Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 28 டிசம்பர், 2018

நாடாளுமன்ற தேர்தலும் முத்தரையர் சமுதாயமும்...!

நாடாளுமன்ற தேர்தலும் முத்தரையர் சமுதாயமும்...!

நிறைய அரசியல் நையாண்டிகளை நாம் தொடர்ச்சியாக எழுதி வந்தாலும் சில நேரம் சீரியஸாக சில விசயங்களை எழுதுவதும் அவசியமாகிறது.

இன்னும் ஐந்து மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரபோகும் சூழ்நிலையில் முத்தரையர் சமூகத்தின் பங்கு அந்த தேர்தலில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இதுவரை பிற சமூகங்களைபோல அரசியல் கட்டமைப்பு என்பது முத்தரையர் சமுதாயத்தில் கிடையாது, நூறாண்டுகளாய் தொடரும் அந்த அவலத்திற்க்கு என்னதான் தீர்வு..?

கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் மிகதந்திரமாக ஒரே தொகுதியில் முத்தரையர்களை எதிரும்புதிருமாக போட்டியிட செய்து தடுமாறி ஒருவரை வெல்ல செய்து பாராளுமன்றம் அனுப்பும் நிலை ஏற்பட்டது, அந்த ஒருவரும்
ஒருதடவைகூட "முத்தரையர்" சமுதாய நலன் சார்ந்து சிறுதுரும்பும் எடுத்துபோடவில்லை என்பது வேறு விசயம், ஆனால் அரசியலில் உதவாக்கரையாக இருந்தாலும் ஒன்றிரண்டு மக்கள் பிரதிநிதிகளை வைத்திருப்பது பெரும்பாண்மை சமூகத்திற்க்கு அவசியம்.

அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டு பெரிய கூட்டணிகளே அமையும்போல தெரிகிறது, அரசியல் பரபரப்பில் "முத்தரையர்" என்ற சமுதாயம் இருப்பதையே தலைவர்கள் மறந்துபோவார்கள், ஆக அவர்களின் பரபரப்புக்கு நாமும் இரையாகி இருக்கும் வாய்ப்புகளையும் இழந்துவிடக்கூடாது.

என்ன செய்யலாம்...?

கடந்த முறை ஒரே ஒரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி என்ற நிலை கொஞ்சமேனும் முன்னேறி குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளை இலக்கு வைத்து அங்கிருக்கும் பிரதானகட்சியின் முக்கியமானவர்களை சீட்டுவாங்க வலியுறுத்த வேண்டும். அரசியலின் அத்தனை வழிகளையும் பின்பற்றி ஒன்றிரண்டு பேரையாவது நாடாளுமன்றம் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். மிககுறிப்பாக பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சை, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து அங்கிருக்கும் திமுக,அதிமுக பிரமுகர்களை போட்டியிட வலியுறுத்த வேண்டும். குறைந்தது இரண்டு பேர் நாடாளுமன்றம் சென்றாலும் அது மிகப்பெரிய வெற்றியே....!!

சங்கங்கள்....?

இந்த இடத்தில் சங்கங்களுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இருபதாக நான் கருதவில்லை, தங்கள் இருப்பை காட்ட ஒரு அறிக்கை ஆதரவு கொடுப்பதும், கொடுத்த மைக்கில் எதையாவது பேசி ஆதரவு திரட்டுவதுமான வழக்கமான பணிகளை தவிர்த்துவிட்டு சங்கங்களை அரசியல்படுத்தி பிரதானகட்சிகளை தொடர்ந்து ஆதரிப்பவர்கள் குறைந்தது ஒரேஒரு தொகுதியில் உங்கள் சங்கத்தின் தலைவருக்கோ, அவர்கள் விரும்பும் நபர்களுக்கோ தொகுதியை பெற்றுவிட்டால் 21 நூற்றாண்டின் மாபெரும் சாதனையாக அது இருக்கும், அதிர்ஷ்டமிருந்து வெற்றியும் பெற்றுவிட்டால் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பரிணாமிக்க முடியும்..., இல்லையெனில் வழக்கம்போலவே ஐந்துக்கும் பத்துக்கும் மைக் பிடித்து கதற வேண்டி வரும்...


நீண்டகால அரசியலுக்கு இந்த வழிமுறைகள் உதவும் என்று கருதுகிறேன்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்














ஞாயிறு, 16 செப்டம்பர், 2018


சீமராஜாவும் வளரியும்...!!



சீமராஜான்னு ஒரு படம் வந்த உடனே நம்முடைய‌ நண்பர்கள் ஒரு ஐந்தாறு பேர் அழைத்திருந்தார்கள், சீமராஜா படத்தில் வளரியை பயன்படுத்தி இருக்கிறார்கள் அது ஏதோ ஒரு ஜமீன் தானாம் முதன்முதலில் பயன்படுத்தியது என்ற ரீதியில் படம் இருக்கிறது என்றார்கள்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னதான் வளரியை பற்றி சொல்கிறார்கள் என்று அறியும் ஆவலில் இன்று அந்த படத்தினை காண சென்றிருந்தேன்.

ஏற்கனவே ஒரு படத்தில் ஆடு மேய்ப்பவனெல்லாம் வளரியை பயன்படுத்துவது போல அமைக்கப்பட்ட காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது, நல்லவேளை இந்த படத்தில் அப்பயெல்லாம் காட்சிபடுத்தவில்லை, மிகவும் உயர்வாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்...

வேறு என்ன குறை...? வழக்கம்போலவே வரலாற்று திரிபுகள்தான், திரைப்படம் போன்ற நுட்பமான உளவியல் ஊடகங்களில் காட்சியாக்கப்படும் ஒவ்வொன்றும் அதே வடிவில் மனித மனதில் பதிந்துவிடுவதுண்டு, அப்படிதான் இந்த படத்திலும் வரலாற்று சொருகல்கள் இருக்கிறது.

14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் வளரி போர் பயன்பாட்டுக்குக்கு வந்ததுபோன்ற ஒரு மாயதோற்ற உருவாக்கத்தை இப்படம் செய்கிறது.

உண்மையில் "முத்தரையர்கள்" உலகுக்கு அளித்த மிகசிறந்த போர் ஆயுதம் என்றால் அது வளரியாகதான் இருக்க முடியும்.

முத்தரையர்களின் ஆட்சி தஞ்சையில் முடிவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களுக்கு கூட அந்த ஆயுதம் அச்சத்தை ஏற்படுத்தி தடை செய்யும் அளவுக்கு போனது வரலாறு...

முத்தரையர்களின் ஆகச்சிறந்த போர்கலைகளில் ஒன்றான வளரியை பற்றிய போதிய விழிப்புணர்வோ, வரலாற்றரிவோ, ஆய்வு மனப்பாண்மையோ இல்லாத தற்கால முட்டாள் முத்தரையர்கள் தொலைத்த இடத்திலிருந்து யார்யாரோ அதனை தங்களின் ஆயுதமாக பறைசாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

வளரியை முத்தரையர்களுக்கு பிறகு மருது சகோதர்கள் உட்பட பல ஜமீன்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் வளரியின் வரலாறு முத்தரையர் போர்குடியிலிருந்து தொடங்குகிறது.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்













செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

காரைக்குடியில் கடந்த வாரம் நடந்த கல்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு நான் பேசியதன் சாரம்சம் இதுதான்.

காரைக்குடியில் கடந்த வாரம் நடந்த கல்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு நான் பேசியதன் சாரம்சம் இதுதான்....

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் பணிந்து தொடங்கி, ஏற்கனவே பதிவிட்டதுபோல மாணவர்களுக்கு மத்தியில் பேசுவது என்பது மிகுந்த தடுமாற்றம் மிக்கது என்றாலும் என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை பதிவு செய்துவிட்டதே வந்தேன்.

மனிதர்களின் ஆரம்பகாலம் உணவுக்காக வேட்டையாடுதல் என்பது மட்டும்தான் அவர்கள் அறிந்த ஒரே தொழிலாக இருந்திருக்க முடியும் இவர்களை வேட்டைக்குடி என அடையாளப்படுத்துவோம், பிற்பாடு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உணவு தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை வந்தபோது உணவை உற்பத்தி செய்ய முற்பட்டு வேளாண் குடியாக வேட்டைகுடியின் சிறு பகுதி மாற்றமடைந்து நாளடைவில் வேளாண் குடிகளுக்குள்ளாகவும், அல்லது வேளாண்குடியினர் மற்றும் வேட்டைக்குடியினருக்கிடையே உணவுபொருள் திருட்டு அல்லது ஆக்கிரமைப்பு போன்ற காரணிகளால் இருதரப்புமே தங்களிடமிருந்த பலம்கொண்டவர்களை கொண்டு பாதுகாவலை மேற்கொண்டு நாளடைவில் அதுவே போர்க்குடியாக மாறி இருக்க வேண்டும், வேளாண் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அதனை வணிகம் செய்யும் பொருட்டு வணிககுடிகளும் உருவாகி இருக்க வேண்டும் இந்த வேட்டைக்குடி, வேளாண்குடி, போர்க்குடி, வணிகக்குடி எல்லாம் நாளடைவில் சாதியமாக மாற்றமடைந்தது என்பதுதான் பொதுவான வரலாறு.

நாகரீக வளர்ச்சியில் ஒவ்வொரு குடிகளுக்கும் அவர்கள் சார்ந்த தொழிலை திறம்பட செய்துக்கொண்டு இருக்க போர்க்குடிகளாக இருந்தவர்களுக்கு மட்டும் ஒரு சிக்கல் நாகரீக வளர்ச்சியினார் உருவாகிறது, போர் அல்லது சண்டையே இல்லாதபோது போர்குடிகளுக்கும் வேலை இருக்கவில்லை இதன்காரணமாக ஏனைய குடிகளுக்கு சேவகம் செய்ய புறப்படுகிறார்கள் இந்த போர்க்குடியினர் அப்படி போனவர்கள் இன்றுவரை சேவகமே செய்வதற்கு முத்தரையர் என்னும் போர்க்குடி ஒரு உதாரணமாக இருக்கிறது.

போர்க்குடியிலிருந்து அடுத்து என்ன என்ற தடுமாற்றமும், வழிநடத்தக்கூடிய அல்லது போர்க்குடியாக இருந்தபோது வழிநடத்திய, திட்டமிட்ட பெருந்தலைவர்கள் சுவரன் மாறன், மாறன் பரமேஸ்வரன், இளங்கோ முத்தரையன் போன்ற அறிவில் சிறந்த போர்ப்படைகளின் தலைவர்கள் இல்லாத காரணத்தால் அல்லது அவர்களைபோன்றவர்களை உருவாகவிடாமல் லாவகமாக செயல்பட்ட ஏணைய குடியினரின் சதியில் சிக்கி கடைசியில் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறி நிக்கிறது போர்க்குடியான முத்தரையர் குடி.

இந்த நிலை மாற வேண்டும் போர்க்குடியாய் இருந்தவர்கள் வணிகக்குடிகளாக மாற வேண்டும், படிப்பு என்பது ஏட்டுசுரக்காய்தான் அதைகொண்டு எதையும் சாதித்துவிட முடியுமா ? என்றால் சந்தேகமே சாதிக்க வேண்டும் என்றால் சூழ்நிலைக்கேற்ப நாமும் மாற வேண்டும்.


முத்தரையர்களிடம் இருக்கும் மற்றுமொரு தவறான பொருளாதார கொள்கையும் அந்த மக்களின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் அது, ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கோ ஐந்தோ பேரில் யாரோ ஒருவர் மட்டும் சம்பாதிக்க ஏனையோர் அந்த சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள், இதன் மூலம் எவ்வளவு பொருள் வந்தாலும் விரையமாகவே போய்விடுகிறது. ஒரு குடும்பத்தில் ஐந்துபேர் இருந்தால் அவரவருக்கான செலவுகளுக்கு அவர்களே சம்பாதித்தால் மட்டுமே தன்னிறைவு பெறுவதோடு வளர்ச்சி என்பதும் சாத்தியமாக இருக்க முடியும், எல்லோரும் எப்படி சம்பாதிக்க முடியும் ? முயன்றால் முடியும் அருகாமையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுயமாக தொழில் துவங்கி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.

நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதானமான தீர்மானம் நம்முடைய சந்ததியினரை ஏதும்மற்றவர்களாக அல்லது கடன்காரர்களாக விட்டு செல்ல மாட்டோம், ஓரளவுக்கு சொத்துக்களையும் அதனை பராமரிக்கும் அளவிற்கு அறிவினையும் பெற்றவர்களாக அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும்.

(இன்னும் நிறைய பேசினேன் அதெல்லாம் எழுதுனா பக்கம் பக்கமா போய்கிட்டு இருக்கும் அதனால முக்கியமான விசயம் இவ்வளவுதான் இத்தோடு போதும்)

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்





















 








திங்கள், 30 ஜூலை, 2018

அதானே எவனுக்காவது ஆதரவு மட்டும்தானே எங்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கானுங்க..., சுயமா செயல்படுறதெல்லாம் எங்ககிட்ட நடக்குமா....??

அதானே எவனுக்காவது ஆதரவு மட்டும்தானே எங்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கானுங்க..., சுயமா செயல்படுறதெல்லாம் எங்ககிட்ட நடக்குமா....??

----------------------------------------------------------

http://tamil.asianetnews.com/politics/asianet-news-tamil-mega-opinion-poll-result-in-tamil-na

புதன், 13 ஜூன், 2018

இன்னா செய்தாரை ஒறுத்தல் .....

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல். 

குறள் விளக்கம் : தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையயும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
நேற்றைய தினம் (13.06.2018) தமிழக சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய‌ மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான்   ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது, அவரது வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெற வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்’’ என்ற வாதத்தை முன் வைத்து அதற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை பதிலளிக்க வைத்திருக்கிறார்.

முத்துராமலிங்க தேவரை தங்களின் குறியீடாக கொண்ட  சமூகங்களில் இருந்து கிட்டதட்ட ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்களும், பத்துக்கும் அதிகமான அமைச்சர் பெருமக்களும், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும் சட்டமன்றத்தில் இருந்தும் கூட அவர்கள் யாருக்கும் "முத்துராமலிங்க தேவர்" மீது பற்று இருப்பதாக தெரியவில்லை..,

மாறாக முத்துராமலிங்க தேவரை குறியீடாக கொண்ட சமூகங்கள் அரசியல் ரீதியாக வஞ்சித்துவரும், அல்லது பெருமைமிகு இனத்தை சிறுமை படுத்துவதாக என்னி "வலையர்" என்று எள்ளி நகையாடும் (வலையர் என்பது பெருமீதத்தின் குறீயீடு என்பது வேறு கதை) முத்தரையர் சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், அதிலும் "வலையர்" என்ற உட்பிரிவை சேர்ந்த மேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பெரியபுள்ளான் "முத்துராமலிங்க தேவருக்காக" சட்டமன்றத்தில் பேசியது உள்ளபடியே மகிழ்ச்சியான ஒன்று...! அவருக்கு எங்களின் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறோம்.

அதேபோல வருங்காலங்களில் பெரும்பிடுகு முத்தரையர், கண்ணப்ப நாயனார், திருமங்கையாழ்வார்களின் வரலாற்றை பாடதிட்டங்களில் சேர்க்க திரு.பெரியபுள்ளான் அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

நன்றி

கா.சஞ்சய்காந்தி

தலைமை ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

செய்தி நன்றி தினகரன்









ஞாயிறு, 20 மே, 2018

முத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி!

போகிமான் என்பது ஒரு அலைபேசி விளையாட்டு. கூகுள் வரைபடத்துணையுடன் அலைபேசியில் நிழலும், நிஜமும் கலந்து விளையாடப்பட வேண்டிய ஒன்று. நிழல் பொம்மை ஒன்று நிஜ இடங்களைக் காட்டிச் செல்ல நிஜ மனிதர்கள் அதனைப் பின் தொடர்ந்து சென்று நிஜ இடங்களில் ஒளிந்திருக்கும் நிழல் பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும். மெய்யாக இந்த விளையாட்டு நிஜமும், நிழலும் கலந்த ஒன்று. மெய்மையும், பொய்மையும் கலந்த ஒன்று. இருளும், ஒளியும் கலந்த ஒன்று. போகிமான் என்பது நிழலும் நிஜமும் கலந்த நிழலின் நிஜமாகும் அல்லது நிஜத்தின் நிழலாகும்.
நிழலும் நிஜமும் கலந்த போகிமானின் வசியக் குரலுக்கு கடந்த காலங்களில் மனிதர்கள் பலர் தமது உயிரைக் கொடுக்க வேண்டியவர்களானார்கள். இன்றைக்கு நீலத் திமிங்கிலம் எப்படி அலைபேசி மனிதர்களை வலைவீசிப் பிடித்ததோ அது போல, போகிமான் பல நிஜம் போன்ற நிழல்களுக்குள் மனிதர்களை இழுத்துப் போனான். மெய்யாக உயிர் வாழத் தகுதியற்ற இடங்களில்தான் போகிமான் தனது வலையை விரித்து வைப்பவனாக  இருந்தான். மனித காலடிகளுக்குச் சவாலான இடங்களில் போகிமானின் பூச்சிகள் ஒளிந்திருந்தன. நிஜப் பூச்சிகளுக்குச் சவாலாக அவை இருந்தன. இருக்கின்றன. எந்தப் பூச்சிக் கொல்லிக்கும் அகப்படாத அந்த போகிமான் என்ற இருள் பூச்சியை மேலைநாடுகள் தடை செய்தன. ஒரு வகைப் புரட்சியைத்தான் அந்த மாயப் பூச்சிகள் செய்தன. மேட்டுக்குடிகளின் கால்கள், குடிசைகளை நோக்கியும், குடிசைகளின் கால்கள் மேட்டுக்குடிகளை நோக்கியும் நடக்கச் செய்த மாயப் புரட்சி வழித்தடத்தைத்தான் அவை உருவாக்கிக் கொடுத்தன.
வாழ்காலத்தின் வழித்தடத்தை மட்டுமல்ல போகிமான் வரலாற்றின் வழித்தடத்தையும் நிகழ்காலத் துடன் இணைக்க முடியும் என்பதைத்தான் முத்தன் பள்ளம் நாவல் பேசுகிறது. முத்தன் பள்ளம் என்ற நிகழ் வெளியை வரலாற்று வெளியுடன் போகிமான் பூச்சி இணைக்கிறது. நாவலின் மையக் கருவும் அதுதான். போகிமான் பூச்சியை நீங்கள் அடையும்போது உங்கள் விளையாட்டு முடிந்திருக்கும். ஆனால் முத்தன் பள்ளம் என்ற இருளடைந்த வெளியின் சிக்கல்கள் தொடர் வதாக இருக்கும். வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரை முடிவடையாத சிக்கல்களின் இருப்பிடத்தை போகிமான் முத்தன் பள்ளத்தில் தொடங்கி வைப்பது தான் நாவலாகியிருக்கிறது. கடந்த காலமும், நிகழ் காலமும் சந்திக்கும் இடத்தில்தான் போகிமான் பூச்சியின் வாழிடம் அதை நோக்கித்தான் முத்தன் பள்ளம் நாவலும், போகிமான் பொம்மையும் நம்மை மாறி மாறிப் பயணித்து அழைத்துச் செல்கின்றன.
வரலாற்றில் இனக்குழுவாக வாழத் தொடங்கி அரசு, அரியணை என்று மகுடம் சூடி கோலோச்சிய ஓர் இனம் எப்படி போகிமான் பூச்சி வலைபின்னிக் கிடக்கும் இடமாக மாறியது என்பதைத்தான் நாவல்வழிக் காட்டிச்செல்கிறது. பதாகை என்பது என்ன? மனிதர் களின் தன்முனைப்பின் உருவமா? அடிமனதின் வாமன அவதாரமா? தற்புகழ்ச்சியின், தற்பெருமையின் கலை வடிவமா? ஆனால் நவீன வரலாற்றின் கல்வெட்டுக் களாகப் பதாகைகள் மாறியிருக்கின்றன என்று சொல்லலாம். ஆண்ட பரம்பரைகள், மீண்ட பரம்பரைகள் தொடங்கி பூமிக்குக் கீழே சென்ற அத்தனைக் கல்லறை மனிதர் களும் உயிர்த்தெழும் இடமாக பதாகைகள் மாறியிருப்பது என்னவே மெய்.
ஒரு வகையில் பழைய மகுடமும், புதிய ராஜாக் களும் ஆளும் இடமாக பதாகைகள் இருக்கின்றன. பதாகைகளின் ராஜாக்கள் பதாகை வழியாகவே தமது பரிபாலனத்தை செய்கிறார்கள். நவீன ராஜாக்களின் அசையும் ராஜ்ஜியம் பற்றிய செய்திகளுக்கான அசையா ஊடகமாகப் பதாகைகள் இருக்கின்றன. கல்வெட்டுக் களைப் பதித்த இனம், காணாமல் போய்க் கொண்டிருக்க, ஒரு காற்றுக்கே நிற்காத பதாகைகளில் தமது ராஜ்ஜியத்தின் சாதனைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக் கிறார்கள் நவீன ராஜாக்கள்! கல்வெட்டில் வாழ்ந்த பரம்பரை ஒன்று முத்தன் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் அரசியலை எந்தப் பதாகையும் சொல்லப் போவதில்லை. மாறாக அந்தப் பதாகையின் கீழ் மூடிவைக்கவே செய்யும். வரலாற்றின் பெருமை பதாகைகளாக இருக்க, அதுவே இருக்கும் மானத்தைக் காக்கும் ஆடையாக மாறிநிற்கும் கதையை, முத்தன் பள்ளம்  நாவல், வரலாற்றில் வழியும் குருதியைக் கவிச்சி மாறாமல் முன்வைத்துச் செல்கிறது.
வரலாற்றில் வாழ்ந்த இனமான, ஆண்ட இனமான முத்தரையர், அரையர் என்றெல்லாம் அழைக்கப்படும் இனம் எப்படி இனக்குழுவாக, வேட்டைச் சமூகமாக,  இருந்து ஆளும் வர்க்கமாக, ஆண்ட வர்க்கமாக மாறி பின் வரலாற்றின் துரோகத்தால் முத்தன் பள்ளத்தில் வீழ்ந்த கதையைச் சொல்லிச் செல்கிறது நாவல். புதுக்கோட்டையைக் குறிப்பாக கல்லாக்கோட்டையை நடுவமாகக் கொண்டு ஆண்ட, அவர்களில் ஒரு பிரிவான கள்ளர் இனக்குழுவிற்கும், முத்தரையர் இனக்குழுவிற்குமாக மாறி மாறி அமையும் கொண்டும், கொடுத்தும் வாழ்ந்த உறவு, அவர்களது அரசியல், சமூக பொருளாதார வாழ்வு, போர், சமாதானம் என்று வரலாற்றின் திசைகளில் ஆழப் பயணிக்கிறது நாவல்.
முத்தரையர் இனக்குழு, சமண மதத்தைச் சேர்ந்ததாக இருந்ததும், பல்லவர்களுடன் அவர்களுக்கு இயல்பான உறவு இருந்ததையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் பல்லவர்களுடன் அவ்வினக் குழுவிற்கு சகோதர உறவு முறையும் இருந்துள்ளது. வேட்டை இனமான முத்தரையர் குழுவின் ஆட்சி அதிகாரச் சின்னம் மீன் சின்னமாக இருந்துள்ளது. தஞ்சையின் திருக்காட்டுப்பள்ளியை முதன்மையாகக் கொண்டு ஆட்சி செய்த அக்குழு பின்னர் புதுக் கோட்டையை நோக்கி நகர்கிறது. ஆனால் தஞ்சை -புதுக்கோட்டையை வலமிட்ட ஆட்சிப் பகுதியாக முத்தரையர் இனக்குழு அறியப்படும் பின்னணியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்த கதை, வரலாற்றில் நமக்கு மீள ஓர் ஈழத் தமிழர் கதையைச் சொல்வதாக இருக்கிறது.
வரலாறு எங்கும் போய் விடுவதில்லை. அவை மீண்டும், மீண்டும் திரும்பி வருகின்றன என்பதைத்தான் நாவல் நமக்குச் சொல்வதாக இருக்கிறது. 35 உட் பிரிவுகளைக் கொண்ட முத்தரையர் எனும் இனக்குழு, விரிவடைந்து ஆட்சியதிகாரக் காலத்தில் தனது உறவுமுறையின் உட்பிரிவுகளையே தாயாதிகளையே தனது ஆட்சியதிகாரத்தின் சகல நிலையிலும் நியமித்துக் கொள்கிறது. அது ஒரு வகையில் பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். கோலோச்சும் மன்னனும் அவர்களாகவே இருக்கிறார்கள், குடிமக்களும் அவர்களாகவே இருக் கிறார்கள். காலப்போக்கில் அவ்வினக்குழு பிற இடங் களுக்குப் பரவின காலத்தில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோராகவும் மாறுகிறார்கள். இதை நாம் பல்துறை வித்தகர் ந.சி.கந்தையா அவர்களின் ‘தென்னிந்திய குடிகளும், குலங்க’ளும் நூலிலும் பார்க்கலாம். வேட்டை, மற்றும் காவலில் திறமைசாலி களான அவ்வினக்குழு ஓர் அரசியல் சதியால் பிற் காலத்தில் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்ட கதை, வரலாறு எப்படி நிகழ்காலம் வரை நீண்டு கிடக்கிறது என்பதை நமக்குச் சொல்வதாக இருக்கிறது.
பகையே அறியாத முத்தரையன், சகோதரத்துவம் பூண்ட பாண்டியனின் வஞ்சகச் சொல் கேட்டு பிறிதொரு சகோதர மன்னனான பல்லவன் மீது போர் தொடுக்க வேண்டியவனாகிறான். இன்னொரு பக்கம் குறுநில மன்னனான விசயாலய சோழன் வஞ்சகமாகப் பல்லவரையும், கங்க மன்னனையும் இணைத்துக் கொண்டு பாண்டியன் - முத்தரையன் மீது போர் தொடுத்து முத்தரையனின் ஆட்சியை தஞ்சைப் பகுதியில் முடிவுக்குக் கொண்டு வருகிறான். விசயாலயச் சோழனுக்கும், முத்தரையனுக்குமான போரில் அன்றைக்கு ஆனைவிழுந்தான் பள்ளத்தில் ஆனைவிழுந்ததோ இல்லையோ, முத்தரையன் ஆட்சி விழுந்தது. அவனது இனம் விழுந்தது. ஆனைவிழுந்த பள்ளத்திலிருந்து முத்தன் பள்ளம் வரையிலாக விழுந்துவிட்ட இனக் குழுவின் வரலாறு சமூக அறிவியல் பார்வையில் நாவலில் விரிந்து செல்வதாக இருக்கிறது. நாவலாசிரியரின் வரலாற்றுப் பார்வையும், உழைப்பும் உடன் பயணிக்கிறது.
விசயாலய சோழன் காலத்திலிருந்து முத்தரையர் இனம் மெல்ல சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படுவதைத் தான் ஆனைவிழுந்தான் பள்ளத்திலிருந்து முத்தன் பள்ளம் வரை நமக்குச் சொல்கிறது. மீண்டும் ஆட்சி யதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாதென்ற வகையில்
ஓர் இனமே தண்டனைக்குள்ளாக்கப்படுவதைத்தான் நாவலுக்குள் பார்க்கிறோம். சோழருக்குப் பிறகு மராட்டியர், நாயக்கர் ஆட்சியிலும் மேலும், மேலுமென அவ்வினம் வரலாற்றில் மிகக் கவனமாக ஒடுக்கப்படுகிறது. சொந்த நிலத்திலிருந்து மெல்ல நாடுகடத்தப்படுகிறது. வரலாற்றில் ஈழத்திற்கு முன்பாக ஓர் இனக்குழு மொத்தமாக தனது நிலத்திலிருந்து  அகற்றப்படுவதை வரலாறு நமக்கு முன் சென்று கற்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் போல முத்தன்பள்ளம் ஓர் வரலாற்று சாட்சி.
வீழ்ந்துபட்ட ஓர் இனத்தின் தலைமகனாக முத்தன் இருக்கிறான். முத்தரையன் வீழ்ந்த இடம் முத்தன் பள்ளத்திலிருந்து தொடங்குகிறது. வேட்டையில் தொடங்கிய இனம் மீண்டும் வேட்டையினமாக, காவல் காக்கும் இனமாகத் தொடங்குகிறது. மகுடம் இழந்த இனம் மாற்றுக்குடியாகிறது. முத்தன் பள்ளம் என்பது மகுடம் இழந்தவர் இடமாகும். மகுடம் இழக்கும் இடமெல்லாம் முத்தன் பள்ளமாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முத்தன் பள்ளம் இருக்கிறது.
வரலாறு என்பது வலிமையாளர்களின் வரலாறு என்பதைத்தான் முத்தன் பள்ளமும் நமக்குச் சுட்டுகிறது. வலிமையாளர்கள் எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவர் களாக இருக்கிறார்களோ அதுவே வரலாறாகிவிடுகிறது. அதுவே நீதியாகிவிடுகிறது. முத்தரையர் இனக்குழு வரலாற்றில் சமூக ரீதியிலும், பொருளாதார அரசியல் ரீதியிலும் தலித் சமூகத்தைப் போன்றே சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படும் ஒன்றை, பேசப்படும் ஒன்றை நாவலில் பேசப்படாத பகுதியாகப் பார்க்க முடிகிறது. விசயாலய சோழன் காலத்தில் தொடங்கும் அதுவரையி லில்லாத பார்ப்பன ஆதிக்கம், சமஸ்கிருத மொழி திணிப்பு, சைவ மத செல்வாக்கு பின்னணியில் முத்தரையன் ஆட்சியின் வீழ்ச்சியைக் கணிக்க வேண்டி யிருக்கிறது. சமண மதத்தைப் பின்பற்றும் முத்தரையன் ஆட்சி, அக்குடிமக்கள் விசயாலய சோழன் ஆட்சிக் காலத்தில் தாழ்குடியாக்கப்படுகிறார்கள். முத்தரையன் மகுடம் இழந்தபோது சமணமும் மகுடம் இழக்கிறது. பாண்டியன் வம்சமும் ஏககாலத்தில் சமண செல்வாக்குப் பெற்றதாகவே இருக்கிறது. ஆக முத்தரையன்-பாண்டியன் உறவென்பதே சமண உறவாகவே இருந்திருக்கலாம்.
விசயாலயன் வம்சம் சோழ வம்சமாக விரியும் காலத்தில் எண்திசையும் சைவ மதம் தழைக்கிறது. சமணம் - அதை ஏற்றுக் கொண்ட முத்தரையன், பாண்டியன் இனக்குழுக் குடிகள் சமூக ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் வைத்துச் சமணத் துறவிகள் கழுவேற்றப்படுகிறார்கள். சோழர் களால் செல்வாக்கும், சொல்வாக்கும், செல்வமும் பெற்ற பார்ப்பனர்கள் மதப் போருக்கு அழைத்து வாதங் களால் சமணர்களை வீழ்த்துவதுடன் அவர்களை மத நிந்தனைக்குள்ளாக்கி கழுவேற்றுகிறார்கள். சோழர்கால பார்ப்பனர் ஆதிக்கம் சமூகத்தில் மேல், கீழ் குடிகளை உருவாக்குகிறது. சமூகத்தில் உயர் பிரிவாக பார்ப்பனர் உருவாகின்றனர். சமண மதம் சமூகத்தின் விளிம்பு நிலையினர் மதமாக்கப்படுகிறது. சமணம் இழிவான போது, அதைப் பின்பற்றியவர்களும் இழிவாகினார்கள். அக்குடி இழிவாகியது. அம் மனிதர்கள் இழிவானார்கள். முத்தன் பள்ளம் இழிவானது.
வரலாறு, சைவமதச் செல்வாக்குச் சமண, புத்த மதங்களை இழிவாக்கிச் சென்றது மட்டுமல்லாது. பின் வந்த காலங்கள் எல்லாம் அக்குடிகளை இழிவாகவே வைத்திருக்கச் செய்தது. மன்னராட்சிக் காலம் தொடர்ந்து மக்கள் ஆட்சிக் காலம் வரை சைவத்தின், பார்ப்பனியத்தின் செல்வாக்கு, ஒரு தொகுதி மக்களை விளிம்பிலேயே வைத்திருக்கிறது. சமண, பவுத்த மதங்களின் விடுதலைபேசும் அறத்தின் குரலை மக்களாட்சிக் காலத்திலும் தொடர்ந்து சிறை வைத்திருப்பதைத்தான் நாவல் உள்ளார்ந்த மனசாட்சியாக ஒலிக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது போருக்குப் பிந்தைய ஒரு நாடு எதிரிநாட்டின் வசமாகப் போகும் போது ஏற்படும் துயரம் ஒரு பக்கம் என்றால் அந்நாட்டுக் குடிகள் சமூக, பொருளாதார நிலைகள் ஒரு பக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படுகின்றன. சீர்குலைக்கப்படுகின்றன. மேலாக அக்குடிகளின் சமயம், பண்பாட்டை அரச அதிகாரவர்க்கம் ஏற்றாலும், அதன் பின்னிருக்கும் ஆதிக்கவாதிகளும், மதவாதிகளும் விடுவதில்லை. அதைத்தான் முத்தன் பள்ள வரலாற்றிலும் பார்க்கிறோம். ஓர் அரசு மாறும்போது வெறும் அரசாக மட்டும் மாறுவதில்லை. மன்னன் மட்டும் மாறுவதில்லை. மகுடம் மட்டும் மாறுவதில்லை. ஓர் குடிமைச் சமூகமே மாற்றப்படுகிறது. கைப்பற்றப்பட்ட நாடு மட்டுமல்ல, மன்னன் மட்டுமல்ல அவனது குடிகளும் அடிமையாக்கப் படுகின்றன. அவர்களது மதமும் அடிமையாக்கப் படுகிறது.
சோழர்கள் காலம் சைவமதத்தின் எழுச்சி மிக்க காலம் என்பதை நமக்குத் திரும்பத்திரும்பப் பாட நூல்கள் விதந்தோதுவதைப் பார்க்கிறோம், கற்கிறோம். ஆனால் அந்த எழுச்சியின் கீழ் நசுக்கப்பட்ட மதம், அதைப் பின்பற்றிய மக்களின் நிலை பற்றி நாம் படிக்கத் தவறிவிடுகிறோம். சொல்லாமல் விடப்படும் வரலாறுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்களாகி விடுகின்றன. முத்தன்பள்ளம் இருண்ட வரலாற்றின் நவீன பக்க மாகும்.
சோழர்கள், பார்ப்பனர்களுக்கு உபரி நிலங்களைத் தானமாக வழங்குகின்றனர். அவை அகரங்களாகவும், சதூர்வேதி மங்களங்களாகவும் மாறுகின்றன. நீதி வழங்கும் இடங்களைப் பார்ப்பனர்கள் படிப்படியாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மதத்திலிருந்து நீதியை உருவாக்குபவர்களாகிறார்கள். நான்கு வர்ணங் களைச் சோழர்காலச் சமூகம் வளர்த்தெடுக்கிறது.
முத்தரையர் - கள்ளர் உறவு முறையை, உயர்வு, தாழ்வாகச் சைவமே பிரிக்கிறது. வரையறுக்கிறது. விசயாலய சோழ வழி சைவம், சமணமதம் சார்ந்த முத்தரையரை சைவத்திற்குக் கீழாக்குகிறது. கடவுள் மறுப்பும், சடங்கு எதிர்ப்பும் கொண்ட முத்தரையர் இனக்குழுவை, முத்தன் பள்ளத்தில் இறுதியில் தள்ளுகிறது. சைவசமயம் பரவும் காலத்தில் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் மீது கொண்ட பாசத்தையும், சைவமதத்தின் மீதான பிடிப்பையும் எள்ளலுடன் நாவல் விவரிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “எனக்கு அப்பூதியாரை நினைக்க கோபம்தான் வந்தது. பிறகு என்னவாம்! பார்க்க, பயன்படுத்த, கூப்பிட என அனைத்திற்கும் ஒரே பெயரைச் சூட்டும் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தவன் அவன்தான் இல்லையா?Ó (பக்-103) நாவலாசிரியரின் நியாயமான கோபத்தைத்தான் இன்றைய அரசியல் கலாசாரத்திலும், ‘பிளக்ஸ்’ ‘உருப் பெருக்கிப்’ பதாகைகளிலும் பொருத்திப் பார்க்கிறோம். அப்பூதியடிகள், நவீன பிளக்ஸ் போர்டின் வரலாற்று வடிவம் என்றால் மிகையில்லை.
நாவல் தொண்டைமான் ஆட்சிக்கால நிலையை விளக்கிச் செல்கிறது. சாதியச் சமூகமாக இருக்கும் தொண்டை மண்டலத்தில் சாதியின் காரணமாக வழங்கப்படும் தண்டனையும், காதலுக்காக தன் மகுடத்தையே துறக்கும் மன்னனையும் பிறிதொன்றாகப் பார்க்கிறோம். ஒன்றுக்கொன்று வலையாகப் பின்னிச் செல்லும் நாவல், தொண்டைமானுக்கும், பாட்டனுக்கும் உள்ள உறவை ஆழ்ந்து சொல்கிறது. இரு இனங்களின் இணக்கத்தைச் சொல்கிறது. முத்தன் பள்ளம் அரசதி காரத்தின் வஞ்சகத்தில் உருவாகிறது. மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சிக் காலம் வரை முத்தன் பள்ள வரலாறு அதிகாரத் துரோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. தொண்டைமான் கொடுத்தச் செப்புப்பட்டயம் அதிகார வர்க்கத்தின் பட்டயமாவது போல முத்தன் பள்ளம் நவீன அதிகாரவர்க்கத்தின் பட்டாவாகிவிடும் சாபம் கவிழ்ந்த வரலாற்றை சேறும், சகதியுமாக முன் வைக்கிறார் நாவலாசிரியர் அண்டனூர் சுரா.
பள்ளம் என்பது மேட்டின் சதி. மேடு உயர்வதற்கு பள்ளம் அவசியம். முத்தன் பள்ளம் போன்ற பள்ளங்கள் அவசியம். மேட்டுக்குடி வரலாற்றின் பள்ளமாக முத்தன் பள்ளம் இருக்கிறது. வாழ்வில் பள்ளம் விழுந்த மக்கள் எதிர் நீச்சலிடுமிடமாக முத்தன் பள்ளத்தில் தேங்கியுள்ள நீர் இருக்கிறது. நீரும், துயரமும் சூழ்ந்த முத்தன் பள்ளத்தை நாவலாசிரியர் காட்சிப் படுத்தும்போது நவீன சமூகம் வெட்கப்பட வேண்டியுள்ளது. விண்வெளிக்கு கோள்களையும், எரிகனையும் அனுப்பும் முன்னேறிய சமூகத்தில், முத்தன் பள்ளத்தின் சமூக மதிப்புத்தான் என்ன? விழுமியம்தான் என்ன? எரிகனைகளும், கோள்களும் தேவைப்படும் அளவிற்கு முத்தன் பள்ளம் சக மனிதனுக்குத் தேவைப்படவில்லையா? ஆனால் தேவைப்படுகிறது. இந்த நாட்டில் காக்கைகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று வந்துவிட்டால் எப்படி அதற்கென்றொரு மதிப்பு வருமோ அந்தள விற்குத் தேர்தல் காலத்தில் முத்தன் பள்ளம் திடீர் மேடாகி விடுகிறது. ராமன் காலடிபட்ட அகலிகையாகி விடுகிறது. அயோத்தியாகிவிடுகிறது.
முத்தன் பள்ளம் என்பது வரலாற்றுத் துயரம் மட்டுமல்ல. வரலாற்று சாபமும் கூட. சாதியும், மதமும் ஊடாக நிலப்பிரபுத்துவக் காலம், மக்களாட்சிக் காலம் என்று  மன்னராட்சி நீள்வதைத்தான் முத்தன் பள்ளம் சாட்சியாக நின்று சொல்லிக் கொண்டுள்ளது. மனிதர்கள் வசிக்க வக்கற்ற, போகிமான் பூச்சி கூட மூச்சு விடச் சிரமப்படும் முத்தன் பள்ளம் வரலாற்றில், ஒரு மக்கள் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு கூட்டுத் தண்டனையாகவே இருக்கிறது.
சமணத்தின் மீது சைவத்தின் நவீன கழுமரமாக முத்தன் பள்ளம் இருக்கிறது. நவீன மன்னர்களின், அப்பூதியடிகளின் பதாகைகளை முத்தன் பள்ளத்தின் குடிகள் கூரைகளாகக் கொண்டிருக்கிறார்கள். அரை குறை ஆடையணிந்த நடிகையின் பதாகைப் பெண் களின் குளியலறை ‘மறைப்பாக’ இருக்கிறது. முத்தன் பள்ளத்தின் நிர்வாணத்தை மறைக்கும் இடையாடை யாகப் பதாகைகளே இருக்கின்றன. நவீன வரலாற்றின் பெருமிதம், ஆணவம், அலட்சியம், அரசியல், அசிங்கம் என பதாகையின் வண்ணங்கள் அவர்களது நிர்வாணத்தின் மீது நிரந்தரமாகப் பூசப்பட்டுள்ளது.
தூர்க்கப்பட்டக் கீழடி போன்ற வரலாற்றைத் தேடிப் பிடித்துத் தோண்டுவதைப் போல, விவாதிப்பதைப் போல, வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதைப் போலத் தூர்ந்தும், தூர்க்கப்படாத முத்தன் பள்ளத்தைப் பற்றி பேசுவது என்பதும் பின்னரான காலத்தின் கீழடியை உருவாக்காதிருக்கும். முத்தன் பள்ளம் நிகழ்காலத்தின் கீழடி மட்டுமல்ல. எதிர்காலத்தின் கீழடியும் கூட.
போகிமான் பூச்சியைத் தேடிப்போகும் வாசகன் கண்டடைவது முத்தன் பள்ளம் என்ற நரகத்தை மட்டு மல்ல. அது ஒளிந்திருக்கும் இடமும்தான். போகிமான் பூச்சி ஒளிந்திருப்பது இறுதியில், மனிதர்களின், அதிகாரத்தின், ஆணவத்தின், ஆணாதிக்கத்தின் குறி யீட்டின் மீது. ஆம் குறியின் மீது. வாழ்ந்தடங்கி விட்டக் குறியின் மீது. வரலாற்றுக் காலத்தின், நவீன காலத்தின் ஆண்டடங்கிய குறியின் மீது. சமூகத்தின் மீது, அறிவியலின் மீது, அறவியலின் மீது. போகிமான் பூச்சியா? அதிகாரத்தின் குறியா? என்ற குழப்பம் வாசகனுக்கு உண்டாகும் போது குழந்தைகள் சிரிக் கிறார்கள். ஆம், குழந்தைகளால் மட்டும்தான் அப்படி சிரிக்க முடியும். நாமும் சிரிக்க முடிந்தால்!
முத்தன் பள்ளம் - போகிமான் கண்டுபிடித்த வரலாற்றின் நவீன வடு!
முத்தன் பள்ளம்
அண்டனூர் சுரா
மேன்மை வெளியீடு
5-2, பெர்தோ தெரு, ராயப்பேட்டை,
வி.எம்.தெரு, (கில்ஆதர்ஷ் பள்ளி அருகில்)
சென்னை - 600014
தொலைபேசி எண்: 044 - 28472058
` 150/-

வெள்ளி, 11 மே, 2018

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் 09

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்






பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் 08

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் 07

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் -06

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்





பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் -05

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்




பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் -04

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்






பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் -03

அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்







பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!
#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை
விளம்பரம் -02
அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343 வது பிறந்தநாள் விழா...!!

#மே23

#சுவர் விளம்பரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

விளம்பரம் -01



அமைப்பு : இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்