Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

திங்கள், 22 ஜூன், 2015

உறுப்பினர் படிவம்

உறுப்பினர் படிவம்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தில் சேர்ந்து களப்பணியாற்ற விரும்புபவர்கள் இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்தோ, அல்லது கீழே கொடுக்கப்பட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டோ படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம், இந்த படிவத்தினை தயவுசெய்து "பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு" உட்பட்டவர்கள் மட்டும் பயன்படுத்தவும் (இந்த தொகுதியில் இருப்பவர்களை மையப்படுத்தியே படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது) தமிழகத்தின் பிறபகுதிகளில் இப்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும், இதுவரை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.இந்த உறுப்பினர் சேர்க்கையின் முடிவில் மேலும் அதிகமான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும், மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

# பட்டுக்கோட்டையில் அலுவலகத்திலும் படிவம் கிடைக்கும்...

தொடர்புக்கு : 9159168228, 9003834321, 9942318416, 9698561956



ஞாயிறு, 21 ஜூன், 2015

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மதுக்கூர் ஒன்றியம், கன்னியாக்குறிச்சி, பாலோஜிரெகுனாத சமுத்திரம் கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 வது பிறந்த நாள் விழா, கல்வி விழிப்புணர்வு விழா மற்றும் கொடியேற்று விழா இன்று இனிதாக நடந்தேறியது, ஏற்பாடு செய்திருந்த கிராமத்தினருக்கும், உறவுகளுக்கும் நன்றி..! கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி..!








எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்..!



எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்..!
தமிழகத்தை பொருத்தவரை எத்தனையோ முத்தரையர் சங்கங்கள் இருந்தாலும் பெரும்பாலான சங்கங்களின் தலைமை என்னவோ மத்திய மாவட்டத்தை சேர்ந்ததாகதான் இருக்கிறது. அதீத சாதிப்பற்றும், சிந்தனையுமுடைய தென்தமிழ்நாட்டில் இருந்து சாதியை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையே..? ஏன்..?? என்பது நீண்ட நாள்களாக எனக்கு குறையாக தோன்றிய ஒரு விசயம்.
ஆனால் உண்மையில் அப்படியில்லை சுயநலம் சிறிதுமின்றி, எந்த ஆடம்பரமும் இல்லாமல் தென்தமிழக மாவட்டங்களான சிவகங்கை தொடங்கி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி என்று பெரிய பெரிய சங்கம் நடத்துபவர்களின் கால்தடம் படாத இடங்களில் இருக்கும் ஏழை முத்தரையனையும் ஒருங்கிணைக்கும் அரும்பணியை சத்தமில்லாமல் செய்துக்கொண்டுதான் இருக்கிறார் ஒரு தலைவர் என்பது தாமதமாகதான் எனக்கே தெரிந்தது.
மதுரை மாவட்டம் வலையங்குலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட முத்தரையர் மக்களுக்காக ஊண் உறக்கமின்றி சுற்றி திரிந்து மாற்று சட்டைக்கூட அணியாமல் நான்கு நாள்கள் சென்னையையே சுற்றிவந்து அன்றைக்கு அந்த பிரச்சனை சட்டமன்றத்தில் ஒலித்துட தன்னலமின்றி உழைத்திட்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்பதும் எனக்கு தாமதமாகதான் தெரிந்தது. இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் "முத்தரையர்" சமூகத்திற்க்காக இவர் தொடுத்த வழக்குகள்தான் அதிகம். அங்கிருக்கும் பெரும்பாலான முத்தரையர் சமுதாய வழக்கறிஞர்களோடு நல்லதொரு இணக்கத்தோடு இருக்கும் தலைவரும் அவர்தான்.
எத்தனையோ சங்கங்கள் இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அனைத்து சமூக தலைவர்களையும் அழைத்து சென்னையில் கூட்டம் போட்டபோது அழைத்த ஒரே ஒரு முத்தரையர் சங்க தலைவர் திரு. வெள்ளைத்துரை அவர்கள் மட்டும்தான்.
தலைவர்களை தேடிதேடி காலம்காலமாக அழைவது மட்டும்தான் "மதுரை உள்ளிட்ட" தென்மாவட்ட முத்தரையர்களுக்கு இன்றுவரை வழக்கமாக இருக்கிறது, இது எப்படி இருக்கிறது என்றால் "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அழைவது" என்ற பழமொழியை போன்று உள்ளது, உண்மையில் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு தலைவரை வைத்துக் கொண்டு இன்னமும் தலைவரை தேடி அழையும் கூட்டமாக இருக்கிறது தென் தமிழக முத்தரையர்கள் கூட்டம்.
முத்தரையர் சமூகத்தினை மையப்படுத்தி பத்திற்க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் "பதிவு செய்த" ஒரே ஒரு அரசியல் கட்சி "எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்" மட்டும்தான், அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு வருகின்ற 28.06.2015 ஞாயிற்றுக்கிழமை தென் தமிழகம் அதிர மதுரை ஒத்தகடையில் நடைபெற இருக்கிறது.
அப்படி என்னதான் அந்த கட்சியின் கொள்கை..? எதை நோக்கி அந்த கட்சி பயணப்பட போகிறது..? அந்த கட்சியின் எதிர்காலம் என்ன..? முத்தரையர்களுக்கு அந்த கட்சி எப்படி உதவப்போகிறது..? இதையெல்லாம் அறிந்துக்கொள்ள மாநாட்டிற்க்கு தென் தமிழக முத்தரையர் பேரிணமே திரண்டு வர வேண்டும் என‌ அன்புடன் வேண்டுகிறோம்.
அந்த கட்சியோடு இணைந்து செயல்படவே விரும்பினாலும் சூழ்நிலைகளால் நாங்கள் தனித்து நிற்கிறோமே தவிர எங்களின் பூரண ஒத்துழைப்பினை எப்போதும் எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்திற்க்கும், அதன் தலைவர் திரு. வெள்ளைத்துரை அவர்களுக்கு வழங்குவோம் என்ற உறுதியோடு மாநாட்டில் உங்களோடு நானும் கலந்து கொள்வேன் என்ற உறுதியோடு...
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A.,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தொடர்ந்து தனது சமூகப்பணியை செம்மையாக செய்திட‌ இன்னும் சற்று வேகத்தோடு செயல்பட‌ திட்டமிட்டு நிலையான, தெளிவான திட்டங்களோடு களத்தினுள் இறங்க தீர்மானித்துள்ளது, முதல் இலக்கு "2016 ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" இந்த இலக்கை அடைய சில தியாகங்களை செய்திட வேண்டும், அதற்க்கு நம்மோடு களமாட இளைஞர்கள் தயாராக வேண்டும், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் கொள்கைகளோடு இணைந்து செல்ல விருப்பமுள்ள அனைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர்களுக்கும் புதிதாக பொறுப்புகள் வழங்க இருக்கிறோம், பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் எந்த கட்சியோ, சங்கமோ அது பிரச்சனை இல்லை, இலக்கு "2016ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" ஆர்வமுள்ளவர்கள் வாருங்கள் இணைந்து பயணிப்போம்., இனி பட்டுக்கோட்டை நமது என்போம்.
வெற்றியே இலக்கு..!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
இணைய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள :
9159168228, 9003834321, 9942318416, 9698561956

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!




கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
தஞ்சாவூரில் வருகின்ற 29/06/2015 திங்கட்கிழமை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் முத்தரையருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 10% மும், மாநில அரசு 20% மும் முத்தரையருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,
இது நமது உரிமைக்கான போராட்டம்..., போராடாத சமூகம் வெல்வது சாத்தியமில்லை..., நம்மை வருத்தி நம் சந்ததியேனும் உரிமையோடு வாழ போராடுவது ஒன்றுதான் ஒரே வழி..!
சந்திப்போம் போராட்டக் களத்தில்...!

செங்கீற்று

/தேவர் சங்கத்திற்கு தலைவராக ஒரு நாடார் இருக்க முடியாது.
கோனார் சங்கத்திற்கு தலைவராக ஒரு பிள்ளை இருக்க முடியாது
உடையார் சங்கத்திற்கு தலைவராக ஒரு முதலியார் இருக்க முடியாது.
பறையர் சங்கத்திற்கு தலைவராக ஒரு முத்தரையர் இருக்க முடியாது. //

இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’

//யாரையாவது பார்த்து ‘நீ யார்?’ என்று கேட்டால் ‘நான் ஐயர்’, ‘நான் வெள்ளாளர்’, ‘நான் செட்டியர்’, ‘நான் கள்ளர்’, ‘நான் நாடார்’, ‘நான் முத்தரையர்’, ‘நான் பறையன்;, ‘நான் பள்ளன்’ என்று எதையோ ஒன்றைத்தான் சொல்வான் என்றார் தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (புதுக்கோட்டை தமுஎகச மாவட்ட மாநாடு, பிப்.2015)//

Source : http://puthu.thinnai.com/?p=29565

செவ்வாய், 16 ஜூன், 2015

தஞ்சை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் யார் பெரும்பாண்மை...?

தஞ்சை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் யார் பெரும்பாண்மை...?

குறிப்பாக பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு தொகுதிகளில் உண்மையிலேயே எந்த சமூகம்தான் பெரும்பாண்மை..? இந்த தொகுதிகளுக்கு தொடர்பற்றவர்கள் தொடங்கி, மொத்த தொகுதிகளிலும் சில தெருக்களில் வாழ்பவர்கள் வரை, நாங்கள் பெரும்பாண்மை, நாங்கள்தான் பெரும்பாண்மை என்று சொல்கிறார்களே அது உண்மைதானா..?

தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை ஊழல் பணத்திலும், ஊரை ஏமாற்றிய பணத்திலும் மஞ்சள் குளிப்பவர்களின் ஆதிக்கத்தில்தான் மொத்த மாவட்டமும் இருக்கிறது, அவர்களின் மனசாட்சிக்கு தெரியும் எந்த சமூகம் உண்மையில் பெரும்பாணமையானது என்று. முத்தரையர் மக்களிடம் பொருளாதாரம் இல்லை, அதாவது இவர்களுக்கு ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்க தெரியாது, இதனால் இவர்களுக்கு அரசியலில் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது, அதனாலையே அரசியல் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பும் கிடையாது,

நிச்சயமாக இங்கு அரசியல் செய்பவர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும்  நிதர்சனமாக தெரியும் முத்தரையர் மக்களின் எண்ணிக்கை பலம் பற்றி..! பேராவூரணி தொகுதியை மட்டும் எப்படி எல்லோரும் முத்தரையர் மக்கள்தான் பெரும்பாண்மை என்று சொல்கிறார்கள் ? காரணம் 1972 ஆம் ஆண்டிலேயே "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின்" சிங்கம் சின்னத்தில் நின்று வென்றார் திரு.குழ.செல்லையா (அதிமுக தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆருடன் இருந்த ஐந்து எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர்) அதனுடைய தாக்கம்தான் இன்றும் அந்த தொகுதியை மட்டும் மற்றவர்கள் வெறுப்பாக "முத்தரையர்" மட்டுமே பெரும்பாண்மை என்று ஒத்துக்கொள்ள வைக்கிறது, பேராவூரணி முத்தரையனுக்கு இருந்த சூடும், சுரணையும் ஏனைய தொகுதி முத்தரையனுக்கும் வரும்போது பொய்யுரைப்பவர்களின் காலம் முற்றுபெறும்.

யாருக்கெல்லாம் முத்தரையர் மக்கள்தான் பெரும்பாண்மை என்று நிறுபிக்க வேண்டுமோ அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஐந்து தொகுதிகளுக்கும் ஐந்து கோடி ரூபாயை யாராவது கடனாக கொடுங்கள் அடுத்து எப்படியும் நிலையற்ற ஆட்சி அமையும்போது ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதுவும் முத்தரையர் சட்டமன்ற உறுப்பினர்களை தஞ்சை மாவட்டத்தில் இருந்து தருகிறோம். மற்றபடி திரும்ப திரும்ப நாங்கள் பெரும்பாண்மை, நாங்கள்தான் பெரும்பாண்மை என்று கத்தி, கதறுபவர்கள் தொடர்ந்து அதையே செய்யுங்கள்..!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்   

நாம் தமிழர்...!!

நாம் தமிழர்..!!
நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் "பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக" பேரரசர் பெரும்பிடுகுவின் வழித்தோன்றல் திலீபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், நாம் தமிழர்தாம் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயம் பேராவூரணி மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது, புலியாய் வரும் சிங்கத்திற்க்கு சாதி கடந்து வாழ்த்திடுவோம்..! சரித்திரத்தில் வெற்றியை பதித்திடுவோம்.

# திலீபனை வேட்பாளராக அறிவித்த " நாம் தமிழர் கட்சிக்கு" மனம் நிறைந்த நன்றிகள்.

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம

திருமதி.கனிமொழியிடம் கையளித்த கோரிக்கை கடிதம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள‌ அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது திருமதி.கனிமொழியிடம் கையளித்த கோரிக்கை கடிதம் :

அனுப்புதல் :
K. சஞ்சய்காந்தி அம்பலக்காரர் (M.B.A.,)
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
பழஞ்சூர் (அஞ்சல்)
பட்டுக்கோட்டை தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்

பெறுதல் :
திருமதி. கனிமொழி (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்)
மாநில மகளிர் அணி செயலாளர்,
திராவிட முன்னேற்ற கழகம்

சமீபத்திய தமிழ் செய்திஏடுகளில் "முத்தரையர்" சமூகம் குறித்த தங்களின் அக்கறையை செய்தியாக வெளியிட்டு வருகின்றன, தங்களின் அக்கறை உண்மையாகவே இருக்கும் என்றே நம்புகிறேன், அதற்க்காக எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

தமிழகத்தின் முதுபெரும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் "முத்தரையர்" சமூகத்திற்க்கு உரிய பிரதிநிதிதுவம் தரப்படுவதில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தமே தவிர வேறு முரண்பாடுகள் இல்லை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.கலைஞர் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியில் நிரம்ப வாழும் "முத்தரையர்" சமூகத்திற்க்கு என்ன காரணத்தினாலோ தொடர்ந்து வாய்ப்புக்கள் வழங்கப்படாமலே இருக்கிறது.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட 119 தொகுதிகளில் "முத்தரையர்களுக்கு" வாய்பளித்தது நான்கே தொகுதிகளில்தான் (1. குளித்தலை திரு.இரா.மாணிக்கம் 2. மண்ணச்சநல்லூர் திரு. என்.செல்வராஜ் 3. மேலூர் திருமதி. ராணி ராஜாமாணிக்கம் 4. சீரங்கம் திரு.என்.ஆனந்த்) அதாவது திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களும், மதுரை மாவட்டத்தில் ஒரு இடமும் அதாவது திமுக போட்டியிட்டதில் வெறும் ஒரு சதவீதத்திற்க்கும் குறைவான இடங்களிலேயே வாய்பளிக்கப்பட்டது.

அதேபோல முத்தரையர் சமுதாயம் அறுதி பெரும்பாண்மையாக இருக்கும் தொகுதிகளான 1. ஒரத்தநாடு 2. கந்தர்வகோட்டை (தனி) 3. தஞ்சாவூர் 4. திருவையாறு 5. துறையூர் (தனி) 6. நத்தம் 7. புதுக்கோட்டை 8. மன்னார்குடி 9. விராலிமலை 10. வேதாரண்யம் 11. மணப்பாறை 12. இலால்குடி 13. திருப்பத்தூர் (சிவகங்கை) 14. திருமங்கலம் 15. திருச்சி-1 16. திருச்சி-2 போன்ற தொகுதிகளிலாகட்டும்

அதேபோல கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 1.ஆலங்குடி (பாமக) 2. சிவகங்கை (காங்கிரஸ்) 3. பட்டுக்கோட்டை (காங்கிரஸ்) 4. பேராவூரணி (காங்கிரஸ்) 5. முசிறி (காங்கிரஸ்) 6. திருத்துறைபூண்டி (காங்கிரஸ்) 7. திருமயம் (காங்கிரஸ்) 8. அறந்தாங்கி (காங்கிரஸ்) 9. காரைக்குடி (காங்கிரஸ்) 10. சோழவந்தான் (பாமக) 11. விருதுநகர் (காங்கிரஸ்) 12. இராமநாதபுரம் (காங்கிரஸ்)
(இதில் காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒரு இடத்தில் வாய்பளித்து இருக்கிறது)

மேலே சொல்லியிருக்கும் பட்டியலானது அறுதி பெரும்பாண்மை சமூகமாக "முத்தரையர்கள்" வாழும் தொகுதிகள், இதைதவிர வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய சக்தியாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தனி, வேலூர், கரூர், திருவெறும்பூர், பெரம்பலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களிலும் வாய்பளிக்கப்படுவதில்லை.

குறிப்பாக முத்தரையர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு "தள்ளி" விட்டுவிடுவதன் மூலம் திராவிட முன்னேற்ற கழகம் எங்கள் மக்களின் கவனத்தை பெற முடியாமல் இருக்கிறது, இந்த நிலை மாற வேண்டுமானால் வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மேலே அறுதி பெரும்பாண்மை என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருக்கும் 32 தொகுதிகளில் (தனி தொகுதிகள் தவிர்த்து) கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் திராவிட முன்னேற்ற கழகமே "முத்தரையரை" வேட்பாளராக அறிவிக்குமேயானால் "பகிரங்கமாகவே" நாங்கள் உள்ளிட்ட எங்கள் சமூகத்தின் அனைத்து அமைப்புக்களின் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் பெற உழைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

அதேபோல எங்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்க்கு திமுக சார்பில் தாங்கள் வருகின்ற மே 23 ஆம் நாள் திருச்சி மாநகருக்கு வருகைதந்து எங்கள் பேரரசருக்கு மரியாதை செலுத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

நாள் :
இடம்

புதன், 3 ஜூன், 2015

சுவரன்மாறன் கல்வி அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை

சுவரன்மாறன் கல்வி அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை

2014-2015 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற "முத்தரையர்" மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், பாராட்டுகளும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேலும்..
பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேலும்..
பெற்ற பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட‌ முத்தரையர் மாணவ‍ மாணவிகள் தங்கள் மதிப்பெண் பட்டியலுடன், குடும்ப அட்டையின் நகல், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழின் நகல்களுடன் இணைத்து முத்து மெடிக்கல்ஸ், கரிக்காடு, பட்டுக்கோட்டை அல்லது OS கம்ப்யூட்டர், பழநியப்பன் தெரு, பட்டுக்கோட்டையில் நேரில் கொடுக்கவும், நேரில் வர முடியாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

குறிப்பு :
1. சான்றிதழ்கள் ஜூன் மாதம் 30 ந்தேதிக்குள் (30/06/2015) சமர்பிக்க வேண்டும், பின்னர் வரும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது,

2.மேலே குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் கட்டாயம் கொடுக்க வேண்டும்

இங்ங‌னம்
சுவரன்மாறன் கல்வி அறக்கட்டளை, பட்டுக்கோட்டை
0091-9159168228, 0091-9003834321, 0091-9944021255