Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

திங்கள், 31 மார்ச், 2014

முத்தரையர்களின் அரசியல் களம்



முத்தரையர்களின் அரசியல் களம்
உறவுகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,
அரசியல்…
இது என் இனம் இன்று வீழ்ந்துகிடக்கும் ஒரு களமாக இருக்கிறது, எப்படி வீழ்ந்துபோனோம்..? நமக்கு அரசியல் புரியவில்லையா..? என்று கேட்டால்… சற்று நம்முடைய பழைய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்
ஏறக்குறைய களப்பிரர்கள் எனும் முத்தரையர்களாகிய நம்முடைய ஆட்சி  நடந்த காலகட்டத்திற்க்கு முன்பாக வடக்கே சந்திரகுப்தனின் மெளரிய பேரரசு இருந்ததை நீங்கள் அறிவீர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் தொடங்கி வங்காளம் வரை பரவி இருந்த சந்திரகுப்தனின் மெளரிய பேரரசு சந்திரகுப்தனால் உருவானதல்ல, சாணக்கியனால் உருவானது, கடைசிவரை சாணக்கியன் தன்னை அதிகாரத்தோடு பொருத்திக்கொள்ளவில்லை அதே போன்றுதான் நம்முடைய மூதாதையர் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணை ஆண்டபோதும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இந்த மண்ணை ஆட்சி செய்தார்கள், எந்த குழப்பமும் இல்லாமலே, அதனால்தான் இன்று வரலாறு எழுத முயன்ற சிலர் இதனை வாய்ப்பாக கொண்டு வரலாற்றை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இப்படி சந்திரகுப்தனுக்கு சற்றும்குறையாத ஆட்சியை, சாணக்கியனுக்கு ஈடான அறிவோடு ஒரு பேரரசை உருவாக்கிய முத்தரையர்கள் நாம் இன்று அரசியல் அறியாமல் இருப்பது யாருடைய தவறு..?
உறவுகளே நாம் அரசியலில் ஓராயிரம் வாய்ப்புகளையும், உரிமைகளையும் இழந்துவிட்டு நிற்க்கிறோம், இது யாரோ நமக்கு செய்த தூரோகம் என்பதைவிட நம்முடைய அறியாமை என்றும் சொல்லலாம், வாய்புள்ள, உரிமையுள்ள எதையும் கேட்டுப்பெறக்கூடிய சாதாரண அரசியல் அறிவை கூட நாம் பெறவில்லை என்பதை நம்முடைய சக சமூகங்களின் அரசியல் வளர்ச்சி நமக்கு சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மனது அந்த கருத்தை உள்வாங்கிக் கொள்ள மறுக்கிறது, எது அரசியல்..? எப்படியான முன்னெடுப்புகள் தேவை ? என்ற எந்த திட்டமிடலும் நம்மிடமில்லை, அதே நேரம் நம்மைப்போன்ற சாமர்த்தியசாலிகள் உலகத்திலேயே இல்லை என்றும் சொல்ல முடியும்... 
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா..?
உண்மைதான் உறவுகளே நாம் எதை செய்யவேண்டுமோ அதை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை, அதே நேரம் நம்முடைய கடமையை, நாம் செய்திருக்க வேண்டியதை யாரேனும் செய்ய முனைந்தாலோ, முதலில் அவரை நாம் தனிமைப்படுத்துவோம், அவருக்கு எதிரானவரோடு இணைந்து செயல்படுவோம், அவரைப்பற்றிய அவதூரைப் பரப்புவோம்
உறவுகளே நீங்கள் யார் வேண்டுமானாலும் எந்த அரசியல் கட்சிகளிலும் இருங்கள், ஆனால் குறைந்தபட்சம் ஒரு ஒன்றிய பொருப்பு, முடிந்தால் ஒரு மாவட்ட பொருப்பு, திறமையிருந்தால் மாநில பொருப்பு என்று இருங்கள், இது எதுவும் முடியாது என்பவர்களுக்கு எங்களது பணிவான வேண்டுகோள் உங்களுக்கு அரசியல் வேண்டாம்... குடும்பம், பிள்ளைகள், சொந்து, வேலை என்று உங்கள் நேரத்தை செலவிட்டு சந்தோசமாக வாழுங்கள், இதே நமது சாதியில் பிறந்து யாரேனும் நாம் சொன்ன எதேனும் ஒரு பதவியில், பொருப்பில் இருப்பார்கள் அவர் நல்லவரா..? கொட்டவரா..? என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு அவரை ஆதரியுங்கள்,
1300 ஆண்டுகளுக்கு முன்பு அரசாண்ட வம்சம் இன்று அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இன்று கையெறு நிலையில் நிற்பதற்க்கு யார் காரணம்..? நீங்கள் எல்லோருமே செய்தித்தாள்களை தினமும் பார்த்திருப்பீர்கள், தினசரி பல நாளேடுகளிலும்  நாடாளுமன்ற தொகுதி நிலவரம் என்று பரபரப்பாக எழுதி வருகிறார்கள், நன்றாக கவனியுங்கள் நம் அரசியல் உரிமை எவ்வளவு நுணுக்கமாக பறிக்கப்படுகிறது என்று, எல்லா நாடாளுமன்ற தொகுதியிலும் பரந்துபட்டு வாழும் ஒரெ இனமான இருந்தும், ஒரு வார்த்தைக்காகக் கூட நம்முடைய இருப்பை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை, இதுதான் அரசியல், இப்படிதான் நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஆனால் இதுவரை இந்த புறக்கணிப்பை நாம் உணரவே இல்லை என்பதுதான் வேடிக்கை
யார் மீதும் வருத்தப்படுவதனாலோ, கோபப்படுவதனாலோ, பொறாமைக்கொள்வதாலோ இழந்த நம் உரிமையை மீட்டுவிட முடியாது, நிதானம், பொறுமை, திட்டமிடுதல், ஒரு அணியாய் திரளுதல் இவைதான் நாம் வெற்றியடைய, இழந்த நமது உரிமையை மீட்க வழி, அதனால் நம்மவர்கள் வழக்கம்போல மற்றவரை குறைச்சொல்லும் வழிமுறையிலிருந்து நாங்கள் சற்று மாறுபடுகிறோம், எதுவுமே முயற்சியின்றி கிடைக்காது, கிடைத்தாலும் அதன் அருமை புரியாது,
தேர்தல் அரசியல் எங்கள் நோக்கமல்ல, அதே நேரம் நம்முடைய உரிமை பறிக்கப்பட தேர்தல் அதிகாரம் பிரதானமாக இருப்பதால் அதை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது, எங்களுக்கு தெரியும் நாங்கள் வெற்றி பெறுவது எளிதல்ல என்று அதனால் ஒதுங்கி இருந்து வேடிக்கைப்பார்ப்பது இளம் சிங்கங்களுக்கு அழகல்ல, எதுவானாலும் களத்தில் சந்திப்போம் என்பதை மையமாக வைத்துதான் இன்று தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்து செயல்படுகிறோம், இதனால் என்ன சாதித்துவிட முடியும் ? என்பது சோம்பேரிகளின் கேள்வி எங்கள் இலக்கு தெளிவானது, இன்றைய நிலையில் அரசியல் அதிகாரம் மட்டும்தான் இழந்த நம் உரிமையை மீட்க ஒரெ வழி என்பதில் தெளிவாக இருக்கிறோம், நம் சமூகத்திற்க்கு வாய்பளிக்க மறுக்கும் அரசியல் இயக்கம் எதுவானாலும் புறக்கணிப்போம், நம்மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறும்வரை இந்த தேர்தல் மட்டுமல்ல இனிவரும் எல்லா தேர்தல்களிலும் குறிப்பாக வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் நம்மக்கள் பெரும்பாண்மையாக இருக்கும் 40 தொகுதிகளில் இனத்தின் விழிப்புணர்விற்க்காக, முத்தரையர் சமுதாயத்திற்க்கு வாய்பளிக்க மறுக்கும் அரசியல்கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி அரசியலில் புறக்கணிக்கப்படும் நம் இனத்தின் விடிவை நோக்கி பயணிப்போம்
நிறைவாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நிச்சயமாக நாம் இழந்த அத்தனை உரிமைகளுக்கும் நாம் ஒவ்வொருவரும்தான் காரணம், முடிந்தால் அரசியலை முழுவதுமாக கற்று அரசியல் செய்ய வாருங்கள், கொடி பிடித்து கோசம் போட போகாதீர்கள், நமக்கான உரிமையை நாமே பெற என்ன செய்ய வேண்டும் என்று மனம் திறந்து விவாதிக்க வாருங்கள் என்று என்றும் எனது பாட்டன் பேரரசன் பெரும்பிடுகு முத்தரையனின் புகழ்பாடுவதில் பெருமை கொண்டு விடை பெறுகிறேன். நன்றி

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்



சென்னை முத்தரையர் முன்னேற்ற சங்கம் அம்பலக்காரர் பேரவை மாநாட்டு நிகழ்வுகள்




















புதன், 26 மார்ச், 2014

இணைந்து பயணிப்போம்



       ஆயிரமாயிரம் கேள்விகள், முடியுமா..? என்று மலைப்புகள், இவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள் என்ற அலட்சியங்கள், சிலரிடமிருந்து வசவுகள், இன்னும் சில இடங்களில் இருந்து மிரட்டல்கள், இது எல்லாமே நாங்கள் எதிர்பார்த்ததுதான், இது ஒருபோதும் எங்கள் இலக்கை, எங்கள் லட்சியத்தையடைய தடையாக நாங்கள் கருதவில்லை..!! 

இப்போது நமக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது, இனி தேர்தல்களத்தில் நம்முடைய பிரச்சாரத்தினை முன்னெடுக்க உறவுகள் அனைவரும் எங்களோடு கைகோர்க்க அன்புடன் அழைக்கிறோம் தஞ்சாவூர் தொகுதியில் உள்ளடங்கிய தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உறவுகள் அவரவர் இருக்கும் இடங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நாங்கள் தொடர்புகொள்ள வசதியாகவும் உங்கள் தொடர்பு எண்ணை எங்களுக்கு அனுப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்,
ஏனைய உறவுகள் மேலே குறிப்பிட்ட தொகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள், இனப்பற்றாளர்களிடம் நம்முடைய நோக்கத்தையும், நாம் போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச்சொல்லி எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும் அல்லது தொடர்பு எண்களை எங்களிடம் தந்தால் நாங்கள் தொடர்புகொள்கிறோம்

** தேர்தல் பணிக்குழுவில் இணைந்து பணியாற்ற விரும்பும் உறவுகள் உடனடியாக தொடர்புகொள்ளவும்

அன்புடன்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
தொடர்புக்கு :
 0091-90038343210091-9003834321
          0091-96775473810091-9677547381
          0091-90471167140091-9047116714
           0091-95856992740091-9585699274
           0091-73739280810091-7373928081




முத்தரையர் உறவுகளே...!



இந்த துண்டுபிரசுரம் தஞ்சாவூர் தொகுதியின் அனைத்து முத்தரையர்களின் கைகளுக்கும் செல்ல வேண்டும், இனத்தின்பால் அக்கறை கொண்ட இளைஞர்கள் இந்த பணியை முன்னெடுக்க முன்வர வேண்டும், வெற்றுக்கூச்சல் போடும் கூட்டமல்ல நாம் என்பதை நிறுபிப்போம், அச்சடிக்கப்பட்ட இந்த துண்டுபிரசுரம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.  
** இந்த தேர்தலைப் பொருத்தவரை நாம் தஞ்சாவூர் தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக, நம்முடைய உண்மையான பலத்தை அறிய வைக்க நினைப்பதால் மற்ற தொகுதி உறவுகள் நீங்களே இந்த பிரசுரத்தை அச்சடித்துக்கொள்ளவும், தஞ்சை தொகுதிக்குட்பட்ட உறவுகள் கையில் இந்த பிரசுரம் கிடைக்க உதவவும். நன்றி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
தொடர்புக்கு :
0091-90038343210091-9003834321
 0091-96775473810091-9677547381
 0091-90471167140091-9047116714
0091-95856992740091-9585699274
0091-73739280810091-7373928081