Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 31 ஆகஸ்ட், 2011

திரு. ஜெயமோகன் அவர்கள் அதிமதம் என்ற இணைய தளத்தில் எழுதியது

நம் தமிழ் வரலாற்று நூல்களில் 300 வருட வரலாறு என்பது ‘களப்பிரர் காலம் இருண்டகாலம் ‘என்ற ஒற்றை வரியால் க்டந்துசெல்லபப்டுகிறது
இந்த தளத்தில் புதிய ஆய்வுகள் ஏதேனும்செய்யப்பட்டுள்ளனவா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? 300 வருடம் என்பது ஒரு வம்சம் அல்லது அரசாங்கம் முற்றிலும் வரலாற்றில் இருந்து மறைந்து போக முடியாத அளவுக்கு நீண்டது அல்லவா?
முகையூர்
அசதா

அன்புள்ள அசதா
களப்பிரர் காலத்தைப் பற்றி இப்போது அத்தகைய ஒற்றைவரி சொல்லப்படுவதில்லை– அதாவது அறிஞர் நடுவே. இப்போது ஏராளமான ஆய்வுகளும் புதிய ஊகங்களும் உருவாகி வந்துள்லன
ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றை எழுதியவர்கள் சைவ அறிஞர்கள். அவர்களுக்கு சமணம் மீது ஒரு கசப்பு எப்போதும் இருந்தது. தமிழ்நாட்டில் நடந்த சமண சைவ பூசல்கள் அதற்கு முக்கியமான காரணம். தமிழ்கச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் சமணர்கள்.
ஆகவே அவர்கள் பொதுவாக இரு விஷயங்களைச் செய்தார்கள் ஒன்று, சமணநூல்களை சைவநூல்கள் என விளக்கும் பெரும் விளக்கநூல்களை எழுதினார்கள். சிறந்த உதாரணம் கா.சு.பிள்ளை எழுதிய திருக்குறள் உரைவிளக்க நூல் இரண்டாவதாக சமண மதத்தின் வரலாற்று பங்களிப்பை பெரும்பாலும் வெற்றிடமாகவே விட்டுவிட்டார்கள்
களப்பிரர்கள் சமணர்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சமணர்கள் அக்காலத்தில் பெரிய ஆலயங்களை எழுப்பியதோ அவற்றில் கல்வெட்டுகளை பொறித்ததோ இல்லை. ஆரம்பகால தமிழ் வரலாறு பெரும்பாலும் நிவந்தங்களைப்பற்றிய கல்வெட்டுகளை சார்ந்தே எழுதபப்ட்டது. ஆகவே களப்பிரர் வரலாறு என்பது அனேகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதாவது அன்றைய வரலாற்றாய்வின் வழிகளில் அதை அறிய முடியவில்லை. ஆகவேதான் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வரி தோன்றியது
பின்னர் வரலாறு அரசியலுக்கான கருவியாக ஆகியது. தமிழர் என்ற அடையாள உருவாக்கத்துக்கு வரலாறு பயன்படுத்தப்பட்டது. அப்போது களப்பிரர்கள் மறக்கப்பட்டார்கள். மறுக்கவும் பட்டார்கள்
ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று
களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்
மேலும் நமது வரலாற்றாய்வு என்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் நிலத்துக்குள்ளும் சுருங்கி விட்டது. பிறமொழியும் பிற பண்பாடும் அறிந்த வரலாற்றாசிரியர்கள் மிகவும் குறைவே. ஆகவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ல சமண மரபைச் சேர்ந்த நூல்களைக் கணக்கில் கொன்டு தமிழக வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை
இருப்பினும் சில முக்கியமான நூல்கள் வந்துள்ளன. முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.
சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!
ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை

களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.
சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.
சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள் [குறிப்பாக முத்தரையர் போன்ற சாதிகள்] களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.

ஆனால் அவர்களின் குலதெய்வங்கள் ஆசாரங்கள் ஆகியவற்றை வட இந்திய — குறிப்பாக ஆந்திர, கனன்டநாட்டு– குலதெய்வங்கள் ஆசாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்

களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக் கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்

ஜெயமோகன்


http://athimatham.blogspot.com/


முத்தரையர் சுரேஷ் தனது facebook- எழுதியது...

நமது இனத்தில் பல பிரிவுகள் இருக்கிறது ,ஆனாலும், தஞ்சை(பழைய) மாவட்டத்தில் (மற்ற மாவட்டத்தை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை ) இரு பிரிவாக (A குரூப்,அண்ட் b குரூப் )இருக்கிறார்கள் . ஒரு பிரிவினர் ஒரளவு வசதி மற்றும் கல்வி வாயிபுடனும்.மற்ற பிரிவினர். சொந்த இடம் கூட இல்லாமல் மற்ற இனத்தவரின் இடத்தில குடி இருக்கிறார்கள்.பல இடங்களில் பெண்களின் கவுரத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை.


சுவர் புகைப்படங்கள்
facebook

‎...உண்மையான சிங்கமாக கர்சிப்போம்

இவரால்: Muthirayar Suresh..
24 ஆகஸ்டு, 07:41 க்கு ·விருப்பம்விருப்பமின்மை · · பகிர்தல்.Mutharaiyar Kpmkingமற்றும் Anbu Ganapathy ஆகியோர் இதை விரும்புகிறார்கள்..
Perumbidugu Mutharaiyar enaku therium nanba..but naam ninithal athai sari seiya mudium.....naam ean appati irukirom eantral nam inathil otrumai illai so first naam athai sariseithu kolla ventum ithu sammanthamaga enna help venum eantralum nan saiya katamai pattu irukiren.....eantrum anputan your friend.....


24 ஆகஸ்டு, 16:40 க்கு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்ஏற்றப்படுகின்றது....Muthirayar Suresh good friend , we wait and see how many friends saw the article ,how they reaction ,after we will be decided what we can do for them


24 ஆகஸ்டு, 17:47 க்கு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்ஏற்றப்படுகின்றது....Mannargudi Kurichi Mutharayar Singam naam nam enatthaiyum nalla valarchukku kondu varuvom ,, yeppavum MUTHARAYAR karsikkum SINGAM THAN....NANBA


ஞாயிறு, 13:59 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Perumbidugu Mutharaiyar thank you...nanba..


ஞாயிறு, 16:20 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Muthirayar Suresh எப்பவும் எல்லாரும் கர்சிகனும் அந்தகாலம் நம் பொற்காலம்.


ஞாயிறு, 16:30 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Perumbidugu Mutharaiyar when.....


ஞாயிறு, 16:31 க்கு · விருப்பம்விருப்பமின்மை.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

முத்தரசர்

சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.

(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.

இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.
(மேற்)

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும். மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)


இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத்
தமிழறியும் பெருமாள் கதை என்னும் புத்தகத்தில் - 'அங்காடி
கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன்.
கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்' எனக் கூறப்பட்டுள்ளது காண்க.
கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும்
ஒரு வகுப்பினர்முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து
கொள்கிறார்கள்.




FOR MORE DETAILS VISIT THE BELOW SITE.....

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43



ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

முத்தரையர் - டாக்டர். இரா. நாகசாமி

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.


மேலும் தகவல்களைப் படிக்க கிழ்கண்ட தளத்தினுள் செல்லவும்

http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

நன்றி தினமலர்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புத்தூர் நால்ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் குஞ்சான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பி.சி., எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக, மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். மக்கள் தொகைக்கேற்ப முன்னேற்றமில்லை. ஆகவே, இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய்ப்புகளில் முத்தரையருக்கு 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு, ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அரசாணை வெளியிட்டும் முத்தரையர் மக்களுக்கு அம்பலக்காரன் என்று ஜாதி சான்றிதழ் தர மறுக்கின்றனர். அம்பலக்காரன் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வந்து நிறைவேற்றினால் மட்டுமே, ஊழலை ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம். ஆகவே, அன்னா ஹசாரேவை ஆதரித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரையர் சங்கமும் கலந்து கொள்வது.
திருச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் 41 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஆகையால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வில் அதிகளவு முத்தரையர்களுக்கு வாய்ப்பளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை கேட்டுக்கொள்கிறோம்.
நடக்கவுள்ள திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து கட்சியினரும் வாய்ப்பு தரவேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Mr. VIJAY MUTHARAIYAR CREATE THIS PHOTO'S





Mr. VIJAY MUTHARAIYAR CREATE THIS PHOTO'S

முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவ ட்ட தலைவர் மற்றும் பொது செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
முத்தரையர் இனமக்கள் பிசி மற்றும் ஒபிசி பட்டியல்களில் இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். எனவே மக்கள் விகிதாசாரப்படி முன்னேற்றம் இல்லை. இதனால் இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய் ப்புகளில் முத்தரையர் இனத்தவர்களுக்கு 15 சதவீ தம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் முத்தரையர் இனமக்களுக்கு அம்பலக்காரன் என்கிற சாதி சான்றிதழ் தர தாசில்தார் அலுவலகங்கள் மறுக்கின்றன. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிறுத்திய 42 வேட்பாளர்களில் ஒருவர் கூட முத்தரையர் இனத்தை சேர்ந் தவர் இல்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் முத்தரைய இனத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளா ளர் ரங்கராஜ், இளைஞரணி நிர்வாகிகள் பெரியகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


காரியாபட்டி, ஜூலை 4: விருதுநகர் மாவட்ட முத்தரையர் கல்வி மற்றும் பொதுநல டிரஸ்ட் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு 2-ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவ,ஹ மாணவிகள் வீதம் 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குழ. செல்லையா, மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ராஜேஸ்வரிக்கு பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது.


முத்தரையர் முப்பெரும் விழா காவோியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கொங்காண்ட முத்தரைய மாமன்னர் ஸ்ரீ கோக்கலிமூர்க்க வக்கிரம சோழ தேவாின் 1007ஆம் ஆண்டு பட்டமேற்ற விழா, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1336 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கண்ணப்ப நாயனார் விழா, திருமங்கை ஆழ்வார் விழா என முப்பெரும் விழா காவோியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அம்பலத் தலரசு வரவேற்புரையாற்றினார். பேராசிாியர் இராஜசேகர தங்கமணி தலைமை தாங்கினார். கோயம்பள்ளி சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், குளித்தலை இளங்கோவன், வக்கீல் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் இவ்விழாவிற்கு கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு பொது்த் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி இரா. ஹாிணிக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு தகவல் ...!

OMAN
Company Name: Leading Company in Muscat, Oman
POSITION :INTERNAL AUDIT MANAGER
Experience : 10 - 15 years, min 5 years in Senior position
Qualification : Should be CA with memberships in one or more professional bodies: ICAI,
ACCA, AIA, CIPFA.
Salary + Benefits : To be discussed
Location : Muscat, Oman
NOC Required : Yes
Nationality : Indians
POSITION : ASSISTANT STORE KEEPER
Experience : 2 to 5 years in industry, managing a large multiproduct environment
Qualification : Dip in Mech / Electrical / Electronics or communication / course in Inventory
store management
Salary + Benefits : to be discussed
Location : Muscat, Oman
Nationality : Indians
Description:
• Manage a large central warehousing facility for consumer electronics, electrical, security and
eighing products
• Capable of receiving, checking and delivery of goods from different sources and modes of
transport
• High turnaround of stocks calling for meticulous and accurate job execution
• Plan vehicle movement for deliveries and man management of delivery staff
• Shall be a team worker and be capable of working under pressure and to strict time schedules
• Ensure orderliness and neatness in stock storage
• Maintain records as per ISO requirements
POSITION : SENIOR GEOLOGIST
Experience : 15 years plus in Limestone, Coal Mining
Salary + Benefits : To be discussed
Location : Oman
NOC Required : Yes
Nationality : Indian
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com

SAUDI ARABIA
Company Name : Leading Elec Comp in Saudi Arabia
Position : Project Manager - Electrical
Experience : 10-15 yrs relevant exp
Qualification : B.E./B.Tech/Diploma in Electrical Engg
Salary + Benefits : To be discussed
Location : Saudi Arabia
NOC Required : Yes
Nationality : Indians
Description:
Knowledge of electrical engineering- Particularly knowledge of power systems and substations.
Finance- Knowledge of cash flow and taxation. Identifies and builds relationship with clients/potential
clients. Maintains and develops a range of contacts. Actively lobbies and wins support.Analyses issues
and breaks them down into their component parts.
Makes systematic and rational judgments based on relevant information.Delegates appropriately. Gets
people moving in a common and consistent direction.
Creates trust, loyalty and a sense of team spirit. Gets the work done through people. Is alert to and
acts upon development needs and opportunities for his staff.
Maximizes the motivation that staff derive from their work.
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com
DUBAI
Company Name : Company dealing with HVAC/Electro mechanical Projects in Dubai
Position : Sr. Project Engineer & Project Manager
Experience : 7 to 10 years.
Qualification : BSc Engg graduates only.
Salary + Benefits : To be discussed
Location : Dubai
NOC Required : Yes
Nationality : Indians
Company Name : Company dealing with HVAC/Electro mechanical Projects in Dubai
Position : Estimation Engineer
Experience : 3 to 5 years
Qualification : B Tech – Mechanical Engineer degree
Salary + Benefits : Bachelor Position , Basic + Transport & accommodation
Location : Dubai
NOC Required : Yes
Nationality: Indians
Description:
Knowledge of codes & standards, SOLAS, API, AISC, ASME, EN, API, NFPA, International Plumbing
Code, National Plumbing Code, IEC, IECEX, ATEX, NEC, IEE, ASHRAE, SMACNA & DW 144.
• Knowledge and experience of offshore construction work and basic design knowledge of HVAC,
electrical /control systems.
• Must have experience in to raising RFQ, presenting cost reports, procurement etc
• Technical Requirements – minimum 3 years experience in oil & gas/marine industry and handling
HVAC and associated Electrical installations of various types of Chilled water and D-X installations.
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
UAE

ஊச்சாத்துரை விழா

துறையூர்: துறையூர் முத்தரையர் தெருவில் எழுந்தருளியுள்ள சின்னப்பன் கோவில் ஊச்சாத்துரை விழா நடந்தது. ஆடி மாதத்தில் குல தெய்வம் மற்றும் அம்மன் பூஜை, திருவிழா, புனித நீர் நிலைகளில் தமிழக மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதையொட்டி துறையூர் சின்னப்பன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஊச்சாத்துதுரை விழா நேற்று விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விழாவில், முத்தரையர் இன பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.