தமிழக அரசின் புதிய பாடத்திட்ட வரைவு இந்த இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள், இதில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கலை மற்றும் கட்டிட கலை (Art and architecture TamilNadu) என்ற தலைப்பில் "பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்கர்கள்" அதனோடு சேர்த்து "குடைவரை கோவில்கள்" என்று பாடதிட்டத்தில் இணைக்க இருக்கிறார்கள், இதில் பல்லவர், சோழர், பாண்டியர், இவர்களுக்கு சற்றும் குறைவில்லாத பேரரசாக வீற்றிருந்த "முத்தரையர்கள்தான்" இந்த குடைவரை கோவில்களை எடுப்பித்தவர்கள், மேற்சொன்ன அரச மரபினரை பெயரோடு குறிப்பிடும்போது "முத்தரையர்" மட்டும் , குடவரையாக சுருங்கி போனதுதான் மர்மம் புரியவில்லை....
அதேபோல வட இந்தியாவில் அத்தனை இராஜ வம்சங்களையும் இந்த பாடபுத்தகத்தில் இடம்பெற செய்யும்வண்ணம் இந்த வரைவு இருக்கிறது, ஆனால் மருத்துக்காககூட "முத்தரையர்" பற்றி இல்லை...
இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை (நாகரீகமான முறையில் வலியுறுத்தலாக)http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx
இந்த இணையதளத்தில் இருக்கும் "கருத்து கேட்பு படிவத்தில்" பூர்த்தி செய்யுங்கள்.
இந்த இணையதளத்தில் இருக்கும் "கருத்து கேட்பு படிவத்தில்" பூர்த்தி செய்யுங்கள்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக