Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 30 ஜனவரி, 2013

சருகுவலையபட்டி ஊராட்சி


சருகுவலையபட்டி ஊராட்சி(625109).... மேலூர் வட்டாரத்தில் பிரபலமான ஊர்.இந்த ஊரை பற்றி தெரியாதவர்கள் மேலூர் வட்டாரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.மேலூர் வட்டாரத்தின் முத்தரையர் கோட்டை சருகுவலையபட்டி...இங்கு வாழும் அனைவருமே முத்தரையர்கள் தான். “வீரத்திலும்,இனபற்றிலும்” பேர் வாங்கிய ஊர்.... விவசாயம் முக்கிய தொழில். வெளிநாட்டிலும் வெளி ஊர்களும் பலர் வேலைசெய்கின்றனர் ..... 10 வருடங்களில் பொருளாதரத்தில் அதிக வளர்ச்சி பெற்ற முத்தரையர்களின் பெரிய கிராமம்.....மதுரையை மீனாட்சி அம்மன் ஆள்வது போல் எங்கள் ஊரை ஸ்ரீவீரகாளி அம்மன் ஆள்கிறார்... இங்குள்ள கோவில்கள் ... வீரகாளி அம்மன் கோவில் ,ஊதகருப்பு கோவில்,அய்யனார் கோவில், சூழபிடாரி அம்மன் கோவில்,முருகன் கோவில்,விநாயகர் கோவில் உள்ளன ... மூன்று முத்தரையர் படம் வரைந்த வளைவுகள் உள்ளன .... இந்த ஊரில் 1800கலில்லிருந்தே முத்தரையர்கள் வாழ்த்திருகின்றனர். 1912ல் எங்கள் அய்யா நிலம் வாங்கிய பத்திரம் உள்ளது... அப்போது சருகுவலையபட்டி தெற்குவலயபட்டி என்றே இருந்தது.அப்போது கள்ளர்கள் வாழும் கீழவளவு பஞ்சயதுக்கு உட்பட்டு இருந்தது..பிறகு நம் மகளிடம் ஏற்பட்ட எழுச்சி முத்தரையர்கள் உள்ள பகுதியை பிரித்து சருகுவலயபட்டி என்ற பெரும் பஞ்சயதாக உருவாக்கினர்.சருகுவலயபட்டி பஞ்சயதுக்கு கட்டுபட்டு சில ஊர்கள்உள்ளன. s.வடக்குவலையபட்டி, s.ஒத்தப்பட்டி, s.மனபட்டி, s.அறியுர்பட்டி s.மொட்டலாம்பட்டி, s.லெட்சுமிபுரம்........இங்கு உள்ளவர்கள் சருகுவலயபட்டியை பெரிய ஊர் என்று அழைப்பர் ..இந்த ஊராட்சியில் சென்ற தேர்தல் நிலவரப்படி 5500.பேர் ஓட்டுபோட தகுதிஆனவர்கள்...ஒரு பிரசிடென்ட் மற்றும் மூன்று நட்டமைகள் இந்த ஊரை ஆள்கின்றனர்... முதல் நாட்டமை (ஆண்டிநாட்டமை),இரண்டாவது (அடைக்கண் நாட்டமை),மூன்றாவது நட்டமையை( நோட்டம்) என்றும் அழைப்பர்... .கிராமத்து மந்தையில் தான் வழக்குகள் தீர்க்க படும் .அந்த மந்தைக்கு முன் ,மந்தை பொட்டலில், யாரும் செருப்பணிந்து நடக்க கூடாது.செருப்பை கையில் எடுத்துகொண்டு தான் செல்ல வேண்டும். 1900ம்களில் அவ்வாறு செருப்பு போட்டு நடப்பவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது.கோவிலின் முன்னாலும் கோவிலை கடக்கும் வரையில் செருப்பு போட மாட்டர்கள். நானும் அதை கடைபிடித்துள்ளேன் வெளிஊர்களில் இளைகர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளையும் நட்டமைகள் தான் தீர்கின்றனர்.....ஊரில் கட்டுபாடுகள்,உத்தரவுகள் நட்டமைகளால் பிறப்பிக்க படுகிறது..நட்டமையை தேர்ந்தெடுப்பதிலும் கட்டுபாடுகள் பின்பட்றபடுகின்றன..தமிழ் வருட முதல் நாள் அனைவரும்கூடி ஏறு வைத்து சாமி கும்பிடுகின்றனர்.பின்பு அவரவர் வயல்களில் ஏறு வைத்து சாமி கும்பிடுவார்..பின்பு மூன்று நாட்டமை கரைக்கு பத்தியப்பட்ட பங்களிளிகள் நாட்டமை பதவி வேண்டி வெத்தலை வைக்கின்றனர்..அதன் அடிப்படையில் நாட்டமை பொறுப்பு வழங்கபடுகிறது..நாடமையின் முன்னிலையில் திருமணம் நடக்கிறது...பெரும்பாலும் எங்கள் ஊரில் திருவிழாக்கள் அதிகம்..நல்லி கோவில் குதிரை எடுப்பு மற்றும் மஞ்சுவிரட்டு,..வீரகாளி அம்மன் பூதட்டு திருவிழா மற்றும் தேர் வலம்...,ஊததக்கருப்பு சாமி கோவில் விரதம் மற்றும் கிடாவெட்டு...,பொங்கல் மஞ்சுவிரட்டு..கிராமத்து மஞ்சுவிரட்டு....அனைத்தும் சீரும் சிறப்புடன் அம்பலகரர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது...எங்கள் ஊரின் வீரவிளையாட்டு கபடி....அன்னா பிறந்த நாள் அன்று கபாடி போட்டிகள் நடத்த படுகிறது.....அதிரடி அண்ணா கபாடி குழு இங்கு புகழ் மிக்கது.... 
நன்றி...
பெரும்பிடுகுமுத்தரையர் புகழ் வாழ்க ...


பரத் அம்பலம் 

திங்கள், 28 ஜனவரி, 2013

நண்பர்கள் சந்திப்பு
















19.01.2013 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற " நண்பர்கள் சந்திப்பு" நிகழ்வில் புகைப்பட தொகுப்பின் ஒரு பகுதி 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

இன்றைய (26.01.2013) தினத்தந்தி செய்தி ..!!!



THANKS TO: DINATHANTHI

புதன், 23 ஜனவரி, 2013

தலைவர்களுடன்.... !!!

முத்தரையர் இனத்தின் முன்னோடி தலைவரும்  முன்னாள் விவசாய துறை அமைச்சரும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு கு.ப.கிருஷ்ணன்  மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டையில் வேட்பாளராக இருந்த திரு. முரளி கணேஷ் ஆகியோருடன்  இன்று ஒரு திருமண விழாவில் நான் (சஞ்சய் காந்தி அம்பலகாரர்) கலந்துரையாடிய    படம் உடன் திரு. கண்ணன்  நாதன் திரு. வசந்த் ஆகியோர் 

திங்கள், 21 ஜனவரி, 2013

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு - பட்டுக்கோட்டை

வணக்கம் உறவுகளே ...கடந்த 19.01.2013 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது இந்த சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பை தந்த அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறை அதிகாரிகள் , கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பாக  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் : 

தீர்மானங்கள் :

1.     பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊருக்கு ஒருவரைஅடையாளம் காண்பது அவர்கள் மூலம் ஒரு குழு அமைத்து (குறைந்தது 5 முதல் 10 பேர் வரை),அவர்கள் மூலம் அந்த அந்த ஊர்களில் உள்ள முத்தரையர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர் பட்டியல்கொண்டு சேகரிப்பதுஅதில் அவர்களின் குடும்பத்தில் பட்டதாரிகள் இருக்கிறார்களா ? தற்பொழுது யாரேனும் படித்துக் கொண்டு இருக்கிறார்களா ? இதுவரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் எதேனும் பலன்கள் பெற்று இருக்கிறார்களா ? அரசு வேலையில் யாரேனும் இருக்கிறார்களா ? என்பது போன்ற தகவல்களை திரட்டுவது பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து தொடர்ந்து பராமரிப்பது, இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்க்குமான தேவைகள் என்ன ? அதனைப் பெரும் வழிகள் என்ன? தொடர்ந்து அவர்களை தொடர்பில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று உறவினைப் பேணுவது, இந்த தகவல்களின் அடிப்படையில் அரசியல் ரீதியிலான பலன்களை நம் இன அரசியல்வாதிகள் பெறவும், அவர்கள் மூலமாக நமக்கான தேவைகளைப் பெறவும் வழிவகைகளை ஆராய்வது.

2.    முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்குள் புரிந்துணர்விற்காகவும்குழுவாக செயல்படுவதினால்ஏற்படும் நன்மையினை பகிரும் வண்ணம் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுழற்கோப்பை சமுதாயகபாடி மற்றும் கைப்பந்து போட்டிமுத்தரையர்கள் பெரும்பாண்மையாக (முத்தரையர்கள் மட்டும்வாழக் கூடிய கிராமங்களில் ஆண்டுதோறும் சுழற்ச்சிமுறையில் நடத்துவதுஇதில் திறமையாகவிளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு வழுவான அணிஅமைத்து மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்க்க செய்வது.


3.    படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதுபடிக்கும்மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைப் பற்றிய சரியான வழிகாட்டுவது, வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, பல்வேறு இடங்களில் பணிபுரியும் (உள் நாடு / வெளி நாடு) நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்கள் மூலம் வேலைப் பெற முயர்சிப்பது, அரசு வேலைகள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவித்து, அதற்க்கான போட்டித் தேர்விற்க்கு உரிய பயிற்சிக்களை  தர முயர்சிப்பது, 

4.    “அம்பலக்காரர் உறவின் முறை சங்கம்” ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்து மக்களின் எண்ணிக்கைமற்றும் பங்காளி வகையறாக்களின் எண்ணிக்கைக்கு எற்ப ஒன்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்கள் அமைத்து,அனைத்து குடும்பத்தினையும் இணைக்க வேண்டும்ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்க்குபெண் கொடுக்கவோ / எடுக்கவோ செய்யும் போது குடும்பத்தினைப் பற்றி அரியமற்றும் இனக்கலப்பினை தடுக்க முடியும்

5.    கதை / கவிதை எழுதும் திறனுள்ளவர்களுக்காக ஆண்டு தோறும் " இலக்கிய விழாநடத்துவது,அதன் மூலம் அவர்கள் திறன் வெளி உலகிற்க்கு செல்ல நம்மால் ஆன உதவியினை செய்வது.


6.    இலவச சட்ட உதவிக்கான ஏற்பாடுகள், பல்வேறு சூழ் நிலைகளால் வரும் வழக்குகளை எப்படி கையால்வது, யாரை அணுகுவது, இனத்திற்க்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்க்கென இனப் பெரியவர்கள் அடங்கிய குழு அமைத்து ஒருசார்பு இல்லாமல் நடு நிலையான தீர்வினை பெற உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல்

7.    இலவச மருத்துவ உதவிகள், எந்த நோய்க்கு என்ன சிகிச்சை ? எங்கே பெற வேண்டும் ? இலவசமாக பெற வாய்ப்பு உண்டா ? யாருடைய சிபாரிசும் தேவையா ? தேவை என்றால் எப்படி பெறுவது ?

8.    சிறு பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து சமுதாய செய்திகளை அளித்தல், கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சடித்தோ சமுதாய செய்திகளை எல்லோரும் அறியும் வண்ணம் மாதம் ஒருமுறை வெளியிடுவதற்க்கான வாய்ப்புகள், எந்த மாதிரியான செய்திகள் எல்லொரும் அறிந்திருக்க வேண்டும் ? சமூக விழிப்புணர்வினையும், சுகாதார, கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்கும் வாய்ப்புகள்

9.    நவீன வேளாண் தகவல்களை பெற்று தருதல், தொடர்ந்து தண்ணிர் பிரச்சனை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துவரும் நம் இனத்தவருக்கான மாற்று விவசாய முறைகள், குறுகிய கால பணப் பயிர்கள், அதிக லாபம் தரக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், மற்றும் பலன்கள் நமது இனத்திற்க்கு தொடர்ந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? எப்படி தகவல்களை பகிர்ந்துக் கொள்வது ? தகவல்களை பெறுவது ?

10.  முத்தரையர் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் // சுயத்தொழில் வாய்ப்புகளை எற்படுத்திக்கொடுத்தல் பெரும்பாலும் இருக்கின்ற அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் எந்த தனிப் பட்ட தொழிலிலும் ஈடுபடுவது இல்லை, அதனை மாற்றி அவர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டியும் / உதவிகளைப் பெற்றும் தரும் பட்சத்தில் தனிபட்ட ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியில் பலம் பெற முடியும் அதற்க்கான நீண்டகால செயல்திட்டம் வடிவமைத்து நமது சமூகப் குடும்ப பெண்களின் விரையம் ஆகும் நேரத்தினை பயன் உள்ள வகையில் பயன்படுத்துவது, சிறிய கைத்தொழில்கள் / மூலதனம் அதிகம் தேவைப் படாத பாதுகாப்பான தொழில்கள், குழுவாக செய்யக் கூடிய வேலைகளை குறித்த தகவல்களை திரட்டி அளித்தல்

11.  கந்துவட்டிக் கொடுமையிலிருந்து நம் மக்களை காக்கும் முகமாக முத்தரையர் கூட்டுறவு சங்கம்அமைப்பதற்க்கான சாத்தியக் கூறுகள்இதன் மூலம் நகைக் கடன்விவசாய கடன்உள்ளிட்ட சிறியகடன்களை குறைவான வட்டி விகிதத்தில் வழங்கும் வாய்ப்புகள்ஆதாரத் தொகை திரட்டும் வகையில்இனத்தவர்கள் எல்லொருடைய பங்களிக்கும் விதமாக பங்குகளை வெளியிடும் வாய்ப்புகள் குறித்தஆய்வுகள் 

வியாழன், 17 ஜனவரி, 2013

நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை 19.01.2013

நண்பர்களே கடந்த சில நாட்களாக நண்பர்கள் சந்திப்பு தொடர்பாக உறவுகளை சந்திக்கவும், பொங்கல் காரணமாகவும் இணையத்திற்கு வர முடியவில்லை




கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. முரளி கணேஷ் அவர்களை சந்தித்தோம் 










நண்பர்கள் திரு. குமாரவேல், திரு.மணி, திரு. மோகன்தாஸ் திரு. வடகாடு துரை ராஜகுமாரன், திரு, வடகாடு பிரதிப் ஆகியோர் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு நண்பர் திரு, விக்கிரமம் அக்ரஹாரம் விவேக் மற்றும் சு.பாலா, திரு.சிரமேல்குடி வருண் ஆகியோர் ஒருங்கிணைப்புடன் திரு. லெனின் ரெங்கராஜன் (வேப்பக்குளம்), திரு, பிரபு (தளிக்கோட்டை), ஆகியோரை சந்தித்தோம் மேலும் கோட்டைக்காடு கிராமத்தில் இருக்கும் நமது இளைய தலைமுறையினரை நேரில் சந்தித்தோம், பின்னர் அடுத்த கிராமமான இளங்காடு, காரப்பங்காடு, இளங்காடு பொன்வண்டு,சிரமேல்குடி , வெட்டிக்காடு வாடியக்காடு , விக்கிரமம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில்  இளைஞர்கள் மிகப் பெரிய வரவேற்பினை தந்து நமது முயற்சிக்கு முழுமையான ஆதரவினை தந்தார்கள்  இளைஞர்களிடம் இருக்கும் இந்த ஆர்வத்தினை பலமுள்ளதாக, அர்த்தமுள்ளதாக ஆக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளும் எடுபோம். 


இன்று முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் திரு. சூரப் பள்ளம் ராஜ்குமார் மற்றும் திரு. நாகராஜ் ஆகியோரை நண்பர்கள் திரு. காந்தி, திரு. தேவா, திரு. கண்ணன் நாதன் மற்றும் நான் (சஞ்சய்காந்தி) சந்தித்து ஆலோசனை நடத்தினோம். 

சனி, 12 ஜனவரி, 2013

முக்கிய அறிவிப்பு...!!!

முக்கிய அறிவிப்பு...!!!

   இரண்டு  நாட்கள் மட்டுமே மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் நமது "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு - பட்டுக்கோட்டை" நிகழ்வில் கலந்துக் கொள்ள நண்பர்கள் மிகவும் ஆர்வமாக, அதிக எண்ணிக்கையில் தயாராகி வருவதால் முன்பு நாம் அறிவித்து இருந்த இடம் போதுமானதாக இருக்காது என்பதனால் புதிய இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் 

நாள் : 19.01.2013 சனிக்கிழமை 

நேரம் : மதியம் 02:00 மணி 

இடம் : நவநீத இராமசந்திரா திருமண மண்டபம் 
             பிள்ளையார் கோவில் தெரு, 
             தலைமை அஞ்சலகம் அருகில் 
             (பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில்)
             பட்டுக்கோட்டை 

"முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை

வணக்கம் நண்பர்களே..!! 

நேற்று  நண்பர்கள் திரு. கண்ணன் நாதன், திரு. அன்பு, திரு. மணி, திரு. விவேக், சஞ்சய்காந்தி (நான்) உள்ளிட்டோர் மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரமேஷ், தொக்களிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணிவண்ணன், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணியன் உள்ளிட்டோரை சந்தித்து "முத்தரையர்  நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை" தொடர்பாக அவர்களின் ஆலோசனை பெறப் பட்டது மேலும் காவல்துறை அதிகாரிகள் (நமது இனத்தவர்கள்), மற்றும் முத்தரையர் சமூக அரசு அதிகாரிகள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப் பட்டது. நேற்றைய தினம் மாலையில் எங்களுடன் இணைந்தது கொண்ட திரு. கோவிந்தராஜ், திரு. காந்தி, திரு. தேவா உள்ளிட்டோர் ஆசிரியர் திரு. பாஸ்கரன் மற்றும் சமூக பிரமுகர்களுடன் ஆலோசனை பெற்றோம், பின்னர் பள்ளிகொண்டான் வசந்த், பள்ளிகொண்டான் மணி, மங்கனகாடு பாலசிங்கம், உள்ளிட்ட நமது சமுகத்தின் துடிப்பானவர்களிடம் ஆலோசனை கேட்கப் பட்டது. 

பணிகள் தொடரும்...



மாளியக்காடு  ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரமேஷ் உடன்...



தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணிவண்ணன் உடன்....





நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணியன் உடன்....

வெள்ளி, 11 ஜனவரி, 2013

PATTUKKOTTAI FRIENDS MEET

நேற்று நடந்த ஆலோனை கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானப் படி 19.01.2013 அன்று மதியம் 2 மணிக்கு கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது, மேலும் முன்பே அறிவிக்கப் பட்டப் படி அதே நாள் அதே இடத்தில் நடபெறும். 


நேற்றைய சந்திப்புக்கு பிறகு திரு. கண்ணன் நாதன், திரு.காந்தி, திரு. தேவா, திரு. குமாரவேல், திரு. மணி, திரு, அருண், திரு. பிரபாகரன், திரு, சஞ்சய்காந்தி ஆகியோர் சென்று திரு, கலைமணி (முத்தரையர் பேரவை முன்னாள் தலைவர்), திரு.பக்கிரிசாமி )ஓய்வுப் பெற்ற ஆசிரியர்), திரு, திருவள்ளுவன் (அரசுப் போக்குவரத்துத்துறை அதிகாரி), திரு. ஜோதி, திரு. பாண்டியன் (தலைமை ஆசிரியர்), திரு. பரஞ்சோதி (வங்கி அதிகாரி), திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தப் பட்டது.. 


நாளையும் தொடரும்....!!!








திங்கள், 7 ஜனவரி, 2013

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

19.01.2013 ல் பட்டுக்கோட்டை நகரில் நாம் ஒருங்கிணைத்து இருக்கும் " முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி" தொடர்பான சில விசயங்கள் குறித்து நண்பர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம், இன்னும் சரியாக 11 தினங்களே உள்ள நிலையில் சில விசங்களில் நண்பர்களுக்குள் ஏற்படும் "மனகசப்பு" அல்லது "வருத்தங்களை" தவிர்க்கும் வண்ணம் சில அடிப்படை பரிந்துரைகளை நண்பர்களுக்கு அறிய தருகிறோம்.


1)இந்த நிகழ்வு எந்த தனி நபரையோ, இயக்கத்தையோ, சங்கங்களையோ, அரசியல் கட்சிகளையோ சார்ந்து நடத்தப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்

2)இந்த சந்திப்பு நிகழ்வில் எந்த தனி நபரையோ, இயக்கங்களையோ, சங்கங்களையோ, அரசியல் கட்சிகளையோ புகழ்வதோ அல்லது நேரடியாக விமர்சிப்பதோ தவிர்க்கப்பட வேண்டுகிறோம்

3)பிற சக சமூகங்கள் குறித்தான கருத்துக்களை குறிப்பிடும்போது போதுமான மரியாதையுடனும், தேவையற்ற காழ்புணர்ச்சிகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் பேச வேண்டுகிறோம்.

4)இனத்தின் முன்னேற்றத்தையும், எதிர்காலங்களில் அரசியலில் எத்தகைய நிலையினை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் நண்பர்கள் கருத்துக்களுடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம 

5)கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள வேண்டுகிறோம்

6)முடிந்தவரை நமது "பாரம்பரிய உடைகளுடன்" (வெள்ளை வேஷ்டி சட்டை) கலந்து கொள்ள வேண்டுகிறோம், இது கட்டாயம் இல்லை.

7) மதுப் போதையில் வருபவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப் பட மாட்டார்கள்

8) உங்களுடன் பிற சமூக நண்பர்களை அழைத்து வர வேண்டாம்

9) கொடி , பேனர் போன்றவற்றை தவிர்க்கவும்
இந்த அடிப்படை பரிந்துரைகளை நண்பர்கள் கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம், மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

திரு.சஞ்சய் காந்தி (0091-9489829003)

நாள் : 19.01.2013

நேரம் : காலை 11.00 மணி

கிழமை : சனிக்கிழமை

இடம் : ஸ்ரீ நாடியம்மாள் அசோசியேட், (முத்தரையர் சங்க கட்டிடம்),

பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை

செவ்வாய், 1 ஜனவரி, 2013

நான் தமிழன் : முத்தரையர்

 
 
எழுத்து : திரு. இரா.மணிகண்டன், நன்றி : குமுதம் இதழ்
குமுதம் இதழில் நான் தமிழன் என்ற தொடர் (தமிழர்களின் பழமை, பெருமை, பாரம்பரியம் பற்றியது) எழுத்தாளர் திரு. இரா. மணிகண்டன் அவர்களால் எழுதப்பட்டது அதில் 30.09.2009 ந் தேதி இட்ட இதழில் "முத்தரையர்" பற்றிய கட்டுரை.
 
 
போர்! பெரும்போர்! பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் கடும்போர். ஏறத்தாழ பல்லவ மன்னன் தோற்றுப்போகும் நிலை, பல்லவ நாட்டின் பெரும் நகரங்கள், கிராமங்கள், ஆறுகள், குளங்கள் என்று ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டே வந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பல்லவ மன்னன், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையரிடம் உதவி கேட்கிறான். நட்பு நாடி வந்தவருக்கு நம்பிக்கையுடன் பெரும்பிடுகு உறுதியளிக்கிறார் அதற்க்குப் பின் நடந்தது வரலாற்று உண்மைகள்.
 
 
பாண்டிய மன்னனை வென்று, சோழ மன்னனை வென்று தொடர்ந்து பல போரில் வெற்றிவாகை சூடினார் பெரும்பிடுகு முத்தரையர். சத்துருகேசரி, அபிமானதீரன், நெடுமாறன் உள்ளிட்ட 16 விருதுகள் அவர் பெற்ற வெற்றிக்காக சூட்டப்பட்டன!
 
 
முத்தரையர் சமுதாயத்தை காலம் காலமாக வரலாற்றில் இடம்பெறச் செய்த சரித்திர நிகழ்ச்சி இது
 
 
தமிழகத்து வரலாற்று கதாபாத்திரங்களில் முத்தரையர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். முத்தரையர்கள் தோற்றம் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே நிறைய கருத்து முரண்பாடுகள் உண்டு, ஆனால் தமிழகத்தின் கலை, இலக்கிய பண்பாட்டைக் கட்டிக் காத்தவர்கள் முத்தரையர்களே.
 
 
அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு தஞ்சாவூர், பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இப்போது ஒரு சிற்றூராக காட்சியளிக்கும் செந்தலை என்பதுதான் அன்றைய முத்தரையர்களின் தலை நகரமாக செயல்பட்டு வந்தது, பாண்டியர்களோடும், சோழர்களோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணை நின்று வெற்றிக்கு உதவியுள்ளனர்.
 
 
செந்தலை கல்வெட்டு ஆதரப்படி முதன் முதலாக (கி.பி 655) நமக்கு அறியவருவது பெரும்பிடுகு முத்தரையன் என்ற மன்னன்தான். இவருடைய மகன் இளங்கோவடியரையன் அவரது மகன்தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி 705- 745) இவரது காலத்தில்தான் முத்தரையர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். "பிடுகு" என்றால் "இடி" என்று பொருள்.
 
 
அவருக்குப் பிறகு அடுத்தடுத்து பலர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களின் உற்ற தோழர்களாக அரசியலில் இருந்தாலும், அவர்களுக்குப் போட்டி போடும் வகையில் கலை பண்பாட்டில் விஞ்சி நின்றவர்கள் முத்தரையர்கள்.
 
 
ஆலம்பாக்கத்தில் உள்ள "மார்ப்பிடுகு ஏரி" திருவெள்ளாறையில் "மார்ப்பிடுகு பெருங்கிணறு" ஆகியவற்றை உருவாக்கி அப்பகுதி மக்களின் தாகத்தைத் தீர்த்தவர்கள்.
 
 
சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு முத்தரையர் பெரும் பங்காற்றியுள்ளனர். அதோடு சமண சமயத்திற்க்கும் பேராதரவு தந்திருக்கிறார்கள். முத்தரையர் காலத்தில் தான் " நாலடியார்" என்ற நூல் இயற்றப்பட்டிருக்கிறது.
 
 
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அக்காலத்திலேயே முத்தரையர்கள் உதவி வந்திருக்கிறார்கள், பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தன், கோட்டாற்று இளம் பெருமானார் ஆகியோர் முத்தரையர்களின் அரசவையை அலங்கரித்த பெரும் புலவர்களில் சிலர்.
 
 
யாப்பருங் கலவிருத்தி என்ற நூலில் "முத்தரையர் கோவை" என்ற நூல் பற்றிய குறிப்பு வருகிறது. இது மட்டும் கிடைத்திருந்தால் முத்தரையர் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும். பழியீசுவரம் குகைக்கோயில், திருமெய்யம் அருகில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவில், தேவர்மலை கற்றளி, மலையடிப்பட்டி வாகீஸ்வரர் குகைக்கோயில் ஆகியவை முத்தரையர்கள் செதுக்கி நமக்களித்த கொடையே.
 
 
"தஞ்சாவூர்" என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தை உருவாக்கியதே முத்தரையர்கள்தான். தனஞ்சயன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஊர் "தனஞ்சய ஊர்" என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் தஞ்சாவூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
 
சுதந்திரப் போராட்டத்தில் முத்தரையர் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பலர் இணைந்து நாட்டிற்கு உழைத்திருக்கிறார்கள்.
 
 
எட்டரைக் கோப்பு ஆகிய கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வேள்வித் தீயில் உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம், பாதரப்பேட்டை முத்தையா, அண்ணாவி, அப்பர் முத்தரையர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
 
 
தற்கால அரசியல் வானிலும் முத்தரையர்களின் பங்கு அதிகம் பாதரப்பேட்டை முத்தையா முத்தரையர்களின் முதல் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், அண்ணாவி, புலவர் செங்குட்டுவன், கே.கே.பாலசுப்பிரமணியன், பேராவூரணி எம்.ஆர்.கோவேந்தன் (தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் முத்தரையர்), ஆலங்குடி வெங்கிடாசலம், இப்போதைய (கட்டூரை எழுதப்பட்டபோது..!) திமுக அரசில் வனத்துறை அமைச்சராக இருக்கும் என்.செல்வராஜ் உள்ளிட்ட பலரை தந்த சமூகம் இது. (தற்போதைய அதிமுக அரசில் சிறிது காலம் அமைச்சராக இருந்த திரு. பரஞ்சோதி, இன்றைய கல்வித் துறை அமைச்சர் திரு. என்.ஆர்.சிவபதி ஆகியோர் நம் மக்களுக்கு தெரிந்திருக்கும்)
 
 
நத்தம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப் பட்ட ஆண்டி அம்பலம், தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ சிங்கார வேலு (!?), பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ குழ.செல்லையா, (இவர் தனியே முத்தரையர் சங்கம் நடத்தி வந்தார் சமீபத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்) தொட்டியம் ராஜசேகரன், முசிறி ராஜரெத்தினம், தொட்டியம் கண்ணையன், பிரின்ஸ் தங்கவேலு, புதுக்கோட்டை -ஆலங்குடி ராஜசேகரன் (இ.கம்யூ), மல்லிகா சின்னச்சாமி, புதுக்கோட்டை ராஜா பரமசிவம் (முன்னாள் எம்.பி) உள்ளிட்ட பலர் தி.மு.க, அதிமுக எம்.எல்.ஏ க்களாக முத்தரையர் சமூகத்திலிருந்து சட்டசபைக்குச் சென்று சாதனை படைத்திருக்கிறார்கள். ( இந்த கட்டூரையில் விடுபட்ட சிலர்... திரு. திருஞானசம்பந்தம் பேராவூரணி, திரு. புஷ்பராஜ் - ஆலங்குடி)
 
 
காமராஜர் ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்து திறம்பட நிர்வகித்த இ.பி.ராயப்பாவை தமிழகம் மறக்காது (இன்றைய முத்தரையர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது..!!??), விளையாட்டுத் துறையில் உயரம் தாண்டுவதில் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்தை தலை நிமிர வைத்த நல்லுச்சாமி அண்ணாவி, சர்வதேச கபடிப் போட்டியில் சாதித்த மணமேடு சுப்பிரமணியன் போன்றோர் முத்தரையர் தந்த கொடையே. ( இன்றைய நிலையை சிந்தித்துப் பார்ப்போமா ? உறவிகளே).
 
 
சிறந்த பேச்சாளரான திருச்சி செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் எழுத்துத் துறையில் முத்தரையர் சமூகத்திற்க்குப் பெருமை சேர்கின்றனர், முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன், நடிகர் பரதன் உள்ளிட்ட பலர் முத்தரையர் சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்.
 
 
முத்தரையர்களிடையே திருமணச் சடங்குகள் நிறைய உண்டு எனினும் எளிமையான திருமணத்தையே மேற்கொள்கின்றனர். மணமகனுக்கு காதுக்குத்தியிருக்க வேண்டும், மணமகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும், என்பதுதான் மணமக்களுக்கு தகுதி மற்றப்படி பரிசம் போடும்போது மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு நகை போட வேண்டும், திருமணத்தின் போது மணமக்களுக்கு தோஷம் கழிய நூல் பிடி சடங்கு செய்வது அதிகம், திருமணத்திற்க்கு அழைப்பிதழோடு "பணம் வைத்து அழைத்தல்" என்ற முறை முத்தரையர் சமூகத்திலும் உண்டு.
 
 
வரலாற்றுக் காலம் முதல் அறியப்படும் முத்தரையர்கள் இன்றைக்கும் பல்வேறு துறைகளில் வரலாறுகளைப் படைத்தவண்ணம் உள்ளனர்.
 
 
இந்த கட்டூரையில் பல செய்திகள் விடுபட்டிருந்தாலும் பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டி இந்த கட்டூரையின் மூலம் மறக்கப்பட்டு வரும் முத்தரையர்களின் கலை, பண்பாடு, பழக்கவழக்கங்களை முத்தரையர்களுக்கும், ஏனைய தமிழ் சமூகத்திற்க்கும் சொந்த விருப்பு விருப்பு இன்றி தொகுத்து அளித்த திரு. இரா.மணிகண்டன் அவர்களுக்கும், இந்த கட்டூரையினை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எங்களின் சுருங்கிய வரலாற்றினை தெரிந்துக் கொள்ள செய்த "குமுதம்" இதழுக்கும் முத்தரையர் சமூகத்தின் சார்பில் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" நன்றி தெரிவித்துக் கொள்கிறது.