Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 26 ஜனவரி, 2016

நேற்றைய சோக நிகழ்வின் தொகுப்பு.... :(

நேற்றைய சோக நிகழ்வின் தொகுப்பு.... :(

அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படிக்கும் மாணவி சுலோச்சனா, இவர் அதே அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவில் வசிக்கும் எல்ஐசி முகவர் சங்கர் என்பவரின் மகள், முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

அந்த மாணவி என்.சி.சியிலும் பங்கெடுத்து இருந்தார், நேற்று கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நடத்த கடந்த ஒரு வாரமாக‌ சீனியர் மாணவிகளோடு ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கும்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டு மூத்த மாணவி (கமாண்டர்) ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்தும் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனை சுலோச்சனா வீட்டில் சொல்லி தனது தாயாரை அழைத்து சென்று என்.சி.சிக்கு பொருப்பு அதிகாரியாக இருக்ககூடிய பேராசிரியர் கணபதியிடம் முறையிட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர் எந்த விசாரணையும் நடத்தாமல் மூத்த மாணவிகளை கண்டிக்காமல் விட்டதன் விளைவாக தொடர்ந்து மூத்த மாணவிகள் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. அதே கல்லூரியில் சுலோச்சனாவோடு படித்த ஏரிப்புரக்கரை கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு மாணவி மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டது. அந்த மாணவியும், சுலோச்சனாவும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறார்கள் ஆக ஒருசேர பல தொந்தரவுகள் இருந்ததனால் மன உளச்சலில் இருந்த சுலோச்சனா அவசர அவசரமாக இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டாள்.

இதை தவிர வேறு எதேனும் பிரச்சனைகள், தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் இருந்ததா..? வேறு எதேனும் தொல்லைகள் இருந்ததா ? என்பது இன்னும் முழுமையாக ஒருவருக்கும் தெரியவில்லை.

மன உலைச்சலோடு கல்லூரியில் பெண்களுக்கான ஓய்வறைக்கு சென்ற சுலோச்சனா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை (?!) செய்துகொண்டாள் இந்த சம்பவம் காலை 9 மணியில் இருந்து 9.30க்குள் முடிந்து விட்டது. இதன்பிறகே தகவல் கிடைத்து மாணவியின் உறவினர்கள் கல்லூரி முன்பு குவிகிறார்கள் காலை சரியாக 10 மணிக்கு எனக்கு தகவலை தமிழரசன் கொடுக்கிறார். அதற்குள் வழக்கறிஞர் முரளிகணேஷ் சம்பவ இடத்திற்க்கு நேரில் செல்கிறார், தூக்கிட்ட மாணவியின் உடலை கீழே இறக்காமல் உறவினர்கள் போராட ஆயத்தமாகிறார்கள், தகவல் கிடைத்து காவல்துறை பெருமளவில் குவிக்கப்படுகிறது.

சரியாக 11 மணிக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உரிய விசாரணை நடத்துவதாகவும் உத்திரவாதம் தந்ததின்பேரில் உடல் இறக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையில் பொருப்பு அதிகாரி பேராசிரியர் கணபதி மற்றும் என்.சி.சி கமாண்டராக இருக்ககூடிய மூத்த மாணவி ஆகியோரை விசாரணைக்காக காவல்துறை அழைத்து வருகிறது, ஆனால் கல்லூரி தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவோ, கல்லூரி முதல்வர் நேரில் ஆஜராகவோ இல்லை, இது நம் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது ஆகவே பிரேத பரிசோதனைக்கு முன்பு கல்லூரி முதல்வரை அழைத்து விசாரித்தால்தால் பிரேதத்தை வாங்குவோம் என்று சொல்லி சுமார் 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர், நேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை கூடுவதை கண்ட காவல்துறை நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இறுதியாக 5.30 மணிக்கு ஏ.எஸ்.பி அரவிந்த் மேனன் நேரில் வந்து இதனை தீவிரமான விசாரிப்பதாகவும், தவறு செய்தவர்களை கண்டிப்பாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று வீட்டிற்க்கு கொண்டு சென்று இறுதி மரியாதையோடு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த மொத்த நிகழ்விலும் நமக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்கள் நிறைய..

1) கல்லூரி நிர்வாகம் ஏன் மொளனம் சாதிக்கிறது..?
2) உண்மையில் கல்லூரிக்குள் என்ன நடந்தது..?
3) என்.சி.சி அதிகாரியிடம் முறையிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?
4) தோழி இறந்த மூன்றாவது நாளில் இந்த மாணவியும் மர்மமாக இறந்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறதா..?
5) வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்ததா..?

இப்படி கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கிறது, இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிய இரவு 8 மணி ஆகிவிட்டது அதுவரை நாம் களத்திலேயே இருந்தோம்.

இந்த தருணத்தில் என் இனமான பெண்பிள்ளைகளிடம் பணிவோடு வேண்டுகிறேன், எப்போதும் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல..., இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எங்கே..? எப்போது..? யாரால்..? சந்தித்தாலும் தயங்காமல் உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லுங்கள் அல்லது சகோதர உறவுடையவர்களிடம் முறையிடுங்கள் அல்லது எங்களைப்போல அமைப்பாக இருப்பவர்களிடம் முறையிடுங்கள் நிச்சயமாக உங்களுக்கான பாதுகாப்பினை எங்களால் தர முடியும், அதற்காக நாங்கள் எந்த இழப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இந்த மாணவி பிரச்சனையில்கூட இதுதான் பிரச்சனையென்றால் தொந்தரவு செய்தவளை செருப்பால் அடித்துவிட்டு வந்திருந்தால் பாராட்டி இருக்க முடியும், எந்த பிரச்சனை வந்தாலும் சந்தித்திருக்க முடியும் ஆனால் தவறான முடிவை தேடி தேவையற்ற மன உலச்சலை தந்து காற்றோடு கலந்துவிட்டாள் சுலோச்சனா...!

இந்த பிரச்சனையை இத்தோடு விடுவதாக இல்லை, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதில் கல்லூரி நிர்வாகத்தோடு மட்டும்தான் முரண்பாடே தவிர இந்துக்கள் - முஸ்லீமுக்கோ, முத்தரையர்-முஸ்லீமுக்கோ இடையே இல்லை இதை ஏன் சொல்கிறேன் என்றால் காவல்துறையே நேற்று இப்படியான தகவலை பரப்ப முயன்று தோற்றுபோனது.

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
9159168228

திங்கள், 25 ஜனவரி, 2016

உறவு பாலம் ‍- முத்தரையர் சமுதாய பயிற்சி பட்டறை

உறவு பாலம் ‍- முத்தரையர் சமுதாய பயிற்சி பட்டறை

இரண்டாவது நாள் நிகழ்வில் (31.01.2015) ஞாயிற்று கிழமை மாலை 04:00 மணிக்கு...
இடம் : அம்மணிசத்திரம், கிழக்கு கடற்கரை சாலை

பட்டிமன்றம் தலைப்பு :
முத்தரையர் முன்னேற்றத்திற்க்கு தேவை..........


1. கல்வியே.....
அணி தலைமை : கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் எம்.பி.ஏ., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

2. அரசியலே....
அணி தலைமை : எஸ்.எம்.மூர்த்தி நிறுவனர், முத்தரையர் எழுச்சி பேரவை

3. பொருளாதாரமே....
அணி தலைமை : எம்.வி.ஆர்.சிரஞ்சீவி, பொதுச் செயலாளர், புரட்சி சிங்கங்கள் இயக்கம்

4. இன உணர்வே....
அணி தலைமை : புதுகை சரவண தேவா, புதுகை முத்தரையர் கூட்டமைப்பு

நடுவர் : வி.எஸ்.சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அமைப்பாளர், முத்தரையர் முன்னேற்ற‌ சங்கம்.





பொங்கல் விளையாட்டு விழா


பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிப்பு

பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அபூர்வ சிலைகள்
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தஞ்சை பக்கமுள்ள பாபாசத்தை அடுத்த உத்தாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த வாயிற் காப்பாளர் சிற்பம் உள்ளது. இதனைச் சேர்ந்த பிற சிற்பங்கள், ஆலயத்தை தேடி உத்தாணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒரு தோப்பினில் கோவில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தனிச் சிற்பங்களாக அம்மன், மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, லிங்கம் மற்றும் இரு அபூர்வ சிலைகள் கிடைத்தன.
3 திருமுகங்கள்
இதுகுறித்து தொல்லியலாளர் குடவாயிற் சுந்தரவேலு கூறியதாவது:-
அந்த சிலைகளில் ஒன்று உச்சியில் சுடர் கொழுந்துகள் முடியாக ஒன்றிணைந்த நிலையில், 3 திருமுகங்களுடன் வலது முன் கரம் அபய முத்திரையிலும், வலது பின் கரத்தில் சத்தியும், இடது முன்கை தொடை மீது வைத்துள்ள நிலையிலும், இடது பின் கை வச்சிரப் படையும் கொண்டு சுகாஹசனமிட்ட நிலையில் தாமரை பீடத்தின் மீது விளங்குகிறார்.
இது எரியங்கி, ஈஸ்வரர், வேலனார், ஆகியோரின் அம்சங்களைக் கொண்ட ஓர் புதுமைப் படைப்பாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறெங்கும் இது போல் இருப்பதாகத் தெரியவில்லை.
சுஹாசன சிவன்
மற்றொரு தெய்வச் சிலையும் வெகு அபூர்வமாக ஓரிரு ஊர்களில் மட்டும் காணக் கூடியது. ஜடாபாரம் தலை மீது திகழ, பின் கரங்களில் மழுவும், மூவிலைச் சூலமும், முன் வலது காக்கும் கரமாகவும், முன் இடது கை தொடை மீது ஏந்தும் நிலையிலும் வைத்து இலகு இருக்கையில் பத்ம பீடத்தின் மீது காட்சியளிக்கிறார். இது சுஹாசன சிவன் மற்றும் ஏக முக சதுர்புஜ சண்டீசருக்கு உரிய அம்சங்களை தாங்கியதாக படைக்கப்பட்டுள்ளது.
இருப்பிடத்தை வைத்து இத் தெய்வம் எது என்பதனை கணிக்க இயலும். ஆலயம் அழிந்துப் போன நிலையில் அது  சாத்தியமில்லாது போய் விட்டது. சுமார் 3 அடி உயரமுள்ள இவை அனைத்தும் கி.பி 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருவி வழங்கும் உத்தாணி என்பது உத்தமதாணி என்ற பெயரில் அந்நாளைய முத்தரையர் மன்னர் ஏற்படுத்திய ஊர் என்பதை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு தொல்லியலாளர் குடவாயிற் சுந்தரவேலு கூறினார்.

திங்கள், 11 ஜனவரி, 2016

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...!!






அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...!!

       ஜல்லிக்கட்டுக்கு தடை, பிறகு அனுமதி, மீண்டும் வழக்கு என்று பரப்பரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த நேரத்தில் சொல்வதுதானே சரியாக இருக்க முடியும்..? 

உலகப்புகழ் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அந்த ஜல்லிக்கட்டை பொருத்தவரை யார் யாரோ உரிமை கொண்டாடி அதை வரலாற்றில் பதியவைக்க முயற்சிக்கிறார்கள், ஜல்லிக்கட்டுக்கு சிறிதும் தொடர்பற்றவர்கள் அது அவர்களின் வீர விளையாட்டாக காண்பிக்க பகிரத முயற்சிகளை மேற்கொண்டு இல்லாத ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த விழாவை ஆராவரம் இல்லாமல் அமைதியாக நடத்திக்கொண்டு இருக்கிறது வீர வலையர் வம்சம், அவர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை என்பதற்க்காக இதை ஆவணப்படுத்தாமல் நாம் விட்டுவிட முடியாது அல்லவா..? அதற்காகதான் இந்த பதிவு.

அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டின் துவக்கத்தில் இருந்து என்ன நடக்கும் என்பதை விளக்கவே இந்த பதிவு,  முதலில் முத்தாலம்மன் கோவிலில் சாமி கும்பிடுவார்கள் முடிவில் இந்த ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே உருவாக்கிய கெங்கை வகையாறாக்களுக்கு பரிவட்டம் கட்டுவார்கள்,  இதில் குறிப்பிட வேண்டிய விசயம்  பரிவட்டம் கட்டப்படும் ஒரே வகையறா என்றால் அது கெங்கை வகையறா குடும்பம் மட்டும்தான் இவர்கள் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த பரிவட்டம் கட்டிய பிறகே ஜல்லிக்கட்டு விழா துவங்கும், அதேபோல சாமியாக கும்பிடப்படும் முத்தாலம்மனும் வேறுயாரும் அல்ல அந்த அம்மனும் முத்தரையர் குலத்தில் உதித்தவள்தான்.

ஜல்லிக்கட்டின் முதல்காளை முத்தாலம்மன் கோவில் காளை, இரண்டாவது காளை கெங்கை (முத்தரையர்) வகையறா காளை, மூன்றாவது காளை தாய் கிராம காளை அதாவது வலசைகாளை வலசை என்பது நூறு சதவீதம் முத்தரையர்கள் மட்டுமே வசிக்கும் கிராமம் ஆகவே அது யாருடைய காளையாக இருக்க முடியும் என்று தனியாக குறிப்பிட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இதன்பிறகே வேறு காளைகள் களத்திற்க்குள் வரமுடியும், அதேபோல யார் வேண்டுமானாலும் மாடு பிடிக்க முடியும் என்றாலும் மாடு பிடிப்பவர்களில் பெரும்பங்கினர் முத்தரையர்களே, நீண்டகாலமாக அடக்க முடியாத காளைகளைகூட அடக்கி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து களத்திலேயே மாண்டுபோன உண்டியல் என்கிற செந்திலின் வீரம் இன்றும் அலங்கையின் காற்றில் கலந்தே நிற்கிறது. அலங்காநல்லூர் மட்டுமல்லாமல் அருகாமையில் இருக்கும் பல கிராமங்களிலும் மாடுபிடிப்பதை பெருமையாக கருதும் வீரகுலம் முத்தரையர் குலம் ஆனாலும் இதை பெருமையாக அவர்கள் எங்கும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

இவ்வளவு தூரம் ஜல்லிக்கட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரே ஒரு சமூகமாக நாங்கள் இருந்தாலும் இதை குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட தயாராக இல்லை அதனால்தான் "தமிழனின் வீர விளையாட்டாக" இதனை "தமிழனின் பாரம்பரியமாக" இதனை வெளியில் பெருமிதப்படுத்துகிறோம்.

இந்த ஆவணப்படுத்துதல் கூட "தமிழனின் பாரம்பரியமாக" மட்டுமே இதை உலகம் புரிந்துகொண்டிருந்தால் அவசியமிருந்திருக்காது, வேறு சில சமூகங்களின் அடையாளமாக உலகம் புரிந்துகொள்ள முயலும்போது ஆவணப்படுத்துதல் அவசியமாகிறது.

நன்றியுடன்..
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் 


என்னதான் நடக்கிறது...? மாற்றி யோசிப்போம்....!

என்னதான் நடக்கிறது...? மாற்றி யோசிப்போம்....!

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போம், 

ஜல்லிக்கட்டு, வடமாடு விடுவோம், 

உயிரை பணையம் வைத்து காளையையும் அடக்குவோம், 

போட்டி நடத்த தடைவிதித்தால் வீதிக்கு வந்து போராடுவோம், 

தடை தளர்த்தப்பட்டால் உற்சாகமாக வெடி வெடித்தும் கொண்டாடுவோம்.

எல்லாம் சரி "காளை வளர்ப்போர் சங்கம்", "ஜல்லிகட்டு பேரவை" "வீரவிளையாட்டு சங்கம்" லொட்டு லொஸ்கு என்று நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்தாலும் எந்த அமைப்பிலும் என் சாதிகாரன் தலைவர் கிடையாது, என் சாதிகாரனை அழைத்து எந்த பேச்சுவார்த்தையையும் எந்த அரசும் செய்யாது. 

அதேபோலதான்..

பள்ளிக்கூடத்தில் படிக்கிற‌ நம்மவீட்டு சின்ன பசங்ககூட ரொம்ப ஆர்வமா "சண்டைகோழி" வளர்ப்பானுங்க, அதுகூடவே வாழுவானுங்க, ஆனா அதுக்கும் எங்கையாவது சங்கம் இருக்கும் அதுக்கும் எவனாச்சும் தலைவரா இருப்பான். 

கபாடி விளையாட்டுன்னா நம்ம பயலுக உசிர பணயம் வைச்சு ஆடுவான், அத தவிர வேற ஒரு மண்ணும் தெரியாது, அந்த அளவுக்கு அதோட ஒன்றிபோயிருப்பான், விளையாட்டின் நுணுக்கம் அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பான், அதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலேயும் "அமைச்சூர் கபாடி கழகம்" வைச்சிருப்பானுங்க, அதுக்கு யாருடா நிர்வாகி..? யாருடா தலைவருன்னா..? நமக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது.

இதையெல்லாம் தாண்டி எனக்கு தெரிந்து மட்டும் 250 விவசாய சங்கம் தமிழ்நாட்டுல நடக்குது (இன்னும் எத்தனை இருக்கோ தெரியாது) அதுலெயெல்லாம் எவனெவனோ தலைவரா இருக்கான், விவசாயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பிராமணர்கள் கூட தலைவராக இருக்கிறார்கள், என் கண்ணுக்கு எட்டியவரை என் சாதிகாரர்கள் ஒருவர்கூட இந்த விவசாயிகள் சங்கங்களில் தலைவராக கிடையாது. 

ஏன் நாம விவசாயமே பன்னலையா..? 

விவசாயத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லையா..? 

விவசாயகூலிகளா நம்ம ஆளுங்க இல்லவே இல்லையா..? 

அவங்களுக்கெல்லாம் பிரச்சனைகளே இல்லையா..? 

இதையெல்லாம் ஏன் நாம் சிந்திப்பதே கிடையாது..? "சாதிக்குள்ளேயே சங்கம்" அதைதாண்டி வேறு விரிவான பார்வைக்கு நாம் எப்போதும் தயாராக இல்லையா..? இந்த சங்கத்துக்காரன் இப்படி பன்றான், அவன் அப்படி பன்றான்னு இங்கேயே நாம் நின்று நிதானமாக சண்டையிட்டு கொள்வதனால் என்ன லாபம்..? ஒவ்வொருவரும் தலைவராக ஆயிரம் வழிகள் இருக்கும்போது கிணற்று தவளைகளாக இருப்பதால்தான் எவனெவனோ நமக்கு தலைவராக அரிதாரம் பூச முடிகிறது.

** மாற்றி யோசியுங்கள்

- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 6 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு:மல்லுக்கட்டு

சென்னை, ஜன.6: ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான காலம் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக் கட்டு நடைபெறுமா, நடைபெறாதா? என்பது குறித்து கட்சிகளிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்படியும் நடந்தே தீரும் என்று பிஜேபி உறுதியுடன் கூறுகிறது. ஆனால் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் எப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் வினவுகின்றன.
.
தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த எப்படியும் அனுமதி பெற்றுத் தரப்படும் என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிபட கூறியிருந்தார்.கடந்த 1-ந் தேதி அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படாததால் பெரும் ஏமாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தென் மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை.ஆனால் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் ஜல்லிக்கட்டை நடத்த மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார். இதனி டையே வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜேபி மாநில தலைவர்  தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய பிஜேபி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ்தான். இந்த விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. தொடர்ந்து பிஜேபி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. அந்த தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.

இது பற்றி திருமாவளவன் கூறுகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய  மாநில அரசுகள் விரைவாக போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இதனிடையே அலங்காநல்லூரில் முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் காளைகளை வைத்து, பொங்கல் வைத்து மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதேபோல தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சில கிராமங்களில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மாடுகளுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இதுபற்றிய முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.