முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 614 701
தொலைப்பேசி: 0091-4373-255228
மின் அஞ்சல்: sanjai28582@gmail.com
வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/
ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582
Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.
Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,
we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics
In the State of Tamil Nadu
Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer
we are known:
We have No Unity
we are Not Educationist
we are not Known our History
Yes if you have any solution share with us...............
We have Solution Accept it.................................
WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....
MUTHARAIYAR
YOUNG LION ORGANIZATION
தலைமை ஒருங்கிணைப்பாளர்
திங்கள், 29 அக்டோபர், 2012
சிங்க லோகோவுடன் வருகிறது முத்தரையர் டிவி!!!
வெள்ளி, 26 அக்டோபர், 2012
நத்தம் தொகுதியில் ஆற்காட்டார் போஸ்டர்!
'நன்றி... நன்றி... தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளில் மக்கள் கஷ்டங்களை அறிந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு உங்களை விமர்சித்ததற்கு, உங்களை உணர்ந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இவண்: பொதுமக்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோர் நத்தம் தொகுதி' என அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கடந்த சனிக்கிழமை ஒட்டப்பட்டது.
...
இதைப்பார்த்து டென்ஷனான அ.தி.மு.க-வினர் அந்தப் போஸ்டரைக் கிழிப்பதும், அடுத்த நாள் மீண்டும் போஸ்டர் ஒட்டப்படுவதுமாக இரண்டு நாட்கள் நடந்த காமெடிக் காட்சிகளின் முடிவில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளர் விஜயன் உள்ளிட்ட ஆறு தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. இந்த விஜயன்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஸ்வநாதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.
- ஜூ.வி.
முத்தரையர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம், தலைவர் ராமையா, துணை தலைவர் பழனியப்பன், செயலாளர் தனபால், துணை செயலாளர் கோவில்பட்டி தவசி, பொருளாளர் செல்லத்துரை, புதுக்கோட்டை நகர செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நகர, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல், தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிட முத்தரையர் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசு இலவசம் என்ற பெயரில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தி அதற்கு செலவு செய்யப்பட வேண்டிய நிதியை மாவட்ட வாரியாக தொழிற்சாலைகள் அமைத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வியாழன், 25 அக்டோபர், 2012
மாற்றம் வேண்டி மன்னர் குலம்!
சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.
புதன், 24 அக்டோபர், 2012
சௌதி அரேபியா நாட்டில் நமது உறவுகளால் சிறப்பாக கொண்டாடப் பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா - பாகம் II
செவ்வாய், 16 அக்டோபர், 2012
முத்தரையர் பிறந்த நாள் கலவர வழக்கு 29க்குஒத்திவைப்பு
NEWS FROM : DINAKARAN
திங்கள், 15 அக்டோபர், 2012
நேர்காணலில் பங்கேற்காதவருக்கு இளைஞரணி பதவி : "மாஜி' மந்திரியால் தி.மு.க.,வில் "திகுதிகு'
தி.மு.க., இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளருக்கான நேர்காணல், இரண்டு மாதங்களாக, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும், சமீபத்தில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவி அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம், எல்லா மாவட்டங்களிலும், தி.மு.க.,வில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஆனந்த், சென்னையில் நடந்த நேர்காணலில் பங்கேற்கவே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். நேருவின் தீவிர ஆதரவாளர் என்பதால், நேர்காணலில் பங்கேற்காத நிலையிலும் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது, திருச்சி மாவட்ட, தி.மு.க., இளைஞரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆனந்த்துக்கு, சீட் கொடுத்த போதே, கட்சியில் புகைச்சல் கிளம்பியது. தேர்தலுக்கு பின் நடந்த போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் ஆனந்த் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில், முத்தரையர் சமுதாயத்தில் பலமான நபரை, உடன் வைத்துக் கொள்ள நேரு திட்டமிட்டு, நேர்காணலுக்கு வராத ஆனந்த்துக்கு, மாவட்ட அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது தான், மாவட்டத்தில், எதிர்கோஷ்டியாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி ஆகியோருக்கு ஈடுகொடுக்க முடியும் என்று நினைக்கிறார். இவ்வாறு தி.மு.க.,வினர் கூறினர்.
இதுகுறித்து ஆனந்த் தரப்பில் விசாரித்த போது, நேர்காணலுக்கு ஏன் செல்லவில்லை என்று, தி.மு.க., தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டதாக, கூறப்பட்டது.
NEWS FROM : DINAMALAR
வெள்ளி, 12 அக்டோபர், 2012
புதன், 10 அக்டோபர், 2012
ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்
செவ்வாய், 9 அக்டோபர், 2012
முத்தரையர் உட்பிரிவு
1 | முத்தரையர் | 16 | முத்திரிய நாயுடு |
2 | முத்திரி | 17 | முத்திரிய கவுண்டர் |
3 | முத்திரியர் | 18 | முத்திரிய ஊராளிக் கவுண்டர் |
4 | முத்துராயன் | 19 | முத்திரிய வன்னியகுல சத்திரியர் |
5 | முத்ராசா | 20 | சூரிய குல முத்தரையர் |
6 | முடிராஜ் | 21 | வலையர் |
7 | முதிராஜ் | 22 | செட்டிநாடு வலையர் |
8 | முத்துராசா | 23 | கண்ணப்பர் குல வலையர் |
9 | முத்தரசர் | 24 | காவற்க்காரர் |
10 | முத்துராச்சா | 25 | வேடுவர் |
11 | அம்பலம் | 26 | வேட்டைக்காரர் |
12 | அம்பலக்காரர் | 27 | பாளையக்காரர் |
13 | சேர்வை | 28 | வளையக்காரர் |
14 | சேர்வைக்காரர் | 29 | பூசாரியார் |
15 | முத்திரிய நாயகர் |
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
சனி, 6 அக்டோபர், 2012
முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
தண்ணிர்....! தண்ணிர்....!! - நமது பார்வையில்.....
வெள்ளி, 5 அக்டோபர், 2012
பிளாஸ்டிக் பற்றிய ஒரு முக்கிய தகவல்
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.
எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.
எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.
எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.
1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.
5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.
எண்: 7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.
வியாழன், 4 அக்டோபர், 2012
இலங்கை சிறையில் உயிரிழந்த மீனவரின் உடல் திருச்சி வந்தது
ராமநாதபுரம் மாவட்டம் முத்தரையர் நகரைச் சேர்ந்த மீனவர் தங்கராஜ் (64) என்பவரும், முனுசாமி என்பவரும், 2004ம் ஆண்டு இலங்கை கடல் எல்லையைத் தாண்டிய போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படை, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து.
இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி தங்கராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் இன்று ஸ்ரீலங்கன் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
அங்கு, தங்கராஜின் மகன் வெள்ளையன் உடலைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார்.
News From : DINAMANI
புதன், 3 அக்டோபர், 2012
சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்
திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என வழங்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. ஆலயம் திறந்த வெளியில் அமைந்துள்ளது. மதில் சுவரோ, சுற்றிவர பிராகாரமோ எதுவும் கிடையாது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன், திருக்கடையுடைய மகாதே வர்; இறைவி, சித்தாம்பிகா. இறைவியின் ஆலயம் தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. இறைவிக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சங்கினையும் மேல் இடது கரத்தில் கதையையும் தாங்கி அருள்புரிகிறார். கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கின்றன. இறைவனின் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயம் மிகவும் சிதைந்துள்ளதால் இறைவனின் திருமேனியை இறைவியின் ஆலயத்திலேயே வைத்துள்ளனர்.
சிவலிங்கத் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
சடைபோல சிக்கல் மிகுந்த பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதில் இந்த இறைவன் பேரருள் புரிகிறார். தேவக் கோட்டத்தில் வட திசையில் து ர்க்கையும் வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரரும் உள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. 21 கல்வெட்டுகளை தொல்பொருள்துறை கண்டுபி டித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். தொள்ளாற்றெறிந்த நந்தி வர்மன் மனைவி மாதேவியும் அவர்கள் மகளின் கணவர் அடிகள் கண்டன் மாறன் பாவை என்பவரும் இந்த ஆலயத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடைபெற பொன்னும் பொருளும் கொடுத்து உதவிய தகவலும் இங்கு காணமுடிகிறது. நவாப் மன்னர்கள் தென்நாட்டை ஆண்டபோது சிதைக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்திற்குச் செல்ல இந்த ஆலயத்திலிருந்து சுரங்கப் பாதை இருந்ததாம். ஆலயம் முழுவதும் கருங்கற்களாலேயே உருவாகியி ருக்கிறது.
சீதை இலங்கையில் சிறைபட்டிருந்தது, ராமாயணப்போர், அழகுப் பெண்களின் அற்புத நடனக் காட்சி, யாளி முதலான காட்சிகள் இறைவன் ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. கலை ஆர்வமிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் தஞ்சை பெரிய கோயில், திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம் என இரண்டையும் பார்த்துவிட்டு இந்த ஆலயத்தையும் கண்டுகளித்து மெய் சிலிர்க்கின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணை-திருவையாறு வழித்தடத்தில் உள்ள கோவிலடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பேருந்து இல்லை; ஆட்டோ வசதி மட்டுமே உண்டு.
ஆலயத்தொடர்புக்கு: 8903442814 ஜெயவண்ணன்
News From : DINAKARAN
திங்கள், 1 அக்டோபர், 2012
முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07