இந்தியா எதிநோக்கியுள்ள ஆபத்து....!! இலங்கை ராணுவ வலைத்தளத்தில் இருந்து
இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின் சீனா இலங்கையில் அதிக முதலீடுளை செய்ய முன்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 821 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2011 ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் 1.28 பில்லியன் டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இலங்கையானது வெளிநாட்டு முதலீடுளை எதிர்பார்த்து பல திட்டங்ளை நடைமறைப்படுத்தி வருகின்றது இதில் ஓர் அங்கமாக உல்லாசப் பயணத் துறையை மேம்படுத்தும் திட்டத்தை துரித கதியில் மேன்படுத்தி வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக சீனாவின் உதவியுடன் கொழும்பின் மத்திய பகுதியில் 3 ஹெக்டர் நிலப்பரப்பில், ஏறத்தாள 104 மில்லியன் டொலர் முதலீட்டில், 350 மீற்றர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைக்க இலங்கை அரசு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இக்கோபுரம் தென் கிழக்கு ஆசியாவின் மிக உயரமானதாகும் இது தாமரை வடிவில் அமைக்கபடவுள்ளது.இத்தாமரைக் கோபுரத்தை இந்தியாவிலிருந்தும்பங்களாதேஷிலிருந்தும் பார்க முடியும்.
உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய இத்தாமரைக் கோபுரம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவை, வானொலி போன்றவற்றோடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் பயன் படுத்தப்படவுள்ளது.
துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்தியைப் பொறுத்தவரை, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய ம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக சாலை மற்றும் வட பகுதி வீதிப் புனரமைப்பிற்கு என அடுக்கிக் கொன்டு செல்லக்கூடிய வகையில் சீனா பல உதவிளை வழங்கிவருகின்றது.
http://www.vidivu.lk/tm.asp?fname=20120108_02
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக