திங்கள், 21 மே, 2012
முத்தரையர்களுக்கு காங்., முக்கியத்துவம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சசர் உறுதி - நன்றி: தினமலர்
புதுக்கோட்டை: ""முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்,'' என்று மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.சிவகங்கை எம்.பி., தொகுதிகுட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் செசயல்வீரர்கள் கூட்டம் நேற்று(20ம் தேதி) நடந்தது. மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம சுப்புராம் வரவேற்றார். மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் பேசியதாவது:காங்கிரஸ் பேரியக்கம், 128 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது. இதை யாராலும் வீழ்த்தவோ, அசைசக்கவோ முடியாது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சசகஜம். தேய் பிறை, வளர் பிறை போன்று காங்கிரஸ் கட்சி வெற்றி, தோல்விகளை மாறி மாறி சசந்தித்து வருகிறது. அமாவாசைச போன்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு வராது.வரும் 2014ல் நடைபெறவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சசாட்டியுள்ளார். இதில் உண்மையில்லை. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு, 86 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மக்களுக்கு என்னன்ன திட்டங்கள் தேவையோ அந்த திட்டங்களை செசயல்படுத்துவதற்காக, தேவையான நிதியை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.திருமயம் தொகுதியில் மட்டும், எட்டு ஆண்டுகளில், 14 வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசசாயிகளுக்கு விவசசாயக்கடன், தொழிலாளர்களுக்கு தொழில் கடன் என, பல கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் விதமாக, "பெல்' நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலங்கள், சசமுதாய கூடங்கள், பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் செசயல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் கடந்த சசட்டசசபைத் தேர்தலில் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல தவறியதால் தான் தோல்வியை தழுவினோம். எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் திருமயம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைக்க வேண்டும்.இதற்காக மாதத்துக்கு இரண்டு முறை இதுபோல் செசயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் மக்களோடு மக்களாக இணைந்து மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல வேண்டும்.காங்கிரஸ் கட்சியை அனைத்து சசமுதாய மக்களும் ஆதரிக்கின்றனர். இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சசமுதாய மக்களின் முழு ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.இச்சசமுதாய மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால்தான், இந்த நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக