Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 29 ஜனவரி, 2014

இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல...! அது நமது உரிமை...!!

நேற்றையதினம் "தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்" சார்பில் முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுவதையும், அதில் மிகஅதிக அளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள், ஏற்கனவே 3.5% தனி இடஒதுக்கீடு உள்ள முஸ்லீம் சமூகம் மேலும் இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டக்களத்தில் இருக்கிறது, ஆனால் போராட வேண்டிய நாமோ..............? நல்ல உறக்கத்தில் இருக்கிறோம்.

    நம்முடைய சமூகத்திற்க்கு 108 சாதிகளை இணைத்து பொத்தாம்பொதுவாக 20% இடஒதுக்கீடு (முத்துராஜாக்கள் தவிர்த்து) அதில் பெரும்பாலான சலுகைகளை வன்னியர் மற்றும் கள்ளர் சமூகங்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறது, நமக்கு தனித்த இட ஒதுக்கீடு மிகவும் அவசியம், சில நண்பர்கள் நாம் ஆண்ட இனம் நமக்கு எதற்க்கு இடஒதுக்கீடு என்று கேட்கலாம், முதலில் சமகாலத்தில் என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ளுங்கள், நாம் இந்தியா என்னும் கூட்டாட்சி நாட்டில் வசிக்கிறோம், இந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறையாக "இடஒதுக்கீடு" இருக்கிறது, இடஒதுக்கீடு முறை இங்கு இல்லாமல் இருக்குமேயானால் நமக்கும் அது தேவையில்லை, அல்லது ஆண்ட சமூகமாக நம்மை அங்கிகரித்து ஆட்சிபொறுப்பை நம்மிடம் ஒப்படைப்பார்களேயானால் நாம் இடஒதுக்கீடு கேட்க வேண்டியதில்லை ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்பட வாய்பில்லாதபோது எது சாத்தியமானதோ, எது நடைமுறையில் இருக்கிறதோ அதை தழுவி நாமும் பயணப்படுவதுதான் புத்திசாலிதனம்,  

    1980 க்கும் 1990 க்கும் இடப்பட்டகாலத்தில் "வன்னியர் சங்கம்" நடத்திய வடமாவட்டங்களை முடக்கிப்போட்ட ஒரு போராட்டத்தை நடத்தியதால் நமக்கு பத்தோடு பதினொன்றாக இன்று இடஒதுக்கீடு கிடைத்துக்கொண்டு இருக்கிறது,  மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் நமது சமூகத்திற்க்கு கிடைக்கவேண்டிய பங்காகதான் 15% இடஒதுக்கீட்டை கேட்டு நாம் போராட வேண்டும் என்று நம்மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கிறோமே தவிர சும்மா கேட்கவில்லை, இடஒதுக்கீடு எபது பிச்சையல்ல...! அது நமது உரிமை...!!

## இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல...! அது நமது உரிமை...!!


செவ்வாய், 28 ஜனவரி, 2014






தமிழ்நாடு முத்தரையர் சங்க ஆலோசனை கூட்டம்

கரூர், : தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மற்றும் நமது மக்கள்கட்சி ஆலோசனைக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராசன், முன்னிலை வகித்தார். கரூர் மாவட்டத் தலைவர் சபரீசன் வரவேற்றார். கரூர் மாவட்ட செயலாளர் வெங்கட், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, கவிஞர்மாரியப்பன், கல்யாணசுந்தரம். பழனிசாமி, வீரணன், ராமர், ராஜா, தங்கவேல், ஜெகதீசன், மனோகரன், கிருஷ்ணன், ஆனந்த், குமரேசன், சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் போட்டியிடுவது, நமது மக்கள்கட்சிக்கு உரிய மரியாதை கொடுத்து மக்களவை தேர்தலில் உரிய தொகுதிகளை வழங்க முன்வரும் அரசியல் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச 9நபர் கொண்ட குழுஅமைப்பது, கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகள் தராத பட்சத்தில் பாண்டிச்சேரி உள்பட 40தொகுதிகளிலும் போட்டியிடுவது, சென்னையில் நடைபெறும் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : DINAKARAN

வெள்ளி, 17 ஜனவரி, 2014

திருச்சி அருகே மக்கள் மறுமலர்ச்சி மன்றம் சார்பில் பொங்கல் விழா

திருச்சி, ஜன. 16–

திருச்சி வரகனேரி சாலை செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் மற்றும் முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனபால், பொருளாளர் சண்முகம், செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். முத்தரையர் இலக்கிய வட்ட அமைப்பாளர் முனைவர் சந்திரசேகரன் வரவேற்றார். கவிஞர்கள் இளங்கோவன் செல்வராசன் சொற்பொழிவாற்றினர்.

விழாவில் நாடார் இன மக்களின் வீர எழுச்சி முத்தரையர் சமுதாய வரலாறு ஆகிய நூல்களை வெளியிட்ட சமூக சேவகர் டாக்டர் ஜான் ராஜ்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் வக்கீல் செல்வராஜ் நன்றி கூறினார்.

News Source : MALAIMALAR

மறுக்கப்படும் சமூக நீதி...! கேட்க நாதியற்ற சமூகங்கள்...!! - தினமணி


பிரச்னையாகி இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இப்போது உச்சநீதிமன்றம்வரை சென்றுவிட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தியின் மனு மீதான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனப் பரிந்துரைப் பட்டியலின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை ரத்து செய்து, இந்தப் பிரச்னையை உச்சநீதிமன்றமே விசாரிக்கத் தீர்மானித்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கான 60 நீதிபதிகளில், தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய 12 நீதிபதிகளின் நியமனத்திற்கான பட்டியல் நீதிபதிகளின் "காலேஜியம்' என்று அழைக்கப்படும் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அகர்வாலின் தலைமையிலான நீதிபதிகள் நியமனக் குழு (காலேஜியம்) பரிந்துரைத்திருக்கும் 12 பேரின் பெயர்களும் நீதிமன்ற வளாகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்படாத குறையாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

புகழேந்தி, வாசுதேவன், ராஜசேகரன், ரவிக்குமார், கிருஷ்ணகுமார், சுந்தர், ஸ்ரீகாந்த், அப்துல் குதூஸ், ஜாபருல்லா கான், கலையரசன், ராஜதுரை, நிர்மலா ராணி ஆகிய 12 பேரில் வாசுதேவனும், கிருஷ்ணகுமாரும் கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள். இவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அல்ல. ஏனைய இருவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு வாதாடுவதில்லை என்பது சிலரது குற்றச்சாட்டு.

என்னதான் பிரச்னை?
சமூக நீதி பேணப்படவில்லை, எல்லா ஜாதிப் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதுதான் வழக்குத் தொடுத்திருக்கும் மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தியில் தொடங்கி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலருடைய குற்றச்சாட்டு.

அரசியல் சட்டப்படி ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு என்பது நீதிபதிகள் நியமனத்தில் கிடையாது என்பதைத் தனது மனுவில் ஏற்றுக் கொள்ளும் வழக்குரைஞர் காந்தி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பட்டியலில் மூன்று பிராமணர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி மரபு இந்தப் பட்டியலால் மீறப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் அவர்.

இதன் பின்னணியில் வேறு பல லாபிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ""சென்னை உயர்நீதிமன்றம் என்று சொன்னாலே, ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் சமூகத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள உயர்நீதிமன்றம் என்கிற பெயர் நெடுங்காலமாக உண்டு. அந்த சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகள் குறைந்தது ஐந்தாறு பேராவது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார்கள். சமீபகாலமாக அவர்களது எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டிருப்பதும்கூட, இந்தப் பிரச்னை கிளப்பப்படுவதற்குக் காரணம்'' என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர்.

""ஜாதிய ரீதியாகப் பார்த்தால், தமிழகத்தில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் மட்டுமே இருக்கிறார். மீனவர், முத்தரையர், அருந்ததியர் போன்றவர்கள் நீதிபதிகளாக இல்லை. நீதிபதி நியமனத்தில் ஜாதியையும் மதத்தையும் இழுப்பது ஆபத்தானது. தகுதி மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்'' என்று பல வழக்குரைஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும், பணியிடச் சூழல் காரணமாகத் தங்கள் பெயர் வெளியிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

பட்டியல் வகுப்பினரின் ஆதங்கம்
முன்பெல்லாம் எந்தவொரு நீதிபதிகள் நியமனத்திற்கான பட்டியல் பரிந்துரைக்கப்பட்டாலும், அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்தப் பட்டியலில் தங்களுக்கு இடமில்லை என்பதுதான் பட்டியல் வகுப்பினரின் குமுறலுக்குக் காரணம் என்கிறார்கள்.

""அவர்களுடைய கோரிக்கையில் நியாயமே கிடையாது. இதற்கு முன்னால் உச்சநீதிமன்றமே அவர்களுக்கு சாதகமாக இருந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்தனர். இப்போதேகூட நீதிபதிகளில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் அவர்கள்தான்'' என்கிறார் வழக்குரைஞர் தாமஸ்.

பட்டியல் இனத்தவர்களில்கூட, அதிகமாக ஆதிதிராவிடர்கள்தான் நீதிபதி நியமனங்களைப் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது. அருந்ததியர் யாரும் இதுவரையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளானதில்லை என்று கூறப்படுகிறது.

அப்துல் குதூஸூக்கு எதிரான நிழல் யுத்தம்?

பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து அப்துல் குதூஸின் பெயரை அகற்ற வேண்டும் என்பதில் ஒரு "லாபி' குறியாக இருப்பதாகத் தெரிகிறது. நேர்மையானவர், விஷயம் தெரிந்தவர், நியமிக்கப்பட்டால் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றுவார் என்று பரவலாகப் பாராட்டப்படும் அப்துல் குதூஸ், நீதிபதியானால் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக வருங்காலத்தில் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படியே ஆகாவிட்டாலும் "காலேஜியம்' எனப்படும் மூத்த நீதிபதிகளின் குழுவில் கட்டாயம் இடம் பெறுவார். அவர் பட்டியலில் இடம் பெறுவதைப் பலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

""நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும், எல்லா சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கும் நியமனத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது இந்தியா முழுவதிலுமான நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொள்கைத் தொடர்பானது. இது சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரச்னை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.

அகில இந்திய அளவிலான போராட்டமாக இல்லாமல், இங்கே மட்டும் இந்தக் கோரிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்படுவதும், பின்னால் அமுங்கிப் போவதும், இது ஒருவகை லாபியோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. நீதிபதிகள் நியமனப் பட்டியலில் இடம் பெறாத அல்லது மேலும் இடம் கேட்கும் வகையுள்ள பிரிவினரின் (க்ரீமிலேயர்) வெளிப்பாடாகவும் அழுத்தமாகவுமே இது காட்சியளிக்கிறது'' என்கிறார் 18 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞராகப் பணியாற்றும் ம. பாரி.

""நேர்மையான, சட்ட அறிவு மூப்புடைய வழக்குரைஞர்களின் பட்டியலை வெளிப்படையாகத் தயாரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் காலேஜியத்திடம் அந்தப் பட்டியலை பார் கவுன்சிலோ, வழக்குரைஞர்கள் சங்கமோ அளிப்பதுதான் சட்டத்திற்கு உட்பட்ட வெற்றிக்கான வழி'' என்கிறார் அவர்.

சமூக நீதி என்கிற பெயரில் நடத்தப்படும் போராட்டமா அல்லது தங்களது பெயர் பட்டியலில் இடம் பெறாததால் ஏற்பட்ட வெறுப்பிலும் ஆத்திரத்திலும் சிலர் பின்னணியில் இருந்து தூண்டிவிடும் போராட்டமா என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. இதற்குப் பின்னணி இருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபற்றித் தெரிவித்திருக்கும் கருத்து- ""மகேஷ் சந்திர குப்தா இந்திய அரசிற்கு எதிராகத் தொடுத்த வழக்கின்படி, நீதிபதி நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயரை அவர் தகுதியுடையவரா என்று மறு ஆய்வுக்கு உட்படுத்துவது சாத்தியமில்லை. உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் ஆர். காந்தியின் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது''.

ஒருவேளை பட்டியலிலிருந்து யார் பெயராவது நீக்கப்பட்டு சேர்க்கப்படும் பெயர் எது என்று தெரிந்தால், இந்தக் குழப்பத்தின் பின்னணியில் இருந்தது யார் என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும்.

யார் அந்த 12 பேர்?
  1. புகழேந்தி
  2. வாசுதேவன்
  3. ராஜசேகரன்
  4. ரவிக்குமார்
  5. கிருஷ்ணகுமார்
  6. சுந்தர்
  7. ஸ்ரீகாந்த்
  8. அப்துஸ் குதூஸ்
  9. ஜாபருல்லா கான்
  10. கலையரசன்
  11. ராஜதுரை
  12. நிர்மலா ராணி
நீதிபதிகள் தேர்வு முறை
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், நீதிபதிகளும் அரசியல் சட்டப்பிரிவு 217இன் கீழ் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். ஒரு நீதிபதியின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அந்தக் காலியிடத்துக்கான நீதிபதி நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஆறு மாதத்திற்கு முன்பே அது தொடர்பான நடவடிக்கையை முடுக்கிவிட்டு, அவரால் தேர்வு செய்யப்படும் நபரைப் பற்றி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.

நிரப்பப்பட வேண்டிய பதவிக்கு ஒருவரைப் பரிந்துரைக்கும் முன்னால், தலைமை நீதிபதி இரண்டு மூத்த நீதிபதிகளிடம் பரிந்துரைக்கப்படுபவர் பற்றிய கருத்தை எழுத்துமூலம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வருக்கு அனுப்பும் தகவலுடன் மூத்த நீதிபதிகளின் கருத்தும் இணைக்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர் தொடர்புடைய முக்கியமான வழக்குகள், அவர் பெற்ற தீர்ப்புகள், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடியதற்கான சான்றுகள் போன்றவையும் இணைக்கப்பட வேண்டும். முதல்வர் யாரையாவது பரிந்துரைக்க விரும்பினால் அவரது கருத்தை தலைமை நீதிபதிக்குத் தெரிவிக்கலாம்.

மாநில ஆளுநர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான இந்தப் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்புவார். ஆறு வாரங்களில், பரிந்துரைக்கப்பட்டவர் பற்றிய தகவல்களை எல்லாம் தீர ஆராய்ந்து, அதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பும்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகளின் கருத்தைக் கேட்டுப் பெற்றுத் தனது பரிந்துரையுடன் மீண்டும் சட்ட அமைச்சகத்திற்கு நான்கு வாரத்தில் அனுப்பி வைப்பார். அத்தனை ஆலோசனைகளும் பரிந்துரைகளும் எழுத்துமூலம் இருக்க வேண்டும். அடுத்த மூன்று வாரத்தில் சட்ட அமைச்சகம் அதில் தேர்வு செய்யப்பட்ட பெயர்களைப் பிரதமரின் பார்வைக்கு வைக்கும். பிரதமர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு நியமனம் அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி 12 பேரின் பெயர்களை முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பட்டியல் ஆளுநர் மூலம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டு விட்டது. சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருக்கும் பெயர்கள் கசிந்துவிட்டதால் (கசிய விடப்பட்டதால்?) ஏற்பட்டிருக்கும் பிரச்னைதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறையை முற்றுகை இடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது.

 News Source : DINAMANI

சனி, 11 ஜனவரி, 2014

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!!



செவ்வாய், 7 ஜனவரி, 2014

தமிழகத்தின் விளையாட்டு துறை..!

தமிழகத்தின் விளையாட்டு துறை..!
 
      பாழடிக்கப்படும் பலத்துறைகளில் முதன்மையானது "தமிழக விளையாட்டு துறை" என்றால் மிகையாகாது. ஏன் இந்த நிலை.. ? விளையாட ஆள் இல்லையா... ? ஆள் இருந்தாலும் திறமை இல்லையா... ? எல்லாமும் இருக்கிறது பிறகு ஏன் விளையாட்டு துறை முடங்கி கிடக்கிறது... ? காரணம் மிக எளிது.. இது திறமையாக நிர்வகிக்கபடவில்லை...ஏன் ? என்றால் மூன்று மாதத்திற்க்கு ஒரு அமைச்சர் இது என்ன துறை என்றே தெரியாமல் பதவிக்கு வருவதும், போவதுமாக இருந்தால் எப்படி உருப்படும்.. ? அதுமட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் என்று தனிதனி சங்கங்கள் இருக்கிறது, இதில் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், ரவுடிகளும்... இந்த சங்கங்கள் மாநில அளவில் மாவட்ட அளவில் என்று இருந்தாலும் எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை... அத்தோடு இந்த விளையாட்டு சங்கங்கள் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை... ஆனால் விளையாட்டுகள் அனைத்தும் இந்த சங்கங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது,
 
     மேலும் சொல்லவேண்டுமானால் இந்த சங்கங்கள் அனைத்தும் சில ஆதிக்க சாதிகளின் கையில் இருக்கிறது, (குறிப்பாக கிரிக்கெட், கபாடி விளையாட்டுகள்) இவர்கள் ஜாதிக்கு போக மிச்சம் இருந்தால், (அது பெரும்பாலும் இருப்பதில்லை..) மற்றவர்களுக்கு வாய்ப்பு,  இவர்களை தாண்டி திறமையானவர்கள் யாரும் வெளியில் வந்துவிட முடியாது அது எவ்வளவு திறமையாக இருந்தாலும்...!!

      இந்த நிலை மாற வேண்டுமானால் இந்த சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு ஒரே ஆணையமாக மாற்றி சகாயம் போன்ற திறமையான அதிகாரிகளை கொண்டு சில ஆண்டுகள் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதில் கிரிக்கெட், கபாடி, டென்னிஸ், செஸ், கேரம் என்று எந்த விளையாட்டுக்கும் தனிச்சிறப்போ, அல்லது தனியாக செயல்பட அனுமதியோ தரப்படக் கூடாது. பள்ளிகள் அனைத்திலும் கட்டாயம் உடற்கல்வி ஆசிரியரும், தினசரி விளையாட்டுக்கென ஒரு பாடவேளையும் மிகவும் அவசியம் அருகாமை மாநிலமான கேரளம் போல ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளை நடத்தி ஆண்டுக்காண்டு ஒட்டுமொத்த ஜாம்பியன் பட்டத்தை மாவட்டங்களுக்கு வழங்கி போட்டி மனப்பான்மையை உருவாக்க வேண்டும் திறமைக்கு வாய்பளிக்க வேண்டும், இதையெல்லாம் எந்த சுய நலனும் இல்லாமல் ஒரு அமைச்சர் கண்காணிக்கவும் வேண்டும்..
 
## இப்படி நடக்காவிட்டால் தொலைகாட்சியில் திறமையானவர்களை பார்த்து பெருமூச்சு விட்டு தமிழினம் ஆறுதல் தேடிக்கொள்ளலாம்...
 
ஓடி விளையாடுமா...?? தமிழினம்.. !!!
 
 
- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.

திங்கள், 6 ஜனவரி, 2014

முத்தரையர் உறவின்முறை சங்கம்

முத்தரையர் உறவின்முறை சங்கம்

மாற்றம், முன்னேற்றம், ஒற்றுமை என்று தொடர்ந்து நாம் பேசியும், எழுதியும் வருகிறோம் இதற்க்காக ஆக்கப்பூர்வமான எதாவது செய்ததுண்டா... ? ஒரு வகையில் நம்முடைய பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, நம்முடைய கடமையை செய்யாமல் இருக்க இனத்தின் மூத்த தலைவர்களை குறை கூறிக்கொண்டே இருக்கிறோம் ஆனால் நாம் செய்யவேண்டிய குறைந்த பட்ச பணிகளைக் கூட செய்வதில்லை...!.... நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் முன் வைத்த ஒரு விசயத்தை கடந்த வாரம் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன் இருந்தாலும் வழக்கம்போல சகோதரர் சிங்கதமிழன், மற்றும் தம்பி மகேஷ் தவிர மற்றவர்கள் ஒரு லைக் கொடுத்துவிட்டு போய்விட்டீர்கள்,

மாற்றம் வேண்டும் என்றால் ஒரே நாளில் நம்முடைய எந்த முயற்சியும் இல்லாமல் ஏற்பட்டுவிடாது என்பது நீங்கள் அறியாதது அல்ல, ஆனால் துரதிஷ்டவசமாக அப்படியான மாற்றத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம், இது வழக்கமாக தமிழ் சினிமாவில் கதாநாயகன் இரண்டு மணி நேரத்தில் அடையும் வளர்ச்சியைப்போன்றதாக இருக்கவே நம்மில் பலரும் நினைக்கிறோம், நூற்றுக்கணக்கான இனங்கள் இங்கே நம்மோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள், அதில் பலரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒராயிரம் விசயங்கள் இருக்கிறது, உதாரணத்திற்க்கு இங்கு இரண்டு, மூன்று சமூகங்களை எடுத்துக்கொள்கிறேன், முதலில் கள்ளர் சமூகம் ஒற்றுமை என்பதற்க்கு அடையாளமாக இருக்கிறது, நல்லவர்களா..? கெட்டவர்களா ?? என்ற ஆராய்ச்சியைவிட அவர்கள் அமைப்புமுறையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும், அவர்களிடம் பெரும்பாலும் பங்காளி சண்டைகள் அதிகம் என்றாலும் அவர்களிடம் இருக்கும் அமைப்பு வலுவானது. (இதுபோன்ற அமைப்பு முறையை கொண்ட வடமாநில ஜாட் இனத்தை பற்றி ஏற்கனவே ஒரு பதிவிட்டு இருக்கிறேன் தேடிப் பாருங்கள்)

கள்ளர்கள் வாழும் பல ஊர்கள் இணைந்தது ஒரு நாடு எனவும், பல நாடுகள் இணைந்தது ஒரு கோட்டம் () வளநாடு என்றும், பல கோட்டம் () வளநாடு இணைந்தது ஒரு மண்டலம் என்றும் அமைப்பு இருக்கிறது, இதில் பல ஊர்கள் இணைந்த நாட்டுக்கூட்டத்திற்க்கு தலைவரையே "அம்பலம்" என்கிறார்கள். பெரும்பாலான நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளை நாட்டுக்கூட்டத்தின் தலைவர்கள் கூடி பேசி தீர்வினை காணுகின்றார்கள், இதில் பெரும்பாலும் பிரச்சனைகளை தீர்ப்பதும், பிரச்சனை வராமல் தடுப்பதும்தான் இந்த அமைப்பின் பலன், இந்த அமைப்பு முறையை இவர்கள் நீண்டகாலம் வைத்துள்ளதால் ஒட்டுமொத்தமாக இனத்திற்க்கு வரும் பிரச்சனைகளை எளிதான கையாள முடிகிறது.

ஆனால் இதைவிட சிறப்பான, வலுவான அமைப்புமுறைதான் " நாடார் உறவின் முறை சங்கம்" என்பது, கடந்த நூறு வருடங்களுக்குள்ளாக ஒரு அமைப்பாக திரளவும், யாருமே எதிர்பாராத அளவிற்க்கு இந்த சமூகம் அசூர வளர்ச்சியடையவும் இவர்கள் அமைத்த "உறவின் முறை சங்கங்கள்" தான் காரணம், இன்னும் நாம் நம்மிடையே இருக்கும் குறைகளைப் பற்றி, உட்பிரிவுகளின் உயர்வுதாழ்வு பற்றி பேசிக் கொண்டு திரிகிறோம். இதே நிலை நீடித்தால் இன்னும் நூறு வருடங்களுக்கு நாம் வெறும் வாய்சொல் வீரர்களாய்தான் இருப்போமே தவிர வளர்ந்த சமூகமாக இருக்க மாட்டோம். வளர்ச்சியை எப்படி ஏற்படுத்துவது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டுமே தவிர நமக்காக யாரோ சிந்தித்து நம்மை வளர்த்துவிட வர மாட்டார்கள், இந்த உறவின் முறை சங்கங்கள் தோற்றிவித்ததுதான் இன்று தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கிளை பரப்பி நிற்க்கும் "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி" அந்த சமூகத்திற்க்கு மட்டுமே உரியதாக இருக்கிறது அந்த வங்கியின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் பணப்பரிவர்த்தனை 13 ஆயிரம் கோடி ஆகும். இது வெறும் வாய்ப்பேச்சால் வந்ததல்ல….. உழைப்பு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை இவற்றிற்க்கு கிடைத்த வெற்றி..!

இதே போன்றே வெறும் பத்து கிராமங்களில் வசிக்கும் நம் மக்களின் எண்ணிக்கையின் அளவுகூட இல்லாத ஒரு சமூகம் " நாட்டுக்கோட்டை செட்டியார்கள்", ஆம் நாட்டுக்கோட்டை (அ) செட்டிநாட்டின் வெரும் 76 கிராமத்திலிருந்து புறப்பட்ட ஒரு இனம்தான் இன்று தமிழகத்தின் பெரும் நிலங்களை தங்கள் வசம் வைத்துள்ளது அதுமட்டுமா..? இந்திய நிதித்துறையே (ப.சிதம்பரம்) அவர்களிடம்தான் இருக்கிறது, இவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமானால் இந்த கட்டூரை போதாது, உதாரணத்திற்க்கு அண்ணாமலை பல்கலைக் கழகம் தோற்றிவித்தவர்கள் இவர்கள்தான், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானமும் இவர்கள் உருவாக்கியதுதான். நம்முடைய சரித்திரத்திலிருந்துதான் நாம் எதுவும் கற்கவில்லை, சரி சக சமூகங்களில் இருந்து எதை நாம் கற்றோம் ?

பெருமைக்காக வாழ்வது வேறு, பெருமைப்பட வாழ்வது என்பது வேறு, நேரடியாகவே கேட்கிறேன் " நீங்கள் யார்?" யாரிடமாவது பதில் இருக்கிறதா...? இதற்க்கு பதிலை நாம் இன்னும் ஆயிரத்தி முன்னூறு வருடங்களுக்கு முன்பான நம் வரலாற்றை சொல்லிக்கொண்டு வாழ்கிறோம், "வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது தற்போதைய வரலாறு" என பிரிமென் என்ற அரசியல் அறிஞர் சொல்கிறார் ஆக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயங்கக்கூடாது, இன்றைய செயல்கள்தான் நாளைய வரலாறு.
 
நம்மால் என்ன முடியுமோ அதைதான் நான் செய்யச் சொல்கிறேனே தவிர, முடியாத விசயத்தை அல்ல நீங்கள் வசிக்கும் தெருவிலோ, கிராமத்திலோ இணைய முடியாமல் உலகம் முழுவதும் இணைந்து செயலாற்ற நினைப்பது எவ்வளவு சரி என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். எப்படி இதனை கட்டமைப்பது என்பதைப்பற்றி விரிவான ஒரு பதிவினை தனியே பதிவிடுகிறேன், அதில் இருக்கும் நிறைகளை எடுத்துக்கொண்டு குறைகளை சொல்லுங்கள், நாமும் ஜெயிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்...
 
என்றும் உங்கள்
 
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்