சனி, 21 அக்டோபர், 2017

கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் - போலீஸார் குவிப்பு

கரூர்; அருகே மேட்டுமகாதானபுரம் என்ற கிராமத்தில் இருசமூகத்தினரிடையே (முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர்) மோதலில் 3 பேர் சிறுகாயங்களுடன் 8 பேர் கைது - போலிசார் குவிப்பு – பதற்றம் நீடிப்பு !!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டுமகாதானபுரத்தில் நேற்று முன்தினம் இரவு தேவேந்திர வேளாளர் சமூகத்தினர் பசுபதிபாண்டியன் பேனரை வைத்திருந்ததை முத்தரையர் சமூகத்தினர் கிளித்ததாகவும், பட்டாசு வெடித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் இருசமூகத்தினரிடையே அடிதடி மோதலில் 3 பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 8 பேரை லாலாப்பேட்டை போலிசார் கைதுசெய்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதனால் அந்தபகுதியில் பதற்றத்துடன் பல கடைகள் மூடப்பட்டு காணப்படுகிறது. குளித்தலை டி.எஸ்.பி. தலைமையில் போலிசார்கள் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமமே வெறிச்சோடியும், பதற்றம் மற்றும் பரபரப்புடன் காணப்பட்டு வருகின்றன.

News Source : Karur Boomi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக