வியாழன், 24 மே, 2012

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை - தினகரன்

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை

திருச்சி, : பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்..
நாட்டின் விடுதலைக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட பேரரசர்களின் ஒருவரான பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்தநாளை யொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையில் சிலைக்கு நேற்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர்.
இதற்கிடையே மன்னர் சிலைக்கு மாலை அணிவிக் கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங் கார மேடை அமைக்காதது குறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகள்நேற்று முன் தினம் புகார் தெரிவித்தனர். சிலையின் கீழே தலைவர்க ளின் உருவப்பட த்தை வைத்து மாலை அணிவிக் கும் நடைமுறை தான் உள் ளது என பதில் அளித்துள்ளனர்.
இதற்கு முத்தரையர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நேற்று அதிகாலை 4 மணி க்கு அவசரமாக ரெடிமேட் மேடை அமைக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் அமைச்சர் சிவபதி, கலெக் டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்பி குமார், எம்எல்ஏக்கள் பரஞ்சோதி, மனோகரன், கு.ப. கிருஷ்ணன், பூனாட்சி, இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன் னாள் அமைச்சரும், மாவ ட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் முன்னாள் அமைச்சர் செல் வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரிய சாமி, ராணி, நகர செயலா ளர் அன்பழகன் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக சார்பில் மாவ ட்ட செயலாளர் விஜயராஜன், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் மலர்மன்னன், சேரன், இந் திய ஜனநாயகக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய சீலன், பாஜக மாவட்டத் தலைவர் பார்த்திபன் ஆகி யோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முத்தரையர் சங்கங்களின் சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக