Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 23 ஏப்ரல், 2011

முத்தரையர் இளைஞர் அணி கூட்டம்

இயக்கத்தின் செயலாளர் திரு. காந்தி மற்றும் நண்பர் கலந்துக் கொண்ட ஆலோசனைக் கூட்டம்

முத்தரையர் இளைஞர் அணி கூட்டம் 22 .4 .2011 அன்று எங்கள் ஊர் சித்தரேவு வில் நடை பெற்றது இந்த கூட்டத்தில் திரு. புகழேந்தி ,கவியரசு , மற்றும் நம்பி ,கார்த்திக் ,தினேஷ் ,காந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . இந்த கூட்டத்தில் பல கருத்துகள் , மற்றும் ஆலோசனைகள் மக்களுக்கு கூறப்பட்டன .


மேலும் செய்திகளுக்கு ....
http://perumpiduku.blogspot.com/2011/04/blog-post.html

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

Muthirayar Suresh (Muthuraja)..தனது facebook ல் எழுதியது

நமது வேட்பாளரை (எந்த கட்சியாக இருந்தாலும் ஆதரிக வேண்டும்) மன்னார்குடிஇல் சுயட்சையாக போட்டியிடும் நமது வேட்பாளர். மற்றும் பட்டுகோட்டைஇல் BJP சார்பாக போட்டியிடும் நமது வேட்பாளரை . மேலும் ஆலங்குடி நமது சிங்கம் வேங்கடச்சல்ம் அவர்களின் மகனை ... ஆதரிக வேண்டும்,மேலும் மற்ற இடங்களில் போட்டிபோடும் நமது இன வேட்பாளருக்கு கட்சியை பார்க்காமல் வோட்டை போட்டு நமது செல்வாக்கை காட்டுங்கள். இவர்கள் இபொழுது வெற்றி அடையாவிட்டாலும் வருங்கலத்தில் நமக்கு வெற்றி பெற்று தரும்



இளம் சிங்கங்கள் அமைப்பு இதை செயவேண்டும் .மன்னார்குடிஇல் ஏன் DMK (மாற்று இன ) வேட்பாளரை ஆதரிகிறார்கள் என்று புரியவில்லை????? எந்த காரணத்தையும் நமது சமுகத்தை நினைத்து ஒன்று படுங்கள் .

வியாழன், 7 ஏப்ரல், 2011

'செய் அல்லது செத்து மடி': ஹசாரே

புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார்.


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.




ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.




அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.



அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆறுக்கு நாலு கைப்பற்றும் வாய்ப்பில் அ.தி.மு.க.,:புதுக்கோட்டை மாவட்ட நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணிக் கட்சிகளின் பலம் மட்டுமல்ல; ஜாதி ஓட்டுகளும் தான். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, தற்போது, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி என ஆறு தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளன.
புதுக்கோட்டை: இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார். அ.தி.மு.க., அணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துக்குமரன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் அதிகம். இரண்டாவதாக முக்குலத்தோர் மற்றும் ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என, பல்வேறு ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.பிரதான கட்சி வேட்பாளர்கள் இருவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அந்தச் சமுதாய ஓட்டு பிளவுபடுகிறது. முத்தரையர் ஓட்டுகளை அதிகமாக பெறும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சியின் மொத்த ஓட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இதனால், புதுக்கோட்டை தொகுதியின் வெற்றி வாய்ப்பு, மதில் மேல் பூனையாக உள்ளது.
கந்தர்வகோட்டை (தனி): புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கவிதைப்பித்தன், அ.தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் இடையே தான் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இருந்த குளத்தூர் (தனி) தொகுதிக்குட்பட்ட பல கிராமங்கள், கந்தர்வகோட்டை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. குளத்தூர் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்ததால், கந்தர்வகோட்டை தொகுதியின் தேர்தல் முடிவும், அ.தி.மு.க.,வுக்குத் தான் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விராலிமலை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ரகுபதி மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் போட்டியிடுகின்றனர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். இரண்டாவதாக, முத்தரையர் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளனர். கவுண்டர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரும் அதிகம்.தி.மு.க., வேட்பாளர் ரகுபதி சிறுபான்மையினமான செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கும். அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, மண்ணின் மைந்தர் என்பதால், இவருக்கு அந்தச் சமுதாயத்தினரின் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முத்தரையர் மற்றும் கவுண்டர் ஓட்டுகளும் கிடைக்குமென்பதால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
திருமயம்: இத்தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சுப்புராம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. "சிட்டிங்' எம்.எல்.ஏ., சுப்புராம், 2006 தேர்தலில், 314 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அப்போதைய தே.மு.தி.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், 10 ஆயிரத்து 490 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன், தே.மு.தி.க., கூட்டணி சேர்ந்துள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஆலங்குடி: இத்தொகுதியில், தி.மு.க., அணியில் பா.ம.க., வேட்பாளர் அருள்மணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளராக, கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இருதரப்பிலும் போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அது, தேர்தல் முடிவை மாற்றக் கூடும். முத்தரையர் சமுதாய மக்களின் ஓட்டு சிந்தாமல், சிதறாமல் யாருக்கு கிடைக்கிறதோ, அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எதிர்ப்பை சரிகட்டி அச்சமுதாய ஓட்டுகளைப் பெற, கு.ப.கிருஷ்ணன் முயன்று வருகிறார்.
அறந்தாங்கி: இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜநாயகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 1977 முதல், 96 வரை நடந்துள்ள ஆறு தேர்தல்களில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர், தொடர்ந்து வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் உதயம்சண்முகம் வெற்றி பெற்றார். 30 ஆண்டுக்குப் பின் தொகுதி மீட்கப்பட்டதால், தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.தொகுதியைத் தக்கவைக்கும் விதமாக உதயம்சண்முகம் எம்.எல்.ஏ., உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர், வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வாய்ப்பு காங்கிரசுக்குப் போனதால், தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அவர்களைச் சரிக்கட்டினால் மட்டுமே திருநாவுக்கரசர் வெற்றி பெற முடியும்.
முக்கிய தொழில் :விவசாயம், கல் குவாரிகள், மீன் பிடி தொழில், முந்திரி.
நீண்ட கால கோரிக்கைகள் :கொள்ளிடம் உபரிநீர் திட்டம், காவிரி குடிநீர் திட்ட விரிவாக்கம், மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

தொகுதி விவரம்: ஆலங்குடி

ஆலங்குடி 2-வது குருஸ்தலம் என போற்றப்படுகிறது. ஆலங்குடி தொகுதியில் உள்ள குளமங்கலத்தில் உள்ள பெருங்கரையடி மிண்ட அய்யனார் கோவில் முன்பு, ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை உள்ளது. இதனால் குதிரை கோவில் என்று இக்கோவிலின் பெயர் விளங்குகிறது. இங்கு கடலை சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இதற்கான மில்களும் உள்ளன. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் இத்தொகுதியில் இருந்து 3 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் முத்தரையர் இன மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அடுத்ததாக முக்குலத்தோர் வசித்து வருகின்றனர். கணிசமாக எண்ணிக்கையில் மற்ற இன மக்களும் வசித்து வருகிறார்கள். இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அரசர்குளம் வருவாய்சரகம், பூவற்றக்குடி வருவாய்ச்சரகம், சிலட்டூர் வருவாய்ச்சரகங்களில் இருந்து 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன. இதில் அரசர்குளம் வருவாய்ச்சரகமும், பூவற்றக்குடி வருவாய்ச்சரகமும் தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு புதிதாக இணைக்கப்பட்டதாகும். இதில் ஆலங்குடி பேரூராட்சியும், கீரமங்கலம் பேரூராட்சியும் உள்ளன. இத்தொகுதியில் பெரும்பான்மையானது கிராமப்பகுதிகளே ஆகும். இப்பூக்களை மாலை மற்றும் சரங்களாக தொடுத்து விற்பதில், பூ உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே இந்த தொகுதியில் உள்ள கீரமங்கலத்தில் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை (செண்ட் பேக்டரி) அமைக்க வேண்டும் என்பது பூ உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதே போல் ஆலங்குடி தொகுதியில் தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கீரமங்கலத்தில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்.கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், குளமங்கலம், அனவயல் ஆகிய பகுதிகளில் சீசன் நேரங்களில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. அப்போது 100 காய் கொண்ட ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆலங்குடி அல்லது கீரமங்கலம் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆலங்குடி தொகுதி வழியாக அறந்தாங்கி, மணமேல்குடிக்கு காவிரி நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுவதில் இருந்து ஆலங்குடிக்கும், இதர பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆலங்குடி தொகுதி கல்வி விழிப்புணர்வு பெற்ற பகுதியாகும். இங்கு 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள் உள்ளனர். ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் உள்ள திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் ஒரு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும். கோரிக்கைகள் ஆலங்குடியில் முன்பு தமிழகத்திலேயே அதிக கடலை மில் மற்றும் எண்ணை மில்கள் நிறைந்ததாக இருந்தது. தற்போது கடலை மில்கள், திருமண மண்டபங்களாக மாறி வருகின்றன. ஆனால் ஆலங்குடி தொகுதி பகுதிகளில் வேர்க்கடலை அதிகமாக விளைகிறது. அவ்வாறு விளையும் வேர்க்கடலை, விற்பனைக்காக சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆலங்குடியில் ஒரு வனஸ்பதி ஆலை உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதேபோல் ஆலங்குடி தொகுதியில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கரட்டான், மரிக்கொழுந்து போன்ற பூ வகைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டம் :புதுக்கோட்டை மொத்த வாக்காளர்கள்:165163 ஆண் வாக்காளர்கள் :82532 பெண் வாக்காளர்கள் :82631 திருநங்கை வாக்காளர்கள்:0

தொகுதி விவரம்: திருமயம்

திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் தலை சிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அனைத்து மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொகுதி ஆகும். இதுவரை நடைபெற்ற திருமயம் தொகுதியில் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் கள்ளர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இதையடுத்து முத்தரையர், ஆதிதிராவிடர், நகரத்தார் இன மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு இன மக்கள் குறிப்பிடத்தக்க வகையில் வசித்து வருகிறார்கள். திருமயம் சட்டமன்ற தொகுதி சிவங்கை பாராளுமன்ற தொகுதியோடு சேர்ந்தது. திருமயம் தொகுதியில் 2 தாலுகாக்கள், 3 ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள் உள் ளன. இதில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் இருக்கின்றன. அரிமளம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் உள்ளன. திருமயம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. திருமயம் ஒன்றியம் அரசம்பட்டி, ஆதனூர், இளஞ்சாவூர், கோனாபட்டு, குலமங்களம், குருவிக்கொண்டான்பட்டி, லெம்பலக்குடி, மேலூர், நற்சாந்துப்பட்டி, நெய்வாசல், அழகாபுரி, புலிவலம், ராங்கியம், சேதுராபட்டி, துளையானூர், வெங்கலூர், விராச்சிலை, அரங்கினாம்பட்டி, ஆத்தூர், கண்ணனூர், கோட்டைïர், குழிபிறை, கோட்டூர், மேலப்பனைïர், மிதலைப்பட்டி, நெய்கோணம், காட்டுபாவா பள்ளிவாசல், பனையப்பட்டி, பேரைïர், திருமயம், ராராபுரம், ஊனைïர், வி.லெட்சுமிபுரம். அரிமளம் ஒன்றியம் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், காரமங்கலம், புதுநிலைவயல், நெடுங்குடி, நல்லம்மாள்சமுத்திரம், ராயவரம், செங்கீரை, தேக்காட்டூர், கே.செட்டிப்பட்டி, முனசந்தை, மிரட்டுநிலை, சமுத்திரம், ஓணாங்குடி, துறைïர், மதகம், கல்லுக்குலையான்வயல், திருவாக்குடி, வாளரமாணிக்கம், கே.ராயவரம், கல்லூர், பிலியாவயல், கடியாப்பட்டி, ஆயிங்குடி, பெருங்குடி, கண்ணங்காரக்குடி, கடையக்குடி, வன்னியம்பட்டி, கும்பங்குடி, கீழப்பனைïர், மேல்நிலைவயல். பொன்னமராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சி, அரசமலை, ஆலம்பட்டி, ஆலவயல், பகபாண்டிபட்டி, இடையாத்தூர், கல்லம்பட்டி, கண்டியாநத்தம், ஏனாதி, கூடலூர், காரைïர், காட்டுப்பட்டி, அம்மாசமுத்திரம், கொன்னயம்பட்டி, கோவலூர், சுந்தரசோழபுரம், கொப்பனாபட்டி, கொன்னைப்பட்டி, செம்பூதி, செவலூர், சேரலூர், திருக்களம்பூர், தொட்டியம்பட்டி, பி.உசிலம்பட்டி, தூத்தூர், தேனூர், மரவாமதுரை, மேலமேல்நிலை, மேலைச்சிவபுரி, மேலத்தானியம், நல்லூர், நெறிஞ்சிக்குடி, எம்.உசிலம்பட்டி, மயிலாப்பூர், நகரப்பட்டி, ஒளியமங்கலம், ஆர்.பாலகுறிச்சி, வார்பட்டு, வேகுப்பட்டி, வேந்தன்பட்டி, வாழைக்குறிச்சி, முள்ளிப்பட்டி, கீழத்தானியம். கோரிக்கைகள் திருமயம் சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது. மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும். இதனால் விவசாயம் தொடர்ந்து நடைபெற கொள்ளிடம் காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த சித்த மருந்து தயாரிக்கும் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு பூங்கா அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும். இந்த தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், த.மா.கா. ஒரு முறையும்வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டம் :புதுக்கோட்டை மொத்த வாக்காளர்கள்:168422 ஆண் வாக்காளர்கள் :81632 பெண் வாக்காளர்கள் :86790 திருநங்கை வாக்காளர்கள்:0

நன்றி தினமலர் - ஸ்ரீரங்கத்தில் சுலபமானதா ஜெயலலிதா வெற்றி?

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா உட்பட 23 வேட்பாளர்கள் களமிறங்குவதால், அத்தொகுதி ஓட்டுச்சாவடிகளில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்து அமைப்புகளை சார்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு, கிராமப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதி ஓட்டுக்கள் பிரிப்பு ஆகியவை ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


ஜெயலலிதாவை எதிர்த்து 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் 257 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வேட்பாளர்கள் எண்ணிக்கை 16 வரை ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 17 முதல் 32 வரை இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியில் 23 பேர் போட்டியிடுவதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில், முதல் இயந்திரத்தில் உள்ள வேட்பாளர் வரிசையில் நான்காவதாக தான் ஜெயலலிதாவின் பெயரும், இரட்டை இலை சின்னமும் இடம்பெறுகிறது.


இயந்திரத்தில் முதலாவதாக பா.ஜ., தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் ஜனதா கட்சி வேட்பாளர் அறிவழகன், இரண்டாவதாக தி.மு.க., வேட்பாளர் ஆனந்த், மூன்றாவதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நடராஜன் ஆகியோர் பெயர்கள் இடம்பெறுகின்றன. கடுமையான தி.மு.க., எதிர்ப்பின் மூலம் அ.தி.மு.க.,வின் நலம்விரும்பியாக அடையாளம் காணப்பட்ட சுப்பிரமணியசாமியின் ஜனதா கட்சி வேட்பாளர் பா.ஜ., கூட்டணியில் ஸ்ரீரங்கத்தில களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக சுப்பிரமணிய சுவாமி பிரசாரம் செய்ய உள்ளார்.


அகில பாரத இந்து மகா சபா வேட்பாளர் ரவிசங்கர் அய்யர், தமிழ் மாநில சிவசேனா வேட்பாளர் செல்வம் ஆகியோர் சுயேச்சை சின்னத்தில் களமிறங்குகின்றனர். இதுதவிர சுயேச்சைகளாக போட்டியிடுபவர்கள் பலர் இந்து மதம் சார்ந்த அமைப்புகளில் தொடர்புடையவர்கள். இதனால், இந்து அமைப்புக்களை சார்ந்தவர்களின் ஓட்டுகள் கணிசமாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீரங்கம் தொகுதியில் திருச்சி மாநகராட்சியின் 1-6 வரையுள்ள வார்டுகள் மட்டுமே உள்ளன. இதுதவிர, ஸ்ரீரங்கம், மணப்பாறை தாலுகாக்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், சிறுகமணி பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவின் கோமங்கலம் உட்பட தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறம் தான். பல கிராமங்களில் பெரும்பான்மையாக முத்தரையர் சமூகத்தினர் உள்ளனர். தி.மு.க., வேட்பாளர் ஆனந்த் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், கிராமப்பகுதி ஓட்டுகள் கணிசமாக அவருக்கு செல்ல வாய்ப்புள்ளது.


ஸ்ரீரங்கத்தில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வின் முரசு சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டது கிராமப்புற வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாடும் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஐ.ஜே.கே., சார்பில் தமிழரசி என்பவர் போட்டியிடுகிறார். இவரது பங்குக்கு உடையார் உள்ளிட்ட சமூக ஓட்டுகளும் பிரிக்கப்படும்.


எனவே, ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்து அமைப்புக்களைச் சார்ந்த வேட்பாளர்கள், முரசு சின்னம், ஜாதி ஓட்டு பிரிப்பு


போன்றவை ஜெயலலிதாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. "இவற்றை எதிர்கொண்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றிபெறும் வகையில், அ.தி.மு.க.,வினர் களத்தில் இன்னும் வேகம் காட்டாமல் இருப்பது பின்னடைவுக்கு வழிவகுக்கும்' என, அக்கட்சி தொண்டர்களே பேசி வருகின்றனர்.


-நமது சிறப்பு நிருபர்-

தொகுதி விவரம்: பேராவூரணி



தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவோணம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்பட வில்லை. தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தொகுதி வரிசையில் பேராவூரணி 177-வது இடத்தில் உள்ளது. இந்த தொகுதியில் தற்போது நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியில் இருந்து 9 ஊராட்சிகள் பேராவூரணியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள் இந்த தொகுதியில் இருந்தது. அதில் தற்போது 9 ஊராட்சிகள் பட்டுக்கோட்டை தொகுதியுடனே இணைக்கப்பட்டு விட்டன. இது தவிர சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும், பேராவூரணி தொகுதியில் 26 ஊராட்சிகளும் இந்த தொகுதியில் உள்ளன. பேராவூரணி தொகுதியில் 131 இடங்களில் 213 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 84 ஆயிரத்து 35 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 410 ஆகும். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 420 ஆகும். ஆண் வாக்காளர்களை விட 1384 பெண் வாக்காளர்களை அதிகம் பெற்றுள்ளது பேராவூரணி தொகுதி. இந்த தொகுதியில் முத்தரையர், அம்பலக்காரர், முக்குலத்தோர், யாதவர், ஆதி திராவிடர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினும் உள்ளனர். ஆனால் பேராவூரணி தொகுதியை பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முத்தரையர் இன மக்களே. பொதுவாக இந்த தொகுதியை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு எதிரானவர்களே வெற்றிபெறுவார்கள் என்று கூறப்படுவது உண்டு. அதன்படி கடந்த 2006 தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. வேட்பாளராக திருஞானசம்பந்தம் என்பவர் போட்டியிட்டார். ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வீரகபிலன் என்பவர் வெற்றி பெற்றார். பொதுவாக இந்த தொகுதியில் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களே வெற்றி பெறுவதால் வளர்ச்சி பணிகள் தாமதமாகத்தான் நடைபெறுகின்றன. அந்தந்த எம்.எல்.ஏ. தொகுதி நிதி மற்றும் ஊராட்சி, பேரூராட்சி நிதிகள்மூலம் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. மற்றபடி பெரிய அளவில் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெற வில்லை. பேராவூரணில் கோர்ட்டு அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் எந்த வேலையும் நடைபெற வில்லை. இந்த பகுதி முழுக்க, முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். தென்னையும் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்ததின் விளைவாக தற்போது தான் தென்னை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுவும் கூட்டம் நடத்தப்பட்டதுடன் சரி எந்தவித சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் அந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இந்த தொகுதி தற்போது வரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 11-வது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தொகுதியில் தற்போது மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு தி.மு.க. ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், த.மா.கா. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டம் :தஞ்சாவூர் மொத்த வாக்காளர்கள்:169420 ஆண் வாக்காளர்கள் :84018 பெண் வாக்காளர்கள் :85402 திருநங்கை வாக்காளர்கள்:0