திங்கள், 26 அக்டோபர், 2015

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்



அஇஅதிமுக பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்க்கு,

      கடந்த 25/10/2015 அன்று உங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் என்பவர், அதே உங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தின் பெருந்தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கம் என்ற பெண்மணியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்,
 அத்தோடு முடிந்திருந்தால் அது உங்கள் கட்சியின் சொந்த விவகாரமாக கருதிடமுடியும், அதே பெண்மணியை அவர் சார்ந்த சாதியின் பெயரையும் (முத்தரையர்) சேர்த்து சொல்லி திட்டியுள்ளார், அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி பெரும்பான்மையான முத்தரையர் சமுதாயம் உங்கள் கட்சியை ஆதரித்துவருவது நீங்கள் அறிந்திருக்கும் விசயம்தான் என்றாலும் சமீபத்தில் உங்கள் கட்சியில் அறிவித்த மாவட்ட, ஒன்றிய பதவிகளில் என்ன காரணத்தினாலோ முத்தரையர்களை புறக்கணித்து இருந்தீர்கள் அது போகட்டும் அது உங்கள் உட்கட்சி விவகாரம், அதே நேரம் எங்கள் சமூகத்தை சேர்ந்தவரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், `உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக