Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 25 பிப்ரவரி, 2015

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஒரு கடிதம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் இயக்கம் சார்பாக "இன எழுச்சி அரசியல் மாநாடு" மே 23, 2015 அன்று திருச்சி மாநகரில் ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிப்பினை கண்டிருந்தேன், அன்றைய தினத்தில் தமிழகத்தின் பெரும்பாண்மை சமூகமாக "முத்தரையர்களின்" பெருமைமிகு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள், அதே திருச்சி மாநகரின் மத்தியில் கம்பீரமாய் வீற்றிருக்கும் எமது பேரரசருக்கு மரியாதை செலுத்தும் நாளாய் இருப்பதனால் தமிழகத்தின் பலப்பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் மே 23 அன்று பல ஆயிரம் மக்கள் திரளும் நாளாகவும் இருப்பதனால் தங்களின் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்க்கு அந்த நாளில் திருச்சி மாநகர் சரியாக இருக்குமா..? என்பதனை உங்கள் கவனத்திற்க்கு கொண்டுவர நினைக்கிறேன்.
தாங்கள் சமீபத்தில் தொடங்கிய வீர தமிழர் முன்னணி சுவரொட்டியில் எமது பெருமைமிகு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் படத்தினையும் இணைத்தமைக்காக நன்றியினையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் விடயம் குறித்து தாங்கள் நல்ல முடிவினை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
E-mail to : naamtamizhar@gmail.com


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதிதுவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கிட வலியுறுத்தி வழக்கறிஞர் போராட்டம் : முத்தரையர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திட முன்வர வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதிதுவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கிட வலியுறுத்தி வழக்கறிஞர் போராட்டம் : முத்தரையர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திட முன்வர வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 60 நீதிபதிகளில் காலியாகவுள்ள 18 நீதிபதிகளை இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு "முன்னுரிமை" கொடுத்து நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த வாரம் தொடங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மையில் போராட வேண்டிய, சென்னை உயர் நீதிமன்றத்தின் கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒரு முறைகூட வாய்பளிக்கப்படாத‌ சமூகமான "முத்தரையர்" சமூகத்தில் இருந்து போராடவோ, போராட்டத்திற்க்கு துணை நிற்கவோ இதுவரை எந்த சங்கமோ, தனி நபர்களோ முன்வராதது கவலை தரக்கூடிய விசயம். அந்த வழக்கறிஞர்கள் யாருக்காக போராடுகிறார்கள்..? நமக்காக இல்லையா..? அவர்களின் போராட்டத்திற்க்கு எந்தவகையில் நாம் உதவியிருக்கிறோம்..?

இது வழக்கறிஞர்களுக்கான போராட்டமோ, வேறு யாருக்கான போராட்டமோ கிடையாது, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டமான மாறிட வேண்டும், குறிப்பாக "முத்தரையர்கள்" மற்றும் முத்தரையர் சமூக சங்கங்களின் போராட்டாமாக மாறிட வேண்டும், கடந்தமுறை 12 நீதிபதிகள் நியமனத்தின்போது "தினமணி" நாளிதழ்கூட நமக்காக எழுதி இருந்தது, அப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை, இப்போது 18 நீதிபதிகள் நியமனத்திலாவது நாம் பெற முடியாமலே இருக்கும் உரிமையை பெற்றிட போராட முன்வர வேண்டும், சங்கம் என்றால் ஊருக்கு ஊர் கொடி ஏற்றுவதும், வீரவசனம் பேசிடுவதும், தேர்தலுக்கு தேர்தல் தலைகாட்டுவதும், வெற்றுபெருமை பேசுவதுமாக இல்லாமல், இழந்த உரிமையை போராடி பெற்றிட முன்வர வேண்டும். இதுதொடர்பாக எந்த சங்கம் எங்கே போராட்டம் நடத்தினாலும் நான் கலந்துகொள்ள தயாராகவே இருக்கிறேன், விரைவில் நான் சார்ந்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுக்கவும் முயற்சி செய்வேன்.

அதேபோல சமூக நீதிக்காக போராடும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எனது/எங்களது முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது நமக்கான போராட்டம்..!!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

Sri Rangam

ஸ்ரீரங்கம் தொகுதி முத்தரையர்களுக்கு நன்றி..!!!

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!! எத்தனைமுறை சொன்னாலும் போதாது எனதருமை திருவரங்கம் மக்களுக்கு..

இந்த தேர்தலைப் பொருத்தவரை என்னஎன்னவோ பிரச்சனைகளை முன்னிருத்தி பலரும் பிரச்சாரம் மேற்கொண்டனர் ஆனாலும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் குறிப்பாக "முத்தரையர்" மக்கள் தெளிவான சிந்தனையோடு, ஒற்றை நோக்கோடு இன்று மாபெரும் வெற்றியினை அதிமுக வேட்பாளர் திருமதி. வளர்மதிக்கு வழங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் ஸ்ரீரங்கம் தொகுதி முத்தரையர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல‌ ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தவுடன் திமுகவின் வேட்பாளராக அண்ணன் திரு.ஆனந்தை அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் அதிமுக வேட்பாளராக இருந்து இன்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கக்கூடிய சகோதரி திருமதி.வளர்மதிக்கு வாழ்த்துக்களையும், இவரை வேட்பாளராக அறிவித்திட்ட அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாவுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் மக்கள் யாரை விரும்புகிறார்கள் அல்லது அவர்கள் மனநிலை என்ன ? என்பதை அறியாமல் தேர்தல் களத்திற்க்கு வந்தால் இன்று டெபாஸிட் இழந்து மண்ணை கவ்விய பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் நிலைதான் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதுமானதாக இருக்காது.

முதலிடம் பிடித்தவரும், இரண்டாம் இடத்தை பெற்றவரும் "முத்தரையர்" மட்டுமே, இதன்பொருள் எந்த கட்சியாக இருந்தாலும் வேட்பாளர் எங்கள் சமூகத்தவரா ? என்பதை மட்டும் கவனித்து இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வாக்குகளை செலுத்தி தமிழகம் முழுவதும் பரந்துபட்டு வாழும் "முத்தரையர்" மக்களுக்கு ஒரு செய்தியை உறுதியாக, உறைக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள், "எனதருமை முத்தரையர் பேரினமே ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நமது உறவினர்கள் சொல்லி இருக்கும் செய்தி உங்களுக்கு புரிகிறதா..? புரிந்துக்கொண்டால் அடுத்த 2016 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்லமுடியும், உறங்காதே முத்தரையா..! விழித்துக்கொள்"  இதுதான் நம் ஸ்ரீரங்கம் உறவுகள் நமக்கு சொல்லி இருக்கும் செய்தி..!

இன்று டெபாஸிட் என்ன..? ஐந்து இலக்கத்திலோ, நான்கு இலக்கத்திலோ வாக்குகளை பெற தகுதியற்ற "அரசியல் அநாதைகள்" பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களும் தெரிந்தே அந்த தொகுதியின் பெரும்பாண்மை இனத்தை உதாசினப்படுத்தி, "முகவரி இல்லாதவர்களை" வேட்பாளராக அறிவித்து மறக்கமுடியாத துரோகத்தை எளிதாக செய்தார்கள், அவர்களுக்கு சம்மட்டியாலும், சாட்டையாலும் அடித்து சுய உணர்வு வரவைத்தமைக்காக திருவரங்கம் முத்தரையர் மக்களுக்கு ஒரு "ராயல் சல்யூட்"

தமிழ், தமிழர் பிரச்சனைகளில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் துரோகத்தை மட்டுமே செய்த, செய்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஒரு ஆயிரம் ஓட்டுகள்கூட பெற முடியாமைக்கு, இவர்கள் முல்லைப்பெரியார், நியூட்ரினோ, கூடங்குளம் அணுஉலை, ஈழத்தமிழர் பிரச்சனைகளோடு பெரும்பாண்மை சமூகத்திற்க்கு அவர்கள் செய்ய முயன்ற துரோகமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது, இவர்களின் போலி முகத்தை எளிதாக அடையாளம் கண்டுகொண்ட திருவரங்கம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி..!

அதேபோல எவனோ ஒரு பினாமியை வேட்பாளராக அறிவித்து பெரும்பாண்மை மக்களுக்கு துணிந்து துரோகம் செய்திட முனைந்த பாரதிய ஜனதா கட்சிக்கு "முகத்தில் கரி" பூசிவிட்டிருக்கிறார்கள் திருவரங்கம் மக்கள், அந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க ஒரு முத்தரையர் கூடவா கிடைக்கவில்லை இந்த காவிகளுக்கு..? எவ்வளவு நெஞ்சலுத்தம்..? எவ்வளவு கீழ்தரமாக எமது மக்களை எடைபோட்டார்கள்..? நீங்கள் மத்தியில் அல்ல, உலகையே ஆண்டாலும் பெரும்பாண்மை இனமான "முத்தரையர்களை" புற‌க்கணித்தால் மண்ணை கவ்வுவது உறுதி அதுவும் மிகவும் மலிவான எண்ணிக்கையிலேயே வாக்குகளை பெற முடியும் இனியும் பெரும்பாண்மை மக்களுக்கு துரோகம் செய்ய நினைத்தால், புல்லையும், பூண்டையும் போல அழிந்துபோவீர்கள் என்றே இந்த நேரத்தில் எச்சரித்து இருக்கிறார்கள்.

வாருங்கள் முத்தரையர்களே..! பெருமையோடு கொண்டாடுவோம் நமது சகோதரியின் வெற்றியை..!! அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், நமக்கு அவர் உறவினர் அதைவிட வேறு எதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை இன்று ஐந்தாவது முத்தரையராக சட்டமன்றம் செல்லும் திருமதி. வளர்மதிக்கு வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்...!!!

வாழ்த்துக்களுடன்..

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்  

வியாழன், 12 பிப்ரவரி, 2015

"மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்"

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் "மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்" வருகின்ற 28 ந்தேதி (28‍.02.2015) அன்று ஒரத்த நாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது, பொறியியல் பட்டதாரிகள் தவிர்த்து எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்புவரை படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

http://www.thanjavur360.com/ இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டால் நேரவிரயத்தை தவிர்க்க முடியும்.

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

More News : http://www.dailythanthi.com/News/Districts/Tanjore/2015/02/12005610/Inaiyatalattam-Booking-Facility-Collector-Beginning.vpf

வினவுவின் பொய்யும், புரட்டும்..!!

//பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாலும் பணபலமும், சாதிபலமும் அதிகார வர்க்கத்தின் ஆசியும் இல்லாவிட்டால் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும் என்பது ஓட்டுக் கட்சிகள் அனைவருக்கும் பொதுவானது. தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும் என சாதிவெறியாட்டம் போடும் முத்தரையர் சாதியின் ஆதிக்கம் நிறைந்த கிராமங்கள் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகம் என்பதால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களையே தமது வேட்பாளர்களாக அறிவித்தன. //

வினவு எனும் புரட்டு புரட்சியாளர்களே..! இங்கே அரசியல் கட்சிகளின் மீதான உங்கள் குற்றசாட்டுகளை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும் அதே நேரம் பொய்யையும், புரட்டையும் "புரட்சி" என்ற பெயரில் மக்களிடையே வன்மத்தையும், துவேசத்தையும் தூண்டிவிடுவதை வழக்கமாக கொண்ட நீங்கள், எதோ எழுத வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்டு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு வாழும் ஒரே சமூகமாக இருக்கும் "முத்தரையர்கள்" மீது நீங்கள் வைக்கும் அபாண்டமான குற்றசாட்டு "தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும்" என்று எழுதி இருக்கிறீர்கள், இது உண்மை என்று நீங்கள் நிரூபிக்க முடியுமா..? பகிரங்கமாகவே சவால் விடுக்கிறோம், ஒரு பொய்யை, உங்களுடைய உண்டியல் வருமானத்திற்க்காக பரப்பும் "வினவு" ஸ்ரீரங்கத்தின் எந்த கிராமத்தில் இப்படி ஒரு நிலை இருக்கிறது ? என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க முன்வர வேண்டும், நீங்கள் ஏழை மக்களை சுரண்டி பிழைக்க கடைநிலை மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்காமல், நீங்கள் பிழைப்பு நடத்த வேறு தளங்களை தேர்வு செய்துக்கொள்வது நலம்.

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

http://www.vinavu.com/2015/02/13/srirangam-by-elections-campaign-exposing-pseudo-democracy/