செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

பண்டைய நீர்மேலாண்மை


காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை 
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .

தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தினார். 

அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளார் 

முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.

பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.

இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.

. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.

இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது 

அண்ணாமலை சுகுமாரன் 
19/2/18

News Source : ஈகரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக