Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 25 ஜூன், 2014

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சதி..!!



தமிழக அரசு தனி அரசாணை வெளியிட்டு 29 உட்பிரிவுகளையும் இணைத்து ஒரே சாதியாக "முத்தரையர்" என்று அறிவித்திருக்கும்போது சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி பெயராக "முத்தரையர்" என்று பதிவு செய்திருந்ததை கணக்கெடுப்பிற்க்கு பிறகு அரசு அதிகாரிகள் திருத்தம் செய்து "உட்பிரிவுகளின்" பெயர்களையே சாதியாக பதிவு செய்திருக்கிறார்கள், இது யாரால் திட்டமிடப்பட்டது ? என்பது புரியவில்லை...! ஒரே பெயரில் நாங்கள் இணைவதால் யாருக்கெல்லாம் சங்கட்டம் வரும் என்பது ஆய்விற்க்குறியது.., இப்போதும் திருத்தியவர்கள் நமது உட்பிரிவைதான் எழுதினார்களா..? அல்லது வேறு சாதிகளாக பதிவு செய்திருக்கிறார்களா ? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இதர அனைத்து தகவல்களையும் வெளியிடும் அரசு, சாதிவாரியான கணக்கை வெளியிடாமல் இருக்கும் மர்மத்திற்க்கும் இப்போது முத்தரையர் சமூகத்தை ஒரே பெயரால் பதிவு செய்யாமல் தவிர்த்ததிற்க்கும் எதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் வருகிறது.

- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

புதன், 18 ஜூன், 2014

சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை

சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை

2013‍-2014 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற "முத்தரையர்" மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், பாராட்டுகளும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது. 

பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேலும்..

பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேலும்.. 

பெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட முத்தரையர் மாணவ‍ மாணவிகள் தங்கள் மதிப்பெண் பட்டியலுடன், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழின் நகல்களுடன் இணைத்து பட்டுக்கோட்டையில் முத்து மெடிக்கல்ஸ், கரிக்காடு அல்லது OS கம்ப்யூட்டர் பழநியப்பன் தெரு, பட்டுக்கோட்டையில் நேரில் கொடுக்கவும், நேரில் வர முடியாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

இங்கனம்
சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை, பட்டுக்கோட்டை

0091-7639418539, 0091-9003834321, 0091-9944021255,


திங்கள், 9 ஜூன், 2014

கோவில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கற்பக விநாயகர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, ஜூன் 8ம் தேதி, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன், முதல் காலயாக பூஜை துவங்கியது. நேற்று காலை, 2ம் காலயாக பூஜை முடிந்தவுடன், கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் கோவிந்தன், பாம்பன் பரதவகுல தலைவர் சைமன், மீனவர் சங்க தலைவர்கள் இருதயம், எஸ்.பி. ராயப்பன், ராமேஸ்வரம் தாலுகா முத்தரையர் சங்க தலைவர் சுந்தர்ராஜன், கிராம நிர்வாகிகள் களஞ்சியம், முனீஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

News Source : DINAMALAR

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 13/06/2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பட்டுக்கோட்டை இயக்க அலுவலகத்தில் நடைபெறும், இயக்கத்தின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி..!

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

தொடர்புக்கு :

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்  - 0091-7639418539
                                                      Skype : sanjaiambalakarar

காந்தி பிள்ளை – 0091-9003834321

தேவா (எ) சுரேஷ் அம்பலக்காரர் – 0091-9677547381

புதன், 4 ஜூன், 2014

வினவுவின் புரட்டுகள்..!



வினவுவின் புரட்டுகள்..!

புதிய புரட்டு வரலாறு படைக்கும் வீணர்களின் கூட்டத்தின் வினவுதளம் "கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாட நூல் புரட்டுகள் !" என்ற தலைப்பில் எதோ பிதற்றியுள்ளது, அது RSSக்கு எதிரான எழுதப்பட்ட எதோ ஒரு கதை (கட்டூரை என்றுதான் சொல்லுவார்கள்), அந்த கதைக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை, ஆனால் அதில் தேவையே இல்லாமல் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் 

// ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும்பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார் // 

எழுதப்பட்ட தலைப்பிற்க்கும், இந்த வாசகத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை (சென்னை நகரை சுற்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் சென்னையில் சிலை இல்லை என்பதுதான் உண்மை, இதுதான் வினவு புரட்டுவின் தொடக்கம்) ஆனால் வலிந்து திணிக்கப்பட்டு தனது வன்மத்தை, அரசியல் உரிமை மறுக்கப்பட்டு இன்று கையறு நிலையில் இருக்கும் முத்தரையர்கள் குறித்து எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொள்கிறது வினவு.

 இந்த கட்டூரையின் சாரம்சம் RSS போன்ற இயக்கங்கள் இன்று வரலாற்றை மாற்றிப்பேச முனைகிறது என்பதாக இருக்கிறது, இதற்காக பலதரப்பட்ட தரவுகளையும் மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இந்த கட்டூரையில் இன்று இந்த இயக்கங்கள் சொல்லும் வரலாறு உண்மையில்லை என்பதாக இருக்கிறது, இவர்களின் இந்த நீண்ட கட்டூரையில் எதையோ நிறுபிக்க முயன்று அதற்காக ஆயிரமாயிரம் ஆதரங்களை காண்பித்து இதுதான் என்று சொல்ல முற்படுபவர்கள்.

 அதே கட்டூரையின் ஒரே ஒரு வரியில் தங்கள் புரட்டு சிந்தாந்ததில் தோற்றுப்போய் இருக்கிறார்கள், இவர்கள் சொல்லியிருக்கும் மொத்தமும் கட்டுக்கதையாகவே இருக்க முடியும் என்பதற்க்கு இவர்கள் முத்தரையர் குறித்து எழுதி இருக்கும் ஒரே வரி போதுமானதாக இருக்கும், முத்தரையர் மன்னர்கள் கடைசி காலங்களில் சிறு நிலப்பரப்பை ஆண்டது உண்மையானதுதான், ஆனால் அதற்க்கும் முன்பாக சேர, சோழ, பாண்டிய நாடுகளை அதாவது முத்தரைகளை ஆண்டவர்கள் என்பதுதான் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை, ஆனால் இவ்வளவு வன்மத்தோடு இவர்கள் இப்படி எழுத எந்த வரலாற்றை ஆதாரமாக கொண்டார்கள் ? இவ்வளவு தீர்க்கமாக கஜினி முகமதுவிற்க்கு கட்டூரை எழுதிய அஜித் எனும் எழுத்தாளர், இதற்க்காக திரட்டி சொன்ன ஒராயிரம் ஆதாரங்கள் போன்று எதேனும் ஒரு ஆதாரத்தை குறிப்பிட்டு தனியே கட்டூரை எழுதும் திராணி இருக்கிறதா..?

யாரோ தவறாக எழுதிய வரலாற்றை வைத்து "எதோ ஒரு குறு நில மன்னன்" என்று எழுதும் இவர்கள் எழுதி இருக்கும் இந்த நீண்ட நெடிய கட்டூரையின் உண்மைதன்மையை பச்சையாய் காட்டிக்கொடுக்கிறது.

வினவு தளத்தினரே, உங்கள் தளத்தை ஆர்வமாக வாசிப்பவர்களை முட்டாளாக கருதி இதுபோன்ற பிதற்றல்களை, ஒரு சார்பு நிலை எழுத்தை கட்டூரை என்று வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று உண்டியல் குலுக்கி மஞ்சள் குளித்து மகிழ்ந்து வாழாமல் உண்மையாய் எழுத முயலுங்கள்.

-                            ‍சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்





 

செவ்வாய், 3 ஜூன், 2014

இப்போது முத்தரையர் சமூகம் பற்றிய செய்திகள் ஆண்ட்ராய்ட் போனிலும்.

இப்போது முத்தரையர் சமூகம் பற்றிய செய்திகள் ஆண்ட்ராய்ட் போனிலும்.

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

 http://www.appsgeyser.com/getwidget/mutharaiyar/