Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 21 அக்டோபர், 2017

தமிழனின் கட்டிடக்கலை அறிவியல்......

பண்பாட்டியல் வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உச்சத்தைத் தொட்ட தொல்குடி தமிழினம் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அந்த வகையிலே கலை,   அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் இன்றளவும் வியப்போடு உலகே நிமிர்ந்து பார்க்கும்  சாதனைகளோடு  நுண்ணிய கூறுகளை உள்ளடக்கிய கட்டிடக்கலை பற்றியதே இந்தக் கட்டுரை.
இங்கு கட்டிடக்கலை என்றாலே அதனுடன் சிற்பக்கலையும் , ஓவியக்கலையும் பிரிக்க முடியாதவையாகிப் போகின்றன. கட்டிடக்கலை என்றால் கோயில்களின் கட்டிடக்கலையைத்தான் கூறமுடிகிறது.
ஏனெனில் அரசர்கள் வாழ்ந்த மாளிகைகளைப் பற்றியோ பொதுமக்களின் வீடுகளைப்  பற்றியோ நமக்கு நேரிடைச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. கற்களை ஒன்றோடு ஒன்றாக அடுக்கி அமைக்கும் கோயிற்பணி பல்லவர், பாண்டியர் காலந்தொட்டு இந்நாள் வரை தொடர்ந்து நிலவி வருகிறது.
கோயிற் கட்டிடக்கலை  என்றால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து நம்மால் கூறமுடியும்.

குடைவரை கோயில்கள்:

தமிழகத்தின் தென்பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி என்னும் ஊரின் குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும். இது பாண்டியர்களது படைப்பாகும். இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றைப்  பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர் ஆகியோர் அமைத்திருக்கின்றனர். கி.பி. 9ஆம் நூற்றாண்டோடு குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணி நின்று விட்டது.
தனித்தனி குன்றுகளைச் செதுக்கிக் கோயிலாக்கும் முறை பல்லவர், பாண்டியர் காலத்தில் இருந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்களும் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலும் முறையே அவர்களது படைப்புகளாகும். இம்முறை கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலேயே நின்றுவிட்டது.

அங்கோர்வாட் கோவில்:

உலகின் மிகப்பெரிய கோவிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் கட்டியுள்ளான். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகப்பெரியது.
இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள் மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும் பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது.
மூன்று சதுர கூடங்கள் மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது.
மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடு கூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.
இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த படைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம் உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது.
மண்டபங்களின் கூரைகள் பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.

கல்லணை:

தமிழ்நாட்டில் உள்ள உலகப் பழமை வாய்ந்த அணை  இதுவாகும்.  காவிரி மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.
அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.
அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிகப்  பழமையானது.
தற்போதும் புழக்கத்தில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. இப்படிப்பட்ட கல்லணை நீளம் 1080 அடியும், அகலம் 66 அடியும், உயரம் 18 அடியும் உடையது. இது நெளிந்து, வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.
கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு ஆகும். சுமார் 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது மாபெரும் அதிசயமாகவே உள்ளது. இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் நிலையிலும் நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி நீர் செல்லும் காவேரியை கரைபுரண்டோடும் காற்றாற்றைத் தடுத்து கரிகாலன் என்ற தமிழன் அணை கட்டிய தொழில்நுட்பத்தை இன்றைய கட்டிடத்  தொழில்நுட்ப வல்லுனர்களாலும்  கண்டறிய இயலவில்லை.

தஞ்சை பெரிய கோவில்:

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தஞ்சை பெரிய கோயிலை முதலாம் இராஜராஜ சோழன் 11 ஆம் நூற்றாண்டில் கட்டுவித்தான்.
1003–1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது. கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம் 15 தளங்கள் கொண்ட இக்கற்கோவிலை ராஜ ராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது இன்றுவரை புரியாத புதிரே. கோவிலின் கடைக்கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தத்தைக் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாக்கியுள்ளனர்.
இத்தகையதோர் பிரம்மாண்டமான கோயிலை வெறும் 7 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளனர். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமாகும். இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது.
எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும், தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோயில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும், கோர்த்தும் வைத்துக்  கட்டப்பட்டுள்ளது.
இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுகள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல சோழ கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை லிங்கங்கள் தொடர்ந்து கதிர்வீச்சுகளின் குவி  மையமாகச் சிறந்து விளங்குகின்றன.
இதை யுனெஸ்கோ இந்திய வழித்தோன்றல் சின்னமாக அறிவித்துள்ளது.

ஐராவதீசுவரர் கோவில்:

ஐராவதீசுவரர் கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது.
இக்கோவில் இரண்டாம் ராஜ ராஜனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்களில் இதுவும் ஒன்று. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலை அழகிய கலைக்கூடம் எனலாம்.
நூறு கோயில்களுக்குச் சென்று அதன் சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோயில் நமக்குத் தருகிறது. இக்கோயிலில் எங்கும் சிற்பமயம். ஓவ்வொரு சிற்பத்திலும் ஒரு கதையோ, காவியமோ பொதிந்திருக்கிறது. முப்புறம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம், யானையை வதம் செய்து அதன் தோலைத் தன் மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் (கஜசம்கார மூர்த்தி) கதை இன்னொரு சிற்பம், அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். இப்படிப் பல சிற்பங்கள் உள்ளன.
இக்கோயிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. தக்கையாகப் பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழீசுவரம் கோயில் ஆகிய இரண்டையும் விட அளவில் சிறியதாய் இருப்பினும் சிற்பிகளின் கனவு என்றழைக்கப்படும் அளவிற்கு இதில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுதியாய் உள்ளது. தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக் கார்ல்சேகன்  என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்:

இக்கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்னும் ஊரில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் இராஜ ராஜ சோழனின் மகன் ஆவார்.
கி.பி. 1035 ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக கங்கை கொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. மூவர் உலா, தக்கையாகப் பரணி போன்ற நூல்களின் பல சமகால இலக்கியங்களில் கங்கைகொண்ட சோழபுர நகரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
11 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவரான கம்பர் இயற்றிய கம்ப இராமாயணத்தில் அவரது அயோத்தி நகர வருணனைகளுக்கு கங்கைகொண்ட சோழபுர நகரமைப்புதான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் நூலிலும் இத்தகைய ஒற்றுமையைக் காண முடிகிறது. சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விவரங்களைக் காணலாம். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலும், இக்கோயிலும் திராவிடக் கட்டிடக்கலையின் உச்சநிலையின் வெளிப்பாடாக விளங்குவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இக்கோயிலில் ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் அமைந்துள்ளது.

இராமேஸ்வரம் கோவில்:

கடல் நடுவே இராமேஸ்வரம் தீவில் மலைகளோ, பாறைகளோ கிடையாது. இராமேஸ்வரம் கோவில் 1500 ஆண்டு பழமையானது.
1212 மிகப் பெரிய தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம் மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாக்கியிருக்க முடியும்? பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற்கடந்து எவ்வாறு இராமேஸ்வரம் கொண்டு சென்றிருக்க முடியும்? உலகிலேயே மிக நீளமான பிரகாரங்களை கொண்டது இக்கோயில்.
இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட  மூன்றாம் பிரகாரத்தை 1740-1770  இடைப்பட்ட காலத்தில் கட்டி முடித்தார்.

முடிவுரை:

நாம் மேற்கண்ட அனைத்தும் கதையோ, கற்பனையோ அல்ல. பல  நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களின் அறிவியல் திறத்தையும், அவர்களின் கலை அறிவையும் பறைசாற்றுவதே 
இன்று எத்தனை அவதார்களை வேண்டுமானாலும் நம்மால் எடுக்க முடியும். ஆனால் மேற்கூறியவற்றுள் ஒன்றன் மாதிரியையாவது நம்மால் உருவாக்க முடியுமா? பண்பாட்டியல்  கூறுகளின் மீட்டுருவாக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
அதுவே தொடர்ந்து சிந்தனை சார்ந்த அத்தகைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கும். அப்போதுதான்  பழம்பெருமை பேசுவதன் சரியான பயனை அடைய முடியும்.    

கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் - போலீஸார் குவிப்பு

கரூர்; அருகே மேட்டுமகாதானபுரம் என்ற கிராமத்தில் இருசமூகத்தினரிடையே (முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர்) மோதலில் 3 பேர் சிறுகாயங்களுடன் 8 பேர் கைது - போலிசார் குவிப்பு – பதற்றம் நீடிப்பு !!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டுமகாதானபுரத்தில் நேற்று முன்தினம் இரவு தேவேந்திர வேளாளர் சமூகத்தினர் பசுபதிபாண்டியன் பேனரை வைத்திருந்ததை முத்தரையர் சமூகத்தினர் கிளித்ததாகவும், பட்டாசு வெடித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் இருசமூகத்தினரிடையே அடிதடி மோதலில் 3 பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 8 பேரை லாலாப்பேட்டை போலிசார் கைதுசெய்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதனால் அந்தபகுதியில் பதற்றத்துடன் பல கடைகள் மூடப்பட்டு காணப்படுகிறது. குளித்தலை டி.எஸ்.பி. தலைமையில் போலிசார்கள் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமமே வெறிச்சோடியும், பதற்றம் மற்றும் பரபரப்புடன் காணப்பட்டு வருகின்றன.

News Source : Karur Boomi

திங்கள், 16 அக்டோபர், 2017

பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள்

1914ம் ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட போர். திருப்புறம்பியம் போர் பற்றியும், போர் நடைபெற்ற இடங்களின் தற்போதைய நிலைபற்றியும் இந்த பதிவில் காண்போம்.

உலகப்போர் உலகமுழுவதும் நடைபெற்ற போர்கள்தான் உலகப்போர் என்று அழைக்கப்படுகிறது. உலகத்துக்கே தெரியாமல், ஏன் தமிழர்களில் இன்னும் பலருக்கு தெரியாமல் தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற பிரம்மாண்ட போரா உலகப்போர் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல்லவர்களின் அழிவு பல்லவ சாம்ராஜ்யத்தின் அழிவு என்பது இந்த போரில்தான் முற்றுபெற்றது. அதற்குபின் பல்லவ மன்னர் என்று யாரும் வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

திருப்புறம்பயம் போர் திருப்புறம்பயம் போர் கிபி 800 களில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தியிருந்தனர்.

தஞ்சாவூர் முத்தரைய குறுநில மன்னர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மாறி மாறி கூட்டணி தமிழகத்தின் தற்போதைய அரசியல் கட்சிகளைப் போல முத்தரையர்களும் பல்லவர்களுடனும் பாண்டியர்களுடனும் மாறி மாறி சேர்ந்துகொண்டனர் என்பது கல்வெட்டுகள் மூலமாக தெரியவருகிறது. தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று மக்களுடன் கலந்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிகிறது. தஞ்சையை இழந்த முத்திரையர்கள் பாண்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், முத்தரையர்கள் தஞ்சையை இழந்தனர். பல்லவர்களின் விசுவாசவர்களாக இருந்த சோழர்களுக்கு தஞ்சை கிடைத்தது. மீண்டும் துளிர்த்தெழுந்த பிரம்மாண்ட சோழ வம்சம் இதன்பின்னர் நடந்த நிகழ்வுகளில்தான் சோழர்கள் எதிர்பார்த்திராத அளவு பிரம்மாண்டமாக முன்னேறினர்.

விஜயாலசோழன் இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரானார். முத்தரையர்களுக்காக போரிட்ட பாண்டியர்படை முத்தரையர்களுக்கு ஆதரவாக பாண்டியர்கள் விஜயாலனுக்கு எதிராக போரிட சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றனர். திருப்புறம்பியத்தில் திரண்ட பிரம்மாண்ட போர்ப்படை பாண்டியர்கள் சோழநாட்டின் வடகரையிலுள்ள இடவை (காவிரிக்கு வடகரையிலுள்ள பகுதிகள்) அணிகள் இரண்டு அணிகளாக போரிட்ட இந்த நிகழ்வில், பல்லவமன்னர்கள் நிருபதுங்கவர்மன், அபராஜித வர்மன், கங்க மன்னன் பிருத்விபதி 1, சோழ மன்னர்கள் விஜயால சோழன், ஆதித்த சோழன் ஆகியோரும் ஒரே அணியில் இருந்தனர். பாண்டியர்களின் அணியில் முத்தரையர்கள் இருந்தனர். இப்போரில் முதலாம் பிருத்விபதி உயிரிழந்தார். ஆனாலும் பல்லவர்களின் அணியே வெற்றி பெற்றது. பல்லவப் பேரரசின் கடைசி மன்னன் அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான்.

இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது. சோழர்கள் எழுச்சிக்கு காரணம் சோழமன்னன் ஆதித்த சோழன் பல்லவமன்னன் அபராஜித வர்மனை கொன்று மொத்த ஆட்சியையும் கைப்பற்றினார். இதன்பின்னர் சோழ ராஜ்யம் அபதிவிதமான எழுச்சியை கண்டது. பெரும்போர் நடந்த இடம் இந்த பெரும்போர் நடந்த இடம் காவிரியின் வடகரை. திருப்புறம்பியம் என்று அழைக்கப்பட்டாலும், இன்னும்பல இடங்கள் அங்குள்ளன. அவற்றில் இப்போது சுற்றுலாத் தளமாக உள்ள இடங்களைப் பற்றி பார்க்கலாம் கொள்ளிடம் காவிரியிலிருந்து பிரிந்து ஸ்ரீரங்கத்தை தீவாக்கி, மேற்கு நோக்கி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது கொள்ளிடம் ஆறு. இதுவே ஒரு சுற்றுலாத் தளமாகும். சுற்றுலாத் தளங்கள் கொள்ளிடத்தைச் சுற்றி இரண்டு மணி நேரத்தொலைவில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகியன பெரும்பாலும் அறிந்த சுற்றுலாத் தளங்கள்.

திருப்புறம்பியம் போர் நடைபெற்ற இடங்கள் கும்பகோணத்திலிருந்து அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்குதான் போர் நடைபெற்றதற்கான நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் பல்லவ ஆட்சியின் கடைசி அரசனான அபராஜித வரமன் இங்குதான் கொல்லப்பட்டான்.

News Source : NATIVE PLANET



வெள்ளி, 13 அக்டோபர், 2017

கவனியுங்கள்...!

கவனியுங்கள்...!
"முத்தரையர் சமுதாயத்தில்" தொடர்ச்சியாக பத்தாண்டுகள் சமுதாய பணி செய்த ஒருவரை அணுகி ஒரு கேள்வியை முன்வையுங்கள்.
"உங்கள் சமூகப்பணி எப்படி இருக்கிறது ?" என்று
அவரின் பதில் பெரும்பாலும் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் கொண்டதாகவும், தன்னால் எதையும் சாதித்துவிட முடியாத ஆதங்கத்தையும், தான் தொடர்ச்சியாக அப்பணிகளை மேற்கொள்ள விரும்பாததையும், வார்த்தைகளில் சற்று வருத்தம் மேலிடவே பேசுவார்கள்.
அதற்கு காரணங்கள் பல இருக்கலாம் அது புரிதலற்ற மக்கள், அரசியல் ஏமாளிதனம், நயவஞ்சக தோழமைகள், உழைப்பிற்கான மரியாதையின்மை, ஈகோ,புறக்கணிப்பு, இவரைவிட அவர் சரி என்று காலத்துக்கு காலம் மாறும் மக்களின் மனநிலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எடுத்த நிலைப்பாடுகள் எல்லோருக்கும் சரியானதாக இருந்துவிடுவதில்லை, சொல்லப்போனால் நிலைப்பாடு எடுக்கும்போது அது என்ன பின்விளைவுகளை தரும் என்றுகூட ஒருவரும் அறிந்திருப்பதில்லை.
ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை காட்டி உண்மையான சமுதாய பற்றாளர்களை புறக்கணிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது "முத்தரையர்" சமூகம்.
இன்று யாரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்களோ "அவர்களையே அவர்களே அவர்களின்" கால்களில் போட்டு மிதித்துவிட்டு அடுத்ததை தேடி ஓடிக்கொண்டே "உழைப்புகளை" உதாசினப்படுத்துகிறார்கள்.
யார் நல்லவர், எப்படி அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்பதற்கான எந்த அளவீடும் இல்லாமலே ஒவ்வொரு மனிதருக்கும் அவமரியாதைகளை தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உணர்வோடு சமுதாய பணி செய்ய வருபவர்களை புறக்கணித்து, அவர்களின் உழைப்பினை உதாசினப்படுத்திவிட்டு அடுத்து அடுத்து என்று பயணிப்பதனாலாவது எதாவது பலன் பெற்றிருக்கிறதா ? முத்தரையர் சமுதாயம் என்றால் அது நிச்சயமாக கிடையாது.
உணர்வோடு சமுதாயப்பணி செய்தவர்கள் மீது சொல்லப்படும் எந்த குற்றசாட்டினையும் முழுமையாக ஆய்வு செய்யுங்கள், அவர்களின் கடந்தகால செயல்பாடுகளை அலசிபாருங்கள், குற்றசாட்டுகளை தொகுத்து அவர்களிடமே விளக்கமும் கேளுங்கள்.
எதிர்காலத்தில் உங்களையும் இப்படி புதிதாக வந்தவர்கள் உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : இது உண்மையான சமுதாய பற்றாளர்களுக்காக, உழைப்பவர்களுக்காக எழுதியது, இதே பத்தாண்டு காலத்துக்குள் சிலர் பெரும் வளர்ச்சியை பெற்றிருப்பார்கள், அவர்களிடம் மேற்சொன்ன எந்த கசப்பும் வார்த்தைளில் கூட இருக்காது, காரணம் அவர்கள் "அப்படியான பற்றாளர்கள் அல்ல" அவர்களின் நோக்கமும் "சமுதாய பணி அல்ல்து தொண்டு அல்ல" நேரம் கிடைக்கும்போதெல்லாம் விலைக்கு விற்பவர்கள். வாட்ஸ் ஆப்பில் கும்பல் சேர்த்து வசூல் வேட்டை நடத்தி பிழைப்பவர்கள், எதேதோ ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ச்சியாக மக்களை சிந்திக்கவிடாதவர்கள்.
இறுதியாக ::
உண்மையான உணர்வாளர்களை "எவனோ" சொன்னான் என்று உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள், சமுதாயத்துக்கு எதாவது நன்மைகள் கிடைத்திட செய்யுங்கள்.
நன்றி.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கிணற்று தவளை

அவர்களுக்கெல்லாம் நம்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதிய நிறைய முத்தரையர் சமுதாய‌ அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்களில் சிலருக்கு நம்முடைய முகம் அறிமுகமாகி இருக்கிறது, சிலருக்கு நம்முடைய பெயர் அறிமுகமாகி இருக்கிறது, நாம் யாரென்ற அறிமுகம் கொடுக்காமல் அவர்களோடு பேசும் தருணங்களின் அவர்கள் எது சார்ந்து சந்தித்திருக்கிறமோ அதனை தாண்டி அவர்கள் வேறு விசயங்களை பேசுவதில்லை...

மிக சமீபத்தில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்தித்தபோது இயல்பாகவே பேசிக்கொண்டு இருந்தோம், ஒரு கட்டத்தில் என்னுடைய பெயரை சொல்லும் அவசியம் உண்டானது, "ஓ நீங்களா ? கேள்விபட்டிருக்கேன் இப்பதான் சந்திக்கிறேன்" என்று உற்சாகமாக பேச துவங்கியவர் "சமுதாய பணிகள் எல்லாம் எப்படி போய்கொண்டு இருக்கிறது" என்ற வினாவினை தொடுத்தார். உண்மையில் அவரின் பரபரபான வாழ்க்கைக்கிடையே என்னை அல்லது எனது பெயரை நினைவில் வைத்துக்கொள்வதென்பதே பெரியவிசயம் இதில் நான் சமுதாய பணிகள் செய்வதுவரை அவர் வினா தொடுத்தபோது சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன். இருந்தும் சமாளித்து "ஏதோ என்னாலானதை செய்கிறேன், ............." என்று எதையோ சொல்லி சமாளித்தேன். கற்றறிந்த அவரே கடைசியாக இப்படி சொல்லி முடித்தார், "நீங்க என்னதான் சாதி அரசியல் பேசினாலும் அவ்வளவு எளிதாக நம் மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்"

அவரின் கூற்று உண்மைதானே...??

நான் மேலே குறிபிட்ட பெரும்பாலான அரசு துறை அதிகாரிகளும் தங்களை ஒருவேளை பொதுவெளியில் அடையாளம் காட்டிக்கொண்டால் அவர்களுக்கு வினையே இங்கிருந்துதான் என்பதை மிக நன்றாக உணர்ந்து பணியாற்றுகிறார்கள்.

அப்படிதான் கற்றவர்கள் பெரும்பாலும் விலகியே நிற்க இங்கே "ஆகாததுகள்" பலதும் அரசியல் செய்து சமுதாய சக்திகளை வீணடித்துக்கொண்டு இருக்கிறது. அரசு துறையில் உயர்பொருப்பில் இருப்பவர்கள் நேரடி சமூகப்பணி என்பது நிச்சயம் சாத்தியமில்லை, அதே நேரம் அவர்களின் படிப்பறிவும், பட்டறிவும் மட்டுமே சமூக வளர்ச்சிக்கு உதவும். இங்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சமூகத்தின் அரசு பணியாளர்கள் அத்தனை பேரும் தங்கள் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு சமுதாய பணிக்காக செலவிடுகிறார்கள், இன்னுமொரு சாதியை சேர்ந்த அரசு பணியாளர்கள் அதாவது தலைமை செயலாளர் முதல் தலையாரிவரை அத்தனை அரசு ஊழியர்களையும் கொண்ட ஒரு ரகசிய அமைப்பினை பலப்படுத்தி வைத்துக்கொண்டு அந்த சாதிக்கு எதிரான எந்த விசயத்தையும் நடத்த முடியாதபடிக்கு மிகவும் நுணுக்கமாக செயல்படுகிறார்கள், அவர்களுக்கு பாதகமாக மட்டுமல்ல, அவர்களுக்கு இல்லாமல் எவனுக்கும் எதுவும் கிடைக்க முடியாத அளவுக்கு மிக சாதூர்யமாக செயல்படுகிறார்கள். 

இப்படியான ஒரு திட்டமிடுதலையோ, அல்லது இதிலிருந்து வேறுபட்டு புதுமையான வழிமுறையோ என்றைக்கு அரசுதுறை முத்தரையர்கள் கையாள்கிறார்களோ அன்றிலிருந்துதான் "முத்தரையர்" சமுதாயத்தின் வளர்ச்சி என்பதே துவங்கும், அதுவரை கிணற்றுதவளையென காச்மூச் மட்டும்தான் கேட்கும், வேலைக்கு ஒன்றும் ஆகாது.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்












திங்கள், 9 அக்டோபர், 2017

உட்கிடக்கைக்குள் குதிக்கும் முத்தன் பள்ளம்...






உட்கிடக்கைக்குள் குதிக்கும் முத்தன் பள்ளம்...
------------------------------------------------------------
நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்...
என்ற இந்தப் பாடலின் ராகமும், பாவமும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் இழையோடுவதை உணர்த்துவதைப் போல, ஒரு வீரம் செறிந்த இனக்குழுவின் துயரார்ந்த வீழ்ச்சியினூடாக, அதன் சமூக அரசியல் வரலாற்றை, அதன் இயல்பான பழமையின் நீட்சியுடன் அதிநவீனத்தையும் இணைத்து "முத்தன் பள்ளம்" என்ற பெயரில் புதினமாக்கியிருக்கிறார் அண்டனூர் சுரா. இக்கதையினுள் வருகின்ற கதைசொல்லிக் கதாபாத்திரமாக வாசகர்களாகிய நாமும், அக்கதாபாத்திரத்திற்கான வழிகாட்டியாக இருக்கின்ற "போக்கிமான" என்கின்ற ஆண்ட்ராய்டு விளையாட்டு மென்பொருளாக அண்டனூர் சுராவாக இருப்பதாகவும், இவ்விரண்டு பாத்திரங்களும் சேர்ந்து ஒரு அழகிய அதிகாலையில் துவங்கும் பயணமானது, பகட்டான பதாகைகள் பொதிந்திருக்கின்ற பல கிராமங்களைக் கடந்து, அக்கிராமங்களின் பராக்கிரமங்களைச் சொல்லி சொல்லிக் கடந்து, பல்வேறு விவரணைகளை விவாதித்து முத்தன் பள்ளம் என்ற கிராம எல்லையைத் தொடுகின்றவரை ஒரு பகுதியாகவும், முத்தன் பள்ளத்தின் வரலாற்றை விளக்கி முடிப்பதோடு அக்கிராமத்திலேயே இறுதியாக போக்கிமான் பூச்சியைக் கண்டறிகின்றதாகவும் முடிப்பதை இரண்டாவது பகுதியாகவும் வைத்து கதையை நிறைவு செய்கிறார் அண்டனூர் சுரா.
இடம்பெயர்தல் அடிப்படையில் ஒரே ஒருவர் ஓரிடத்தில் குடிலமைத்துத் தங்குவதும், பின் அந்த இடம் பகுதியாவதும், பின்னர் குடும்பங்களாக வளர்ந்து ஒரு ஊராக உருவெடுப்பதும் என இதுபோன்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் உற்பத்தியான கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப, காரணகாரியங்களுக்கு ஏற்ப அக்கிராமங்களின் ஒரு பெயர் உருவாகி, அப்பெயர்களும் மாற்றம் கண்டுதான் வந்திருக்கின்றன. அந்த வகையில் பல படிநிலை மாற்றங்களைக் கடந்து இறுதியாக தற்போது நிலைப்பெற்றிருக்கின்ற முத்தன் பள்ளம் என்ற கிராமத்தை, இடம்பெயர்தல் அடிப்படையில் முதன்முதலாய் நிர்மாணித்தவன் "பாட்டன்" என்ற முத்திரையர்கள் இனக்குழுவைச் சேர்ந்தவன். இக்கதையின் கதைசொல்லியாகிய நாம் முத்தன் பள்ளத்தில் சந்திக்கின்ற சமகாலத் தோழன் வாயிலாக நம் மனக்கண் முன்னே பரந்து விரிவதில், பாட்டன் கால வரலாற்றுக்குள் எத்தனை தகவல் திரட்டல்கள், எத்தனை எத்தனை தேடல்களுடன், குரோதம், விரோதம், துரோகம், அடிமைத்தனம், விசுவாசம், பாசம், தந்திரம், போர், வெற்றி, தோல்வி என வாழ்வியல் தருகின்ற படிப்பினைகள் அத்தனையும் வெகுநேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாகரீக வளர்ச்சி உச்சத்திற்கு வந்துவிட்டதாக நம்பவைக்கப்படுகின்ற இவ்வேளையில் "முத்தன் பள்ளம்" என்ற இழிந்த நிலையிலிருக்கின்ற கிராமம் அரசாள்கிறவர்களின் பார்வையிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றதே என்ற ஆதங்கமும், இதைப்போன்ற எத்தனை எத்தனை கிராமங்கள் நாட்டில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனவோ என்கின்ற ஆதங்கத்தையுமே இக்கதையின் அடிநாதம் என்பதை விழிநீர் பொங்கச் செய்கின்ற அற்புதமான தன் எழுத்து நடையின் மூலமாக நிறுவியிருக்கிறார் அண்டனூர் சுரா.
சுரை இலையில் உணவுண்டால், சுரை இலை சூடான உணவில் வெந்து அவ்விலையும் உணவாகிக் கரைந்துபோவதைப் போல, இக்கதையைக் கடந்து முடிக்கையில் நம் மனமும் உருகிக் கரைந்து வெறுமையாகி நிற்கிறது. ஒரு எழுத்தாளன் என்ன செய்துவிட முடியும்...? "வயதான ஜோவும் தச்சனும்" என்கின்ற வாய்மொழிக் கதை ஒன்று, அதில், வயதான ஜோ என்பவரும் தன்னுடைய அண்டை வீட்டுக்காரனும் மிகுந்த நட்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சமயத்தில் அவர்கள் வீட்டருகே வருகின்ற கன்றுக் குட்டியானது, யாருக்குச் சொந்தம் என்கின்ற விவாதத்தில் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதில் அண்டைவீட்டுக்காரன் தன் பண்ணைக்கும், ஜோ வீட்டிற்குமிடையே ஒரு பிளவான வாய்க்காலை வெட்டிவிடுகின்றான். அவ்வேளையில் ஒரு தச்சன் ஜோவை சந்தித்து உணவு கேட்க வருகின்றான். அவனுக்கு உணவளித்த ஜோ, "நீதான் தச்சனாயிற்றே, எதிரே ஒரு பண்ணை இருக்கிறது பார்த்தாயா, அது என் கண்ணில் படாதபடிக்கு ஒரு உயரமான வேலி ஒன்றை அமைத்துவிடு" என்கிறான். தச்சனும் சரி என்று ஒப்புக்கொண்டு வேலையைத் துவக்குகின்றான். வேலி அமைப்பதாகச் சொன்ன தச்சன், அண்டைவீட்டுக்காரன் வெட்டிய கால்வாயையும் ஜோ வீட்டையும் இணைக்கும் பாலம் ஒன்றை அமைத்து, யாரும் விழுந்துவிடாதபடிக்கு பாலத்தை கைப்பிடிகளோடு நேர்த்தியாக அமைக்கின்றான். இப்போது அண்டைவீட்டுக்காரன் அப்பாலத்தின் வழியாக நடந்துவந்து ஜோவை கட்டி அணைப்பதோடு, அந்தக் கன்றுக்குட்டி உன்னுடையதான் என்று சொல்லி, நாம் என்றும்போல நண்பர்களாக இருக்கலாமே என்கிறான். அப்போது தச்சன் ஜோவிடம், "நான் போய்வரட்டுமா" என்கிறான். அதற்கு ஜோ, "இங்கேயே இரு தச்சனே, நான் உனக்கு வேலைகள் தருகின்றேன்" என்கிறான். "இல்லை ஜோ, எனக்கு நிறைய பாலம் கட்டுகின்ற வேலைகள் இருக்கின்றன" என்றவாறு தச்சன் அங்கிருந்து கிளம்புகின்றான்.
அச்த தச்சனைப் போலத்தான், இக்கதையப் புனைந்த அண்டனூர் சுராவும். மனித குலத்தின் மீதான தீராத அன்பும், அக்கறையும் மட்டுமே இவ்வாறான இலக்கியப் பால ங்களை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கட்டமைத்திட முடியும். மகத்தான எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கொரு இடத்தை இப்புதினத்தின் வாயிலாக அண்டனூர் சுரா தடம் பதிக்கின்றார் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். புத்தகம் முழுக்க தழுதழுக்க வைக்கின்ற வார்த்தைகளைத் தழுவிக்கடந்த பின்னர் நம் அனைவரையும் முத்தன் பள்ளங்களை நோக்கிப் பயணிக்க வைக்கின்ற நம் தோழன் அண்டனூர் சுராவிற்கு நன்றி அறிதலோடு வாழ்த்தையும் பகிர்கின்றோம்.

நன்றி : தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை