Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 30 மே, 2012

TAMIL CULTURE & HISTORY- CHOLAR,SERA,PANDIAR..........



தகவல் சுரங்கம் - முத்தரையர் மாதம் - நன்றி: தினமலர்

தகவல் சுரங்கம்

முத்தரையர் மாதம்

ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தை, தமிழ்ச் சமுதாயத்தில் முத்தரையர் மாதமாக கொண்டாடு கின்றனர். மே 23ம் நாள் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளின் முன்னும், பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. முதன்முதலில் பல்லவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முத்தரையர்கள் பின், பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாக இருந்தனர். கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் பகுதிகளில் இவர்களது ஆட்சி நடைபெற்றது. "அரையர்' என்னும் சொல்லுக்கு நாடாள்வோர் என்பது பொருளாகும். அதனால் தான் இவர்களுக்கு முத்தரையர் என பெயர் வந்தது. இவர்கள் பாண்டிய மன்னர்களைப் போல, தங்கள் கொடிகளில் மீன்களைப் பொறித்து வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை தங்கள் பெயர்களோடு இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் பிடுகு என்பது "வலிமையான இடி' என்பதை குறிக்கிறது.

to visit : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=476925

திங்கள், 28 மே, 2012

சோழநாடு முன்னேற்ற கழக 2ம்ஆண்டு துவக்கவிழா - நன்றி: தினகரன்

தஞ்சை: சோழநாடு முன்னேற்ற கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் அலுவலக திறப்புவிழா தஞ்சையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் தமிழரசன் வரவேற்றார். தஞ்சை நகரை உருவாக்கி தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கு தஞ்சையில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்டிற்கு பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் பெயர் சூட்ட வேண்டும் என தமிழகஅரசை கேட்டுக்கொள்வது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாரிமுத்து, அய்யப்பன், சுதாகர், ஜெயக்குமார், செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.

சனி, 26 மே, 2012

நன்றி..! நன்றி..!! நன்றி...!!!

முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1337-வது பிறந்த நாள் விழா முத்துபேட்டை இல் கொண்டாடப்பட்டது ...
தஞ்சை கிழக்கு மாவட்டம் , திருவாரூர் , நாகை ஆகிய மாவட்டங்களின் மைய பகுதியான முத்துபேட்டை விழா வில் , பட்டுகோட்டை , ஆதிரம்பட்டினம் , மதுக்கூர் , மன்னார்குடி , நீடாமங்கலம் , கோட்டூர் , திருத்துறைபூண்டி , வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 20 _ 30 வயதுக்கு உள்பட்ட சுமார் 2000 மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர் ..விழா பேரணி முத்துபேட்டை புறநகர் சாலை இல் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழி யாக புதிய பேருந்து நிலையம் அருகே விழா மேடை வந்து
சிறப்பாக நடைபெற்றது ..
பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கும் ,வர்த்தக நிறுவனங்களுக்கும் எந்த விதமான வன்முறையும் இன்றி , மிகவும் கண்ணியத்தோடு , பக்குவமாக ,( மாற்று இனத்தவர் கூட பாராடும் வகையில் ) பேரணியில் கலந்து கொண்ட முத்தரையர் சமுதாய நண்பர்களுக்கு மனமார்த்த நன்றி நன்றி .. மேலும் பாதுகாப்பு பணியில் யீடுபட்ட காவல் துறைக்கும் , பேரணி அமைதியாக நடத்த முழு ஆதரவு அளித்த அணைத்து இன நண்பர்களுக்கும் நன்றி ..நன்றி ..

-ராஜ்குமார்

வெள்ளி, 25 மே, 2012

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது..!!


வன்மையாக கண்டிக்கிறோம்....!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 சதய விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை திருச்சி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, ஆண்டாண்டு காலமாக மே 23 ம் நாள் திருச்சியில் லட்சக்கணக்கான முத்தரையர் சொந்தங்கள் திரண்டு அமைதியாக தமது மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்த போது அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக கூட சொல்லாத தமிழக ஊடகங்கள், இருதினங்களுக்கு முன்பு திருச்சியில் சில இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகளை மிகப் பெரிய வன்முறையாக சித்தரித்து எமது இனத்தை வன்முறையாளர்களாக காட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம், அன்றைய தினம் மன்னருக்கு மரியாதையை செய்ய வந்த சொந்தங்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை, அங்கு ஒரு போக்குவரத்து ஒழுங்கு கூட செய்யாமல் எமது சொந்தங்களை அலைக்கழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும், தமிழக அரசு அரசு விழாவாக நடக்கும் பேரரசரின் சதய விழாவின் போது திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமாவது அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், மேலும் பெரும் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவதனால் ஏற்படும் நெரிசலை தடுக்க எல்லா மாவட்ட தலைநகரிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை திறந்திட வேண்டும் என்று அரசுக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது, அன்றைய தினம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடாத எமது சொந்தங்கள் 46 பேர் மிது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எமது உறவுகளை வேண்டிக்கொள்வதெல்லாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனத்திற்கு நாகரிகம் கற்று தந்த கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாம், நாம் கூடும் இடங்களில் நமது பெயருக்கு களங்கம் செய்ய, நமது இனத்திற்கு களங்கம் ஏற்படுத்த சதிகார கும்பல்கள் காத்து கிடக்கின்றன, அந்த நாசகார கும்பலின் சதியினை முறியடித்து நாளை ஆளப் போகும் இனம் பொறுமையை கைவிடல் ஆகாது என்பதனை வலியுறுத்துகிறோம்


என்றும்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

VISIT : http://illamsingam.blogspot.com

நன்றி : செல்வா


வேலை வாய்ப்புத் தகவல்கள்...


நன்றி: தினத்தந்தி திருச்சி பதிப்பு


திருச்சி முத்தரையர் சதயவிழாவில் கலவரம் : பொதுசொத்துக்கு சேதம்; 46 பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சியில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் கலவரம் செய்த, 46 பேர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத வகையில், பொதுசொத்து சேத வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான, ஜாதிச் சங்க நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், நேற்று முன்தினம் காலை நடந்தது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததால், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியை முற்றுகையிட்டனர்.இவர்கள் கையில் வைத்திருந்த கொடிக்கம்பினால் செல்லும் வழியில் நின்ற, சென்ற வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும், கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு ஏராளமான பொதுமக்களுக்கு சிறியளவிலான காயங்களும் ஏற்பட்டன. அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் நடந்த கலவரத்தை தட்டிக்கேட்ட, காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட அவர், கொடுத்த புகாரின்படி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரின் மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாய்ந்தது வழக்கு: திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பஸ் கண்ணாடிகளை உடைத்த, 46 பேர் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், அனுமதியின்றி ஊர்வலமாக செல்லுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ், ஸ்ரீரங்கம், கன்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

NEWS FROM : DINAMALAR

வியாழன், 24 மே, 2012

தினத்தந்தி மதுரை பதிப்பு

முத்தரையர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பத்திரிக்கைகள் ....!!! (தினமலர் செய்தி)

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாட்டம் மாநகர மக்களுக்கு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியம், கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, ராணி, மாநகரச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தே.மு. தி.க., சார்பில் மாவட்டச்செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் பார்த்திபன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். ஐ.ஜே.கே., பொதுச்செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணி வித்தனர். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கம் உள்ளிட்டஅø மப்பினர் மாலை அணிவித்தனர்.*ரணகளம்: காலையில் சிறப்பாக துவங்கிய சதயவிழா, மாலை நேரம் நெருங்க, நெருங்க "உற்சாகம்' கரை புரண்டோடியது. ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன், கார்களில் ஊர்வலமாக வந்தவர்கள், கையில் உள்ள சவுக்கு மர கொடியினால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் டூவீலர்களில் வருபவர்களை அடித்தும், கார், பஸ்களின் மீது அடித்தும் ரகளை செய்தனர்.இதனால் ஏராளமானோர் சிறியளவில் காயமடைந்தனர். நேற்று மாலை 5. 30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண் ஒருவரை, இதேபோல ஊர்வலமாக சென்றவர்கள் கொடிக்கம்பினால் தாக்கியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரவுண்டானா அருகே திடீர் சாலைமறியலில் குதித்தனர்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாரை, பொதுமக்கள் கண்டபடி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலம் வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கைகள் கட்டி போட்ட நிலையில் இருந்த போலீஸார், மக்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். ஊர்வலமாக வருபவர்களை மறித்து தாக்க முற்பட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.*இன்ஸ்., மண்டை பணால்: இரு தரப்பினரையும் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சமாதானம் செய்ய முயன்றார். அ ப்போது, ஊர்வலமாக வந்த சிலர் அவர் மண்டையில் கல்லால் தாக்கி, நின்று கொண்டிருந்த பஸ் மீது தள்ளிவிட்டனர். இத்தாக்குதலில் அவரது மண் டை உடைந்து ரத்தம் கொட்டியது.உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.*கல்வீச்சு: தஞ்சை பகுதியில் இருந்து வேன்களில் ஊர்வலமாக திருச்சி வந்த கும்பல், முந்தி செல்ல வழி கொடுக்காத டி.எஸ்.டி., எல்.ஆர்.எஸ்., பஸ்கள் மற்றும் பள்ளி வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடி உடைந்தது.திருவானைக்காவல், தென்னூர் ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுபோன்று கும்பல், கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டவர்களால், மாலை முதல் இரவு வரை மாநகர மக்கள் பீதியுடனே சாலைகளில் நடமாடினர்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் முத்தரையர் இனம் கொந்தளிப்பு :









முத்தரையர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பத்திரிக்கைகள் ....!!! (நக்கீரன் செய்தி..)



தமிழகத்தில் முத்தரையர் இனமக்கள் பெருவாரியாக உள்ளனர். அதிமுகவின் வாக்கு வங்கியாகவே இவர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி பொறுப்புகளிலும் தொடர்ந்து முத்தரையர் இனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.


ஒரு சில இடங்களில் வாய்ப்புக் கொடுத்தாலும், ஒரு சில மாதங்களில் பறித்துக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையாக சுமார் 65 வாக்காளர்கள் முத்தரையர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றிய சேர்மன்களும் பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் முத்தரையர்களாகவே உள்ளனர்.


இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளராக ஒரு முத்தரையருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் கட்சி தலைமை பறித்துவிட்டது. இதனால் தொடர்ந்து கண்டன போஸ்டர்கள் ஒட்டினர்.

இதன் காரணமாகவே முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஒரு வேட்பாளரையும் அறிவித்துள்ளனர். வாய்ப்பை பறித்துக்கொண்டதால் அதிமுக வேட்பாளரை புறக்கணிப்போம் என்று முத்தரையர் இன அதிமுகவினர் கட்சி தலைமைக்கே கடிதம் எழுதியுள்ளனர்.


இந்த நிலையில்தான் இன்று நடந்த திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் மேடை அமைக்க அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தடையை மீறி மேடை அமைத்து சதய விழாவை நடத்தியுள்ளனர்.

சதய விழா முடிந்த நிலையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், சதய விழாவிற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருபதும் கூடியிருந்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனால் திருச்சி மாநகரில் ஆங்காங்கே கடைகளை உடைத்தும், காவலர்களின் மண்டையை உடைத்தும், ஜெயலலிதாவின் தொகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை சூரையாடியுள்ளனர். இதனால் திருச்சி மாநகரில் இன்னமும் பதட்டம் தணியவில்லை.




- செம்பருத்தி, ஜெ. டி. ஆர்.

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை - தினகரன்

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை

திருச்சி, : பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்..
நாட்டின் விடுதலைக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட பேரரசர்களின் ஒருவரான பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்தநாளை யொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையில் சிலைக்கு நேற்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர்.
இதற்கிடையே மன்னர் சிலைக்கு மாலை அணிவிக் கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங் கார மேடை அமைக்காதது குறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகள்நேற்று முன் தினம் புகார் தெரிவித்தனர். சிலையின் கீழே தலைவர்க ளின் உருவப்பட த்தை வைத்து மாலை அணிவிக் கும் நடைமுறை தான் உள் ளது என பதில் அளித்துள்ளனர்.
இதற்கு முத்தரையர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நேற்று அதிகாலை 4 மணி க்கு அவசரமாக ரெடிமேட் மேடை அமைக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் அமைச்சர் சிவபதி, கலெக் டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்பி குமார், எம்எல்ஏக்கள் பரஞ்சோதி, மனோகரன், கு.ப. கிருஷ்ணன், பூனாட்சி, இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன் னாள் அமைச்சரும், மாவ ட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் முன்னாள் அமைச்சர் செல் வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரிய சாமி, ராணி, நகர செயலா ளர் அன்பழகன் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக சார்பில் மாவ ட்ட செயலாளர் விஜயராஜன், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் மலர்மன்னன், சேரன், இந் திய ஜனநாயகக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய சீலன், பாஜக மாவட்டத் தலைவர் பார்த்திபன் ஆகி யோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முத்தரையர் சங்கங்களின் சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்தரையர் பிறந்த நாள் விழா - நன்றி: தினத்தந்தி


முத்தரையர் பிறந்த நாள் விழா - நன்றி: தினத்தந்தி


திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில்....

இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர். பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

NEWS FROM :
http://puthiyathalaimurai.tv/news/tamil/29980

புதன், 23 மே, 2012

எங்கே கலவரம் ? - காவல்துறையின் அராசகம்...!!

இன்று 1339 சதையவிழா: முத்தரய்யர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சிவபதி தலைமையில் மரியாதை - நன்றி: மாலைமலர்

திருச்சி, மே.23-


முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1339-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயஸ்ரீ, குமார் எம்.பி., மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி மனோகரன், பூனாட்சி, கு.ப.கிருஷ்ணன், இந்திராகாந்தி. முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன்,

கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகர், மனோகரன், லதா. மாநகர அ.தி.மு.க. அவைத்தலைவர் வெல்லண்டி நடராஜன் முன்னாள் மாவட்ட செயலாளகள் வக்கீல் முருகய்யன், ரத்தினவேலு, பரமசிவம், டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள், நாகநாதர் பாண்டி, பூபதி, கலிலூல்ரகுமான், பேரவை இணைச் செயலாளர் திருச்சி அன்பழகன்,

இளைஞரணி பத்மநாதன், ஜோதிவாணன், ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன், ஒன்றிய செயலாளர் நடசேன், ஒன்றிய கவுன்சிலர் பேரூர் கண்ணதாசன். மாநகர் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் கவுன்சிலர் பெஸ்ட்பாபு, கவுன்சிலர்கள் ராஜா , ஏ.பி.சகாதேவன், நத்தர்ஷா, ஏர்போர்ட்விஜி, முத்துலட்சுமி,

வட்ட செயலாளர்கள், ஒத்தக்கடை மகேந்திரன், வெஸ்லி, பிச்சைமணி, மண்ணச்சநல்லூர் ரமேஷ், கல்லூர் முருகேசன், பொதுக்குழு பரமேஸ்வரன், அரசு வக்கீல்கள் சரவணன், வெங்கடேசன், ஜெயராமன், பாக செயலாளர்கள் வி.என்.ஆர்.செல்வம், தர்க்கா காஜா, தியாகராஜன், பீம நகர் ராஜேஷ், சுப்பிரமணி, வேலுப்பிள்ளை,

ஒத்தக்கடை செந்தில், பொன்னகர் முரளி, டிபன்கார்த்தி, மகாமுனி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மாலை அணிவித்தனர். மாநகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில்பெரியசாமி, ராணி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர், பகுதி செயலாளர்கள் மண்டிசேகர், கண்ணன், கொட்டப்பட்டு தர்மராஜ், இளைஞரணி அமைப்பாளர் தொ.தங்கமணி, ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், தலைமையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் அலங்கராஜன் செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், ஜோசப் ஜெரால்டு, சுரேஷ்காந், ராமு, வெங்கடேஷ்.

பகுதி செயலாளர்கள் கலைப்புலிபாண்டியன், வீரசிவக்குமார், பொன்மலை மனோகர் நெப்போலியன், பாவேந்தன், ஜபருல்லா, விவசாய அணி செயலாளர் குமரவேல், கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரமுத்தரையர் சங்கம் சார்பில் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வைரவேல், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் சார்பில்...

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம் - நன்றி: தினமணி

திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார் பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை தேர்தலில் அ.தி.மு.க வின் மாற்று வேட்பாளராக "முத்தரையர்' :

புதுக்கோட்டை தேர்தலில் அ.தி.மு.க வின் மாற்று வேட்பாளராக "முத்தரையர்' :

காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, புதுக்கோட்டை இடைத்தேர்தல், அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பெயரில் இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.அவருக்கு மாற்று வேட்பாளராக, அ.தி.மு.க., புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கருப்பையா முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முதலில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதன்பின், கடைசி நேரத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் கருப்பையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோரில் ஒருவரை மாற்று வேட்பாளராக கட்சித்தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாற்று வேட்பாளராக அறிவிக்க காலைக்கதிர் செய்தியே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டை நகரம் முழுவதும் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் இல்லை என்ற நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.இடைத்தேர்தல​் வேளையில் இப்படி ஒரு நோட்டீஸால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த ஞாயிறு காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன்பின்னரே மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, அதுவும் ஏற்கனவே கட்சியினருக்கும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரையும் நிறுத்த அ.தி.மு.க., சீனியர் அமைச்சர்கள் முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலை பெற்றுள்ளனர்.அதன்படியே அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு மாற்று வேட்பாளராக, முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.கருப்பையாவை மாற்று வேட்பாளராக அறிவித்தன் மூலம் தொகுதியில் உள்ள முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பர் என்று நம்பிக்கை அ.தி.மு.க., தரப்பில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுவும் நம் இனத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அ.தி.மு.க அரசின் ராஜதந்திரங்களில் ஒன்றே இணைய நண்பர்களே ....!

- செல்வராஜ் முத்தரையர்

செவ்வாய், 22 மே, 2012

அழைப்புக்கள்


வேலை வாய்ப்புத் தகவல்கள்...!!!


வாழ்த்துக்கள்...!!!

எனது சகோதரியின் மகள் R.சினேகா இன்று அறிவிக்கப்பட்ட +2 தேர்வு முடிவுகளில் 1200 மதிப்பென்களுக்கு 1092 மதிப்பெண்கள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார், மருத்துவ படிப்பில் சேர்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், எனது வாழ்த்துக்களோடு உங்களின் அன்பான வாழ்த்துக்களை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்

சஞ்சய்காந்தி

திங்கள், 21 மே, 2012

வேலைவாய்ப்பு தகவல்...!!


அழைப்பு

முத்தரையர்களுக்கு காங்., முக்கியத்துவம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சசர் உறுதி - நன்றி: தினமலர்

புதுக்கோட்டை: ""முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்,'' என்று மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.சிவகங்கை எம்.பி., தொகுதிகுட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் செசயல்வீரர்கள் கூட்டம் நேற்று(20ம் தேதி) நடந்தது. மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம சுப்புராம் வரவேற்றார். மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் பேசியதாவது:காங்கிரஸ் பேரியக்கம், 128 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது. இதை யாராலும் வீழ்த்தவோ, அசைசக்கவோ முடியாது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சசகஜம். தேய் பிறை, வளர் பிறை போன்று காங்கிரஸ் கட்சி வெற்றி, தோல்விகளை மாறி மாறி சசந்தித்து வருகிறது. அமாவாசைச போன்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு வராது.வரும் 2014ல் நடைபெறவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சசாட்டியுள்ளார். இதில் உண்மையில்லை. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு, 86 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மக்களுக்கு என்னன்ன திட்டங்கள் தேவையோ அந்த திட்டங்களை செசயல்படுத்துவதற்காக, தேவையான நிதியை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.திருமயம் தொகுதியில் மட்டும், எட்டு ஆண்டுகளில், 14 வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசசாயிகளுக்கு விவசசாயக்கடன், தொழிலாளர்களுக்கு தொழில் கடன் என, பல கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் விதமாக, "பெல்' நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலங்கள், சசமுதாய கூடங்கள், பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் செசயல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் கடந்த சசட்டசசபைத் தேர்தலில் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல தவறியதால் தான் தோல்வியை தழுவினோம். எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் திருமயம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைக்க வேண்டும்.இதற்காக மாதத்துக்கு இரண்டு முறை இதுபோல் செசயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் மக்களோடு மக்களாக இணைந்து மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல வேண்டும்.காங்கிரஸ் கட்சியை அனைத்து சசமுதாய மக்களும் ஆதரிக்கின்றனர். இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சசமுதாய மக்களின் முழு ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.இச்சசமுதாய மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால்தான், இந்த நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்.

ஞாயிறு, 20 மே, 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்

முத்தரையர் செய்திகள்...!!!


வேலைவாய்ப்பு தகவல்கள்


சனி, 19 மே, 2012

முத்தரையர் சங்க ஆலோசனைகூட்டம்

நாமக்கல்:மாவட்ட முத்தரையர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.


சங்க மாவட்ட பொருளாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோபி முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார்.கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பில், நாமக்கல் முத்தரையர்இன மக்கள்

அனவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஒன்பது பட்டப்பெயரில் உள்ள அனைவரும்

முத்தரையர் என பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், மகாமுனி, துரைசாமி, நாகராஜன், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகரப் பகுதியில் உள்ள அந்த சமுதாய ஓட்டுகளை அதிகம் பெற, அ.தி.மு.க., பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதுக்கோட்டை தொகுதிக்கு, வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலை, தி.மு.க.,- ம.தி.மு.க.,- இ.கம்யூ.,- பா.ஜ.,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க., சார்பில் ஜாகிர் உசேன், ஐ.ஜே.கே., சார்பில் சீனிவாசன் ஆகியோர் மட்டும் வேட்பாளர்களாக இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். புதுக்கோட்டை தொகுதியைப் பொறுத்தவரை, கள்ளர் மற்றும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். தொகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தவர் உள்ளனர். இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கை எட்ட... : இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று, இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பான்மை ஓட்டுகளையும், அ.தி.மு.க., வேட்பாளர் பெற வேண்டும்.
குறிப்பாக, நகரப் பகுதியில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற்றால் தான், இலக்கை அடைய முடியும் என்று, அ.தி.மு.க., தரப்பில் நம்புகின்றனர்.

அதிர்ச்சி : தவிர, தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளதால், அந்த மக்களின் ஓட்டுகள், தே.மு.தி.க., பக்கம் சாய வாய்ப்புள்ளது. ஆகையால் தான், முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற, அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறார். சில நாட்களாக, நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் சமுதாய முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதேபோல், நகரில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் சென்று, அம்மக்களின் ஆதரவை திரட்டினார். முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை, அ.தி.மு.க., வேட்பாளர் பெருவாரியாக பெற முயற்சித்து வருவது, தே.மு.தி.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தரையர்களுக்கு முக்கிய பதவிகள் இல்லை : புதுகையில் ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு - நன்றி : தினமலர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் இல்லை என்பதை, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், எம்.ஜி.ஆர்., காலம்தொட்டே, அ.தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

முதல்வருக்கு தெரிவிக்க...: திருச்சியைப் பொறுத்தவரை தற்போது, எம்.எல்.ஏ.,க்களாக பரஞ்ஜோதி, சிவபதி, பூனாட்சி ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களில், சிவபதி அமைச்சராக உள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் மட்டும், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மற்றபடி புதுக்கோட்டை, அ.தி.மு.க.,விலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ முக்கிய பதவிகளில் முத்தரையர்கள் இல்லை. இதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை நகர் முழுவதும், "புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சங்கம்' என்ற பெயரில், நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் இல்லை : அந்த நோட்டீசில், "எம்.ஜி.ஆர்., காலம் முதலே முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வருகின்றனர். அப்படி ஓட்டளிக்கும் முத்தரையர்களுக்கு, கட்சி பதவிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்பதை முதல்வரும், அவரின் தளபதிகளும் (அமைச்சர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகம் : மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில், மூன்றில் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, இடைத்தேர்தல் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை, அ.தி.மு.க., தலைமைக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையிலே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆகையால், வரும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பங்கேற்கவில்லை : தவிர, கு.ப.கிருஷ்ணனுக்கு முக்கிய பதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டீசை ஒட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை நகர செயலராக இருக்கும் பாஸ்கர், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சியில் சீனியராக இருந்தும், பெரிதாக எந்த பதவியும் கிடைக்கவில்லை என்பதால், அவருடைய ஆதரவாளர்கள் யாராவது போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்களா? என்ற கோணத்திலும், உளவுத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில், பாஸ்கர் பெரிதாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!!

எனது அன்பிற்கினிய தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள்... !!

நாளது நாள் (23 MAY 2012), பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 ம் ஆண்டு பிறந்த தின விழா...... தமிழமெங்கும் உள்ள நமது இன சகோதர்களால் எழுச்சியோடு கொண்டாட உள்ள இந்த நேரத்தில்... நாம் கடந்த பல வருடங்களாக எதிர் நோக்கி இருந்த சாதிவாரியான கணக்கெடுப்பு இந்திய மத்திய அரசால் தொடக்கி நடந்து வருகின்றது, அதில் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இந்த கணக்கெடுப்பின் மூலம் சரியான தகவலினை பெற முடியாது என்பது கசப்பான உண்மை, காரணம் இதில் ஒருவருடைய சாதி எது என்று கேட்கப்படும் போது, அவர் எதனை கூறினாலும் எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் இதில் நிறைய தவறுகள் நடக்கவும் ( உதாரணமாக சாதிகளுக்கான இட ஓதிக்கீடில் பயன் பெற்ற ஒருவர் நான் சாதியற்றவன் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் ), நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் இதனால் முழுமையான பயனைப் பெற முடியாது என்பதனால் இந்த கணக்கெடுப்பை இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் நிராகரிக்கிறது. மேலும் தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் உள்ள சாதிகளை உள்ளது உள்ளப் படியே சரியான முறையில் கணக்கெடுப்பை நடத்தி சரியான இட ஒதிக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

மேலும் தற்சமயம் புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில், அந்த தொகுதில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டி வருமே என்ற காரணத்தால் தேர்தலைப் புறக்கணிக்கும் தி.மு.க, இனி தமிழகத்தில் நடைப் பெரும் எல்லா இடைத் தேர்தல்களையும் புறக்கணிக்குமா ? புதுக்கோட்டை தொகுதில் மட்டும் அல்லாமல் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள முத்தரையர்கள் பெரும்பாலனவர்கள் அ.தி.மு.க வில் உள்ள போது வேறு இனத்தவருக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயமா ? முத்தரையர்களை என்றுமே மதிக்காத / அவர்களின் வெற்றி வாய்ப்புள்ள எல்லா தொகுதியிலும் மாற்று இனத்தவரை வேட்ப்பாளராக்கும் தே.மு.தி.க விற்கும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் முத்தரையர் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக களம் காணும் மரியாதைக்கு உரிய திரு. சிவப்பிரகாசம் அவர்களுக்கு நிபந்தனைகள் இல்லாத ஆதரவினை என் முத்தரையர் இனம் வழங்க வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் பணிவோடு வேண்டுகிறது.

இந்த இனிய நாளில் எனது இனத்தின் அத்தனை உறவுகளுக்கும் எங்களது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த பொன்னான நேரத்தில் எமது இளைய தலைமுறை " குடி பழக்கத்தை துறப்பதாக" ஒரு சபதம் எடுத்து நாளைய தமிழகத்தை நாமே வழிநடத்த உங்களை அன்புடன் வேண்டுகிறோம் என்றும் உங்கள்....!!!



அன்புடன்....
K.சஞ்சய்காந்தி B.Com
ஒருங்கிணைப்பாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

M.காந்தி B.E.,
செயலாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9003834321

R.தேவா (எ) சுரேஷ் M.Sc.,
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9677547381

செவ்வாய், 15 மே, 2012




THANKS TO: MANODAS



THANKS TO: SASI

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற வீடுவீடாக திண்ணை பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் திருமேனி பேசுகையில், ‘புதுக்கோ ட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 64,000 முத்தரையர் இன வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால், அனைத்து கட்சிகளுமே அவர்கள் சாராத எண்ணிக்கையில் குறைவாக உள்ள இனத் திலிருந்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்து களம் இறக்குகிறார்கள். இம்முறை முத்தரையர் இன பிரதிநிதியாக மலையூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறோம்.

அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக வீடுவீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து வேட்பாளர் சிவப்பிரகாசம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.