Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 31 டிசம்பர், 2013

அய்யாவிற்கு இறுதி அஞ்சலி....!!


 
என் மனதுக்குள் வைத்து பூசித்து வந்த எனதருமை அய்யா திரு. நம்மாழ்வாரை எங்கே போய்விடப்போகிறார் என்று கைகெட்டும் தூரத்தில் இருந்தும் காணாமலே இருந்த எனக்கு இன்று வெறுமை மட்டுமே மிச்சமாக இருக்கிறது, பார்க்க முடியாத தூரம் போய்விட்டாலும் எம் நினைவோடு வாழ்கிறார், எம் எண்ணங்களோடு வாழ்கின்றார். தன் கடைசி மூச்சைக்கூட இந்த கவலையற்ற தமிழ் சமூகத்திற்க்கும், மண்ணுக்கும் அளித்துவிட்டு நிம்மதியாய் போய்விட்டார், தன் இரத்தத்தை உரிஞ்சினாலே ஏன் என்று கேட்காத தமிழ்சமூகத்திடம், உன் நிலத்தில் "மீத்தேனை" உரிஞ்சவிடாதே என்று வீடு வீடாய், வீதி வீதியாய் போய் உடம்பை கெடுத்துக் கொண்டு தமிழன் உடம்பும், மண்ணும் கெட்டுவிடக்கூடாது என்ற ஆதங்கம் கொள்கிறார் எதுவும் விலையாத பாறை நிறைந்த ஒரு பாலையை "கானகமாக்கி" காட்டினார், உயிர் உரம் போட்டாரே தவிர உயிர் பறிக்கும் இரசாயனம் போடவில்லை...போடவிடவும் இல்லை, கடைசியில் தன் உயிரையும் உரமாக்கிவிட்டு போய்விட்டார்.

 
அய்யா நீண்டு செல்லும் உம் வழியில் எவ்வளவு தூரம் என்று தெரியாது அது சில அடிகளாக இருந்தாலும் நடந்தே மறிவேன் என்று சொல்லி உன்னை இறுதியாய் அனுப்பி வைக்கிறேன்.

 
துக்கத்துடன்..

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அறச்சீற்றம்


எங்கோ வடக்கே ஒரு பாலியல் வன்முறை நடந்துவிட்டால் பொங்கி எழுந்துவரும் புண்ணாக்கு முற்போக்குவாதிகள் கடந்த சில நாட்களாய் காணாமல் போனதன் மர்மம் என்னவோ ? காரைக்கால் மட்டும் இவர்கள் கண்ணில் இருந்து தப்பியதேனோ ? எப்பவுமே பொங்கி பெருக்கெடுக்கும் சமூக அக்கறைக் கொண்ட சவுக்கு, வினவு, கீற்று இணையதளமெல்லாம் முடங்கி கிடக்கும் மர்மம் என்னவோ ?  பெரும்பாலான முற்போக்குவாதிகளும், பத்திரிக்கைகாரர்களும் இப்படி ஒரு வன்முறையை செய்தவர்களை கண்டிப்பதற்க்கும் மேலாக அவர்களுக்கு நோகாமல் இருக்கும்படியான ஒரு விளக்கத்தை தந்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அதாவது "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" நேரடியாக சொல்லவேண்டுமானால் இதுதான் "பச்சை அயோக்கியதனம்"

இந்த பிரச்சனையை அறிந்தபோது வராத சமூக அக்கறை, இதில் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்ட ஒரு சாதியையும், மதத்தையும் குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்க்காக ஒரு தரப்பு பிரச்சனை வெளிக்கொண்டு வரும்போது மட்டும் (இதில் இவர்களுடைய அசிங்க அரசியல் இருந்தாலும் இவர்களால்தான் இது வெளியில் வந்தது என்பதையும் மறுப்பதற்கு இல்லை..), அந்த பெண்ணின் மீதான அக்கறையினாலோ, சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையாலோ அல்லாமல் எங்கே தங்களுக்கு வேண்டப்பட்ட சாதியும், மதமும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த அயோக்கிய முற்போக்குவாதிகளின் "சமூக அக்கறை" மிகுந்த குரல்...

இவர்களாவது ஒரு பக்கம் இருக்கட்டும், திருட்டு திராவிடத்தின் எச்சம், காரைக்கால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அயோக்கியர்களின் அண்ணன் திரு. என்.எம்.எச். நாசிம் உதிர்த்த திராவிட பொன்மொழி நடந்தது ஒரு "விபச்சாரம்" என்று, இவனைப்போன்ற அயோக்கியனை சட்டமன்றம் அனுப்பிய மக்களை குறை சொல்வதா ? கட்சியை குறை சொல்வதா ?  அதற்க்கும் மேலாக “இது மன அழுத்தத்தினால் நடந்திருக்கிறது அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும்” என்பது, யாருக்கு மன அழுத்தம் குடித்துவிட்டு கூடி கும்மாளமிட்ட அயோக்கியர்களுக்கா.. ? வலியில் துடித்துப்போன அந்த சகோதரிக்கா.. ?? அல்லது உன்னைப்போன்ற அயோக்கியனுக்கா..???

இங்கே தமிழத்தின் ஒரு பெண்ணுக்கு அவமானமும், அநீதியும் நடந்திருக்கும்போது ஓடி உதவியிருக்க வேண்டிய தமிழகஅரசு "கோடநாட்டில்" ஓய்வில் இருக்கிறது, எங்கே பாதுகாப்பு ? எப்போது கிடைக்கும் பெண்களுக்கான சுதந்திரம் ? இதில் வெக்கமில்லாமல் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் ஒரு கூட்டமும், கயவர்களைக் காப்பற்ற நினைக்கும் ஒரு கூட்டமும் அசிங்க அரசியல் நடத்துகிறது... அதுவும் தீர்விற்க்காக இல்லை, தங்கள் அறிப்பை தீர்த்துக் கொள்வதற்காக... இது இந்த அசிங்கத்தை செய்த இழிப்பிறவிகளைவிட கேவலமானது. தீர்க்கமான முடிவுகள் வேண்டும், சகோதரிகளே தீரமான விவேகமும் வேண்டும், அசிங்கங்களிடம் மாட்டிகொண்டு எங்கே சுதந்திரம் ? என்று முழங்குவதைவிட, எது சாத்தியமோ ? எது உங்களுக்கு பாதுகாப்போ ? அதை செய்யுங்கள்.

### "அருமை சகோதரிகளே இந்த உலகில் வாழும் எல்லோரையும்விட அதிகமான உரிமையும், சுதந்திரமும் உங்களுக்குஉண்டு, நீங்கள் அயோக்கியர்களின் கையில் சிக்கும்வரை...,"

-     சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

செவ்வாய், 24 டிசம்பர், 2013

மெட்ராஸ் - பெயர் வந்த கதை

மெட்ராஸ் - பெயர் வந்த கதை


நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை. இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.
மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள்.
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.
அந்தக்கால மெட்ராஸ்
பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். காதலிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை இந்நகருக்கு சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1909இல் மெட்ராஸ் வரைபடம்
எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.
இவை தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.
ஆரம்ப நாட்களில் ஜார்ஜ் கோட்டைக்குள்தான் காளிகாம்பாள் கோயில் இருந்தது. பின்னர்தான் தம்பு செட்டித் தெருவிற்கு அம்மன் இடம் மாறினாள். ஏற்கனவேகோட்டைப் பகுதிக்குள் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இந்த காளிகாம்பாளுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை 'செம் அன்னை' என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாகவும் கூறப்படுகிறது.
சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.
இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.
நன்றி - தினத்தந்தி
* மசூலிப்பட்டணத்து ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு சூரத்திற்கு எழுதிய கடிதத்தில் 'மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட் தோமுக்கு அருகில் இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
* அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 'மெட்ராஸ்' என்று ஒரு ஊர் இருக்கிறது. நமது மெட்ராசில் இருந்து அங்கு சென்ற துணிகளில் அச்சடிக்கப்பட்டிருந்த சொல்லில் இருந்துதான், 1903இல் அந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது
 

திங்கள், 23 டிசம்பர், 2013

"ஜல்லிக்கட்டு" கவிஞர் தாமரைக்கு ஒரு விளக்கம்..

"ஜல்லிக்கட்டு" கவிஞர் தாமரைக்கு ஒரு விளக்கம்..

கவிஞர் தாமரை மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு, அது எனது பாரம்பரியத்தை, எங்கள் குல வழக்கத்தை கொண்டாடுவதுவரை அனுமதிக்கலாம், அதை சீர்குலைக்க வழக்கமாக எல்லா முற்போக்குவாதிகளையும் போல முயலும்போது பார்த்துக்கொண்டு ஒதுங்கிப்போவது எங்களால் முடியாதுஆபத்து, ஆபத்து என்றால் எதில் இல்லை ஆபத்து ? மிருகங்கள் மீதான உங்களின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது, ஏறுதலுவுதலில் ஒரு காளையை அடக்க அதிகப்பட்சம் ஒதுக்கப்படும் நேரம் என்பது 5 லிருத்து 10 நிமிடங்கள் அந்த கால அளவுக்குள் உங்களுக்கு பொங்கி வரும் மிருகங்களின் மீதான பாசம் அதே காளையையோ, கறவை நின்றுபோன காமதேனுவையோ கொன்று பசியாறும்போது வருவதில்லை...!!

இப்படி சொல்லி சொல்லியே தமிழனின் பாரம்பரியத்தையும், அவனுடைய பண்பாட்டையும் தொலைத்துவிட்டு அடிமை சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் நீங்கள், இருக்கும் ஒன்றிரண்டு விசயங்களிளாவது மூக்கை நுழைக்காமல் அதன் போக்கில் விடுங்கள், இது உயிருக்கு தீங்காக முடியும் வாய்ப்பு அதிகம் என்று தெரிந்துதான் தமிழன் இந்த விளையாட்டை விளையாட தொடங்கி இருப்பான், ஆபத்தோடு விளையாடுவதுதான் தமிழனுக்கு விளையாட்டு, அடுப்பாங்கரையோடு அல்ல...!!

 ஏன் ? இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் மனிதனால் இந்த ஒரு பயன்பாட்டிற்க்காக மட்டுமே வளர்க்கப்படும் காளையை அடக்கி விளையாடும் "ஜல்லிகட்டு எனும் ஏறுதலுவுதலை" முடக்குவதை வழக்கமாக கொண்ட உங்களைப் போன்ற முற்போக்குவாதிகள் , காடுகளில் சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய யானைகளை கோவிலில் கட்டி வைத்தும், தெருவில் பிச்சை எடுக்க வைத்தும் இன்னும் கேரளா போன்ற இடங்களில் காலங்காலமாக செய்யும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கு எப்போதும் தெரிவதே இல்லையே ஏன் ?

அது என்ன தமிழனின் பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைப்பதில் மட்டும் இவ்வளவு ஆர்வம்... ? தமிழனின் பண்பாட்டு சின்னங்களை அழித்துவிட இங்கு அரசுகள், நீதிமன்றங்கள், விலங்கு நல ஆர்வலர்கள், இன்னும் இன்னும் ஆயிரம் பேர் வந்துகொண்டே இருக்கிறார்கள், அதில் ஆச்சர்யமாக தமிழ்பாடும் ஒரு கவிஞருக்கும் இதன் ஆளுமை புரியவில்லை, அல்லது இந்த பண்பாட்டை சிதைக்க நினைப்பவர்களின் உண்மையான நோக்கம் புரியவில்லை என்பது ஆச்சர்யமே..!

எல்லாவற்றிக்கும் மேலாக தமிழனின் பாரம்பரியமாக தமிழ்குடியின் மூத்தக்குடியாம் முத்தரையர்கள் ஆண்டாண்டுகாலமாக நடத்திவரும் இந்த வீரத்தின் அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிட மாட்டோம் என்பதை இந்த உலகிற்க்கு திமிரோடு அறிவித்துக்கொள்கிறோம். வீரம் இருப்பவன் களத்திற்க்கு வா...! கோழையாய் இருப்பவன் நம் கவிஞர் சொல்வதுபோல ஒதுங்கி சென்றுவிடு...!! முடக்க நினைக்காதே இது வீரத்தின் அடையாளம், எங்கள் குலத்தின் பெருமை..!!

இதற்கு மேலும் நானே உங்களுக்கு விளக்கம் அளிப்பது அவ்வளவு சிற்ப்பாக இருக்காது, குறிப்பாக எங்கள் முத்தரையர் குலத்தினால் நடத்தப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டோடு தொடர்பான ஒரு வழக்கிற்க்கு அரசு தரப்பில் இருந்து பதிலளித்த மரியாதைக்குறிய மாவட்ட ஆட்சியர் திரு. உதயசந்திரன் IAS அவர்களின் மனு விபரமும், குற்றச்சாட்டின் விபரத்தினையும் காண்க.
/// ஆவணம்
ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளம்
. உதயச்சந்திரன், IASசுருக்கப்பட்ட தமிழ் வடிவம்: இர. வெள்ளியங்கிரி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை இவ்வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி. இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடைசெய்யப்பட வேண்டும் என்பதே அவரது வாதம். அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினால் இவ்விளையாட்டின் மீது ஈடுபாடுகொண்ட தெற்கத்தி மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தடையை நீக்கக்கோரி உணர்ச்சி கரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டுகளை விலங்குகள் நல ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். அவற்றிலுள்ள அபாயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தடைசெய்யக் கோரும் குரல்கள் வலுப்பெற்றுவருகின்றன. விளையாட்டு ஆர்வலர்களும் மரபின் மீது அக்கறைகொண்டவர்களும் ஜல்லிக்கட்டு போன்ற நம் மரபின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். சமூகவியல் நோக்கில் இது போன்ற விளையாட்டுகளைக் கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை முன்வைத்து அறிவுச் சூழலிலும் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
இவ்விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, சென்ற ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான மதுரை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித் தலைவரான . உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். இது போன்ற வீரவிளையாட்டுகளின் சமூகரீதியிலான முக்கியத்துவம் குறித்தும் பண்பாட்டு ரீதியில் அதன் இருப்புக்கான காரணங்களை விளக்கியும் அவர் தாக்கல்செய்த பதில் மனு இது. தமிழர்களின் மரபான வீர விளையாட்டுகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மனு இது. பின்னர் இத்தடை நீக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும் கண்காணிப்போடும் சென்ற ஆண்டு இவ்விளையாட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இவ்விளையாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தடைக்கெதிராகத் தென் மாவட்ட மக்கள் கடுமையாகப் போராடினர். தடையை மீறி இவ்விளையாட்டு நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடுமையாகப் போராடித் தடையை நீக்குவதற்கு வழிசெய்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவிட்டாலும் அதன் எதிர்காலம் கேள்விக்குரியது. மரபு சார்ந்த பண்பாட்டு அடையாளங்களுக்கும் விலங்குகளின் நலனில் அக்கறை காட்டி இது போன்ற விளையாட்டுகளுக்கு எதிராகப் போராடிவரும் நவீனத்துவச் சிந்தனைகளுக்குமிடையேயான கலகமாக இப்பிரச்சினை உருவெடுத்துள்ளது. இது குறித்த ஒரு விவாதத்தைத் தூண்டும் நோக்குடன் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரும் தற்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியருமான உதயச்சந்திரன் ஆங்கிலத்தில் சமர்ப்பித்த பதில் மனுவின் சாராம்சம் இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.
-ஆசிரியர்
n n n
இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியும் மதுரை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பிலுள்ளவருமான உதயச் சந்திரன் ஆகிய எனக்கு இவ்வழக்குத் தொடர்பாகக் கிடைத்திருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்க்காணும் பதில் மனுவை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வழக்கின் உண்மையோடும் சூழலோடும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. தமிழ் மரபோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடைய ஜல்லிக்கட்டு என்னும் இவ்வீரவிளையாட்டின் மீது எதிர்தரப்பினர் தாக்கல்செய்த மனுவில் அடங்கியுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுப்பதோடு, இவ்வீர விளையாட்டை நடத்த வேண்டியதின் அவசியம் கருதி மேல்முறையீடு செய்த விண்ணப்பத்தில் உள்ள விஷயங்களின் உண்மைத்தன்மையைத் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடு பிடிக்கும் இந்த வீரவிளையாட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இதில் ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும்கொண்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வீரத்தை விதைத்திடும் அலங்காநல்லூர் கிராமத்தில் தொடக்க காலத்திலிருந்தே இந்த விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இந்த விளையாட்டுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இரண்டாம் பத்தியில் கூறப்பட்டுள்ள உறுதிக் கூற்று உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். ஏறத்தாழத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுத் திருவிழாக்களில் 'அலங்காநல்லூர்' ஜல்லிக்கட்டுக்கெனத் தனித்த பெயரும் புகழும் இடமும் என்றும் உண்டு.
மதுரை மாவட்டக் கருப்பொருள் களஞ்சியத்தில் பதிவாகியிருக்கும் விவரத்தின்படி இவ்வீரவிளையாட்டானது தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்தப்பட்டுவருவது தெரிகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நாளைச் சிறப்பிக்க நடத்தப்பட்டுவரும் இவ்விளையாட்டானது அன்றைய தினம் உழவுக்குத் துணையாக இருந்து மக்களின் உயிர் காக்கும் மாட்டுப் பொங்கலாகவும் மலர்கிறது. கால்நடைகள் சுதந்திரமாக்கப்பட்டு அன்று பூஜித்து வணங்கப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் அவற்றிற்கு நன்றிகூறும் விழாவாகவே அது உழவர்களால் உணரப்படுகிறது. இது மத உணர்வுகளோடும் தொடர்புடையதாகும். தமிழர்களின் காதலையும் வீரத்தையும் பதிவுசெய்துள்ள அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய நூல்களில் இவ்வீரவிளையாட்டானது "ஏறுதழுவுதல்" என்ற பெயரால் குறிக்கப்பட்டு எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி, அவற்றை அரவணைத்துக் காப்பது என்று பொருள்கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாம் நாள் இவ்விளையாட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது.
தங்களின் மேலான கவனத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுதிக் கூற்றின் நான்காம் பத்தியில் கூறப்பட்டுள்ளவை உண்மையே என என்னால் உறுதிபடக் கூற முடியும்.
ஏனென்றால், கடந்த பல வருடங்களாக அலங்காநல்லூரில் இவ்விளையாட்டு அரசு ஆதரவோடும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலோடும் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா மற்றும் முத்தாலம்மன் திருக்கோவில் கிராமக் கமிட்டியும் அதனோடு அரசு முகமைகளும் இதர அரசுத் துறைகளான வருவாய், காவல், கிராம அபிவிருத்தி, சுற்றுலா, சுகாதாரம், கால்நடைத் துறை மற்றும் இதர பல துறைகளின் ஒருங்கிணைப்போடும் இவ்விளையாட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. என்பது அனைவரும் அறிந்ததே. உலகெங்கிருந்தும் தமிழகத்தை நோக்கிப் பிற நாட்டவர்களின் கவனத்தைத் தைத்திங்களில் குவிக்கவைக்கக்கூடிய முக்கியத் திருவிழா ஜல்லிக்கட்டு. மனிதநேயத்தையும் பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டையும் அறிய விரும்பும் பிறநாட்டு மக்களின் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்திவருகிறது இவ்விளையாட்டு.
உண்மையில் காளைகள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கெனவே தனிக்கவனம் கொண்டு வளர்க்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரகுல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இக்கூற்று மிகையாகத் தெரிந்தாலும் தைமாதம் முழுவதும் இந்த இளைஞர்களின் சுவாசமே வீரத்தை விருத்திப்படுத்துவதில் மையம் கொள்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களில் உள்ள "கோவில்மேட்டுப்" பகுதி இவ்விளையாட்டினை நிகழ்த்தும் களப் பரப்பாகவே கண்ணுக்குத் தெரிகிறது. மேலும் இந்த விளையாட்டின் மூலம் காளைகளுக்குத் தேவையற்ற வலியோ தீங்கோ இரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு இதனை நடத்தும்போது விதிமுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பார்வையில், மேலோட்டமாக மனிதன் காளைகளோடு மோதும் முரண்பட்ட விளையாட்டாகத் தோன்றினாலும் உண்மை அதுவன்று. எதிரிக்கு எதிரி போர்க்களத்தில் நண்பனாவதுபோல் இரண்டு வீரர்களும் வீரம் காட்டி விளையாடும் நுட்பம் இதில் மறைந்துள்ளது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளைப் பின்தொடர்ந்து வீரர்கள் குறித்த தூரத்தில் ஓடி விளையாட்டுக் காட்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்கள். இதனை மாடு பிடிக்கும் விழா என்றும் கூறுவதுண்டு. உண்மையில், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது மூன்றாம் நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில்கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் "Bull Bitting" என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. எனவே, இவ்விளையாட்டில் நமக்கு மட்டுமே மரபுரீதியான தொன்மையான நீண்ட அனுபவம் உள்ளது கண்கூடு.
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது. ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதை நான் அறிகிறேன்.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது நமது பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.
ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
நான் மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் இந்த மேல்முறையீட்டைத் தங்களின் மேலான பார்வைக்குத் தரும் சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள பத்தி 7 மற்றும் 8இல் உள்ள விவரங்களின்படி இந்த வீரத் தமிழ் விளையாட்டு முன்னோர்கள் வழிவந்தது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன். காலத்தோடு தொடர்ந்து ஓடி ஆடி விளையாடும் இதற்கு எந்தவிதமான இடையூறுமின்றிக் காப்பது தங்களின் கவனத்திற்குரியது. அவ்வாறில்லாமல் இதற்கு மறுப்பு உருவாகும் சூழல் ஒரு நல்ல முன்னுதாரணத்திற்கான வழியாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இந்த மிகமுக்கியமான முடிவினை அடையும் நேரத்தில் நான் தங்களுக்கு ஆய்வுரீதியாக முடிவுசெய்யப்பட்ட ஒரு நம்பிக்கையைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் இந்த வீர விளையாட்டினை ஆராய்ந்த டாக்டர் முத்தையா என்பவர் தனது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையில், பெரும்பான்மை மக்களின் வெளிப்படையான நம்பிக்கை பொதிந்த விளையாட்டு என்றே இதனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். தைப் பொங்கலை ஒட்டிய நாள்களிலேயே இது நடத்தப்பட வேண்டும் என்பது இம்மக்களின் ஆன்மாவில் உரமேறிய நம்பிக்கை என்றும் அவ்வாறின்றி வேறு தினங்களில் நடத்தப்பட்டாலோ அல்லது தைப் பொங்கல் தினத்தையொட்டிய நாளில் நடத்தப்படாமல் போனாலோ ஊரெங்கும் சொல்லொணாத துன்பங்களும் மக்கள் நோயிலும் சிக்கி உழலவும் நேரும் என்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் மத அடிப்படையிலான உரிமை என்றாலும், தைப் பொங்கலைக் குறிப்பதாகவே இருக்கிறது. எனவே, இந்த விளையாட்டும் பண்டிகையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
நான் தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிப்பது என்னவெனில் ஆதாரம் (1) சட்டம் 25 (1)இன்படி இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாகச் சிந்திக்க, மனசாட்சிப்படி நடக்க, தனது உரிமைகளை முன்மொழிய, பயிற்சி பெற்றுக்கொள்ள, இடமுண்டு.
அதே நேரத்தில் 1960ஆம் ஆண்டின் மிருக வதைத் தடைச் சட்டத்தின்படி காளைகளை வன்கொடுமையின்றிக் காக்கவும் காப்பாற்றவும் கடுமையான மேற்பார்வையும் கண்காணிப்பும் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை எனது உறுதிமொழிக் கூற்றின் ஆதாரம் (ii)இலிருந்து (vii)இன் படியானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
15ஆம் நூற்றாண்டில் எருதுச்சண்டை ஸ்பெயின் நாட்டில் உருவானது. மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளுக்கும் பரவியது. அங்கு மாடோ மனிதனோ இறப்பது பொதுவானதென்றே கருதப்படுகிறது. "Don't cry Agelita, Tonight I'll buy you a house, or I'll dress you in mourning" என்பது புகழ்பெற்ற மேனுவல் பெனீன்ஸின் கூற்றாகக் கூறப்படுகிறது. எனவே, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாட்டுபோல் அல்ல ஜல்லிக்கட்டு. இங்கு விளையாட்டுக்கு மட்டுமே பிரதானமான இடமுண்டு. இதில் மனிதனுக்கோ காளைக்கோ மரணம் சம்பவிக்காமல் காக்கப்படுகிறது. முழுக்க முழுக்கப் பார்வையாளர்களின் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948இன்படி கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதின் அவசியம் கருதியாவது இவ்வீரவிளையாட்டைத் தமிழ் மண்ணில் தொடர வேண்டியுள்ளது.
ஆதாரம் IX மற்றும் XIஇன்படி நான் தங்களின் மேலான கவனத்தை எதை நோக்கி ஈர்க்கிறேனென்றால் இந்த விளையாட்டில் காளைக்கு எந்தவிதமான ஊக்கமருந்தும் வழங்கப்படுவதில்லை. ஆனால், மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் ஒலிம்பிக் போட்டிகளில் போலோ விளையாட்டில் பங்குபெறும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து வழங்கப்படுவதுதான். ஆனால், இங்குக் காளைகளுக்கு அப்படி எதுவும் நிகழுவதில்லை என நான் உறுதி கூறுகிறேன். இந்த விளையாட்டுக்காகவே தயாராகும் பயிற்சிக்கு உட்படுத்தப்படும் காளைகளுக்குத் தடைசெய்யப்பட்ட எந்தப் போதைப் பொருளும் வழங்கப்படுவதில்லை என்பதும் உண்மை என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதில் உள்நோக்கம் எனக்கெதுவும் இல்லை.
ஜல்லிக்கட்டைத் தடைசெய்யக் கோரும் மனுவின் பத்தி XII ஆனது ஒத்துக்கொள்ளப்பட்ட அல்லது அநேக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை மறுப்பதாக உள்ளது. இந்திய அரசியல் சட்டம் 226 இன்படி இந்த நேரத்தில், அல்லது இத்தருணத்தில் நீதிமன்றம் இடையீடு செய்து இந்தச் சட்டமீறலைக்காக்க வேண்டியுள்ளது.
எனவே, மேன்மைதாங்கிய நீதிமன்றம் இவ் வழக்கினை விசாரித்து ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டைத் தடையில்லாமல் தொடர்ந்து நடத்திட நீதிவழங்கத் தேவையான உத்தரவுகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன். அதே நேரத்தில் ஏராளமான மக்களின் நம்பிக்கைத் திருவிழாவிற்கு ஊறுவிளைவிக்கும் எந்த வன்செயலையும் நடைபெறாமல் தடுத்திடவும் வேண்டுகிறேன். 1960ஆம் ஆண்டின் மிருகவதைச் தடைச் சட்டத்தின்படி தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நான் தங்களின் மேலான பார்வைகுச் சமர்ப்பிப்பது என்னவென்றால், உறுதிமொழிக் கூற்றின் ஆதாரம் Xஇன்படி அதில் உள்ள விவரங்கள் பாதியளவிற்கு உண்மை என்பதாகும்.
ஏனென்றால், ஜல்லிக்கட்டு விளையாட்டோ டு மாட்டுப் பொங்கல் நிறைவுபெறுகிறது. இந்த விளையாட்டிற்கு உகந்த மாட்டின் பெயர் "தொழுமாடு" என்பதாகும். இதற்கெனச் சிறந்த இனக் காளையாகக் கருதப்படுவது மதுரை மாவட்டம் புலிக்கோளம் காளைகளாகும். (இது எட்கர் தர்ஸ்டன் கேஸ்ட் - தென் இந்தியா)
ரோம் மற்றும் ஸ்பெயின் நாட்டில் விளையாடப்படும் Bull Bitting விளையாட்டை "arenas" நடத்திட வழங்கப்படுவதுபோல் இங்கும் நடத்திட அனுமதியளிக்க வேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.
தமிழ் மக்களின் உணர்வு தளத்தை ஏற்றி இறக்கி ஓடிக் காளையைப் பிடித்தாடும் இவ்வீரவிளையாட்டைத் தொடர்ந்து நடத்திட மரியாதைக்குரிய நீதிமன்றம் தகுந்த அனுமதியும் ஆணையும் வழங்கிடப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் இவ்விளையாட்டைத் திறம்பட நடத்திடத் தேவையான அனைத்து வகையான ஏற்பாடுகளைச் செய்திடவும் தகுந்த வழிகாட்டுதலையும் வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு வழிகாட்டுதலும் உத்தரவும் வழங்கும் தருணத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய அனைத்து உதவிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இவ்விளையாட்டுச் செவ்வனே நடத்தப்படும் என்ற உறுதியையும் தங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.  /////

இது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்த விளக்கம் உங்களுக்கு போதுமான புரிதல்களை தரும் என்ற நம்பிக்கையோடு...

என்றும் உங்கள் மீதான நன்மதிப்போடு...

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்