Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 31 அக்டோபர், 2013

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் கலவர வழக்கில். முத்தரையர் சங்க தலைவர் உட்பட அனைவரும் விடுதலை..!!

திருச்சி கோர்ட் தீர்ப்பு

திருச்சி, : பெரும் பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2011 மே மாதம் 23ம் தேதி திருச்சியில் நடந்தது. பல்வேறு அரசி யல் கட்சியினர் ஒத்தக்கடையில் உள்ள முத்தரையரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முத்தரை யர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணி விப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஊர் வலம் நடந்தது. அப்போது ஊர் வலம் சென்ற பகுதி யில் ஏற்பட்ட கலவரத்தில் சத்தி ரம், காந்தி மார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட் பகுதியில் பொது மக்கள் பலர் காயமுற்றதா கவும், அரசு மற்றும் தனி யார் பஸ்கள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் காந்தி மார்க் கெட் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதன் உள்பட 57 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2வது கூடுதல் சார்பு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடி வுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதி பதி விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தமிழ் நாடு முத்தரையர் முன் னேற்ற சங்க மாநில தலை வர் விஸ்வநாதன் உள்பட 57 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

News Source : DINAKARAN

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் கலவர வழக்கில். முத்தரையர் சங்க தலைவர் உட்பட அனைவரும் விடுதலை..!!


புதன், 30 அக்டோபர், 2013

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!!!


வியாழன், 24 அக்டோபர், 2013

சமூக ஜனநாயக கூட்டணி

லோக்சபா தேர்தலில், பா.ம.க., தலைமையில் உருவாகியுள்ள சமூக ஜனநாயக கூட்டணியின் சார்பில், இந்திய மக்கள் கழகம் கட்சி, 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆரணி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் தொகுதி வேட்பாளர் வேலு ஆகியோர் இந்திய மக்கள் கழகத்தின் தலைவர் தேவநாதனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சமூக ஜனநாயக கூட்டணி உதயமாகியுள்ளது. இந்த கூட்டணியில் இந்திய மக்கள் கழகம் கட்சி மற்றும் முக்குலத்தோர், யாதவர், உடையார், முத்தரையர், கவுண்டர், நாடார் உள்ளிட்ட, சமுதாய ரீதியான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பா.ம.க., சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் சென்னையில் ராமதாஸ் வெளியிட்டார். ஆரணி வேட்பாளர், ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் வேட்பாளர், வேலு ஆகியோர் நேற்று இந்திய மக்கள் கழகத்தின் தலைவர் தேவநாதனை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். ஆரணி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் யாதவர் சமூகத்தினரின் ஓட்டுக்கள் கணிசமாக இருப்பதால், யாதவர் சமுதாயத்தின் தலைவரும், இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதனை, தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி, மூர்த்தியும், வேலுவும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரசாரத்திற்கு வருவதாக தேவநாதன் உறுதி அளித்தார்.

சமூக ஜனநாயக கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கழகம், 12 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், இந்திய மக்கள் கழகத்தின் கட்சி, 42 தொகுதிகளில் போட்டியிட்டு, சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. லோக்சபா தேர்தலில் ஓட்டு வங்கியை பலப்படுத்தும் வகையில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட, 18 லோக்சபா தொகுதிகளில் தேவநாதன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து தேவநாதன் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு மாற்று அணியாக, சமூக ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது, எங்கள் கட்சி சார்பில், 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலும் யாதவர் சமுதாயத்திற்கு ஒரு லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகளாக யாதவர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். யாதவர் சமுதாயத்தை சேர்ந்த, 106 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். சமூக ஜனநாயக கூட்டணியில் சில முக்கிய கட்சிகள் இடம் பெற்று, பலமான கூட்டணியாக உருவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

News Source : DINAMALAR

புதன், 23 அக்டோபர், 2013

குருபூஜைக்கு தடை....!?

குருபூஜைக்கு தடை....!?  

     நேற்றைய தினம் (22/10/2013) நேர்பட பேசு என்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு.மனுஷ்யபுத்திரன் விவாதத்தின் இடையில் ஒரு கருத்தை சொன்னார் "பெரும்பாலான சாதிய கலவரங்களின் போது காவல்துறை சாதிய உணர்வோடு செயல்படுகிறது அதனை தடுக்க குறைந்த பட்சம் அனைத்து சமூகத்திற்க்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்" என்பது அந்த கருத்து, உண்மைதான் இது காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து அரசுதுறைகளிலும், அதிகார மட்டத்திலும் இத்தகைய உணர்வு இருக்கிறது அதனால்தான் நாமும் அனைவருக்கும் இடஒதுக்கீடு (100 % இடஒதுக்கீடு) என்பதனை வலியுறுத்தி வருகிறோம், இதற்காகதான் சாதிரீதியான சரியான கணக்கெடுப்பினை நடத்தி அனைத்து சமூகத்திற்க்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதால் மட்டும்தான் சில சாதிகளின் ஆதிக்கத்தினை குறைக்க முடியும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முடியும்.

       மேலும் பொதுவாக சாதிகளுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் சொல்லிவந்த மனுஷ்யபுத்திரன் நேற்றைய விவாத நிகழ்ச்சியில் அதிசயமாக சாதிதலைவர்களின் குருபூஜை போன்ற விழாக்களை தடை செய்யக்கூடாது என்றும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இந்த விவாத நிகழ்ச்சியில் தொடர்பே இல்லாமல் எங்கள் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" பெயரை வலிந்து திணிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.குணசேகரன் முயன்று, முத்தரையர் என்ற பெயரை சரியாக உச்சரிக்கக்கூட முடியாமல் போனதை கான முடிந்தது. (காரணம் எங்களால் எங்கும் எந்த கலவரமும் நடந்திருக்கவில்லை... பெயர் சொல்லும் அளவிற்க்கு அல்லது ஞாபகத்தில் இருக்கும் அளவிற்க்குக் கூட சிறு அசம்பாவிதமும் இல்லாமல்தான் ஆண்டாண்டுகாலமாக எங்கள் பேரரசரின் பிறந்த நாளினை கொண்டாடுகிறோம்)

       முறைப்படுத்துங்கள், ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளை விதியுங்கள், அமைதியாக அவரவருக்கு விருப்பமான முறையில் அடுத்தவருக்கு தொல்லை இல்லாமல் குருபூஜைகளை கொண்டாடுங்கள் என்பதை நாமும் வலியுறுத்துகிறோம்.

- சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எங்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும் ? நாங்கள் யாரை கொன்றோம் ? முத்தரையர் பிறந்த நாள் விழாவால் யாருக்கு பாதிப்பு ?

பெண்ணியம்...

பெண்ணியம்...

கடந்த வாரத்தில் விஜய் டீவியின் " நீயா நானா" நிகழ்ச்சியில் தொடங்கி இன்றைய முக நூலின் பரபரப்பான விவாதமாக மாறி இருப்பது "பெண்ணியம்"

எது பெண்ணியம் ? என்பதற்க்கு சரியான, ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம் இல்லாமல் ஒரு கருத்து திணிப்பு முயற்சியாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்ணியம் என்பதற்க்கான புரிதல் இல்லாமல் தாந்தோன்றிதனமான அல்லது தாங்கள் வாழ்விலிருந்து விடை தேடும் முயற்சியை பலரும் கையாண்டார்கள் என்பது கண்கூடு

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து, உபசரித்து, தனது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்ற குடும்ப பெண்களை பார்த்து "பரிதாபப்படுகிறேன்" என்று பரிதாபமாக சொல்கிறார் பிரபலமான கவிஞர். இதில் பரிதாபப்பட என்ன இருக்கிறது ? ஒரு பெண் சொல்வதனால் வந்த பரிதாபமாக இது இருந்தால், இதே கருத்தை வெளியில் சொல்லாமல் விட்டுக்கொடுத்து, உபசரித்து தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளுவது ஆணின் வழக்கமாக இருக்கிறது ? பொதுவெளியில் சொல்லுதல்/ மறைத்தல் என்பதால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்  சமூகத்தில் பரிதாபப்பட வேண்டிய தேவை ஏன் எழுகிறதுதன்னுடைய இயலாமையை அவ்வாறு அவர் வெளிப்படுத்தினார் என்றே நான் கருதுகிறேன், அதற்க்கு பெண்ணியம் என்ற பெயர் சூட்டுவது எப்படி சரியாகும் ?

பெண்ணியம் பேசுபவர்களுக்குள்ளாகவே புரிதல் இல்லை என்பது எனது கருத்து,  பெரும்பாலான பெண்ணியவாதிகளின் எடுத்துக்காட்டுகளில் அதிகம் ஒலித்தது பெரியார் எனும் ராமசாமி நாயக்கரின் கருத்துக்கள், ஒருவர் கூட அவரிடம் பிழை காண விரும்பவில்லை, அவரே சொல்கிறார் என்பதாகதான் கருத்தை எடுத்துக்கொள்கிறார்கள், 13 வயதில் தனது குடும்பத்தில் விருப்பத்திற்க்காக திருமணம் செய்தவர், 90 வயதில் தன்னை பராமரிப்பதற்க்காக இன்னும்  ஒரு பெண்ணை திருமணம் செய்தவரின் வாழ்வியல் முரண்பாடு இங்கு யாராலும் விவாதிக்கப்படக் கூட இல்லை..!!

பெண்ணடிமைதனத்தின் அடையாளமாக இருக்கும் கற்பபையை எடுத்துவிட வேண்டும் என்ற ராமசாமி நாயக்கர், 90 வயதில் தனது தேவைக்காக, தன்னை பராமரிப்பதற்க்காக ஒரு திருமணம் செய்தது சரியா ? சரி அதுகூட அவரின் சொந்த வாழ்வாக இருந்துவிட்டு போகட்டும் ஏன் அவர் தாலி கட்டிக்கொள்ளவில்லை ? சரி அதுகூட போகட்டும் ஏன் பெரியார் மணியம்மையை திருமணம் செய்தார் என்று சொல்லவேண்டும் ? "மணியம்மை தாலிக்கட்டி பெரியாரை மணம்புரிந்தார்" என்று எங்காவது சொல்லக் கேட்டதுண்டா ? இதுபோன்ற கேள்விகள் யாருக்கும் எழுவதே இல்லை...

பெண்ணியம் பேசுபவர்களில் பலரும் இயல்பான வாழ்க்கையை வாழும் ஆசையோடு, எதோ ஒரு கட்டத்தில் அது நிராகரிப்பட்டோ அல்லது உதாசினப்படுத்தப்பட்டோ விடும்போது அதிலிருந்து விடுபட தங்களை மறைத்துக்கொண்டு வாழ "பெண்ணியம்" பேசுகிறார்கள்,

இன்னும் ஒரு பத்திரிக்கையாளர் தன்னுடைய எல்லா கருத்துகளிலும் சாதியை தொடாமல் கருத்தே சொல்வது இல்லை, சாதியால் அவர் எங்கோ பாதிப்பினை அடைந்து இருக்கலாம் அதற்க்காக அது தொடர்பற்ற எல்லா விசயங்களிலும் அதனையும் ஒரு விசயமாக திணிப்பது அப்பட்டமான சுயநலம், பெண்களுக்கான உரிமை உலகம் முழுவதும் மறுக்கப்படுகிறது என்பது உண்மையானால்.. இதில் மதம், இனம், மொழி, சாதி என்ற பிரிவு எங்கிருந்து வருகிறது ? பிறகு ஏன் ஏனைய காரணிகளை விட்டுவிட்டு "சாதியை" மட்டும் சாட வேண்டும் ?

ஒரு பெண் தன்னுடைய தேவை எது என்பதை அவள்தான் தீர்மாணிக்கிறாள், அந்த தேவை நிறைவேற்றப்பட சிலரின் ஒத்துழைப்பும், அனுசரிப்பும் அவசியமாக இருக்கலாம் (இல்லாமலும் இருக்கலாம்), ஆனால் தேவை என்பது அவளின் முடிவு, இன்னும் பெண் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்து மட்டுமே சமூகத்தை காண முற்படுகிறாள், அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை... பெண்ணால் செய்ய முடியாத விசயம் / வேலை என்று எதுவும் இல்லை... ஆனால் தான் எதை செய்வது தனக்கு தொந்தரவு இருக்காதோ, சராசரியான வாழ்வில் சிக்கல் ஏற்படாதோ அந்த வேலையை, விசயத்தை அவள் தேர்ந்தெடுப்பது அவளின் விருப்பம் சார்ந்ததுதானே தவிர சமூகத்தின் தவறு அல்ல...

சமூகம் என்பதை இவர்கள் (பெண்ணியவாதிகள்) வேறு எதோவாக காட்ட முயல்கிறார்கள் சமூகம் என்பது ஆணும், பெண்ணும் இணைந்ததுதானே.. ? பிறகு ஏன் குழப்பம்.. ?

ஒரு பெண்ணால் முடியாத விசயமே இல்லை எனும்போது, சமூகம் என்பதில் தாங்களும் உண்டு எனும்போது யாருடைய அனுமதிக்காக இவர்கள் போராட நினைக்கிறார்கள்ஒரு பெண்ணால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் இது நிதர்சனம், இதில் புரட்சி பேசுவதெல்லாம் வேசம் மட்டும்தான், மேலும் ஒரு பெண் நேரிடையாக ஒரு விசயத்தில் ஈடுபடுவதைவிட, யாரையோ முன்னிலைப் படுத்தி அதன் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக பங்கெடுப்பதுதான் அவளுடைய நலனுக்கு உகந்தது என்றால் அப்படியே இருக்கட்டுமே....

இதில் நான் பெண்ணியம் பேசுபவர்களை குறைத்து மதிப்பிட்டதாக கருத வேண்டாம், இந்த கோணத்திலும் உங்கள் பார்வை இருக்கட்டும் என்பதுதான் எனது விருப்பம்

கல்வி, பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் பெண்களுக்கு அவசியம் என்பதில் நான் என்றும் மாறுபடவில்லை...!! ஆனால் அது குடும்ப, சமூக அமைப்பை சீர்குலைத்து வேண்டாம் என்பது எனது கருத்து..!!!

- சஞ்சய் காந்தி அம்பலகாரர்