் பல வம்சங்களைச் சேர்ந்தவர்கள்
தங்களது அதிகாரங்களை குறிப்பிட்ட நகரங்களில் தக்க வைத்துக்கொண்டு ஆட்சி
புரிந்து, அவற்றை மையமாக கொண்டு தமது அரசை பரப்பினர். ஆகையால்தான் பல
வம்சாவளிகளைச்சேர்ந்த அரசர்களை நாம் காண்கிறோம். அவர்களுள் 8வது-9வது
நூற்றாண்டுகளில் வாழ்ந்த மன்னர்கள், அட்டவணையில் கொடுக்கப்படுகின்றன:


ஆண்ட மன்னர் காலம் / தேதி CE வம்சாவளி
நந்திவர்மன் பல்லவ மல்லன் 710-755 பல்லவ
தண்டிவர்மன் 755-826 பல்லவ
நந்திவர்ணன்- II 826-849 பல்லவ
நெடுஞ்செழியன் பராந்தகன் 765-790 பாண்டிய
ராஜசிம்ஹ பாண்டியன் -II 790-792 பாண்டிய
வரகுண பாண்டியன் 792-835 பாண்டிய
விக்ரமாதித்யன் 733-743 சாளுக்கிய
துருவ 780-794 ராஸ்டிரகூட
கோவிந்த II 793-814 ராஸ்டிரகூட
அமோகனர்ஷ -I நிருப்துங்க 814-878 ராஸ்டிரகூட
மார்ப்பிடுகு/பராதிரையன் 770-791 முத்தரையர்
விடல்விடுக முத்தரையன் /குறவன் சாத்தன் 791-826 முத்தரையர்
சத்தன் பாலியல் 826-851 முத்தரையர்
சிம்ஹபோத நொம்பாதிராஜ 785-805 நொளம்ப
பரமேஸ்வர பல்லவாதிராஜ / சாருபொன்னேர 805-830
விஜயாதித்யா I 772-824 பான
மல்லதேவ 824-843 பான
விக்கிரமாதித்யா I 843-892 பான


இவர்கள் எல்லாம் இந்து, பௌத்த, ஜைன நம்பிக்கையாளர்களாக இருந்தும் அனைத்து
மற்ற மதநம்பிக்கையாளர்களையும் ஆதரித்து வந்தனர். ஆனால் இவர்கள்
அக்காலத்தில், 788-820 ஆண்டுகளில் வாழ்ந்ததாக கருதப் படுகின்ற
ஆதிசங்கரரைத் தெரிந்து கொண்டதாக இல்லை. அதே மாதிரி ஆழ்வார்கள்
நாயன்மார்களுக்கும் இந்த கால-கட்டங்களிலேயே இருந்ததாக சரித்திர
ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள். அவர்களும் சங்கரரைப்
பற்றி மூச்சுக் கூட விடவில்லை!


நாயன்மார் / துறவி அவரது காலம் / தேதி
திருஞானசம்பந்தர் c.7th cent.CE
திருநாவுக்கரசர் -do-
ஐடிகள் காடவர்கோன் -do-
சுந்தரர் c.8th cent.CE
சேரமான் பெருமாள் -do-
ஏனாதி சட்டஞ் சாத்தனார் -do-
மாணிக்கவாசகர் c.9th cent.CE
பட்டினத்து அடிகள் -do-
சேந்தனார் -do-
பெருமானடிகள் -do-


சங்கரரோ பல இடங்களுக்குச் சென்று, பல பண்டிதர்களைச் சந்தித்து,
அவர்களுடன் வாதம் புரிந்து, பற்பல நம்பிக்கையாளர்களுடன் உரையாடி அவர்கள்
கருத்து அறிந்து அனைவரையும் இணைக்கும் முயற்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்
போது, இக்காலத்தில் யாருமே அவரை அறியாமல் இருந்தது, ஒரு பெரிய சரித்திர
புதிரும், மாயமும் ஆகும்.


ஆதிசங்கரர் 509-477 BCE மற்றும் 788-820 காலகட்டங்களில்
இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள்: இந்திய மற்றும் மேனாட்டு அறிஞர்கள்
இந்திய சரித்திரத்தில் இவ்வாறு பல புதிர்களைத் தீர்க்காமல் குறிப்பிட்ட
சுமாரான “c. = circa” என்று தோரயமாக வைத்துக் கொண்ட தேதிகளையெல்லாம்
முடிவாக நிர்ணயிக்காமல் “c.”ஐ எடுத்து விட்டு, ஏதோ தீர்மாணித்த தேதிகளைப்
போல குறிப்பிட ஆரம்பித்து விட்டனர் . இந்திய பள்ளிக் குழந்தைகள், கல்லூரி
மாணவர்கள் மற்றும் அரசுதேர்வுகள் எழுதுபவர், அத்தேதிகளே இறுதியானவை
எனக்கொண்டு தேர்வுகள் எழுதி பட்டம் பெறுகிறார்கள், அதிகாரிகள்
ஆகிறார்கள். அத்தகைய தவறான தேதிகளை வைத்துக் கொண்டு முன்னுக்கு முணாக
பேசுகிறார்கள்-எழுதிகிறார்கள் . ஆகவே, எல்லோரும் பாரபட்சமின்றி, இரண்டில்
எந்த காலம் / தேதிகள் ஆதிசங்கரருக்குப் பொருந்தி வரும் என்று பார்க்க
வேண்டும்:


1. பௌத்தமதம் அரசாங்க-ஆதரவுடன், ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடிய நிலையில்
இருந்திருக்கவேண்டும் .
2. இந்துமதத்தினர் சாதகமற்ற நிலையில் பல இன்னல்ககளுக்கு உட்பட்டுக்குக்
கொண்டிருக்க வேண்டும்.
3. பௌத்தமதம் அத்தகைய நிலையில், உள்ள வேத-இந்து மதத்தினருக்கு,
சமூகத்திற்கு பெருத்த அளவில் அபாயகரமான / மோசமான நிலையை உண்டாக்கியிருக்க
வேண்டும். இல்லையனில் பௌத்தமததை விரட்டவேண்டும் என்ற எண்ணம், நிலை
ஏற்பட்டிருக்காது.
4. வேறு விதமாக நோக்கினால், புத்தமதம் தனக்கே உரித்தான அமைதி, சாந்தி,
நிர்வாணம், கொல்லாமை, வன்முறையற்றத்தன்மை முதலியவற்றைத் துறந்து,
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஏதாவது காரியங்களை செய்திருக்க
வேண்டும்.
5. தத்துவ-தர்க்க விவாதங்களினால் அல்லது அவற்றில் பௌத்தர்கள்
தோற்கடிக்கப்பட்டதினால் மட்டும், பௌத்தம், தனது சமூக-முக்கியத்துவத்தை
அரசியல்-அதிகாரத்தை தத்துவ-செல்வாக்கை இழந்திருக்க முடியாது.
6. ஆகவே மக்களே அதனை மறுக்க, வெறுக்க, துறக்க ஆரம்பித்து விட்டனர்
எனும்போது, நிச்சயம் பௌத்தர்கள் அத்தகைய முரண்பாடுள்ள, எதிர்மறையான,
மக்களுக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபட ஆரம்பித்து இருக்க வேண்டும்.
7. சமூகமும் முழுவதுமாக வேதமத்தைப் பின்பற்றிக் கொண்டு, அதன் சமூக-மத
ஸ்தாபனங்களின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் ஆதிசங்கரர்
சமஸ்கிருதத்திலேயே பேசி விவாதித்து பண்டிதர்களை வென்றதாகச் சித்தரிக்கப்
படுகிறார். மேலும் குறிப்பிட்டபடி, பற்பல நம்பிக்கைக் கொண்ட மக்கள்,
அவர்களது தலைவர்கள் முதலியவர்களை பாரதம் முழுவதும் சென்று உரையாடி,
அவர்களை சம்மதித்து “ஸண்மத” கட்டுக்குள் எடுத்து வந்தார் என்றால்,
அத்தகைய சாதகமான நிலை இருஎதிருக்க வேண்டும்.
8. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் காட்டும் சமூக நிலை அவ்வாறு இல்லை.
சமஸ்கிருதத்தில் கல்வெட்டு இல்லை, பாலி மொழி பாமர மக்களால் பேசி வந்தனர்;
அரசர்கள் எல்லம் ஜைன-பௌத்த மதங்களைத் தழுவி அவ்வாறே ஆதரவு கொடுத்து
வந்தனர். உதாரணத்திற்கு தாத்தா சந்திரகுப்தன் ஜைனமதத்தையும், பேரன்
அசோகன் பௌத்தமதத்தியும் சேர்ந்தவர்கள். அதே மாதிரி தென்னிந்தியாவிலும்
மன்னர்கள், அவ்வாறே ஜைனர்கள்-பௌத்தர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆகையால்
தான் “களப்பிரர்கள்” என்பவர் தோன்றி தமிழ்-கலாச்சாரம், சம்பிரதாங்கள்
அனைத்தையும் அழித்து விட்டனர், அதனால் முதல் மூன்று-நான்கு
நூற்றாண்டுகளில் தமிழகம் இருண்டு கிடந்தது (Kalabhra interlegnam)
என்றெல்லாம் சரித்திரப் பண்டிதர்கள் எழுதியுள்ளனர் .
9. அத்தகைய நிலைகளில் - அதாவது சிறிதும் சாதகமான சமூக-சமய-அரசியல்
சூழ்நிலைகள் இல்லாத கால-கட்டத்தில், ஆதிசங்கரர் எப்படி சம்ஸ்கிருதத்தில்
படித்து, பண்டிதராகி, மற்ற எல்லா பண்டிதர்களை விவாதங்களில்
“சமஸ்கிருதத்திலேயே பேசி” வாதிட்டி வென்றிருக்க முடியும்? பாரதம்
முழுவதும் - நேபாளம் வரை - சாதரணமாக சுற்றிவந்திருக்க முடியும்? வாரணாசி,
பூரி, துவாரகா, சிருங்கேரி மற்றும் காஞ்சிபுரம் முதலிய இடங்களில் மடங்களை
நிருவியிருக்க முடியும்? மிகவும் பலமான, செல்வாக்குள்ள பௌத்தர்களை வென்று
துரத்தியடித்திருக்கக்கூடும்?
10. தொல்பொருட்-ஆராய்ச்சியாளர்களும் பௌத்த விஹாரங்கள் எங்கும்
பரவியுள்ளதை காட்டுகின்றனர், ஆனால் அக்காலத்தில் வேத-இந்து மதத்தின்
வழிபாட்டு இடங்கள் காணப்படுவதில்லை. சரித்திரரீதியில் வேதகாலதிற்கு
பிறகு, வேத-மதத்தினை மறுத்து (கடவுளை மறுத்து) -எதிராக ஜைன-பௌத்த மதங்கள்
தோன்றியிருக்கும்போது, அவ்வாறே தொல்துறைரீதியில், அடுகடுக்காக பூமியில்
அந்தந்த நம்பிக்கையாளைகளின் பதிவுகள் c.3500 BCE (சிந்துசமவெளி நாகரிகம்)
முதல் 300 BCE (மௌரிய பேரரசு) வரை இருந்திருக்கவேண்டும். மிகவும்
முதிர்ச்சியடைந்த நாகரிகம் 2200-1950 BCE காலகட்டத்தில் இருந்தது. பிறகு
1950 BCE முதல் 300 BCE வரை என்னவாயிற்று என்று 300 BCE தொல்பொருட்-
ஆராய்ச்சியாளர்களும், சரித்திர-ஆசிரியர்களும் விளக்க மறுக்கின்றனர்கள் .


எதுவும் வெறுமையின்றி வந்திருக்கமுடியாது என்பது, தத்துவம் மட்டும்
அல்லாது, விஞ்ஞான முடிவும் ஆகும். சரித்திரத்தில் மன-உடல் கூறுகளின்
தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், சிந்தனைகள் வெளிப்பட்டு
திடப்பொருட்களாக மாறும் போது, தொல்பொருள் அத்தாட்சிகளாக பதிவு
வெய்யப்பட்டிருப்பதுத் திண்ணம். இலக்கியம் உள்ள-படைத்த மனிதர்கள்,
தத்துவத்தில் சிறந்தவர்கள், 9000 YBP வரைச் செல்லும் நாகரிகத்தவர்
“படிபற்றவர்” என்று வாதிடுகின்றனர். இதையேத் தான் “சரித்திரத்திற்கு
முந்தைய காலம்” (pre-historic) என்று சொல்லி, இந்திய தொன்மையினை
மறுத்தனர்.


ஆனால், உள்ள அத்தகைய அத்தாட்சிகளை எதோ காரணங்களினால் ஒப்புக்கொள்ளாமல்
தொடர்ந்து இந்திய-சரித்திரத்தை, முடிவற்ற தொங்குநிலையில் வைத்து
சரித்திரத்தை எழுதி படித்து முடிவுகளுக்கு வருவது அறிவுபூர்வமாக தவறானது,
என்பதை அந்த சரித்திர-அறிவு ஜீவிகள் உணர்வதில்லை. அவ்வாறு தவறாக
இருக்கும்போது எங்கு தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டு அதனை
திருத்திக் கொள்ளவேண்டும். இவ்விதமாக உள்ள ஆதாரங்களை வைத்துப்
பார்க்கும்போது, உதாரணமாக ஹரப்பன்களின் “எழுத்துகளை” படிக்கமுடியாமல்
அவர்களை “எழுத்தறிவற்றவர்கள்” என்று பேசுவது-ஆராய்ச்சி செய்வது கற்றக்
கல்விற்கே ஒவ்வாததாகும். அகவே மாற்றுக் கருத்துகளில் உண்மை எதுவும்
உள்ளதா என ஆராயமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. மேற்கண்ட விவரங்கள்,
சான்றுகள், உண்மைகள் முதலியவற்றிலிருந்து 788-820 CE கால-கட்டத்தை விட
509-477 BCE தகுந்ததாகத் தோன்றுகிறது.


எதிர்வாதங்கள், சாதகமில்லாத வர்ணனைகள், முதலியவற்றை ஆராய்தல்: பௌத்த
இலக்கியங்களை ஆராய்ந்த அறிஞர்கள் பல எதிர்வாதங்கள், சாதகமில்லத
வர்ணனைகள், விமர்சனங்கள் என்று பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்:


1. தர்மபாலனின் சீடன் ஒரு பிராமணனைத் தோற்கடித்தது: யுவான் சுவாங்
தர்மபாலனின் சீடனாகிய சீலபத்ரன் (c.500 CE) தென்னிந்தியாவிலிருந்து வந்த
ஒரு பிராமணனை பல நாட்கள் வாதிட்டு முடிவில் வென்றதாகக்
குறிப்பிடுகின்றார். ஆனால், அந்த “தென்னிந்திய பிராமணனின்” பெயர்
குறிப்பிடப் படவில்லை.
2. தர்மகீர்த்தி ஒரு சங்கராச்சாரியரை வெற்றிக்கொண்டது: தர்மகீர்த்தி
(530-600 / 600-660 CE) மிகவும் படித்த ஒரு சங்கராச்சாரியாருடன் வாதிட்டு
வென்றதாக குறிப்பிடப்படுகிறது . அவ்வாறு தோற்றதால் சங்கராச்சாரியார்
கங்கை நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக உள்ளது. இங்கு
“சங்கராச்சாரியார்” என்று குறிப்பாகயுள்ளது.
3. “ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध என்ற குற்றச்சாட்டு: ஆதிசங்கரரே ஒரு
பௌத்தராக புத்த-மதத்தினராக இருந்தார், என்ற குற்றசாட்டு உள்ளது .
“ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध என்றால் ரகசியமாக பௌத்தரைப் போல்
இருந்தவர் என பொருள்படும். அத்வைதம் மற்றும் புத்த-மத கருத்துகளான
விஞ்ஞானம், சூன்யம், மத்யாமிக பௌத்தம் முதலியவற்றிலுள்ள ஒற்றுமைகளை
வைத்து அவ்வாறான விமர்சனம் செய்யப் படுகிறது. இருப்பினும் தத்துவ
வழக்காடுகள் மூலம், பண்டிதர்கள் அதனை மறுத்துள்ளனர் .
4. கவுடபாதரும் “ப்ரச்சன புத்தர்” தாம்: கவுடபாதரும் விஞ்ஞான-
சூன்யவாதங்களை அத்வைதத்துடன் ஒத்துபோகும் முயற்ச்சியில் ஈடுபட்டதால்
அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுகிறார் .
5. சங்கரருக்கு முன்னமே “அத்வைதம்” இருந்தது: இங்கு இரண்டு வாதங்களைக்
காணலாம். அதாவது தத்துவரீதியில், சங்கரர் புதியதாக எதையும் சொல்லவில்லை,
ஏனெனில் அத்தகைய கருத்துகள், ஏற்கெனவே வேதங்களில்-உபநிஷத்துகளில் உள்ளன
என்பது ஒரு வாதம். இதை, வேதங்களை ஆதரிப்பவர்-எதிர்ப்பவர் இருசாராரருமே
அவ்வாறு வாதிடலாம். ஆனால், சரித்திர ரீதியில், காலத்தினால் அத்வைதம்
பேசும் நூல்கள் இருந்து, குறிப்பாக 788-820க்கு முன்பாக இருந்தால்,
அவற்றை அவ்வாறு ஒதுக்கிவிட முடியாது . ஏனெனினில் 509-477 கால நிலையை
எதிர்ப்பவர்-மறுப்பவர் அவ்வாறு வாதிட்டு உண்மையினை மறைக்கலாம்.


ஆகையால் இத்தகைய குற்றச்சாட்டுகள், விவர்சனங்களை ஒதுக்கிவிட முடியாது.
அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்தால், அவற்றின் பின்னணி விளங்கும். எனவே அவற்றை
ஆராயும்போது, கீழ்காணும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன:


1. பௌத்தர்களின் மதம் பலமிழக்க காரணமாக இருந்தவர் சங்கரர் தாம் என்ற
எண்ணம் இருந்தபோது, அவர் மீது வெறுப்பு, துவேஷம் எழுந்தது-இருந்தது
உண்மை.
2. பௌத்தர்கள்-இந்துக்களிடையே 5-6-7 நூற்றாண்டுகளில் வாதங்கள் இருந்தது-
தொடர்ந்தது என்பது பொதுவான அறிந்ததொன்றாகும்.
3. அத்தகைய வாதங்கள், இந்திய பாரம்பரியத்தின் மீது ஆதாரமாக - தர்க்கம்
என்ற நிலையில் இருந்ததால், அமைதியாகவே இருந்ததன, நடந்தன.
4. இலக்கியம் “ஒரு சங்கராச்சாரி” என்றுதான் குறிப்பிடுகிறதேத் தவிர
“ஆதிசங்கரர்” என்று குறிப்பிடவில்லை.
5. எது எப்படியாகிலும், இந்த வழக்கும் 5ம் நூற்றாண்டிற்கு முன்பு
செல்கிறது.
6. இவ்விவாதம் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத நூல்களிலே
காணப்பட்டாலும் “விவாதம் செய்தவர் தென்னிந்தியாவிலிருந்துதான் வந்தார்”
எனும் போது தென்னிந்தியாவின் உயர்ந்த கல்விநிலையைக் காட்டுகிறது. அதாவது,
சமஸ்கிருத படிப்பு முதலியன தென்னிந்தயாவில் இருந்தது என்பது
தெளிவாகிறது .
7. “ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध க்க்காஅகுற்றச்சாட்டு “சங்கரரை” எந்த
அளவிற்கு பௌத்தர்கள் மதிக்கின்றனர் அல்லது “சங்கராச்சாரரி” அவர்களை
பாதித்துள்ளார் என்பது தெரிகிறது.


கம்போடிய கல்வெட்டை ஆராய்தல்: தென்னிந்தியர்கள் பெருமளவில் தென்மேற்கு
ஆசிய நாடுகளுக்குச் சென்றதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக
கௌண்டின்ய தோத்ரம் கொண்ட பிராமணர்கள் பெருமளவில் சென்றதை
ஆராய்ச்சியாளர்கள் விளக்குவதில்லை. முக்கியமாக பிராமணர்கள் கடல் தாண்டிச்
செல்லக் கூடாது என்றால் இவர்கள் எப்படி சென்றிருக்கக் கூடும்? 1950களில்
கம்போடிய கல்வெட்டில் கண்ட ஒரு “पगवाचँचंखर = பகவாச்சங்கர” என்ற
சொற்றொடரை “ஆதிசங்கரர்” தாம் எனக்கொண்டு அவர் காலத்தை 788-820க்கு
தீர்மானித்தனர். அக்கல்வெட்டைத் தமிழில் இவ்வாறு படிக்கலாம்:


தேன திப்தானி சாஸ்திரானி பகவாச்சங்கராக்னயத்|
....................................
யஹ்: சதா தக்ஷிணாச்சார்: கும்பயோனிர்வப்ரஹ
நிஸ்சேஸமுதர்லி மலாலிததக்ரிபங்கஜாத்||
த்ர்க கவ்ய திஸபூதாமிதபூதுமவ்ய யஹ|
புராண பாரத ஸைஸ்ய சைவ வ்யாகர்ணதிஸு
சாஸ்திரேஸ்ய குஸலோ யொஹபூத் தத்காரக ஐவ ஸ்வயம்
சர்விதைகனிலயோ வேதவித் ...