திருச்சி, : திருச்சியில் முத்தரையர் பிறந்தநாளன்று கலவரம் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட முத்தரையர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர் உள் பட 9 பேரில் ராம்பிரபு தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் நீதி பதி வேல்முருகன் உத்தரவின்படி, இந்த வழக்கு 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி ராஜசேகரன், வரும் 29ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
NEWS FROM : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக