Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 27 மார்ச், 2012

முத்தரையர் சங்க கூட்ட

ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில் முத்தரையர் சங்க கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
கருப்பையா, முனியசாமி,முனீஸ்வரன், ஆறுமுகம்,இளைஞர் பேரவை தலைவர் முருகேசன் உட்பட பலர் பேசினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தவும், இந்தியா-இலங்கை இருநாடுகளுக்கிடையே கடல் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாலுகா தலைவராக சுந்தர்ராஜன், துணைத்தலைவர் குமரேசன், செயலாளர் களஞ்சியராஜ், துணைசெயலாளர் குருசாமி, பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


THANKS: DINAMALAR

வெள்ளி, 16 மார்ச், 2012

இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

காஞ்சிபுரம், மார்ச் 12: நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
÷கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது.
÷அதே போல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கே ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடக முத்தரையர் அறிவித்துள்ளார்.

THANKS: DINAMANI

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்: ஜான்பாண்டியன் பேட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல பிரிவுகளாக உள்ள முத்தரையர் சங்கங்களை ஒன்று கூட்டி ஒரே அணியில் திரட்டி மக்களுக்கு, சமுதாயத்திற்கு தொண்டு செய்ய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் பாடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்க வந்துள்ளேன்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அங்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆளும் கட்சியால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதனால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இடைத்தேர்தலில் தனித்து நிற்பது சாத்தியம் இல்லை. கூட்டணி சேர்ந்தால் தான் வெற்றி பெறும். தி.மு.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் தான் வாங்கும். வெற்றி பெற முடியாது.

தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு மத்திய அரசு தான் காரணம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு மத்திய அரசு உதவாமல் பாரபட்சமாக நடந்து வருகிறது. மத்திய அரசு கொடுத்தால் தான் மின் தடை நீங்கும். எனவே தமிழகத்தில் மின் தடையை நீக்க மத்திய அரசை கேட்பதோடு மட்டும் அல்லாமல் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியாவது தமிழக அரசு மின்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் என்கவுன்ட்டர்கள், பரமக்குடி சம்பவம் போன்றவை வருந்தத்தக்கது. பரமக்குடி சம்பவத்திற்கு அதிகாரிகள் திட்டமிட்டு செய்த சதி தான் காரணம். என்கவுன்ட்டர் நடத்தக்கூடாது. குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.காவல்துறை துப்பாக்கிசூடு நடத்துவதை கண்டிக்கிறோம்.

இலங்கை தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசை கலைத்து விட்டு ராஜபக்சேவை சிறையில் வைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

THANKS: MALAIMALAR

மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்க முடியாது ஜான்பாண்டியன் பேச்சு

தஞ்சை: மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை, சரித்திரம் படைக்க முடியாது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் அரசியலில் முத்தரையர்களின் நிலை குறித்த பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள முத்தரையர் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும். ஏழை, எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும்.
பல வழக்குகள் போட்டு என்னை சிறையில் அடைத்தாலும், எனது சிந்தனைகளை யாரும் சிறை வைக்க முடியாது. இன்று அமைச்சர் பதவி வகிக்கும் நமது சமூகத்தினர் நமக்காக எந்த பணிகளையும் செய்வதில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டு என்னும் ஆயுதத்தை நாம் கையில் எடுத்தால் எவராலும் நம்மை அசைக்க முடியாது.
ஆட்சிகள் மாறலாம். காட்சிகளும் மாறலாம். ஆனால், சமுதாயம் மாறாது. முத்தரையரும், தேவேந்திர குலத்தினரும் இணை பிரியாத நண்பர்கள். நாம் ஒன்றாக இருந்து வரலாறு படைப்போம்.
உழைக்கும் நமது சமுதாயத்தை இழிவுபடுத்துவோரை தூக்கி எறிவோம். மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


THANKS: DINAKARAN

ஞாயிறு, 11 மார்ச், 2012

தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்

தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அப்ரண்டீஸ்
கல்வித் தகுதி: டீசல் மெக்கானிக்/ எலெக்ட்ரீஷியன்/ forger and heat treater/ Sheet Metal Worker/ மோட்டார் மெக்கானிக்/ டிராஃப்ட்ஸ்மேன்(மெக்கானிக்கல்) பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ/ பி.இ./ பி.டெக். படித்திருக்க வேண்டும்.
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2012
மேலும் விவரங்களுக்கு: www.tuticorinport.gov.in/

THANKS: PUTHIYATHALAIMURAI

I.E.S இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ் தேர்வு எழுத என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போல மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முக்கியத் தேர்வு ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு.இந்தத் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இந்திய ரயில்வே, மத்திய என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் வாட்டர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்திய ராணுவம், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ்... இப்படி பல்வேறு துறைகளில் குரூப் ஏ மற்றும் பி சேவைப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பொறியியல் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிசிக்ஸ், ரேடியோ என்ஜினீயரிங் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களின் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோர், பார்வைத்திறன் செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. அரசுத் துறையில் பணிபுரிந்துகொண்டே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

ஐ.இ.எஸ். தேர்வைப் பொருத்தவரை இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். ஒன்று, எழுத்துத் தேர்வு, மற்றொன்று பர்சனாலிட்டி டெஸ்ட். எழுத்துத் தேர்வுக்கு மட்டும் மொத்தம் 1,000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் என்று துறைவாரியாக கேள்வித்தாள்கள் இருக்கும். எழுத்துத் தேர்வை பொருத்தவரை இரண்டு வகையான தேர்வு முறைகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். முதல் வகை தேர்வுமுறையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். இதில் மூன்று கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா இரண்டு மணி நேரம். இதில் ஒன்று, ஜெனரல் எபிலிட்டி கேள்வித்தாளாகவும் மற்ற இரண்டு கேள்வித்தாள்களில் துறை சார்ந்த கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

இரண்டாம் வகையான தேர்வு முறையில் விடைகளை மாணவர்கள் கட்டுரை வடிவில் (கன்வென்ஷனல் டைப்) எழுத வேண்டியதிருக்கும். இந்தத் தேர்வில் இரண்டு கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா மூன்று மணிநேரம். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள்.இந்த இரண்டு கேள்வித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், மாணவர்கள் தேர்வு செய்யும் துறைவாரியான கேள்விகளாகத்தான் இருக்கும் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. ஐ.இ.எஸ். தேர்வு தேசிய அளவிலான தேர்வு என்பதால், விடைகளை கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பெர்சனாலிட்டி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பெர்சனாலிட்டி தேர்வு என்பதும் நேர்முகத்தேர்வு போலத்தான். இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. துறை வாரியான அறிவு, பொது அறிவு, உடற்தகுதி, சமூகப்பார்வை, தலைமைதாங்கும் பண்பு, மூளை மற்றும் உடற்திறன், எதையும் புதுமையாக யோசித்தல் இப்படி பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு என்ஜினீயரிங் பணிகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்பும்போது, பிறப்புச் சான்றிதழ், கல்வித்தகுதிச் சான்றிதழ், வயது வரம்பில் சலுகை கோரியிருப்பின் அதற்கான சான்றிதழ், தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டியது அவசியம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்கள் தலைமை தபால் நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ரூ. 50 தேர்வுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாணவர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் கார்டு, விசா மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். தபால் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரூ.100க்கான போஸ்டல் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26.
விவரங்களுக்கு: www.upsc.gov.in

THANKS: PUTHIYATHALAIMURAI

நாம் எப்போது போராட போகிறோம் ...!!!

சண்டிகர்: அரியானாவில் ஜாட் சமூகத்தினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவரச சட்டம் ஒன்றினை பிறப்பிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அரியானாவில் ஜாட் சமூகத்தினர் ,இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் , கல்வி,வே‌லைவாய்ப்புகளி்ல் இட ஒதுக்கீடு கோரி கடந்த மூன்று வாரங்களாக போராடி வருகின்றனர்.ரயில்மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில் ஜாட் சமூக பிரதிநிதிக‌ளுடன் ஆலோசனை நடத்திய அரியானா மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து அவரச சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


THANKS: DINAMALAR

நாலடியார் தெளிவுரை...

இந்நூல் செய்யப்பட்ட காலம் இன்னதெனத் தெளிவாய்ப் புலப்பட்டிலது. இது சங்கமருவிய நூலெனக் கூறுவது கொண்டு, இதன் காலத்தைக் கடைச்சங்க காலமாகிய இரண்டாம் நூற்றாண்டெனப் பொதுவாய்க் கூறுவதுண்டு. கடைச்சாங்க நூல்களெனத் தெளிவுறத் துணியப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளிற் பயின்ற வாராத சத்தம், சோதிடம் (52), அபராணம் (207), உபகாரம் அபகாரம் (69), தீர்த்தம் (75), கோத்திரம் (242) முதலிய சொற்கள் இந்நூலில் வந்திருத்தலாலும், வரலாற்று ஆராய்ச்சிக்கு உரியதெனக் கருதப்படும் முத்தரையர் (200,296) என்னும் சொல் ஈரிடத்தில் அமைந்திருத்தலாலும். இஃது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாயிருக்கலாமென ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.

நாலடியார் தெளிவுரை...
http://www.noolulagam.com/product/?pid=5402

சனி, 10 மார்ச், 2012

இந்தியா எதிநோக்கியுள்ள ஆபத்து....!!

இந்தியா எதிநோக்கியுள்ள ஆபத்து....!! இலங்கை ராணுவ வலைத்தளத்தில் இருந்து

இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின் சீனா இலங்கையில் அதிக முதலீடுளை செய்ய முன்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 821 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2011 ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் 1.28 பில்லியன் டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.

இலங்கையானது வெளிநாட்டு முதலீடுளை எதிர்பார்த்து பல திட்டங்ளை நடைமறைப்படுத்தி வருகின்றது இதில் ஓர் அங்கமாக உல்லாசப் பயணத் துறையை மேம்படுத்தும் திட்டத்தை துரித கதியில் மேன்படுத்தி வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக சீனாவின் உதவியுடன் கொழும்பின் மத்திய பகுதியில் 3 ஹெக்டர் நிலப்பரப்பில், ஏறத்தாள 104 மில்லியன் டொலர் முதலீட்டில், 350 மீற்றர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைக்க இலங்கை அரசு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இக்கோபுரம் தென் கிழக்கு ஆசியாவின் மிக உயரமானதாகும் இது தாமரை வடிவில் அமைக்கபடவுள்ளது.இத்தாமரைக் கோபுரத்தை இந்தியாவிலிருந்தும்பங்களாதேஷிலிருந்தும் பார்க முடியும்.


உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய இத்தாமரைக் கோபுரம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவை, வானொலி போன்றவற்றோடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் பயன் படுத்தப்படவுள்ளது.

துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்தியைப் பொறுத்தவரை, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய ம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக சாலை மற்றும் வட பகுதி வீதிப் புனரமைப்பிற்கு என அடுக்கிக் கொன்டு செல்லக்கூடிய வகையில் சீனா பல உதவிளை வழங்கிவருகின்றது.





http://www.vidivu.lk/tm.asp?fname=20120108_02

முத்தரையர் குழும நண்பர்கள் சந்திப்பு - சென்னையில்

நாளை ஞாயற்று கிழைமை இணைய முத்தரையர் குழும நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெறுகிறது, இடம் மற்றும் முகவரி ,'

கேட்டலிஸ்ட் ஐ ஏ எஸ் .அகாடமி ,W 102 ,தரைதளம் இரண்டாம் நிழற் சாலை ,அண்ணாநகர் ரவுண்டு டாணா,அண்ணா நகர் ,சென்னை
தொடர்புக்கு -9486939275 , 9620841312