ஞாயிறு, 17 ஜூன், 2012

சஞ்சயின் கருத்து ...!!

நண்பர்களுக்கு வணக்கம்,

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் முத்தரையர் என்று தேடினால் அண்ணன் துரைரெத்தினம் போல் ஒருரிருவர் தென்படுவார்கள், சில ஆண்டுகளிலேயே FACEBOOK போன்ற வலைத் தளங்களின் உபயத்தால் இன்று பூர்விகத்தின் வேர் தேடி அலையும் மலேசிய குடிமகன் நண்பர் செல்லமுத்து ரிசி போல பல்வேறு நண்பர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள், புவியியல் முழுமையாக அறியாத / கற்றுக்கொள்ளாத நமக்கு மிகுந்த ஆச்சரியம் கொட்டிக்கிடக்கிறது இன்று முத்தரையர்கள் இந்தியாவில் / உலகில் பலப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது மிகுந்த சந்தோசமாகவே உள்ளது ஆந்திர, கர்நாடக உறவுகளைக் கூட மொழி அறியாவிட்டாலும் நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே... மற்ற சமுதாயங்களை விட நாம் இணையத்தால் அடைந்த பலன் முகம் அறியாத / கனவிலும் சிந்திதிடாத தொலைவுகளில் நம் உறவுகளை கண்டுகொள்கிறோம், இன்று ஆயிரக்கணக்கான நண்பர்கள் இணையத்தினை பயன் படுத்துகிறோம், இப்பொழுது வலைத்தளங்களில் உபயத்தால் நட்பு வட்டத்தினைப் பேணுகின்றோம், எல்லாம் சரி இனி .....!!!!

வெறுமனே நான் முத்தரையர் நீங்களும் முத்தரையர் என்று சொல்லி நடப்பதனால் என்ன பயன்? இதுவரை நாம் முகம் அறியாமல், நீங்கள் எங்கோ ஒரு மூலையில், நான் ஒரு மூலையில் இருந்து இன்று நமக்குள் அறிமுகங்கள் ஆனப்பின்னல் இனி என்ன செய்யப் போகிறோம் ? யாரும் யாருக்கும் தனி தனியாக உதவிகள் செய்ய முடியாது என்பது நாம் அறிந்ததே... ஆனால் செய்ய முடிந்த வற்றை செய்யலாம் அல்லவா ?

நாம் இருக்கும் ஊர்களில் (உதாரணம் : சென்னை / மதுரை / திருச்சி / சிங்கப்பூர் / மலேசிய / துபாய் ) அங்கிருக்கக் கூடிய நண்பர்களை ஒரு தொலைப்பேசி அழைப்பில் அல்லது முடிந்தால் ஒரு ஒய்வு நாளில் ஒரு தேனீர் சந்திப்பில் நம் உணர்வுகளை / உறவுகளை மேம்படுத்தலாம், இன்னும் நீங்கள் இருக்க கூடிய பகுதிகளில் (உதாரணம் : சென்னையில் வேலை செய்யும் நண்பர் கவியரசு தன் ஒய்வு நேரங்களில் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் வாழும் நம் மக்களுடன் கலந்துரையாடுகிறார் ) வெறுமனே நம் மக்களை நேரில் சந்திக்கலாம் சற்று உறவுகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அதற்காக யாருக்கும் பொருள் உதவி செய்யவோ / பெறவோ இத்தகைய சந்திப்புகளை பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அது ஒரு தவறான முன் உதாரணமாக மாறிவிடும்,

இது என்னுடைய சொந்த கருத்து (யாருக்கும் கட்டாயம் இல்லை), எழுத்திலோ , கருத்திலோ முரண்பட்டால் குட்டிவிட்டும் (comment) , ஏற்பிருந்தால் தட்டிக்கொடுத்துவிட்டும் ( like ) செல்லவும்


காத்திருக்கிறேன் நண்பர்களின் பதிலுக்காக ... !!!

அன்புடன்

என்றும் உங்கள் சஞ்சய் காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக