Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 29 மே, 2016

அதிகார பரவல்...!



அதிகார பரவல்...!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ஏனைய சமூகங்களுக்கு எப்படியோ "முத்தரையர்" சமூகத்திற்க்கு லாபம்தான் :p கடந்த 2011-ல் அமைந்த சட்டமன்றத்தின் துவக்கத்தில் மூன்றாக இருந்து முடிவதற்க்கு முன்பு இடைத்தேர்தல்கள் மூலம் ஐந்தாக முடிந்து 2016 சட்டமன்ற தேர்தலில் மேலும் இரண்டு கூடி இப்போது "ஏழு" உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமாக அம்சம் என்று நான் கருதுவது, இதுவரை முத்தரையர் மக்கள் என்றால் அது மத்திய மண்டலத்தில் இருக்கும் திருச்சியில் மட்டும்தான் என்ற தவறான பொதுபார்வை தேர்தல் / தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் அறியப்பட்டது, அந்த புரிதல் இந்த தேர்தலில் மாறியிருக்கிறது.

கடந்த 2011-ல் திருச்சி மேற்கு, முசிறி, மண்ண‌ச்சநல்லூர், ஸ்ரீரங்கம் என்ற திருச்சி மாவட்ட தொகுதிகளை தாண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து ஒரு பிரதிநிதிதான் (அவரும் திருச்சி மாவட்டத்துக்காரர்தான்) நம் இனத்தில் இருந்து சட்டசபைக்கு சென்றார்கள். இதன்மூலம் அதிகாரம் ஒரே மாவட்டத்தில் குவிக்கப்பட்டும், பொதுபார்வையில் ஏனைய மாவட்டங்களில் முத்தரையர்களே இல்லை என்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்குவதாகவும் இருந்தது, மற்றபடி 2011-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருமே திறமையால், ஆற்றலால் குறைத்து மதிப்பிட முடியாதவர்கள், திரு.பூனாட்சி, திரு.கு,ப.கிருஷ்ணன், திரு. சிவபதி, திரு. பரஞ்சோதி மற்றும் சகோதரி திருமதி. வளர்மதி என்று அனைவருமே அமைச்சர்களாக செம்மையாக செயல்பட்டவர்கள்..

ஆனால் இந்த முறை 2016 தேர்தல் மூலம் திருச்சி மாவட்டத்தில் கடந்த முறையை விட ஒன்று குறைந்து மூன்றாகவும் ( ஸ்ரீரங்கம்-வளர்மதி, மண்ணச்சநல்லூர்-பரமேஸ்வரி முருகன், முசிறி-செல்வராஜ்) ஏனைய மாவட்டங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்து இழந்த மேலூர் தொகுதியில் இருந்து பெரிய புள்ளான் என்கிற செல்வமும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இழந்ததை மகன் ஆண்டி அம்பலம் மீட்டு இருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போதுமே மாறாத ஆலங்குடி தொகுதியில் இருந்து திரு. மெய்யநாதனும், தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்து கடந்த தேர்தலில் இழந்த பேராவூரணி தொகுதியில் இருந்து திரு.கோவிந்தராஜனும் என்று அதிகாரம் பரவலாக திருச்சியை தாண்டி மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும் பரவி இருக்கிறது.

இன்னும் அப்படி வாய்ப்புள்ள மாவட்டங்களில் கூடுதலாக உழைத்து அதிகாரத்தினை பெற ஏனைய மாவட்ட முத்தரையர் அரசியல்வாதிகளை வேண்டுகிறோம்.

இப்போது வென்றிருப்பவர்களில் ஐந்துபேர் அதிமுகவையும், இரண்டு பேர் (ஆலங்குடி, நத்தம்) திமுகவையும் சேர்ந்தவர்கள், இதில் இரண்டு பேர் பெண்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய விசயம், ஆளும்கட்சியில் இப்போது அமைச்சராக்கப்பட்டு இருப்பவர் அக்கா வளர்மதி (இவர் மட்டும்தான் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர் முத்தரையர் சமூகத்தில் இருந்து) இருந்தாலும் ஏனைய அதிமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சராகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, வாய்ப்பு வரட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வளவு விவரமாக சொன்னதன் மூலம் நான் சொல்ல வந்தது, இவர்கள் யாருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக்காக வாய்பளிக்கவில்லை அதிமுகவும், திமுகவும் அப்படி அவர்கள் கருதுவார்களேயானால் அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொண்டு சமூகத்தையும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். இவர்களுக்கு இந்த தொகுதியில் கிடைந்த வாய்ப்பு என்பது "முத்தரையர்" என்ற ஒரே ஒரு தகுதிக்காக மட்டும்தான்.

ஆகவே தயக்கமில்லாமல் முத்தரையர் சமூகத்தின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த அளவு வாதிட்டு நன்மைகளை பெற்று தர வேண்டும், அய்யா ஆண்டி அம்பலம் பெரும்பாலான நேரங்களில் "முத்தரையர்" சமூகத்திற்காக சட்டமன்றங்களில் வாதாடி இருக்கிறார், அவருடைய மகனும் அப்படியே செய்ய வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறோம்.

நலம் பெறட்டும் என் சமூகம்.....!

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

மதகுபட்டி..!!

மதகுபட்டி..!!
முதலில் காலதாமதமான என்னுடைய கண்டனங்கள்...! 

இன்னும் நூறு ஆண்டுகளானாலும் அரசியல் அடிமைகளாய், நாகரீக அடிமைகளாய் இருக்கும் நாம் கொண்டாடும் எந்த பிறந்தநாள் விழாவும் என் பாட்டன் பேரரசன் பெரும்பிடுகுவிற்க்கு எந்த திருப்தியையும் தந்துவிட போவதில்லை..., அரசாண்டவனின் வாரிசுகள் இன்னும் அடிமையாய் இருப்பதையே விரும்புகிறார்களே என்ற ஆதங்கத்தினால் நான் இந்த ஆண்டு பேரரசரின் பிறந்தநாளினை கொண்டாடவில்லை..., :(

இப்படியே சற்றுவிலகி இருக்கலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை, :) முடிவாக‌ கண்டனங்களை பதிவு செய்து மீண்டு வருகிறேன் வழக்கமானவனாக...

சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி, இப்படி சொல்வதைவிட "முத்தரையர் ஐடிஐ" இருக்கும் ஊர் என்றால் எளிதாக எல்லோருக்கும் தெரியும். அந்த ஊரில் வழக்கம்போலவே மே 23 ல் பேரரசருக்கு பிறந்தநாள்விழா அதை தடுக்க முயன்ற காவல்துறை முடிவில் கலவரம், கைது, வழக்கு.

ஒரு சமூகவிழா அல்லது குடும்பவிழா இதெற்கெதற்க்கு காவல்துறையின் அனுமதி....? ஒருவேளை அனுமதி வாங்குவது கட்டாயமென்றால், வாங்காமலே விழா நடக்கிறது என்றால், விழா தொடங்குவதற்க்கு முன்பே தடுக்க வேண்டும் அல்லது விழா நிறைவு செய்தபிறகு ஏற்பாட்டாளர்களை கைது செய்திருக்க வேண்டும், அல்லது இடையில் அந்த விழாவினால் யாருக்கேனும் பாதிப்பு, சமூக பதற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும் இப்படி எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாமல் நடக்கும் விழாவினை சீர்குலைக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது....? விழாவை அனுமதியின்றி நடத்தியதன் மூலம் தனி நபர்களுக்கு, வேறு சமூகங்களுக்கு, அரசாங்கத்திற்க்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது ? எதுவுமில்லாதபோது ஏன் இந்த முட்டாள்தனத்தை ஒரு காவல் அதிகாரி செய்ய வேண்டும்..? 

ஒரு சமூக மக்கள் தன்னெழுச்சியாக கூடி தன்னுடைய மூதாதையருக்கு விழா எடுக்கும்போது தான் தோற்றிதனமாக ஒரு காவல் அதிகாரி நடந்துகொண்டதன் விளைவு என் சமூகம் "வன்முறையாளர்களாக" பொதுவெளியில் சித்தரிக்கப்படுகிறது.

பொறுப்புள்ள ஒரு காவல் அதிகாரி "அதிகார துஷ்பிரயோகத்தில்" ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கதக்கது, அதிலும் தென்மாவட்டம் என்றாலே சாதிய பதற்றம் நிறைந்தது, அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் அறியாததில்லை அப்படி இருக்கும்போது ஒரு பொருப்புள்ள அதிகாரி இப்படி கீழ்தரமாக நடந்துக்கொள்வது சகிக்க முடியாதது. 

அதிகாரத்தை கொண்டு எந்த தனி நபரையும் மிரட்டி பணியவைத்துவிடலாம், ஆனால் முத்தரையர் சமூகத்தை அப்படி ஒடுக்கிவிடலாம் என்று அதிகார வர்க்கம் நினைக்குமேயானால் அது பொய்த்துபோகும். காரணம் இந்த மக்களுக்கு அரசாங்கங்களைப்பற்றி, அதிகாரங்களைப்பற்றி எந்த அக்கரையும் கிடையாது, அவர்களுடைய தன்மானத்துக்கு ஒரு பிரச்சனையென்றால் பொங்கி எழுந்துவிடுவார்கள் அதைதான் சாதாரணமாக நினைத்து கையாள நினைத்த காவல்துறைக்கு மதகுபட்டியில் அன்றிரவே அதிர்ச்சி வைத்தியம் கிடைக்க காரணம்.

அந்த தினத்தில்தான் புதிய அரசாங்கம் பதவியேற்றது அதனால் நேரடியாக அவர்களை குறை சொல்ல முடியாது என்றாலும் அடுத்தடுத்த நாட்களிலாவது ஒரு விசாரணையை நடத்தி தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இன்றுவரை அதை செய்யாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை..., நடவடிக்கை எடுக்காதவரை பதற்றத்தை தணிக்க வேறு வழியும் இல்லை. 

அதேபோல காவல்துறை மிக சமீபகாலங்களில் கையாலும் ஒரு விசயம் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கையில் சிக்குபவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துவது, அதிலும் குறிப்பாக முத்தரையர் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மட்டும் இதுபோன்ற நிகழ்வுகளை நான் தொடர்ந்து கவனித்துவருகிறேன். இப்படி செய்வதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுகிறது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறை, வருவாய்துறையினர் தலையிட்டு சமரச கூட்டங்களை கூட்டுவார்கள் மற்றபடி இப்போது இந்த சம்பவத்தில் செய்ததுபோல 800 பேர் மீது வழக்கு 90 க்கும் மேற்பட்டவர்கள் கைது என்பதெல்லாம் ஒரு சமூகத்தை அச்சுருத்தி பணியவைக்கும் முயற்சி, இது நிச்சயமாக பலனளிக்கும் வழியல்ல என்பதை விரைவில் அதிகார வர்க்கம் புரிந்துக்கொள்ளும். 

இந்த நிகழ்வின் மூலமாக ஒரே ஒரு மகிழ்ச்சி, இதுவரை யாருக்கோ கொண்டாடப்படும் பிறந்தநாள் என்று விலகிபோனவர்கள்கூட அடுத்தாண்டு முதல் உற்சாகமாக பேரரசருக்கு பிறந்தநாளினை கொண்டாட போகிறார்கள். அந்த வகையில் அதிகார வர்க்கத்திற்க்கும், அடக்குமுறைக்கும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். 

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்