Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 30 ஜூலை, 2013

மது விலக்கு...!!


மது விலக்கு...!!

தமிழ் ஈழம், கூடங்குளம், தர்மபுரி இளவரசன், பாலசந்திரன், முல்லை பெரியார், காவேரி நீர், டெல்டா மாவட்ட மீத்தேன் திட்டம் என்று வார வாரம் "மீடியா பரபரப்புக்காக" நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் போன்று தான் இந்த "பூரண மதுவிலக்கு" போராட்டமும், மீடியா இந்த விசயத்தை பரபரப்பாக்க அதையே சமூக வலைத்தளங்களும் இன்னும் அதிகப்பட்சம் ஒரு வார காலத்திற்க்கு இதையே விவாதிக்க போகிறது. பின்னர் ரஜினியின் அடுத்த படம் பற்றியோ, ஹன்சிகா - சிம்புவின் காதல் பற்றியோ பிரச்சனையின் (மீடியாவின்) பார்வை திரும்பும், இந்த போராட்டத்தை அம்போ என்று விட்டுவிட்டு எல்லோரும் அந்த பிரச்சனையில் தீவிரமான விவாதிக்க கிளம்பிவிடுவார்கள் ஆட்டுமந்தைகளைப் போல ஒருவர் சொல்லும் கருத்தை வழிமொழிவது தமிழர்களின் சுபாவமான மாறி விட்டது, ஒரு பிரச்சனைக்காக போராடும் போது அந்த பிரச்சனையின் ஆழம் என்ன ? அதற்க்கான மாற்று வழிகள் என்ன ? இந்த பிரச்சனைகள் தீர வேண்டிய அவசியம் என்ன ? என்பதையெல்லாம் மீடியாக்களை தீர்மானிக்க விட்டுவிட்டு தெளிவில்லாத போராட்டங்களை நடத்துவது தமிழர்களின் வழக்கம் ஆகி விட்டது.   

என்ன பிரச்சனை ?

அரசாங்கம் மதுகடை நடத்துவது பிரச்சனையா ?
தமிழர்கள் குடிப்பது பிரச்சனையா ?

அரசாங்கம் மது விற்பனை தொடங்கிய போது, ஆண்டு விற்பனை 3000 ம் கோடி, இன்று ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது, சரி அரசாங்கம் மதுக்கடையை மூடுவதாக வைத்துக் கொள்வோம், இப்போது 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடித்துக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? மதுகடை மூடப்பட்ட உடன் அவர்கள் குடியை நிறுத்தி விடுவார்களா ? மாற்றாக கள்ளச்சாரயத்தை நோக்கி போவார்களா ? குடியை நிறுத்த வேண்டும் என்பது நோக்கமா ? அல்லது இப்போது அரசு கஜானாவிற்க்கு வரும் பணம் "கள்ளசாராய வியாபாரிகளுக்கு" போக வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் நோக்கமா ? சமூகத்தின் தீவிர பிரச்சனைகள் கூட இங்கு ஒரு வார "மீடியா பரபரப்பு" மட்டுமே, குடிக்காமல் தமிழர்களை பார்த்துக் கொள்வதற்க்கு என்ன மாற்று திட்டம் இந்த போராட்டக்காரர்களிடம் உள்ளது ?

"சுதந்திரத்திற்க்கு முன்பாக கள்ளுக்கடை மறியல் நடந்த போது "தந்தை பெரியார் (!?)" தனக்கு சொந்தமான 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்" இது நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எதோ ஒரு பாடத்தில் படித்த வாசகம், எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அவரைதான் "பகுத்தறிவு பகலவன்" என்று இன்றும் தமிழன் கொண்டாடி கொண்டு இருக்கிறான், தென்னை மரங்கள் வெட்டப்பட்டதால் குடியை நிறுத்த முடிந்ததா ? குடிப்பதற்க்கான காரணம் என்ன? அதை களைய என்ன செய்ய வேண்டும் ? என்ற சிந்தனைக் கூட இல்லாமல் "காந்தி சொன்னார், மரத்தை வெட்டினேன்" என்ற முட்டாள்தனத்தின் மறுபதிப்புதான் இன்றைய "பூரண மது விலக்கு" போராட்டம், பிரச்சனையை களைவதை விட்டுவிட்டு "பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும்" என்பது தான் இந்த போராட்டத்தின் மையகருத்து.

27 ஆயிரம் கோடிக்கு எப்படி 8குடிக்கிறார்கள் ? எளிதாக கிடைக்கிறது அதனால் குடிக்கிறார்கள் என்றால் எளிதாக "விசம்" கூடத்தான் கிடைக்கிறது குடிப்பார்களா ? ஏன் ஆண்டிற்க்கு மூவாயிரம் கோடி விற்பனை ஆன போது எளிதாக கிடைக்கவில்லையா ? காரணம் வேறு எதுவோ அதை களைவதற்க்கான முயற்சியை யாரும் செய்வது இல்லை, யாரோ ஒருவர் போராட வந்துவிட்டார் ஒரு வாரம் அது குறித்த சர்ச்சை பின்னர் வழக்கம் போல தம் தமது வேலை என்பது இன்றைய தமிழனின் நிலை.

ஆண்டிற்க்கு 27 ஆயிரம் கோடி மதுவினால் அரசாங்கத்திற்க்கு கிடைக்கும் வருமானத்தில் எனது பங்கு “வெறும் பூஜ்யம்”, இதே நிலை இங்கு மதுவிற்க்கு எதிராக பேசும் எல்லோராலும் சொல்ல முடியுமா ? இங்கே ஆடம்பரத்திற்க்காக, கெளரவத்திற்க்காக, சமூக அந்தஸ்துக்காக, நட்புக்காக குடிப்பவர்கள் எத்தனை பேர் ? எளிதாக கிடைக்கிறது என்பதை தாண்டி சமூகத்தில் வேறு எங்கோ, எதோ பிரச்சனை இருக்கிறது அது என்ன ? அது மனஉளைச்சல், குடும்ப பிரச்சனை, சமூக ஏற்றத்தாழ்வு, நிலையான வருமானம் இன்மை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அவற்றை களைய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்க்கு யோசனை சொன்னவர்கள் எத்தனை பேர் ? இன்னும் வேறு எதுவல்லாம் இதற்க்கு காரணம் என்று ஆய்வு செய்தவர்கள் எத்தனை பேர் ?

மக்களுக்காக மக்களால் (!?) நடத்தப்படும் ஒரு அரசாங்கம் பொருப்பே இல்லாமல் மதுகடை நடத்தி வருமானம் சம்பாதிப்பது ஏற்புடையதா  ? என்றால் இதனை "முட்டாள்கள்" கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் எனது பதில். மேலே நான் சொன்ன எல்லா காரணங்களையும் அரசாங்கமும் சொல்லலாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க...!! அதுவல்ல நல்ல அரசாங்கத்திற்க்கு அழகு...!

27 ஆயிரம் கோடி வருமான இழப்பு என்பது ஒரு அரசாங்கத்திற்க்கு நிச்சயம் பாதிப்பினை ஏற்படுத்தும் இருந்தாலும் வருமான நோக்கத்திற்க்காக மட்டும் அரசாங்கம் இதனை தொடர்ந்து நடத்திட முற்படுமேயானால் பின்னர் அதனை மக்களுக்கான அரசாங்கம் என்பது சரியாக இருக்க முடியாது. மாற்று வருமான வழிகளை அரசாங்கம் தான் தேடிக் கொள்ள வேண்டும் அல்லது செலவுகளை (இலவசங்களை..!!!) குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் ரமண மகரிஷி சொன்ன ஒரு கதையை சொல்லி முடிப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“ வசதியான மனிதனின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்த உணைவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்க்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால், அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது தன் ரத்தத்தை ருசித்த நாயோ, ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், "மட நாயே ! அது காய்ந்துபோன எலும்பு, நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் !" என்று சொல்ல... வழிப்போக்கரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

"இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது !" என்று சொல்லி, காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள், இதைத்தான் “DOG’S LOGIC”  என்று சொல்கிறோம் ! “

சிந்தித்துப் பாருங்கள்... காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

-    சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.






ஞாயிறு, 28 ஜூலை, 2013

முத்தரையனே இன்னுமா உறங்குகிறாய்....??? தம்பியின் சீற்றத்திற்க்கு பதில் சொல்...!!

உறவுகளுக்கு வணக்கம்...!!!தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்த­ம் வளங்களை சுரண்டி அவர்தம் உழைப்பால் பல வளங்களை உருவாக்கி, தம் மண் ஆசைக்காக அண்டை நிலத்தோடு பகை கொண்டு பல போர்களை நடத்தி சர்வாதிகாரத்தோடு இந்த தமிழ் மண்ணை சில பேரரசுகள் ஆண்டுகொண்டிருந்தபோது அன்றைய தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய கருநாடகப் பகுதியிலிருந்து ஒரு பெரும்படை புறப்பட்டு மைய தமிழகத்தில் அரசோச்சிக்கொண்டிருந்­ சோழபாண்டியர்களை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் அடக்கி அம்மக்களை நன் முறையில் நடத்தி பொதுவுடமை, மக்களாட்சிபோன்ற இன்ற கம்யூனிசத்தின்கொள்கைகளுக்கு அன்றைக்கே உரமிட்டு அதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர்கள்….. நம் முன்னோர் களப்பிரர்கள்,

ஆம் எந்த மன்னர்களின் காலம் இந்த மண்ணின் இருண்ட காலம் என்றார்களோ அந்த களப்பிரர்களின் காலம்தான்….. ஒரு சிறிய திருத்தம் இங்கு...களப்பிரர்களி­ன் காலம் இருண்ட காலம்தான்...யாருக்கு­?

காலம் காலமாக கல்லயெல்லம் காட்டி கடவுள் என்று சொல்லி எம் மக்களை யார் சிந்திக்க விடாமல் செய்தார்களோ அவர்களுக்கு..!! பிரம்ம­தேயம் என்ற பெயரில் விவசாய நிலங்களை வளைத்துப்போட்டு கொண்டவர்களுக்கு..!!  தம் இச்சைகளை தனித்துக் கொள்ள தமிழ் அரசர்களுக்குள் பகை மூட்டி அதன் மூலம் குளிர் காய்ந்தவர்களுக்கு..!!பார்பனர்களுக்கு சோழர்களும்,பாண்டியர்­களும்,போட்டி போட்டு நிலங்களை வாரிவழங்கியபோதுஅந்த நிலங்களை மீட்டெடுத்து அதை மக்களுக்கே திருப்பி கொடுத்தவர்கள் களப்பிரர்கள்பார்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்றபோதுகல்வியை மூன்றாம் நூற்ற்றண்டிலேயே அனைவருக்கும் பொதுவாக்கியவர்கள் களப்பிரர்கள்,  மற்ற மன்னர்கள் கோயிலையும்மடங்களையு­ம் கட்டிக்கொண்டிருந்த போதுபக்தி என்ற பெயரால் ஏமாற்றப்பட்டிருந்த மக்களுக்கு விழிப்புணர்வை கல்வியின் வாயிலாக வழங்கியவர்கள் களப்பிரர்கள்....!!


சீவக சிந்தாமணிமுதுமொழிக் காஞ்சியைக்கொடுத்தவர்கள்கார் நாற்பது,  களவழி நாற்பதுஇனியவை நாற்பது,  திரிகடுகம்ஏலாதி அந்தாதிதிருக்குறள் இப்படி எண்ணற்ற பல நூல்களை தமிழுக்கு அளித்தவர்கள் களப்பிரர்கள்மேலும் வட்டெழுத்தை உருவாக்கி  நம் தமிழுக்கு வடிவத்தை கொடுத்தவர்கள் களப்பிரர்கள்..!!  பின்பு ஏன் அவர்களின் காலம் வரலாற்றில் இருண்ட காலமாக பதிவு செய்யப்பட்டது.....??­?? முதல் காரணம் அவர்கள் முத்தரையர்கள்அடுத்த­ காரணம் பார்பனர்களை எதிர்த்தது...!!

இதன் வெளிப்பாடுதான்வரலாற்றை எழுதிய பார்ப்பான் நமக்கு கொடுத்த பரிசு இருண்டகாலம்..!! ஆரியனுக்கு மண்டியிட்டு எவனெல்லாம் இந்த மண்ணை ஆண்டானோ அவனது ஆட்சி அனைத்தும் பொற்காலம்ஆரியனை எதிர்த்து இம் மண்ணின் மைந்தர்களுக்காகஅவர்களது விடுதலைக்காகதமிழ் ஏற்றத்திற்காக உதவியவர்கள் காலம் வரலாற்றின் இருண்ட காலம்..!! இதுதான் தமிழனின் வரலாறு எழுதப்பட்ட முறை...!!!
ஆனால் 5 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட வரலாற்றை இன்றைக்கு வரைக்கும் நம்மால் மாற்ற முடிய வில்லை... உண்மை நிலையை எடுத்துக்கூறும் வழி முத்தரையருக்கு தெரியவில்லை, களப்பிரன்தான் முத்தரையன் என்பதே மாற்றான் சொல்லித்தான் அறியும் நிலையில் இன்றைய களப்பிர வம்சம் இருக்கின்றது....!!

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது பழமொழி ஆனால் பசித்தபோதும் மாற்றானிடம் உணவுக்காக மண்டியிடாதவன் முத்தரையன்இதை யார் சொன்னதுசமணர்கள்... நாலடியாரிலே 296 வது பாடலிலே 'நல கூர்ந்தார் கண்ணும் பெரு முத்தரயரே செல்வரை சென்று இரவாதவர்என்று எம் இனத்தின் பெருமையை அன்றைக்கே பறைசாற்றியுள்ளது நாலடியார். (வேறு எந்த சாதிக்கேனும் நாலடியார் இடம் கொடுத்துள்ளதா ?? )  இப்படி வரலாற்றுப் பெருமைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள முத்தரையர்களின் தற்கால நிலை என்னகோட்டை கட்டி ஆண்ட இனம் இன்று குடிசைக்குள் முடக்கப்பட்டுள்ளதே இது தற்செயலாக நடந்ததா...? இன்றைய தமிழகத்தின் வளம் கொழிக்கும் டெல்டா பகுதிகள் ஒரு காலத்தில் காடாகவும்மேடாகவும் கிடந்த போது அதை சரிசெய்து விவசாயப்பரப்பாக மாற்றியவர்கள் குறுநில முத்தரையர்கள்இப்படி தமிழ் உலகிற்கே சோறு போட்டவர்களுக்கு இன்று தமிழக அரசு சோறு போடுகின்றது செய் நன்றி மறவாமல் ரேஷனின் மூலம்..!!!

 வரலாற்றிலே பெயரே இல்லாத சமூகமெல்லாம் இன்றைக்கு பேரினமாக தம்மை அடையாளப் படுத்திக்கொள்ளும்போது தமிழ் வரலாற்றை உருவாக்கிய முத்தரையர்கள் எந்த நிலையில் உள்ளார்கள்தம் உறவுகள் எங்கெங்கு இருக்கின்றார்கள்எந்த நிலையில் இருக்கின்றனர்என்ன பெயரில் இருக்கின்றனர்என்று எத்தனை முத்தரையனுக்கு தெரியும்முத்தரையர் சாதி என்பது திருச்சியிலும்புதுக்கோட்டையிலும்கீழத் தஞ்சையிலும் மட்டுமே பரவி வாழும் ஒரு சமூகமாக மட்டுமே பார்க்கப்படுகின்றது...உண்மை என்ன?

முத்தரையர்களே இல்லை என்று கருதப்பட்ட வட மாவட்டங்களிலே இன்றைக்கு 24 லட்சம் முத்தரையர்கள் வாழுகின்றனர் என்ற உண்மைத்தகவல் எத்தனை முத்தரையர்களை சென்று சேர்ந்துள்ளதுவட மாவட்டங்களிலே காவல்காரனாகவேட்டைக்காரனாகவேட்டுவனாகபாளையக்காரனாகநாயுடுவாக -முத்துராஜா நாயுடுநாயக்கனாக -முத்துராஜா நாயக்கனாகதலையாரியாகலட்சக்கணக்கிலே வாழும் ஒரு பெருங்கூட்டம்...முத்தரையர்கள்.

மத்திய மாவட்டத்தில் அசைக்க முடியாத மிகப்பெரும் சக்தி முத்தரையர்கள்தென் மாவட்டங்களில் அஞ்சாமல் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வீரப்பரம்பரை எம் வலையர்கள்மதுரை பகுதியில் மூர்க்ககுணத்தோடு வாழும் மூப்பனார்கள் அவர்களும், எம் மேற்கு மாவட்டத்திலே வாழும் வேட்டுவர்கள் அவர்களும் எம் இனமே…!!!

அரசியலாக்கப்பட்டுள்ள திராவிடம்மார்க்சியம்தமிழ் தேசியம்மதவாதம் போன்றவற்றுக்கு தொடர்ச்சியான ஆதரவினை தருபவர்கள் முத்தரையர்கள்ஆனால் முத்தரையர்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரும் அரசியல் கட்சிகளுக்கு அமரும் வரை எம் ஆதரவு தேவைஅமர்ந்த பின்பு முத்தரையர்கள் பெயரைக் கேட்டாலே தொல்லைஇது இன்று நேற்று அல்லகாலம் காலமாக தொடருவது... வாக்கு வங்கிகளாகவே எம் மக்களை பார்த்துப் பழக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குஎம் இனத்திற்கு சம உரிமை வழங்குவதை ஏனோ சகித்துக்கொள்ள முடியவில்லை...!!!

சிறுபான்மை சாதிகளுக்கு அமைச்சரவையிலே கொடுக்கப்படும் இடங்களில் பாதி அளவு கூட எமக்கு சட்டமன்றத்திலே கொடுக்கப்படுவது கிடையாதுகாரணம் சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாமல் முத்தரையர்கள் வாழ்ந்து வருவதுதான்...சில குறிப்பிட்ட சாதிகளின் அரசியல் சுய லாபத்திற்கு பகடைக்காயாகவே வாழ்ந்து கெட்ட சாதி தமிழ் முத்தரையர் சாதிஊறிப்போன திராவிடச் சிந்தனையிலிருந்தே வெளி வரத்தெரியாமல் காலம் காலமாக ஆதிக்க சாதிகளுக்கு அடிமைப்பட்டே கிடக்கும் சாதி தமிழ் முத்தரையர் சாதி... அதிகாரம் என்றால் என்னவென்றே அறிந்து கொள்ளாமல் அழிந்து கொண்டிருக்கும் சாதி முத்தரையர் சாதி.

வரலாற்றுப் பெருமையை வானளவு கொண்டுள்ள நாம் இனி ஒருபோதும் மண்டியிடக்கூடாதுமுத்தரையர்களின் வரலாறு என்பது முத்தரையர்களால் எழுதப்பட்டது கிடையாதுநடுவுநிலை கொண்ட நல்லவர்களால் எழுதப்பட்டதுஅதுதான் நம் பலம்எந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு இது நாள் வரை நம்மை சில பேர் அடக்கிவைத்திருந்தார்களோ அதே அதிகாரத்தை நாம் மீட்டெடுப்போம்….! அரசியல் சக்தியாக அவதரிப்போம்…!! அதிகாரத்தை மீட்டெடுப்போம்...!!!

மண் ஆண்ட முத்தரையர் வம்சம் மீண்டு(ம் ) நாடாளப் புறப்படுவோம்....! இறக்கிய சிங்கக்கொடியை மீண்டும் ஏற்றிடுவோம்எந்த மண்ணிலே நாம் பெரும்பான்மையோ அந்தமண் நமக்குரியதுஆதிக்கம் செய்வது நம் நோக்கமல்ல அதிகாரத்தை கைப்பற்றுவதே நம் நோக்கம் அய்யா வெங்கடாசலனார்அண்ணன் நேரு போன்றோரின் உயிர் எந்த ஏக்கத்தில் பிரிந்ததோஅந்த ஏக்கத்தை இனியும் நாம் வளரவிடல் கூடாதுநாம் சாதிய ஆதிக்கத்தை ஒருபோதும் ஆதரித்தது கிடையாதுஆதரிப்பதும் கிடையாதுஆனால் நம்மை அடக்கி அடுத்தவர்கள் நம்மை ஆதிக்கம் செய்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதுநாம் முத்தரையையும் வென்றாண்ட வீர முத்தரையர் வம்சம்…!!  கட்டற்ற வீரம் கொண்ட வீரக்களப்பிற வம்சம்..!!! நம் இன விடுதலை நோக்கி,இப்போதே புறப்படுவோம்... !!!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைதான் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்இனி நம் பயணம் அரசியல் அதிகாரத்தை நோக்கியதாக அமையட்டும்அரசியல் அதிகாரம் அது ஒன்றே நம் இலக்கு...!!!!
மறந்து விடாதீர்கள் நாம் முத்தரை வென்றாண்ட வீரக் களப்பிர வம்சம்...!!!!

எழுத்து : துரைராஜகுமாரன் வடகாடு