கம்பன் வீட்டு கட்டுதறி மட்டுமல்ல எங்கள் வளப்பக்குடியார் வீட்டு கட்டுதறியும் கவிபாடும்...!
நேற்று மாவீரன் வெங்கடாசலனாரின் மொத்த வரலாற்றையும் 10 நிமிட பாடலாய் எழுதி, பாடி வெளியிட்டு இருந்தார்கள், இப்பொழுதுதான் அந்த பாடலை கேட்டேன், மனமுருகி பாடியுள்ளார், ஆயிரமாயிரம் பூமாலைகளைவிட இந்த பாமாலையே அந்த மாவீரனுக்கு மனம் நிறைக்கும், ஆத்மாவுக்கும் அமைதி கிடைக்கும், இப்படி அர்த்தங்களோடு அன்னாரின் நினைவிடத்துக்கு வாருங்கள் என்றுதான் உறவுகளை வேண்டுகிறேன்.
இந்த பாடலை பாடி இருக்ககூடிய வளப்பக்குடி வீரசங்கர் அவர்களுக்கும், இதனை ஒலித்தகடாய் வெளியிட துணை நின்ற எங்கள் தில்லங்காடு வீ.எஸ்க்கும், (9715871686) சகோதரர் விஜயராகவனுக்கும் நன்றிகள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக