வெள்ளி, 26 அக்டோபர், 2012

நத்தம் தொகுதியில் ஆற்காட்டார் போஸ்டர்!



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் சொந்தத் தொகுதி முழுக்க ஆற்காடு வீராசாமிக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர், சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

'நன்றி... நன்றி... தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளில் மக்கள் கஷ்டங்களை அறிந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு உங்களை விமர்சித்ததற்கு, உங்களை உணர்ந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இவண்: பொதுமக்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோர் நத்தம் தொகுதி' என அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கடந்த சனிக்கிழமை ஒட்டப்பட்டது.
...

இதைப்பார்த்து டென்ஷனான அ.தி.மு.க-வினர் அந்தப் போஸ்டரைக் கிழிப்பதும், அடுத்த நாள் மீண்டும் போஸ்டர் ஒட்டப்படுவதுமாக இரண்டு நாட்கள் நடந்த காமெடிக் காட்சிகளின் முடிவில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளர் விஜயன் உள்ளிட்ட ஆறு தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. இந்த விஜயன்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஸ்வநாதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

- ஜூ.வி.

1 கருத்து:

  1. Antha DMK sheet nam inathai serntha Andi Ambalam avarukku varavendiyathu aanal vijayanukku kodukkapattadhu atharku pottiyaaga thaan nam inathai serntha Andi Ambalam Suyetchaiyaaga nintraar but 29000 vottu mattume vaanga mudinthadhu. Natham thokuthiyil 600000 vote nam inathai saarnthavargal thaan enpathu unmai (Ivarathu appa Andi Ambalam 35 year MLA vaaga irunthathu kurippida thakkathu)

    பதிலளிநீக்கு