Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 31 ஜூலை, 2015

அரசு பணிக்கு ஆள் சேர்க்கவா.? சாதி சங்கத்திற்க்கு ஆள் சேர்க்கவா..?

அரசு பணிக்கு ஆள் சேர்க்கவா.? சாதி சங்கத்திற்க்கு ஆள் சேர்க்கவா..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் நடத்திய Group II தேர்வில் அவசியமற்ற வகையில் திரும்ப திரும்ப சில குறிப்பிட்ட சாதியின் பெயர் வரும் வகையில் வினாக்கள் தொகுக்கப்பட்டு இருக்கிறது, தேர்வு நடத்துவது தமிழக அரசுப் பணிக்குதானா..? அல்லது ஏதேனும் சாதி சங்கத்திற்க்கு ஆட்களை தேர்வு செய்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்..?

சாதியில்லை, மதமுமில்லை என்று சில குறிப்பிட்ட சாதிமக்களிடம் மட்டும் (குறிப்பாக முத்தரையர்) தொடர்ந்து பிரச்சாரம் செய்து மூளைச்சலவை செய்யும் தமிழக அரசு  சாதி குறித்து அதுவும் ஆயிரம் சாதிகள் இருக்கும் தமிழகத்தில், ஒரே ஒரு சாதி குறித்து மட்டும் நான்கு ஐந்து கேள்விகள் கேட்பது எதேட்சையா..? திட்டமிட்டு ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நிலைப்பாடா..?

சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவோ, மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பை வெளியிடவோ துப்பற்ற தமிழக அரசு, பணியாளர் தேர்வில் மட்டும் சாதி குறித்து கேள்வி எழுப்பலாமா..?

ஒருவிசயம் மட்டும் தெளிவாகிறது, தமிழக அரசாகட்டும், பணியாளர் தேர்வு வாரியமாகட்டும் அங்கெல்லாம் ஒரே ஒரு சாதியின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது

#தமிழக மக்கள் சிந்திக்கட்டும்...!

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வியாழன், 30 ஜூலை, 2015

ஆதிமுத்து மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா!

கீழக்கரை: பெரியபட்டினம் ஆதிமுத்து மாரியம்மன் கோயிலில் 92வது ஆண்டு முளைக்கொட்டு விழா நடந்தது. இதை யொட்டி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டனர். பால்குடம், கரகம், தீச்சட்டியுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அழகு நாச்சியம்மன் கோயில் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பூஜகர் பரமேஸ்வரன், உதயசந்திரன், இந்துமகாசபையினர் ஏற்பாடுகளை செய்தனர்.குத்துக்கல் வலசை: காந்தாரி அம்மன் கோயிலில் நடந்த முளைக்கொட்டு விழாவில் பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. பூஜாரி பொன்னுச்சாமி, முத்தரையர் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

News Source : தினமலர்

திங்கள், 27 ஜூலை, 2015

தமிழக நிகழ்ச்சிகளில் அமித் ஷா :பின்னணியில் பலே திட்டம்

தமிழகத்தில், திராவிட இயக்கங்கள் மீது அதிருப்தியில் உள்ள ஜாதி மக்களை, பா.ஜ., பக்கம் ஒருங்கிணைக்கும் முயற்சி யில் அமித் ஷா ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நாடார் கூட்டமைப்பினர் நடத்திய காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கடந்த, 15ம் தேதி, தமிழகம் வருவதாக இருந்தது.
நிகழ்ச்சி ரத்து:ஆனால், 'நிடி ஆயோக்' கூட்டம் உட்பட, பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், அவரால், தமிழகம் வர முடியவில்லை; அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஆனால், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை சார்பில், மதுரையில், அன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சி, ஆகஸ்ட், 6ம் தேதி, மதுரையில் நடக்கிறது.அதில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில், திராவிட இயக்கங்களுக்கு எதிரான சிந்தனையில் உள்ள ஜாதி மக்களை, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து,
பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் மூலம், நிறைய புள்ளி விவரங்களை அமித் ஷா திரட்டினார். மத்திய அரசு திரட்டி உள்ள, ஜாதிவாரி புள்ளி விவரங்கள் மூலமும், நிறைய விவரங்களை அறிந்தார். அதன்பின்தான் தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஜாதியினரை, பா.ஜ., பக்கம் திரட்ட உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கையெழுத்து இயக்கம்:அதன் முதல்கட்டம் தான், நாடார் கூட்டமைப்பினர் மூலம் ஏற்பாடு செய்த கூட்டங்கள். அடுத்து தேவேந்திரர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித் ஷா, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க, தேவேந்திரர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில், முதல் ஆளாக கையொப்பம் இடுகிறார். அவர்கள் கோரிக்கையை, மத்திய அரசு மூலம் செய்து கொடுக்கவும் உறுதி அளித்து உள்ளார்.அடுத்தடுத்த கட்டங்களில் வன்னியர், முத்தரையர் இனத்தவர்களை யும் பா.ஜ., பக்கம் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமித் ஷா தீவிரமாக ஈடுபடுவார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது நிருபர் -

News Source : DINAMALAR

முத்தரையர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.பி , எம்.எல்.ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதம்


காரைக்குடி:  இலவச பொருட்கள் வழங்காததால்  அதிமுக எம்.பி, எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த சம்பவம்  காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட் டம், காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு தமிழக அரசின் இலவச  பொருட்கள் வழங்கும் துவக்க விழா நேற்று நடந்தது. செந்தில்நாதன் எம்.பி., சோழன் சித.பழனிச்சாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் கற்பகம்இளங்கோ,   உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முதல் கட்டமாக 25 பேருக்கு இலவச பொருட்களை வழங்க முடிவு செய்தனர். இவர்களில் 4 பயனாளிகளுக்கு மட்டும் இலவச பொருட்களை கொடுத்து  விட்டு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ  உள்ளிட்டநிர்வாகிகள் மேடையை விட்டு கீழே இறங்கினர். அதிர்ச்சியடைந்த முத்தரையர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள்  எம்.பி செந்தில்நாதனையும், எம்.எல்.ஏ சோழன் சித.பழனிச்சாமியையும் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ரேஷன் கார்டை சரி பார்த்து நாளை  (இன்று) இலவசப்பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Source : DINAKARAN

வெள்ளி, 24 ஜூலை, 2015

ஸ்ரீ வாராஹி அம்மன்

ஸ்ரீ வாராஹி அம்மன்
ஓம் குண்டலி புரவாசினி
சண்டமுண்ட வி நாசினி
பண்டிதஸ்யமனொன்மணி
வாராஹீ நமொஸ்துதே !
அஷ்டலெக்ஷமி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமொஸ்துதே !
(முத்தரையர், பாண்டியர் போன்றோர் வாராஹி போன்ற தேவியரை வணங்கியவர்கள் ‍Read :http://illamsingam.blogspot.in/2014/02/blog-post_15.html)













செவ்வாய், 21 ஜூலை, 2015

ஸ்ரீ கலைமகள் கல்வி அறக்கட்டளை கல்வி பரிசளிப்பு விழா

ஸ்ரீ கலைமகள் கல்வி அறக்கட்டளை மற்றும் சிவகங்கை மாவட்ட முத்தரையர் மறுமலர்ச்சிப் பேரவையின் கல்வி பரிசளிப்பு விழாவில்...
இன்றுவரை எனக்கு மானசிக‌ குருவாய் இருந்து வழி நடத்தும் முன்னாள் "தமிழ்நாடு முத்தரையர் சங்க" தலைவர் அய்யா. திரு. ஆண்டியப்பன் அவர்களோடு சரிசமமாய் ஒரே மேடையில் அமர்ந்து பேசிடும் பெரும்பாக்கியத்தினை இன்று காரைக்குடியில் அனுபவித்தேன்.
அய்யாவிற்க்கு பிறகு ஆயிரமாய் முத்தரையர்களுக்கு சங்கங்கள் தோன்றிவிட்டது (செயல்படுகிறதா ? என்று தெரியாது smile உணர்ச்சிலை ) அய்யாவின் காலத்தில் செயல்பட்டதுபோல இன்று எதேனும் சங்கம் செயல்படுமாயின் நம் இனத்தின் நிலையே வேறு..
ஏக்கத்தோடு...!
இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த மரியாதைக்குறிய ஆசிரியர் பாரதிதாசன் அவர்களுக்கும், அன்பு சகோதரர் செல்வேந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..!!
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மற்றும் போராட்டக்களங்களுக்கு செல்ல ஆர்வமுடன் இருக்கிறோம்..

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், 
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்









துணிச்சல்...!

துணிச்சல்...!
மிக சமீபத்தில் ஒரு சங்கம் துணிச்சலாக கையில் எடுத்த ஒரு விசயம் என்றால் அது இதுவாகதான் இருக்கமுடியும், சிவகங்கை மாவட்டம் காயம்பட்டியில் அரசத்துறைகளால் திறக்க தடை விதிக்கப்பட்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" சிலையை சிங்க ராஜாக்கள் கட்சியினர் திறந்து வைத்தனர், இனி மீண்டும் மூடிட முயன்றால் மீண்டும் திறப்பார்கள் , வேண்டுமானால் காவல்துறையை நிரந்தரமாக நிறுத்தி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.tongue உணர்ச்சிலை என்பதுதான் சவால்.. like உணர்ச்சிலை
களப்பணி என்பதற்க்கு விளக்கம் தேவைப்படுவோருக்கு இது போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்


எழுச்சி தமிழர் முன்னேற்ற கழக மாநாட்டில்

என்னப்பா இது அவ்வளவு நேரம் பேசினேன், ஒரு நிமிஷமா சுருக்கிட்டிங்களேப்பா smile உணர்ச்சிலை
32 வது நிமிஷத்திலிருந்து..


செவ்வாய், 14 ஜூலை, 2015

புதிய நிர்வாகிகள் - இரண்டாவது பட்டியல்

புதிய நிர்வாகிகள் - இரண்டாவது பட்டியல்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் ஏற்கனவே அறிவித்ததுபோல "2016 - ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" என்ற இலக்கை அடைய முதல்கட்டமாக நிர்வாக அமைப்பினை வலுப்படுத்தும் விதமாக ஏற்கனவே முதல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு இருந்தோம். இப்போது இரண்டாவது பட்டியலை வெளியிடுகிறோம், மேலும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில்...

1) மதுரபாசாணிபுரம் திரு. S.V.மகேந்திரன்,
மதுக்கூர் கிழக்கு ஒன்றியத் தலைவர்

2) சிரமேல்குடி திரு. R.வருண்ராஜ்,D.M.E.,
 மதுக்கூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்

3) ஆலத்தூர் திரு. C.கார்த்திக்,
மதுக்கூர் மேற்கு ஒன்றியத் தலைவர்

4) முசிறி திரு. J.மகேந்திரன்,
மதுக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர்

5) கீழக்குறிச்சி திரு. S.ராஜப்பாண்டி,D.C.E.,
 மதுக்கூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்

6) மங்கனங்காடு திரு. M.பாலசிங்கம்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றியத் தலைவர்

7) மறவக்காடு திரு. P.முத்துக்குமார்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்

8) பள்ளிக்கொண்டான் திரு. R.அதிபன்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர்

9) பழஞ்சூர் திரு. R.அன்பரசன்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர்

10) திரு. P. தேவா,
அதிரை நகர செயலாளர்

இந்த நிர்வாகிகளுக்கு தங்கள் மேலான ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

K.சஞ்சய்காந்தி அம்பலக்க்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

ஞாயிறு, 12 ஜூலை, 2015

Reducing national icons to caste leaders

Reducing national icons to caste leaders

Tamil Nadu can boast of an array of freedom fighters, both in the early years when local rulers took on the East India Company, and in the modern era of political activism against the British empire. There were regional chieftains like the Marudhu brothers and Veerapandiya Kattabomman, but their forces were decimated in the fight against the Company’s army. The British later had to face the likes of V.O. Chidambaram Pillai, who ran a Swadeshi shipping company, poet Subramania Bharathi and Vanchinathan, a youth who assassinated Tirunelveli Collector Ashe.

However, today, most of these leaders seem to have lost their identity as freedom fighters, and their stature has been diminished to those of caste representatives. Chidambaram Pillai and even Communist leader B. Jeevanandam have become mascots of Vellala organisations across the State.

“When I started my research on VOC in the 1980s, it was not the case. The trend began only in the 1990s in the wake of the implementation of the Mandal Commission report. Caste assertion led to the appropriation of freedom fighters,” said A.R. Venkatachalapathy, Professor, Madras Institute of Development Studies.

The same fate befell kingmaker and freedom fighter Kamaraj after his image was overshadowed by political developments and the Congress weakened. Nadars began to project him as their leader.

An example of political leaders being discovered from history for a sectarian agenda is freedom fighter and songster Viswanatha Das, whose name is now sought to be associated with the Maruthuvar community.

“I can understand the need for a marginalised community like Maruthuvar to project a hero, but what is the need for a community that has already gained status politically and economically in the society to do so,” Mr. Venkatachalapathy asked.

Whether it is the Marudhu brothers or Theeran Chinnamalai or Veeran Azhagumuthu Kon or Perumpidugu Mutharaiyar or Sankaralingam, all of them have been reduced to caste leaders by their communities.

Writer S.V. Rajadurai said pre-colonial warriors were appropriated by caste outfits because every community was keen on claiming a role for itself in the freedom movement. “It is a very dangerous trend. Instead of inculcating national feelings among the people, the names of these leaders are invoked to express caste pride and create a divide in society,” he said.

News source : http://m.thehindu.com/news/cities/chennai/reducing-national-icons-to-caste-leaders/article7401143.ece

வெள்ளி, 10 ஜூலை, 2015

சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பும், முத்தரையர் சமூகமும்....!!

சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பும், முத்தரையர் சமூகமும்....!!

இடஒதுக்கீடு :

இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (சாதி, மதம் உள்ளிட்ட எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறதோ) எல்லோருக்கும் உரிய பங்கு என்பதுதான் "இடஒதுக்கீடு" என்பதன் பொருளாக இருக்க முடியும் ஆனால் நடைமுறையிலோ இடஒதுக்கீடு என்பது "முத்தரையர்" சமூகத்தை பொருத்தவரை "இருக்கிறது ஆனால் இல்லை" என்பதுதான். இந்தியாவில் எத்தனையோ ஆயிரம் சாதிகள் இருக்கிறது, தமிழகத்திலோ நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றது, இன்றுவரை சுதந்திரத்திற்க்கு முன்பாகட்டும், பின்பாகட்டும் எப்போதும் அரசாங்கங்களால் புறக்கணிக்கப்படும் ஒரே ஒரு சமூகம் "முத்தரையர்" சமூகம். இடஒதுக்கீடு மட்டுமல்ல... எல்லா நிலைகளிலும்,

ஆனால் அந்த சமூகத்து இளைஞர்களுக்கு இன்றும் எதாவது ஒரு சங்கத்துக்கு கொடி பிடிக்கவும், கோசம் போடவும் மட்டும்தான் தெரிகிறதே தவிர, அரசாங்கம் எப்படி நம்மை புறக்கணிக்கிறது ? ஏன் புறக்கணிக்கிறது ? என்ற எந்த சிந்தனையும் ஒருபோதும் வரவில்லை, சரி அவர்களுக்குதான் இல்லை என்றால் சங்கம் வைத்து சாதி வளப்பவர்களுக்காவது இதுகுறித்த புரிதல், கொள்கை, நோக்கம் எதாவது இருக்கிறதா ? என்றால் அதுவும் பூஜ்யம். இன்று அரசாங்க பணிகள் பற்றி சொல்லப்போனால் மொத்தமுள்ள 32 மாவட்டங்களிலும் ஒரே ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது IAS ஆபிஸர் ஒருவர் மட்டுமே...! சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதி கூட கிடையாது, அரசுதுறைகளில் எதிலும் முத்தரையர்களுக்கு செயலாளர் என்ற அந்தஸ்த்து கிடையாது, காவல்துறையில் மாவட்ட அளவில் கூட அதிகாரி பதவி கிடையாது, ஆனால் எண்ணிக்கையிலோ அதிகம்..? இது முரண்பாடாக யாருக்குமே தோன்றுவதில்லை, ஏனென்றால் பாதிக்கப்பட்டது என் சாதியல்லவா,

கணக்கெடுப்பும், முத்தரையரும் :

1934 ஆம் ஆண்டு கடைசியாக ஆங்கிலேய அரசாங்கம் எடுத்து வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பை மட்டுமே இதுவரை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு தந்து கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கம் இதுதான் சமூக நீதியா..? 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் ஒரு பகுதியை கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டது, அதில் சமூக பொருளாதார நிலைகள் குறித்த தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது "சாதிவாரியான கணக்கீடுகளோ" சாதிவாரியான மக்களின் நிலைகளையோ வெளியிடவில்லை, இன்றுவரை "இடஒதுக்கீடு" என்ற பெயரில் 120 சாதிகளோடு இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோராக (Most Backward Class) ஒருசில பிரிவுகளையும், பிற்படுத்தப்பட்டவராக (Backward Class) சிலபிரிவுகளையும் வைத்து ஒட்டுமொத்த "முத்தரையர்" சமூகத்திற்க்கும் இடஒதுக்கீட்டின் பலனாக ஒன்றுமே இல்லாமல் வைத்திருக்கிறார்கள், இன்றுவரை இடஒதுக்கீட்டின் பலன்களை சில ஆயிரம் எண்ணிக்கையுடைய சமூகங்கள் "திருப்தியாக" பலனடையும்போது, எண்ணிக்கையில் லட்சங்களை தாண்டி கோடிகளில் கணக்கு சொல்லி பெருமைப்படும் "முத்தரையர்" சமூகத்தின் பலனோ "பூஜ்யம்" இன்னும் சொல்லப்போனால் கல்வி நிலையை பொருத்தவரை "பட்டதாரிகளே" இல்லாத (முதல்தடவைக்கூட) முத்தரையர்களின் குடும்பம் மட்டுமே சுமார் 60% இருக்கும் இதுவும் இன்று இருக்கும் இடஒதுக்கீட்டின் காரணமாகதான்.

சாதி அமைப்புகளும், கணக்கெடுப்பும் :

சாதியே இல்லை என்று கூப்பாடு போடும் திராவிடர் கழகம் தொடங்கி திராவிட முன்னேற்ற கழகம் வரை "சாதிவாரி கணக்கெடுப்பை" வெளியிட வலியுறுத்தும்போது, சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டால் உண்மையான மக்கள் எண்ணிக்கை தெரியும், மக்கள் எண்ணிக்கை தெரிந்தால் சரியான இடஒதுக்கீட்டை பெறமுடியும், சரியான இடஒதுக்கீட்டை பெற்றால் சாதிமக்கள் சம உரிமையோடு வாழ்வார்கள் என்று தேர்தல் நேரங்களில் எதாவது கட்சிக்கு ஆதரவு தரும் சங்க தலைவர்கள் வலியுறுத்த வேண்டாமா..? கேட்டால் நான் பிரிவினை ஏற்படுத்துகிறேன் என்பார்கள், எது பிரிவினை..? என் சாதிக்கான உரிமை பறிக்கப்படும்போது பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்கள், எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த சமூகத்தினை தேர்தல் நேரங்களின் அடகு வைக்க துடிக்கிறார்கள் என்று கேட்பது பிரிவினையா..?

இப்படி எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் போராடாமல் எந்த பலனையும், ஏன் வாழ்வுரிமையை தக்க வைக்கக்கூட போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு சமூகத்தின் இன்றைய பிரச்சனை என்ன தெரியுமா..? என் தலைவன் பெரியவனா..? உன் தலைவன் பெரியவனா..? என்பது.

ஏன் வெளியிட வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு ? :

ஒரு உண்மையை சொல்லட்டுமா..? இப்போது எடுக்கப்பட்ட கணக்கை அதாவது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கை சேர்த்தே வெளியிடட்டும் அப்போது தெரியும் முத்தரையர்களின் சமூக அவலம், இன்று தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த குடிசைவீடுகளில் 70%மும், நிலமற்ற ஏழைகளில் 80% மும் "முத்தரையர்" சமூகமும்தான் இருக்கிறது இந்த கணக்கெடுப்பு மட்டும் திருந்தம் இல்லாமல் முழுமையாக வெளியிடப்படுமேயானால் இந்த உண்மைகள் வெளியே தெரிந்துவிடும். இந்த உண்மை தெரிந்து ஒருவேளை உறங்கிக்கொண்டே இருக்கும் ஒரு சமூகம் விழித்துக்கொண்டால்...? ஆகவே இந்த கணக்கெடுப்பை சேர்த்தே வெளியிட ஒருபோதும் எந்த அரசாங்கமும் துணியாது. இந்த கணக்கெடுப்பிலே மாதம் ஐந்தாயிரத்திற்க்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அதிலும் உறுதியாக சொல்லமுடியும் "முத்தரையர்களின்" எண்ணிக்கை 90% இருக்கும் என்று.

ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பை முழுமையாக வெளியிட வேண்டும், முத்தரையர் சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீட்டை தர வேண்டும் (அதேபோன்று எல்லா சமூகங்களுக்கும் உரிய பங்கினை தர வேண்டும்) இதை இங்கு இந்த சமூகத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் வலியுறுத்த வேண்டும், முக்கியமாக போராட வேண்டும். சமூக நீதியை என் சாதியும் பெற வேண்டும்.

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 1 ஜூலை, 2015

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் ஏற்கனவே அறிவித்ததுபோல "2016 ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" என்ற இலக்கை அடைய முதல்கட்டமாக நிர்வாக அமைப்பினை வலுப்படுத்தும் விதமாக முதல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுகிறது. அடுத்த பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும்.

1) கொள்கை பரப்பு செயலாளர்
திரு. கரிசை T.M. தமிழரசன் அவர்கள்

2) மாநிலதுணைச்செயலாளர்கள்
திரு. ஆலத்தூர் E.இளவழகன் D.M.E., அவர்கள்
திரு. பழஞ்சூர் S. சுரேந்திரன் DHMCT., (B.B.A.,) அவர்கள்

3) மாநில மாணவரணி செயலாளர்
திரு. பாலோஜிரெகுநாதசமுத்திரம் M. கேசவன் (M.B.A.,) அவர்கள்

4) பட்டுக்கோட்டை நகர தலைவர்
திரு. S.அன்பு M.Tech அவர்கள்

5) பட்டுக்கோட்டை நகர செயலாளர்
திரு. வளவன்புரம் R.ராஜ்குமார் அவர்கள்

6) பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்
திரு. எட்டுப்புளிக்காடு R. மேனிராஜா அவர்கள்

7) பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்
திரு. பள்ளிக்கொண்டான் R. விஜி அவர்கள்

8) சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்
திரு. எட்டுப்புளிக்காடு C.ஸ்ரீரங்கராஜா B.A.(B.L)., அவர்கள்

9) பட்டுக்கோட்டை ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர்
திரு. மங்கனங்காடு M.P. சிவரஞ்சன் அவர்கள்

10) பட்டுக்கோட்டை ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்
திரு. வள்ளிக்கொல்லைக்காடு L.B.தீபக் B.Sc., அவர்கள்

இந்த நிர்வாகிகளுக்கு தங்கள் மேலான ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சஞ்சய்காந்தி அம்பலக்க்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

மதுரை எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக மாநாடு

தமிழக அரசே எங்கள் சமூகத்திற்க்கு பங்கு (!) கொடு.....!!!

மதுரை எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக மாநாடு

பொதுவாக எல்லா சாதியும் இடஒதுக்கீடு கொடு, நீதி கொடு என்றுதான் கேட்பார்கள், ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் இல்லையா..? அதனால்தான் "பங்கு" கொடு என்று கேட்கிறோம்.அதற்க்கு விளக்கம் பிறகு சொல்கிறேன்,
சிவகங்கை தொடங்கி தென்மாவட்டங்களில் அரசியல்படுத்தப்படாத ஒரே ஒரு இனம் "முத்தரையர்" இனம், அந்த இனத்திற்க்கு அய்யா ஆண்டியப்பனுக்கு பிறகு ஒரு தகுதியான தலைவரை இன்றும் தேடுகிறார்கள், நாளையும் தேடுவார்கள் என்றே கருதுகிறேன். திரு. வெள்ளைதுரை எனும் தனி நபர் முயற்சியில் தென்மாவட்டத்தில் அரசியல்படுத்தப்படாத ஒரு இனத்தின் மாநாட்டில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டது ஒருவேளை ஏனைய தலைவர்களுக்கு சந்தோசம் தரலாம், ஆனால் உண்மையில் தென் தமிழக முத்தரையர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் இது திரு.வெள்ளைதுரையின் தோல்வியல்ல.., உங்களின் தோல்வி, உங்கள் ஆன்மாவின் தோல்வி, ஒருவேளை இதை திரு.வெள்ளைதுரையின் தோல்வியாகவே எடுத்துக்கொள்வோம், தென்மாவட்ட முத்தரையர்களே உங்கள் ஆன்மாவிற்க்கு சக்தியிருந்தால் சிவகங்கை தொடங்கி தென் தமிழகத்தில் இருக்கும் நூற்றிற்க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில், ஒரே ஒரு தொகுதியில் நீங்கள் / அல்லது நீங்கள் இருக்கும் அமைப்பு ஆதரிக்கும் கட்சியில் இருந்து முத்தரையர் ஒருவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கிவாருங்கள், நான் சமுதாயபணியில் இருந்தே விலகி கொள்கிறேன்.
கூட்டத்தில் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கருதுகிறேன், நிச்சயமாக யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது, முத்தரையர் மக்களை தஜா செய்து காரியம் சாதித்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதற்க்கு ஏற்கனவே நிறைய தலைவர்கள் நம்மிடையே உண்டு, எனக்கு ஏற்பட்ட கோபம் சராசரியான எந்த முத்தரையனுக்கும் வரவேண்டும்..! அதனால்தான் அப்படி பேச வேண்டிவந்தது, ஒரு மாநாட்டிற்க்கு வருபவர்களுக்கு குறைந்தபட்ச இங்கீதம் கூட இல்லையென்றால் ஒரு சராசரி முத்தரையனுக்கு தார்மீக கோபம் வருவது இயல்புதானே...? அதனால் எனது பேச்சு யாரையும் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
இந்த கட்டூரைக்கு "பங்கு கொடு..?" என்று ஏன் தலைப்பு என்று சிலருக்கு தோன்றி இருக்கும் smile உணர்ச்சிலை ஆமாம் நேற்று மாநாடு நடத்திய திடலை ஒட்டி இருந்த "டாஸ்மாக்" வழக்கத்தைவிட எப்படியும் மூன்று, நான்கு மடங்கு லாபத்தினை நேற்று ஒரே நாளில் பெற்றிருக்கும், எங்களுக்குதான் இடஒதுக்கீடும் கிடையாது, ஒரு எழவும் கிடையாது, எப்படியும் தமிழகத்தில் குடிப்பதில் எங்கள் சமூகத்தின் பங்கு மட்டும் ஒரு 40 முதல் 50 % இருக்கும், அதனால் இனி இடஒதுக்கீடு கொடு என்று சொல்வதைவிட, எங்கள் சமூக குடும்பதலைவர்களிடமிருந்து பிடுங்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கை (!?) tongue உணர்ச்சிலை குடியால் அழிந்த குடும்பத்தில் கால்வயிற்று கஞ்சிக்கும் வக்கற்று தெருவிற்க்குவரும் எங்கள் சமூகத்தின் பெண்களுக்கு, குடும்பதலைவிகளுக்கு கொடு, frown உணர்ச்சிலை இதைவிட கேவலமாக ஒரு சமூகத்தின் அவலத்தை எழுதிவிட முடியாது என்றே கருதுகிறேன் இந்த நிலை மாற வேண்டும், என் சமூகமும் உயர்ந்திட வேண்டும், இந்த சமுதாயம் உயர்ந்திட நானும் ஒரு துரும்பாய் இருந்திடுவேன் என்றென்றும்...!
மற்றபடி கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர் மதுரை முருகேஷ், மேலூர் கதீர், திருப்பத்தூர் ரமேஷ், விருதுநகர் ராஜ்குமார், அண்ணன் முத்துராஜா என்று என்னற்ற தோழர்களை மாநாட்டிற்க்கு பிறகு சந்தித்து உரையாடலாம் என்று நினைத்திருந்தேன், கன‌மழையால் அது நடக்கவில்லை....! தம்பி மகேஷோடு சிறிது நேரம் பேச முடிந்தது, மற்றபடி கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்த மரியாதைக்குறிய திரு.வெள்ளைதுரை, தலைவர் எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் அவர்களுக்கும் ஏனைய தலைவர்களுக்கும், மாநாட்டில் கலந்துகொண்ட என்னற்ற சமுதாய தலைவர்களுக்கும் எனது நன்றிகள்...!!
இன்னும் என் சமூகத்திற்க்கு அரசியல் குறித்த தெளிவு வரவில்லை என்பதற்க்கு இந்த மாநாடே உதாரணம்.. வரும் என்ற கனவோடு..

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்












முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் வக்கீல் சிவராஜ் தலைமையில், புத்தூரில் நடந்தது.
கூட்டத்தில், திருச்சியில் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும். வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயிலில், திருச்சிக்கு தனியாக பெட்டி இணைக்க வேண்டும். தென்னை, பனை விவசாயிகளை காப்பாற்ற, கள்ளு கடையை திறக்க வேண்டும். குடமுருட்டி ஆறு, காவேரி ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். முத்தரயைர் புனரமைப்பு கழகம் ஏற்படுத்த வேண்டும், ஜூலை மாதம் திருச்சியில் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வது, போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பாஸ்கரன், துணை செயலாளர் சாமி விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

News Source : DINAMALAR

தினமலர் செய்தி


தனி இடஒதுக்கீடே ஒரே தீர்வு..! முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

தனி இடஒதுக்கீடே ஒரே தீர்வு..!

இன்று தஞ்சை மாநகரில் கொழுத்தும் வெயிலில் எங்கள் சமூகத்தின் உரிமைக்காக இளைஞர்கள் பட்டாளம் ஒன்று வீதியில் நின்று போரடியது.., இனியும் போராடும்....!!!

எங்களுக்கான உரிமையை வென்றேடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது, இன்று கூடிய கூட்டத்திற்க்கு எந்த ஆதாய நோக்கமுமில்லை, ஒருவேளை இடஒதுக்கீடு கிடைத்தால் இவர்களில் எத்தனைபேர் அனுபவிப்பார்கள் என்றும் உறுதிகூற முடியாது, ஆனாலும் போராடுகிறோம் எங்கள் சமூகத்திற்காக...!!

மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் சமூகத்திற்க்கு தனி இடஒதுக்கீட்டை தர வேண்டும், மேலும் எங்கள் எண்ணிக்கைகேற்ப 30 தனித்தொகுதிகள் ஒதுக்க வேண்டும் இதையே கோரிக்கையாக வைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்பாட்டம் ஒன்றினை தஞ்சை ரயிலடியில் நூற்றுக்கணக்கான "முத்தரையர் இளம் சிங்கங்கள்" ஒன்றுகூடி திரு. எஸ்.எம்.மூர்த்தி தலைமையில் நடத்தி முடிந்திருக்கிறார்கள், இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் போராடுவது என்றும் முடிவெடுத்து இருக்கிறார்கள், வியர்வை வழிய ஒரு கடமையுள்ள சமூக போராளியாக நானும் களத்தில் நிற்க்கும்போது பெருமிதமாகவே இருக்கிறது, மற்றபடி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடுவிக்காடு, முசிறி உறவுகளின் தியாக மனப்பான்மை ஏனைய முத்தரையர்களுக்கும் வரவேண்டும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  திரு. மகேந்திரன், திரு.இளவழகன் துணைச்செயலாளர், திரு.பாலமுருகன், திரு.தீபக்,  திரு.அப்பு, திரு.பிரகாஷ், நெய்வாசல் அருண், திரு.செந்தில் உள்ளிட்ட இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத் தோழர்களுக்கும், நட்பிற்க்காக, சமுதாயத்திற்காக கலந்துகொண்ட திரு.அன்பு, செயலாளர், சிங்க ராஜாக்கள் கட்சி மற்றும் திரு. நாஞ்சிக்கோட்டை சசிகுமார் உள்ளிட்ட உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

தனி இட ஒதுக்கீடு, இந்த இலக்கை அடைவதே இனி முத்தரையர்களின் வாழ்வாதாரத்திற்க்கு ஒரேவழி, ஒன்று திரண்டால் முடியாதது எதுவும் இல்லை...! திரள்வோம், வெல்வோம்..!!!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர், 
ஒருங்கிணைப்பாளர், 
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்