Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 25 நவம்பர், 2014

பாலமேட்டில் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி விழா

பாலமேடு : பாலமேட்டில் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி விழா நடந்தது.ஒன்றிய தலைவர் சின்னக்காளை தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தனர். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணைத் தலைவர் நாராயணன், நிர்வாகிகள் மகேந்திரன், மாயழகன், தனசேகரன், பெரிச்சி வழங்கினர். நிர்வாகி ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.

News Source : DINAMALAR

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் : முத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, : முத்தரையரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தஞ்சையில் நடந்த மண் டல நிர்வாகிகள் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் 5 மாவட்டங்களின் மண்டல நிர்வாகிகள் கூட் டம் தஞ்சையில் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முருகையன் வரவேற்றார். மண்டல செய லாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை. இதை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு 2 தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்வதை கண்டிப்பது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சையை ஆட்சி செய்த இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்ற சுவரன்மாறன் மன்னருக்கு மாநில அரசு நினைவு சின்னம், மணிமண்டபம் அமைக்க வேண்டும். சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் காலங்களில் முத்தரைய ருக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பாலமுருகன், மாநில அமைப்பு செயலாளர் நாராயண சாமி, பொதுச் செயலாளர் முருகேசன், இலக்கிய அணி செயலாளர் வீரசங்கர், இளைஞர் அணி செயலாளர் தீரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகே சன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பாலாஜி, தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News Source : DINAKARAN

திங்கள், 17 நவம்பர், 2014

ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6


ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
கோகுல் சேஷாத்ரி
முத்தரையர் திருக்கோயில்களில் பாதச் சிற்பங்கள்


காவிரிப் படுகைப் பகுதிகளான தஞ்சை-திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள பண்டைய கற்றளிகள் சில முத்தரையர் காலத்துக் கட்டுமானங்களாக முந்தைய ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பனங்குடி, விசலூர், காளியாப்பட்டி, விரலூர், செந்தலை, நியமம், நார்த்தாமலை முதலான சிற்றூர்களில் அமைந்துள்ள இத்தளிகள் சிலவற்றில் முதன் முறையாக கண்ட - வேதி பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் செதுக்கும் மரபைக் காணமுடிகிறது.

குடைவரைகள், ஒரு கல் தளிகள், கற்றளிகள் என்று மூவகைகளில் திருக்கோயில்கள் அமைத்துப் பெருமை கொண்ட பல்லவச் சிற்பிகளின் கட்டுமானங்கள் எவற்றிலும் காணப்படாத இந்தப் புதிய கலை மரபு தமிழ்நாட்டளவில் முதன்முறையாக அறிமுகமாவது முத்தரையர் காலக் கட்டுமானங்களாக அடையாளப்படுத்தப்படும் திருக்கோயில்கள் சிலவற்றில்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.


செந்தலை விமானம்


இவ்வாறு பாதச் சிற்பங்கள் பெற்ற முத்தரையர் திருக்கோயில்கள் மூன்றாகும்.
இவை
- செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
- நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
- நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்
ஆகிய திருக்கோயில்களாகும்.

இத்திருக்கோயில்களில் அமைந்துள்ள பாதங்கள் மற்றும் பாதக் குறுஞ்சிற்பங்களை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளை அறிய முடிந்தது.


செந்தலை விமானம் மற்றும் மண்டப பாதங்கள்


செந்தலை திருக்கோயிலில் பாதபந்தத் தாங்குதளத்துடன் அமைந்துள்ள விமானத்தின் கண்ட பாதங்கள் சிற்பங்கள் செதுக்கப்பெறாமல் வெறுமையாக அமைந்திருக்க, விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபத்தின் ஒரு சில பாதங்களில் மட்டும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் மண்டபத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் கணிசமாக வேறுபடுகின்றன.

நியமத்தில் விமானத் தாங்குதளம் பாதபந்தமாக அமைந்திருந்தாலும் அவற்றின் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் காணப்படுவதில்லை. தாங்குதளத்திற்கு மேல் அமைந்துள்ள வேதிகைப் பாதங்களில்தான் குறுஞ்சிற்பங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. இம்மூன்று திருக்கோயில்களுள் வேதிகைத் தொகுதி பெற்ற ஒரே திருக்கோயில் நியமம் மட்டுமே.

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரத்தில் விமானத்தைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுச்சுவரின் பாதபந்தத் தாங்குதளக் கண்டபாதங்களிலும் மண்டபத் தாங்குதளப் பாதங்களிலும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மூன்று திருக்கோயில்களுள் சுற்றுச்சுவர் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் பெற்ற ஒரே கோயில் நார்த்தாமலை மட்டுமே.

ஒரே கலை மரபைச் சேர்ந்த திருக்கோயில்களாக அடையாளப் படுத்தப்படும் ஏழு திருக்கோயில்களுள் நான்கில் ஏன் பாதச்சிற்பங்களே இல்லை? மீதமிருக்கும் மூன்றனுள் அமைந்துள்ள பாதச் சிற்பங்களும் ஏன் இத்தனை மாறுபாடுகளுடன் அமைந்துள்ளன ?
News Source : Varalaaru
தவிர்க்க முடியாமல் எழும் இத்தகைய கேள்விகளே புதிய திறப்புகளுக்கு வித்திடுகின்றன.

சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: ஸ்ரீரங்கத்தில் மும்முனை போட்டி?


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இதற்காக, அந்தப் பகுதியின் மக்கள் மனநிலையை அறிய, திராவிடக் கட்சிகளோடு, பா.ஜ.,வும் போட்டிப் போட்டு, களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, சிறை தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதனால், ஏற்கனவே அவர் போட்டியிட்டு வென்ற, ஸ்ரீரங்கம் தொகுதி, காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதமே அங்கு இடைத் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. வரும், 2016ல் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, இந்த தொகுதி இடைத்தேர்தல், முன்னோட்டமாக இருக்கும் என்பதால், ஸ்ரீரங்கத்தில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வும் பா.ஜ.,வும் முனைப்புடன் இருக்கிறது. இதற்காக, தொகுதியில், திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மூலம், மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

சாதுர்யமான செயல்:

இதுகுறித்து தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் என்பது தி.மு.க.,வுக்கு முக்கியமான தேர்தல். தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க., உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியது, சாதுர்யமான செயல் என, தலைமை முடிவெடுத்திருந்தாலும், கட்சியினர் ரொம்பவே சோர்ந்து விட்டனர். இந்த சூழ்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க., குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுகளை வாங்கவில்லை என்றால், கட்சி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதேபோல, ஏதாவது காரணம் சொல்லி, போட்டியிடாமல் ஒதுங்கினாலும், மக்கள் தி.மு.க.,வை முற்றிலுமாக புறக்கணித்து விடுவர். இதை தலைமைக்கு பலரும் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டனர். இதனால், தலைமை ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்டாயம் போட்டியிடுவது என, முடிவெடுத்து விட்டது. தொகுதி எப்படி இருக்கிறது என்பதற்காக, கட்சியினரை விட்டு அவசர அவசரமாக மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கினர். தொகுதியில் பிரதானமாக இருக்கும் முத்தரையர், பிராமணர், தலித் ஆகியோர், தி.மு.க., மீது பரிவுடன் இருப்பதால், மும்முனைப் போட்டியில் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என, சொல்லியிருக்கின்றனர். அதற்காக, தொகுதியில் இருக்கும் முத்தரையர் ஒருவரை வேட்பாளராக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர்.

பா.ஜ., தரப்பில் கூறியதாவது:

ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா தண்டனை அடைந்திருப்பதால், ஊழலுக்கு எதிரான நிலை யில் பா.ஜ., இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக, ஒருவரை வேட்பாளர் ஆக்கினால், கட்சிக்கு இமேஜ் கூடும் என்பதோடு, வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தலைமையின் விருப்பப்படி, இந்த தொகுதியில் இருந்து டில்லி சென்று, தலைமையுடன் இணக்கமாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிர்வாத ஆச்சாரியை வேட்பாளர் ஆக்க, தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக தலைமையும் அதே எண்ணத்தில் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, கட்சியை வளர்க்க முடிவெடுத்திருப்பதால், ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி கட்டாயம் போட்டியிடும்.

பரிதாப உணர்ச்சியுடன்...:

அ.தி.மு.க., தரப்பில் கூறியதாவது: ஜெயலலிதா கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், மக்கள் அவர் மீதும் அ.தி.மு.க., மீதும் பரிதாப உணர்ச்சியுடன் இருக்கின்றனர். கட்சிக்கு அது லாபம். அதேபோல, அ.தி.மு.க., ஆட்சி மீதும் மக்கள் திருப்தியுடன் இருப்பதால், கட்சி, அங்கும் எளிதாக வெற்றி பெற்று விடும். தொகுதியில் உளவு போலீஸ் மூலமாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே இருப்பதால், வெற்றி எங்களுக்குத்தான். தி.மு.க.,வும் பா.ஜ.,வும் எப்ப டியும் களத்துக்கு வரும். அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி விடும் என்பதால், அ.தி.மு.க.,வின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

News Source : DINAMALAR

வெள்ளி, 14 நவம்பர், 2014

சங்கங்கள் - 01


சங்கங்கள் - 01

சமீபத்தில் நமது சமூக சங்கங்கள் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று எனக்கு தெரிந்த காரணங்களை சொல்லப்போவதாக சொல்லி இருந்தேன் பின்னர் பணிசுமையின் காரணமாக எழுத முடியவில்லை.. எழுதுவோமா..? வேண்டாமா..?? என்றும் இடையில் ஒரு குழப்பம் ஏற்பட்டது, எழுதாமல் போனால் அதைவிட இந்த சமூகத்திற்க்கு செய்யும் துரோகம் வேறு இருக்க முடியாது என்பதனால் யார் வருத்தப்பட்டாலும் சரி எழுதிவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.

நான் பெயரை குறிப்பிட்டே அனைத்து சங்கங்கள் (எனக்கு தெரிந்த, அறிமுகமாக அனைத்து சங்கங்கள் பற்றியும் எழுதவே விரும்புகிறேன்) பற்றியும் எழுதப்போகிறேன், அனைத்து சங்கங்களோடும் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது இருந்தாலும் சுட்டிக்காட்டப்படாத தவறு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சியாக நான் கருதுவதனால், சுட்டிக்காட்டிய என்மீது கோபம் கொள்வதைவிட தவறுகளை திருத்தி வீரு நடைப்போட்டு என் சாதியை அழைத்து செல்லுங்கள் என்று உரிமையோடு கேட்டு இந்த தொடரை எழுதுகிறேன்.

முதல் சங்கமாக நூறு ஆண்டுகள் பழமையான, பல சாதிகளுக்கும் சங்கம் என்றால் என்னவெற்று ? இலக்கணம் வகுத்ததுமான "தமிழ்நாடு முத்தரையர் சங்கம்" பற்றி எழுதுவதுதான் சரியானதாக இருக்க முடியும்.

அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வரை அத்தனை தலைவர்களையும் அழைத்து மாநாடு போட்டதும் இந்த சங்கம்தான், தமிழ்நாட்டின் மையமாம் திருச்சி மாநகரின் மத்தியில் மீசையை முறுக்கி, கனல் கக்கும் கண்ணோடு எம் பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்ததும் இந்த சங்கம்தான், 29 பட்டங்களோடு தமிழ்நாடெங்கும் பரந்து, பிறிந்து வாழ்ந்த "முத்தரையர்" மக்களை நீங்கள் முத்தரையர் என்று சொல்லி ஒருங்கிணைத்ததும் இந்த சங்கம்தான், பிற்படுதப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் கமிசன் அறிக்கைக்காக (இந்த அறிக்கை வெளிவரவில்லை, வந்திருந்தால் இன்று முத்தரையர்களுக்கு கிடைக்காமல் போன கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் முழுமையாக கிடைத்திருக்கும்) ஊர்தோறும் அலைந்து திரிந்து உழைத்ததும் இந்த சங்கம்தான், வலையர் முதல் தலையாரிவரை அத்தனை பேரையும் இணைத்ததும் இந்த சங்கம்தான் இன்று "இரத்தம் தெரிக்க, நரம்பு புடைக்க" பேசும் எந்த சங்கமும் இந்த சங்கம் செய்ததில் ஒரு சதவீதம்கூட செய்தது கிடையாது, அப்படி சங்கங்களுக்கெல்லாம் தலை சங்கமாய் விளங்கிய "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை" சிலர் பதவி மோகம் கொண்டும், இன்னும் சிலர் பண மோகம் கொண்டும் சீரளித்து இன்று நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள்,

சிவகங்கை மாவட்டம் தந்த சிங்கம், தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் அலைந்து திரிந்து இந்த சங்கத்தை வளர்க்க "பதவி வெறியோ, பண வெறியோ" இல்லாத ஏமாளி தலைவர் அய்யா. ஆண்டியப்பன் காலத்திற்க்கு பிறகு இரட்டை குதிரையில் பயணப்பட நினைத்து இப்போது இரண்டு தலைவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது, இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால் இந்த சாதி வளர உதவும், ஆனால் பதவி இருக்காது, சாதி பெரிதா..? பதவி பெரிதா..?? என்பதை அந்த தலைவர்களின் மனசாட்சியிடமே விட்டுவிடலாம்,

அப்போதிலிருந்து இந்த சங்கத்தின் செயலாளராக இருக்கும் திருச்சி திரு. மரு. பாஸ்கரன் அவர்கள் மறைந்துபோன சங்கத்தை தேடி புதுபிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார், அண்ணாருக்கு தோல் கொடுப்பது ஒவ்வொரு முத்தரையனின் கடமை என்பது எனது கருத்து, இந்த சங்கம் ஒருவேளை மூழ்கி போனால் அன்று முத்தரையன் என்று மீசை முறுக்கி திரிவோருக்கு சந்தோசத்தை தரலாம் ஆனால் அதைவீட கேவலம் ஒன்றும் இந்த சாதிக்கு இருந்துவிட முடியாது, அதே நேரத்தில் அந்த சங்கத்தினை இப்போது திறம்பட வழி நடத்த நினைக்கும் மரியாதைக்குறிய திரு, மரு.பாஸ்கரன் அவர்களிடன் பகிரங்கமாகவே இந்த கோரிக்கையினை வைக்க விரும்புகிறேன்,

முதலில் அமைப்பினை இளைஞர்களும் விரும்பும் வண்ணம் மாற்றம் செய்யுங்கள் இளைய தலைமுறைக்கு அதிக வாய்ப்பினை தாருங்கள், தேர்தல் காலங்களில் அவசரப்பட்டு யாரையும் ஆதரிக்காமல் உறவுகளின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப சரியான நிலைப்பாட்டினை எடுங்கள்

இந்த சங்கம் மீது இளைஞர்கள் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு இந்த சங்கம் வேகமாக செயல்படவில்லை, உடனே முடிவினை எடுக்கவில்லை என்பது,அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது ஒன்றும் சினிமா நடிகர்களின் சங்கம் கிடையாது கவர்ச்சிக்காக எதையாவது செய்வதற்க்கு, வீரம் என்று பொல்லாப்பை தேடி தருவதற்க்கு, பலரின் உழைப்பால் உருவான சங்கம் இது, நூறு ஆண்டுகளாய் இன்று நாம் இந்த சாதிக்காக எதுவெல்லாம் பெருகிறோமோ, எதையெல்லாம் பெருமையாக கருதுகிறோமோ அது அத்தனையும் இந்த ஒரே சங்கம்தான் பெற்று தந்தது என்பதை மறந்துவிடக்கூடாது
கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், இப்போதே நூறு சங்கங்கள் நம்சாதியில் இருக்கலாம், இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் சங்கங்கள் புதிதாக உருவாகலாம் ஆனால்...!

இதுதான் தலைசங்கம், இதன் வீழ்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வீழ்ச்சி, இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வளர்ச்சி இதை மனதின் நிறுத்தி வீழ்ச்சியா..? வளர்ச்சியா..? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இறுதியாக இந்த சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணிகள் சுருக்கமாக:

1. தலைமையில் உண்டான பிரிவு
2. அரசியல் முடிவுகளை மக்களின் மனநிலை அறிந்து எடுக்காமை
3. இளைஞர்களுக்கு அதிக வாய்பளிக்காமை
4. ஒருமுறை ஒரு பதவியில் ஒருவரை நியமித்தால் பிறகு கடைசிவரை அவரே அந்த பதவியில் தொடர்வது
5. மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது
6. அடிக்கடி கூட்டங்கள் நடத்தாமல் விட்டது.
7. பொருளாதார பற்றாக்குறை

இனி இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சுருக்கமாக:

1. சங்கத்தின் நிதி ஆதரத்தை சரியான நிதி ஆலோசகரின் துணைகொண்டு உயர்த்துதல்
2. ஒரே தலைமையாக ஆக்குதல்
3. இளைஞர்களுக்கு முழுமையான வாய்ப்பினை வழங்குதல்
4. அடிக்கடி கூட்டங்கள், தலைவர்களின் சுற்றுபயணத்தினை மேற்கொள்ளுதல்
5. நிர்வாகிகளை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைத்தல்

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

திங்கள், 10 நவம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை..?


ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை..?

ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியையும் இழந்திருக்கிறார். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது இத்தொகுதி. ஜெ.வின் மேல்முறையீட்டு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிவாசிகளின் மனநிலை என்ன என்பதை அறிய களமிறங்கினோம்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகரையொட்டியுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 லட்சத்து 21ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர். முத்தரையர் இனத்தவர்களே இங்கு அதிகம். இவர்களையொட்டி தலித், உடையார், பிராமணர்கள், நாயுடு, வெள்ளாளர், யாதவர் ஆகிய சமுதாயத்தினர் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர். இந்த சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் மனதிற்கொண்டு ஆண்- பெண்- வயது- தொழில் என அனைத்து அம்சங்களையும் கணக்கில்கொண்டு 20 ஆயிரம் பேரை கடந்த அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சந்தித்து சர்வே மேற்கொண்டோம்.

More News : Nakeeran

தமிழக காங்கிரசில் அடுத்த பிளவு: கலகலப்பூட்ட புதுகட்சி துவக்கம்

தமிழக காங்கிரசில், முன்னாள் மத்திய அமைச் சர் வாசன் தலைமையில் பிளவு ஏற்பட்டு, ஒரு வாரம் ஆகாத நிலையில், அடுத்ததாக, ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குறளரசு ஜெயபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் செங்கை செல்லப்பன் ஆகியோர் தமிழக காங்கிரசிலிருந்து விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை இன்று, துவக்குகின்றனர்.எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளோடு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலும் இருந்தவர் குறளரசு ஜெயபாரதி, தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர், செங்கை செல்லப்பன். இவர், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் தலைவராக இருந்தார். இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்.இவர்கள் இருவரும், தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புது கட்சியை துவக்குகின்றனர். கட்சின் துவக்க விழா, சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, குறளரசு ஜெயபாரதி கூறியதாவது:தமிழக காங்கிரசில், முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால், இரண்டு சமூகத்தவர்களையும் போற்றும் விதமாக, காங்கிரசிலிருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பிக்கிறோம். தமிழகத்தில், புதிய கட்சி காங்கிரசுக்கு மாற்றாக இருந்து செயல்படும்.காங்கிரசை வீழ்த்துவது தான், எங்களின் பிரதான நோக்கம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


News Source : DINAMALAR

வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆலங்குடி அருகே முத்தரையர் சங்க கூட்டம்


ஆலங்குடி,: முத்தரையர் சங்க கூட்டத்தில் கனிமொழி எம்பிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள திருமலைராயசமுத்திரத்தில் முத்தரையர்  சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் திருமலைநம்பி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் எந்த ஒரு பல்கலைக் கழகத்திற்கும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த யாருக்கும் துணைவேந்தர் பதவி வழங்கப்படவில்லை. எனவே பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற பல பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தரையருக்காகக் குரல் கொடுத்தமைக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News Source : DINAKARAN