Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு



தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் : மர்ம கும்பலால் வெட்டிக் கொலை



புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை நேற்றிரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம். இவர், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சிறிது காலம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, ஜெ., பேரவை மண்டல செயலராக பணியாற்றி வந்தார்.இவரது சொந்த ஊர் ஆலங்குடி அடுத்த வடகாடாகும். நேற்றிரவு வழக்கம் போல், கடை வீதி சென்று விட்டு வடகாட்டிலுள்ள வீடுக்கு திரும்பியுள்ளார். இரவு 8.30 மணியளவில், வீட்டிற்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து மனைவி, குழந்தைகள், உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, ஆறு பேருக்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத காரில் திடீரென வந்து இறங்கினர்.சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடாசலத்தை சுற்றி வளைத்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலை, கழுத்து, மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் வெங்கடாசலத்தை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். புதுகை அரசு மருத்துவமனைக்கு இரவு 9.20 மணிக்கு வெங்கடாசலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.இத்தகவல் வடகாடு முழுவதும் பரவியதால், வெங்கடாசலம் ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்த துவங்கினர்.

இதில், ஏராளமான டூவீலர் மற்றும் போலீஸ் ஜீப், லாரி, பஸ்களும் கொளுத்தப்பட்டன. சாலை முழுவதும் மரங்களை வெட்டிப் போட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தகவலறிந்த புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமி சம்பவ இடத்துக்கு விரைந்தார். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், அதிரடிப்படை, அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு பணிக்கு தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெங்கடாசலம் உடல் வைக்கப்பட்டுள்ள புதுகை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (74)
shankar dubai - pudukkottai,இந்தியா
2010-10-10 02:04:32 IST
good person diead what a do?police ans witing for pudukkottai...
A.Pandi - Singapore,சிங்கப்பூர்
2010-10-08 16:27:40 IST
My deep condolence to Mr. Venkatachalam family. Whenever DMK rule(d) TN there is(was) no law and regulations. MK will be answerable for every tamilan for his poor administration....
sendhil - singai,இந்தியா
2010-10-08 16:08:48 IST
அட கடவுள சராசரி மனிதன் வாழ முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த செயல்....
ஜெயக்குமார் - திருவி,இந்தியா
2010-10-08 15:45:38 IST
படிச்சவன் வேலை பாக்குறான்..... படிக்காதவன் அரசியல் வியாதிக்கு அடியாள் ஆகுறான்........
GANESAN - KAMPALAUGANDA,உகான்டா
2010-10-08 15:40:44 IST
நல்ல மனிதரை பழி வாங்கி விட்டார்கள். இவரை பலமுறை சந்திந்து உள்ளேன் . உதவி செய்யும் உள்ளம் கொண்டவர். ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன் ....
venkat - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 15:33:59 IST
அப்பகுதி மக்களின் வாழ்க்கை பாதிக்காமல் பார்த்துகொள்வது அரசின் கடமை...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-08 15:08:48 IST
பேசாமல் கூலிபடையையும் அரசே ஏற்று நடத்தலாம். ஆற்று மண், டாஸ்மாக், போல. இல்லாவிட்டால் கேபிள் டிவி, சாட்டிலைட் டிவி, திரைப்படம் தயாரிப்பு போல தனது குடும்பத்திலேயே யாருக்காவது குடுத்து விடலாம்...
fid - frankfurt,இந்தியா
2010-10-08 14:11:58 IST
தமிழ் நாடு மக்களே நீங்கள் இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் ஆட்சிக்கு வரபோகும் தேர்தலில் ஓட்டு போடாதிங்க. நான் எந்த கட்சியும் சாராதவன். நான் ஒரு தமிழ் நாடு பிரஜை. இந்த ஆளு ஆட்சி சரில்லை. ஆட்சி ஒழுங்கா செய்யாமல் சினிமா காரன் நடத்தும் விழாவுகு போய்கிட்டிருக்கார். பிறகு எங்க உருப்படும் தமிழ் நாடு....
ஈஸ்வர் - தம்பா,யூ.எஸ்.ஏ
2010-10-08 14:05:34 IST
ஆந்திராவில் - 500 பேரு கர்நாடகாவில் - 400 பேரு கேரளாவில் 650 பேரு தமிழ்நாட்டில் - 399 பேரு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் கொலையனோர் கம்மிதான். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று யார் சொன்னது. என் ஆட்சியை கவிழ்க்க சதி....
கலை - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:57:14 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் ......
kalaivanan - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:54:26 IST
நாங்கள் மிகப்பெரிய தலைவரை இழந்து விட்டோம் .......
பாரதி - கோபிசெட்டிபாளையம்,இந்தியா
2010-10-08 13:52:42 IST
அம்மா ஆட்சி தேவை. வர இருக்கும் தேர்தலில் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள்....
சுரேஷ் singapore - singapore,இந்தியா
2010-10-08 13:48:53 IST
என்ன கொடுமை இதெல்லாம் அவரு ரொம்ப நல்லவரு .எல்லாம் அந்த சாமிக்கு தான் தெரியும். என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். இப்படிக்கு உண்மை யானவன் சுரேஷ் சிங்கப்பூர்...
அஸ்வின் - குவைத்,குவைத்
2010-10-08 13:47:22 IST
என் ஆழ்ந்த அனுதாபங்கள்... பழக எளிமையானவர் என்பதை நான் ஒரு முறை நேரில் சென்று அவரை பார்த்த போதே தெரிந்து கொண்டேன்... அரசுதான் இவரின் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டும்.. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.....
செல்வகுமார் - வேப்பங்குடிதிருவரங்குளம்,இந்தியா
2010-10-08 13:00:43 IST
மனம் குமுறுகிறது ஒரு மாவீரனை இழந்து விட்டோமே என்று! சட்டம் தன் கடமையை செய்யும் - வெறும் பேச்சு அளவில் மட்டுமே உள்ளது. தனி மனித பாதுகாப்பு தமிழகத்தில் கிடையாது என்பதற்கு இது ஒரு எடுதுக்காட்டு. . மக்களே விழிப்புடன் இருங்கள்........
சிதம்பரம் Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 12:45:46 IST
முத்தரையர் சமுதாயத்தின் பெரும் வேதனைக்கு ஆளாக்கிய இந்த கொடிய கூலிப்படை கும்பலை கைது செய்து தமிழக போலீசார் சிறந்தவர்கள் என்று நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன்...
dhandayuthapaniG - vadalur,இந்தியா
2010-10-08 12:19:19 IST
மக்கள் வாக்களிக்கும் போது யோசிக்காமல் செய்துவிட்டு இப்போது குத்துது கொடையுது என்றால் என்ன செய்வது? மக்கள் சரியாக இருந்தால் ஆட்சியாளரும் சரியாக இருப்பார்கள்!...
packiaraj - Tirunelveli,இந்தியா
2010-10-08 12:08:55 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு. அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?......
lusuu - jahra,குவைத்
2010-10-08 11:28:47 IST
போங்கையா போய் புள்ள குட்டிகள படிக்கச் சொல்லுங்க ....
ஜான் - பெங்களூர்,இந்தியா
2010-10-08 11:21:07 IST
அடுத்த தேர்தலில் ADMK காரனோட பலம் என்னன்னு நாங்க காட்டுவோம்....
செந்தில் kumar - vadakadu,இந்தியா
2010-10-08 11:05:57 IST
ஆழ்ந்த அனுதாபங்கள்...
உன்னைப்போல் ஒருவன் - Texas,யூ.எஸ்.ஏ
2010-10-08 10:53:48 IST
மக்கள் விழித்து கொள்ளாத வரையில், இது தொடர்ந்து கொண்டு இறுக்கும். தமிழா விளித்து கொள். இலவசத்தை நம்பி ஏமாறாதே...தமிழக மக்கள் முட்டாள் ஆகி கொண்டிருக்கிறார்கள்....இந்த dmk ஆட்சி போதை மருந்தை கூட இலவசமாக கொடுக்கும் அடுத்தும் தொடர்ந்தால்......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 10:42:55 IST
ஆலங்குடி தொகுதியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வெங்கடாசலம். அதிலும் 1996ம் ஆண்டு சுயேச்சையாக வென்று பிறகு தாய் கட்சிக்கு திரும்பியவர். இது போன்ற கூலிப்படைகளின் செயல்கள் சமுதாயத்துக்கு மிகவும் ஆபத்தானவை. சில மேதாவிகள் இதனையும் நியாயப்படுத்துகின்றனர். தயவு நீங்கள் எல்லாம் கருத்துகள் எழுதுவதை நிறுத்திகொள்ளுங்கள். அது தான் இந்த சமுதாயத்துக்கு நல்லது. வெங்கடாசலம் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய இழப்பு புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவுக்கு மிகப் பெரிய இழப்பு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு....
கலைவாணன் - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 10:32:55 IST
நங்கள் மிக பெரிய தலைவரை இழந்துட்டோம்..... இவரது ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம் ........
ராஜுராஜு - மதுரை,இந்தியா
2010-10-08 10:09:06 IST
Whoever he was, the way he was attacked was ruthless. In particular at his house infront of family members. There is protection for any one. Police should do some encounters ....
Sam - tirupur,இந்தியா
2010-10-08 10:04:26 IST
இது என்னவோ திமுகவை சார்ந்தவர்கள் தான் கொலை செய்தவர்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் மாதிரி கமண்ட்ஸ் கொடுகிறீர்கலே இந்த ஆட்சியில் நடந்தால் அது திமுக தானா ? ஏன் இது உள்கட்சி பூசலாக இருக்க கூடாது ? இறந்தது ஒரு ஆத்மா. அத விட்டுட்டு இதிலும் கட்சி சாயம் பூசி ஆதாயமா தேடுகிறீர்கள் ? சே கேவலமா இருக்கு...
மனிதன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 09:55:45 IST
ஒண்ணுமே புரியலே எனக்குதானே, ஒரே மர்மமாக இருக்குது தலையும் கிறுக்குது! ஒண்ணுமே புரியலே எனக்குதானே, என்னமோ நடக்குது தமிழ்நாட்டிலே! ஒரே மர்மமாக இருக்குது ஒண்ணுமே புரியலே எனக்குதானே,...
Raman - Singapore,இந்தியா
2010-10-08 09:49:38 IST
இலவசம், இலவசம் என்று இலவசத்தை பார்த்து பரிகாசம் செய்யும் இலவசங்களே.... ஒரு செய்தியை போட்டு, அதற்கு இலவசமாக கருத்து சொல்லலாம் என்றவுடன் புற்றீசல் போல் வந்து கருத்து சொல்லும் இலவசங்களே... ஒரு வேளை, கருத்து சொல்ல, ஒரு பதிவுக்கு, CREDIT OR DEBIT CARD NUMBER ஐ கொடு, குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால்தான் கருத்து பதிவு செய்யப்படும் என்றால், எத்தனை இலவசங்கள், இங்கே, வாய் கிழிய கருத்து சொல்ல வரும்... ஏன், வெகுஜன மக்களின் மன நிலையை இலவசமாக பரிகாசம் செய்கிறீர்கள்......"முதலில் உன் கண்ணில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு, அடுத்தவனுக்கு முயற்சி செய்"!!!!!...
எஸ்.பி.பக்கிரி - சென்னை,இந்தியா
2010-10-08 09:39:20 IST
படுகொலையானவர் நல்லவரா கெட்டவரா என்கிற விவாதத்தை விடுத்து, வெகு வேகமாக சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீரமைத்தைப்பற்றி விவாதிப்பதுதான் தமிழக நலனுக்கு நல்லது....
பரமேஸ்வரன் - காரைக்குடிசிவகங்கைமாவட்டம்,இந்தியா
2010-10-08 09:37:44 IST
இதே நிலை இன்னமும் தொடர்ந்தால் தமிழக மக்களை ஏற்கனவே ரஜினி சொன்னதுபோல் " ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது". தமிழக மக்களே! நன்கு சிந்தித்து வாக்களியுங்கள், சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனை அழித்தவர் யார்! எவரது ஆட்சியில் ரவுடிகளின் அட்டகாசம் அழிக்கப்பட்டது என்று சற்று சிந்தித்து கடவுள் இல்லை ஜாதகம் தவறு என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழின துரோகி கருணாநிதிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள். சட்டம் ஒழுங்கு தலைநகரிலேயே இல்லையென்றால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எப்படி சரியாக இருக்கும்!!!!!!!!!!!!!! இவர்களது குடும்ப ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்!!!!!!!!!...
சேகர் - singapore,இந்தியா
2010-10-08 09:35:42 IST
டேய் சிவா மற்றும் உண்மையான பெயரை சொல்ல தைரியம் இல்லாத உண்மை உங்களை போன்ற அடி முட்டாள்களுக்கு என்ன தெரியும், ஏழைகளுக்கு உதவி செய்ய நீதி கிடைக்க அதிரடியாக செயல்பட்டவர். இனிமேலும் தவறான கருத்தை வெளியிடதே....
Murugan P C - PeriyalurAranthangi,இந்தியா
2010-10-08 09:34:49 IST
Deep condolance to Venkatachalam....
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-08 08:59:34 IST
ஒழுங்காக ஒரு ரூபாய் அரிசியை இலவச காஸ்-இல் சமைத்து சாப்பிட்டு, இலவச மின்சாரத்தில் (மானாட மயிலாட வரும் போது மட்டும் தான் மின்சாரம் வரும்) இலவச டிவியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு வேலை வெட்டி எதுக்கும் போகாமல் பொதுக்கூட்டம், செம்மொழி மாநாடு மற்றும் இடைத்தேர்தலின் போது லாரியில் மாட்டை ஏற்றி செல்வதை போல் கூட்டத்திற்கு ஆள் கணகிற்காக ஊர் ஊரக சென்று குவார்டர் பிரியாணி சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டும் சாதாரண தன்மான தமிழனை இந்த பொன்னான ஆட்சியில் யாராவது வெட்டி சாய்திருக்கிரார்களா? இல்லையே!!! வெட்டபட்டிருப்பவரோ எதிரி கட்சியை (எதிர் கட்சி என்று யாரையும் இந்த பொன்னான ஆட்சியில் கூறக்கூடாது) சேர்ந்தவர். எப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடோ, இரண்டு நாடும் இரவு/பகல்/கடும் வெயில்/கடும் குளிர் என்று எந்த நேரமும் உஷாராக இருப்பார்களோ அது போல் தமிழ்நாட்டில் மேலே கூறியுள்ள நமது சாதாரண தன்மான தமிழனை தவிர மற்ற எல்லோரும் எந்த நேரமும் உஷாராக இருக்கவேண்டும். இல்லையேல் விவேக் சொல்வது போல் "இன்னைக்கு செத்தல் நாளைக்கு பால்". பின் குறிப்பு: தமிழகத்தில் இன்றுள்ள நிலைமையில் யாராவது உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இதோ நீங்கள் வெற்றி பெற ஒரு ரகசியம். பேசாமல் பால் வியாபாரம் பண்ணினால் 2011-க்குள் கோடிஸ்வரன் ஆகிவிடலாம்....
arun - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 08:48:18 IST
வடகாட்டின் வள்ளல் இறந்ததற்கு வருந்துகிறோம்.வள்ளலின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகிறோம் . கண்ணீருடன். ஆரணிபுரம் பகுதி புதுகை ....
ரவி - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:29:59 IST
அந்த மாநிலத்தை பாருங்கள், அந்த நாட்டை பாருங்கள், அங்கே நடந்ததை விட இங்க கம்மி தான் என்று புள்ளி விவரம் தருவார். புள்ளி விவரம் அறிவிக்கும் புள்ளியாளர் கருணாநிதி...
hamdunashraf - பரங்கிபேட்டை,இந்தியா
2010-10-08 08:27:38 IST
வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடும். இது தமிழ்நாடா இல்லை சுடுகாடா........
தமிழன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:08:07 IST
முன்னாள் அமைச்சருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தயவு செய்து ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க வினரால் சேதபடுத்தப் பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கினால் நேற்று அவர் விடுத்த அறிக்கையை அனைவரும் ஏற்று கொள்வார்கள். செய்வாரா முன்னாள் முதல்வர்? அப்படி செய்தால் தி.மு.க வினரால் தாக்கப் பட்ட வாகனங்களுக்கும் கருணாநிதி இழப்பீடு வழங்க வேண்டும். செய்வாரா இந்நாள் முதல்வர்? எனக்கு தெரிந்து இது இரண்டுமே நடக்காத காரியம்....
விகடன் - சென்னை,இந்தியா
2010-10-08 08:02:11 IST
மற்ற மாநிலங்களில் நக்சலைட் தொல்லை, தமிழ்நாட்டில் திமுக நக்சலைட் தொல்லை. என்று விடியுமோ??????????????...
பராசக்தி - மன்னார்குடி,இந்தியா
2010-10-08 08:01:56 IST
என்ன செய்வது எங்கள் ஆட்சியில் தான் எங்கள் சொந்த மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வம் படுகொலை செய்யப்பட்டார். நாங்கள் என்ன கவலையா பட்டோம். இதெல்லாம் எங்கள் ஆட்சியில் சர்வ சாதாரணம். பரவாயில்லை விடுங்க. நாங்க குடும்பத்தோட போயி எந்திரன் படம் பார்க்கணும்....
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 07:53:38 IST
யார் வாழ்ந்தாலும் செத்தாலும் பாதிக்கபடுவது என்னவோ பொதுமக்கள் தான். கூலிப்படைகளை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும். தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு....
விமல் ஸ்ரீநிவாஸ் - சென்னை,இந்தியா
2010-10-08 07:31:46 IST
கொலை செய்தால் பெருசா ஒன்னும் இல்லை என்ன. அடுத்த நாள் தின மலர்ல வரும் இரண்டு,மூணு,மாசம். அப்புறம் ஏவல் சாரி காவல் துறை மெதுவா கைது செய்யும். ஒரு மாசம் தான் ஒரே மாசம் தான் ஜாமீன்ல வருவோமில்ல. அப்பரம் எட்டு,,பத்து..வருஷதுக்கு அப்புறம் எல்லாரும் மறந்த பின்னாடி ஆட அமர (அமர்வு)நீதிமன்றம் தீர்ப்பு வழுங்கும். அதையும் தாண்டி தண்டனை வந்தா அப்பீல் செய்யோம் இல்ல. அது ஒரு மூணு,நாலு வருஷம் ஓடும். அப்புறம் திருப்பி அப்பீல் அது இது....கடைசியா அவுக என்ன தண்டனை கொடுக்கறது. நானா போய் சிவனேன்னு ஜெயில்ல உக்கார்ந்துப்பேன்....
siva - Madurai,இந்தியா
2010-10-08 07:28:49 IST
செத்தவரே ஒரு கூலிப்படை தலைவர் தாம்பா, வினை விதைச்சவன் வினை அறுப்பான்....
Siva - madurai,இந்தியா
2010-10-08 07:26:10 IST
seththavane oru koolippadai thalaivan thaampa....
கே.anbu - trichy,இந்தியா
2010-10-08 07:25:57 IST
மஞ்சள் துண்டாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படியா நிலைமை போனால் நீங்கள் போன தேர்தலில் வாக்களித்தபடி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட்டோம். அதனால் மக்கள் எப்போதும் எங்களுக்கு தான் வோட்டு போடுவார்கள் என்று கனவு காணாதீர்கள். வாக்களித்தபடி போட்ட அரிசி உங்கள் கட்சிக்கு வாக்கரிசி யாக போய்விடும். அல்லகைகளின் பேச்சை கேட்காதீர்கள். எங்கள் ஆட்சியில் வாக்கரிசி கூட ஒரு ரூபாய்க்கு விற்றோம் என்ற பெயர் வேண்டுமானால் தொடர்ந்து இப்படியே நடந்துகொள்ளுங்கள். அழிவு காலம் மிக அருகில் உள்ளது...
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-08 07:06:19 IST
அய்யாவிடம் இருந்து நாளை ஒரு மடல் வெளிவரும்; அதில்: "அ.தி.மு.க.வில் அவர்களே வெட்டிக்கொண்டு ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் காட்டுமிராண்டித்தனம் இது. இப்படியெல்லாம் கொலை செய்து எங்கள் ஆட்சியை அழிக்க முடியாது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இன்று கூட ஜெயந்தி அம்மையார் என்னிடம் கூட்டணி குறித்து இறுதி ஒப்பந்தம் செய்து சென்றுள்ளார். உடன் பிறப்புகள் அமைதி காக்கவும்."...
சிங்கை கார்த்திக் - singapore,சிங்கப்பூர்
2010-10-08 07:04:55 IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... இவரால் இறந்தவர்கள் எத்தனையோ .. இவர் உயிருக்கு மட்டும் மரியாதையா ??...
செந்தில் புதுக்கோட்டை - singapore,இந்தியா
2010-10-08 07:00:30 IST
மிக ஆழ்ந்த வருத்தங்கள் ... அதிர்ச்சியான விஷயம் ... ஆலங்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் .. முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு .... இவருடைய இழப்பு அப்பகுதி மக்களுக்கு பேரிழப்பு ... என்று இந்த தி மு க ஒழியுமோ அன்றுதான் இது போன்ற வன்முறைகளுக்கு முடிவு .....கூலி படைகளை முதலில் ஒழிக்க வேண்டும் ........
ஏழுமலை - வில்லுபுரம்,இந்தியா
2010-10-08 06:37:01 IST
திமுக வினரிடமிருந்து இழப்பீடு வாங்கனுமுன்னு செல்வி சொல்லி முடிக்கல. அதுக்குள்ளே இப்படியா. ம்ம் ம் ம் ம் ....... குடுத்துடுவங்கய்யா குடுத்டுது டுவாங்கய்யா!!!!!!!!...
நாகராஜன் முது - HARRISBURG,யூ.எஸ்.ஏ
2010-10-08 06:26:51 IST
POLICE DEPARTMENT MUST FIND THE GANG AS SOON AS POSSIBLE....
APR.Kannadhasan - கேம்ப்...singapore.குலமங்கலம்சவுத்.pudukai.DT,இந்தியா
2010-10-08 06:25:09 IST
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் நாங்கள் .....எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .....ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....
tamil - singapore,இந்தியா
2010-10-08 06:03:59 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!......
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 06:03:43 IST
ஒடனே தருமபுரி, சந்திரலேகான்னு இங்க வக்காலத்து வாங்க ஒரு கும்பல் கெளம்பும்...தருமபுரி சம்பவத்திற்கு சரியான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கிவிட்டது. முன்னாள் நடந்தவற்றைக்காட்டியே இது போல எத்தனை கொலை பாதகங்களை நியாயப் படுத்தபோகிரார்களோ ...புரியவில்லை...தமிழகம் உண்மையில் காட்டுமிராண்டி காலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது... மக்கள் காசுக்கும் இலவசத்திற்கும் மயங்கும் தன்மையிலிருந்து விழித்தாலொழிய தமிழகத்தினை காப்பாற்றுவது கடினம்....
karthick - soorakkadu,இந்தியா
2010-10-08 05:55:19 IST
அரசியல் விஷயங்கள் தவிர பொது வாழ்வில் மக்களுக்கு சிறந்த நண்பனாகவும் வள்ளலாகவும் திகழ்ந்தவர் சமுதாய துரோகிகளால் சாய்க்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது....
பத்மநாதன் - India,இந்தியா
2010-10-08 05:50:43 IST
ஆங் பாட்டி வைத்தியம் ஆரம்பமாகிவிட்டது! எப்போதெல்லாம் தனக்கு தோல்வி வரும் என்று தெரிகிறதோ அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அதை கெடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து விடுவார்!கொடநாடு போறது,சிறுதாவூர் போறதெல்லாம் சும்மா ஜாலியா இருக்க மட்டும் இல்லை இந்த மாதிரி சதி திட்டம் போடவும்தான்!அ.தி.மு.க கட்சியில் உள்ள அப்பாவிகளே தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! மக்களும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்....
snakebabu - singapore,சிங்கப்பூர்
2010-10-08 05:13:48 IST
கருணாவின் பொற்கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்னும் மணிமகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க கல். வாழ்க உமது அரசாக ஆட்சி. வளர்க உமது பணநாயகம்,...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 03:56:18 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!...
துளசி ராமன் - சென்னை,இந்தியா
2010-10-08 02:23:37 IST
துளசி ராமன் சென்னை நாடு எங்க போகுதுனே தெரியல ... சட்டம் ஒழுங்கு சூப்பர் ......
உமர் - சவுதி,இந்தியா
2010-10-08 01:43:22 IST
என்ன வாழ்க்கைடா இது. இதுக்கு ஒரு முடிவு இல்லையா அல்ல...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-08 01:30:14 IST
மனுஷன் சாகுரப்போ நிம்மதியா சாகனும்..இது போல சாவெல்லாம் வரக்கூடாது..வழக்கம் போல திமுக ஆட்சியை குறை சொல்லி பலனில்லை.அவங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு ஆட்சி செய்யிறாங்க..எந்த அளவுக்கு திமிரும் செல்வாக்கும் சட்டத்தை மதிக்காத தன்மையும் இருந்துச்சுன்னா, இப்படி வீடு புகுந்து ஆளை போடுவானுங்க..சட்டம் போலீசெல்லாம் அதுக்கு பயப்படுரவனுக்கு மட்டும்தான் போலிருக்கு.....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 01:10:08 IST
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு மிக மிக மோசமாக கெட்டு போயி உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வுகளாக மாறி விட்டது. கொலை கொள்ளை இல்லாத ஒரே ஒரு நாளை சொல்லுங்கள் பார்ப்போம். இப்ப தெரியுதா? ஜெயா ஏன் ஹெலிகோப்டேர்ல பறக்குறாங்கன்னு. திமுக ரௌடிகள், திமுக ரௌடிகள்................திமுக ரௌடிகள். எங்கும் ரௌடிகள் அட்டூழியம், அராஜகம், கொலை வெறி தாக்குதல்.மஞ்சள் துண்டு குடும்பத்துக்கு தெரியும் ஜெயாவால் மட்டும்தான் குடும்ப திமுக அராஜ ஆட்சிக்கு முடிவு கட்டமுடியும் என்று. மஞ்சள் துண்டு குடும்பத்தின் அராஜகங்களை ஒழிக்க ஜெயா விட்டால் வேற எவன்டா இந்தியாவில் ஏன் உலகத்தில் இருக்கிறான். ஒரு வேட்டி கட்டிய ஆம்பிளையை சொல்லுங்கள். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். இருப்பினும் ஜெயாவை ஆதரிப்பதால் அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு. ஒரு முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன? எல்லாரும் கேரளாவுக்கு அடிமாடா போங்க. முழிக்காதிங்க. மஞ்சள் துண்டின் ஆசிர்வாதத்தால் கூடிய சீக்கிரம் அந்த நிலை தமிழ் நாட்டில் வரும். தமிழ்நாட்டில் உள்ள பணத்தை எல்லாம் சுரண்டியாச்சு. உசுரு மட்டும்தான் பாக்கி. அதையும் இப்படி தினம் தினம் எடுக்கிறானோ....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-08 00:25:45 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு.அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?...

சனி, 9 அக்டோபர், 2010

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!





புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் வசித்து வந்த வெங்கடாசலத்தை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று விட்டு காரில் தப்பினர்.



இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தை அடுத்த அதம்பை கிராமம் தோப்புத் தெருவில் உள்ள திருமாங்குளம் அருகே ஒரு வெள்ளை நிற மாருதி கார் கேட்பாரற்று நின்றது.



அந்த காரின் ஸ்டியரிங், கதவு, இருக்கை ஆகியவற்றில் ரத்தக் கறை படிந்திருந்தது. காரின் பின் பக்க டயர் பழுதாகி இருந்தது. அதனால், இந்தக் கார் கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.



கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனையிட்டனர். காரின் முன்பக்கக் கண்ணாடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கோவையிலுள்ள கடை முகவரி உள்ளது.



காரின் இருக்கையில் கோவையில் வாங்கிய இரு நகரப் பேருந்துகளின் டிக்கெட்டுகள் கிடந்தன. கார் எண் டி.எஸ்.ஜெ. 5834. கொலையாளிகள் தப்பிச் சென்றபோது, காரின் டயர் பழுதானதால் காரை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்தான் இந்தக் கார் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என்று அதம்பை கிராமத்தினர் போலீழ்ôரிடம் தெரிவித்தனர்.



இந்நிலையில், கொலையாளிகள் நான்கு பேர் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாகத் தகவல் பரவியது. ஆனால், அது உண்மையில்லை என்று பின்னர் தெரிந்தது. எனவே, கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடையலாம் என்பதால், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீழ்ôர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பட்டா கத்தி போன்ற ஆயுதங்கள் கரம்பக்குடி அருகே குமாரக்குளத்தில் உள்ள முன்னாள் அதிமுக நகர செயலாளர் கருப்பையா என்பவரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கரம்பக்குடி இன்ஸ்பெக்டர் ஆயுதங்கள் கிடந்த தோட்டத்திற்கு சென்று அவற்றை கைப்பறினார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் வெங்கடாசலத்தை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக அமைச்சர் படுகொலை

அதிமுக அமைச்சர் படுகொலை
வியாழக்கிழமை, 07 அக்டோபர் 2010 23:43
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம், இன்று இரவு 7.30 மணியளவில் அவர் வீட்டின் முன்பாகவே, படு கொலை செய்யப் பட்டுள்ளார். TN-55-Z-7524 என்ற வெள்ளை நிற ஆம்னி வேனில் வந்த கொலைகாரர்கள், வேனின் உள்ளே, இசுலாமிய பெண்கள் அமர்ந்திருப்பதாகவும், ஏதோ ஒரு பிரச்சினை என்றும் தன் வீட்டின் முன் அமர்ந்திருந்த வெங்கடாச்சலத்தை அழைத்துள்ளனர். வேனின் அருகே வந்த வெங்கடாச்சலத்தை சராமரியாக வெட்டிச் சாய்க்கப் பட்டார். இந்தக் கொலை கூலிப் படையினரை ஏவி விட்டு நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Comments
0 #2 முத்து 2010-10-08 08:40
கொலைசெய்யப்பட்ட வர் முன்னாள் அமைச்சர் என்று சவுக்கு உடனே திருத்திக் கொள்ளவும்!நடப்ப து அராஜக ஆட்சி என்பதால் சவுக்கு இதையும் அதிமுக ஆட்சியென்று நினைத்துக்கொண்ட து போலும்!
Quote 0 #1 maharaja 2010-10-08 08:04
தி.மு.க ஆட்சியில் அதிமுக அமைச்சரா? முன்னாள் அமைசசர் என்று இருக்கவேண்டும்.


நன்றி
மகாராஜா

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி வடகாடு கல்லறை தோட்டத்தில் வெங்கடாசலம் உடல் அடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் உடலுக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பகல் 12.50 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவரது உடல் வடகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை ஆறு மணிக்கு அவரது உடல் வடகாட்டில் உள்ள அவரது வீட்டின் முன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, விவசாய அணி செயலாளர் துரை கோவிந்தராஜன், எம்.பி., குமார், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், முத்தரையர் சங்க நிர்வாகிகள் விஷ்வநாதன், செல்லையா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் அவரது உடல்மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 7.30 மணிக்கு அவரது உடல் வீட்டின் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து வடகாடு மற்றும் ஆலங்குடியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்


Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:16:12 IST
One of the best political leader for the four peoples in Pudukottai District. My condolence to their family and muthiriyar society...

பா.சிதம்பரம் - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:03:38 IST
காவல்துறை கொலைகாரர்களை கைது செய்தார்களா இல்லை வழக்கம் போல் உண்மை குற்றவாளிகளை தப்பிகவிட்டு கைது செய்வது போல் நாடகம் அடுகிரர்களா? ஒரு வெங்கடாசலம் மறைந்தால் என்ன அதே மண்ணில் இன்னும் பல வெங்கடாசலம் தோன்றுவார்கள் என்று நம்புகிறான். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தர்ருகும் சமுதாய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

nalavan - uk,இந்தியா 2010-10-09 09:31:04 IST
நன்றி ,புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு எப்படி எச்சரிகை கொடுக்க போறிங்க ,மக்களுக்கு பயன்படாத மாவட்ட காவல் துறை லஞ்ச துறை...

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது..!!!

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது..!!!
எமது இயக்கதின் தோழர்களே...!முத்தரையர் சமுதாய பெரியவர்களே..! நமது சமுதாயம் இன்று சந்தித்துள்ள ஒரு மிகப் பெரிய இழப்பு மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய திரு. வெங்கடாசலம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர்) அவர்களின் படுகொலை இன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அவரின் மறைவு

"முத்தரையர் சமுதாயத்தின் தூண் சரிந்தது...!
முத்தரையர் சமுதாயம் நிலை குலைந்தது....!!!
துடுப்பு இல்லாத படகாய் மாறியது...!
ஆயுதாம் கொண்டு தாக்கிய கயவர்களே...!
நிராயுத பணியாய் நின்ற எமது வீரனிடம் ஆண்மையின்றி வெட்டி சாய்த்த தற்குரிகளே..!
நீங்கள் ஆண்கள் என்றால் எங்களோடு நேரில் நின்று மோதி பாருங்கள்"
மன்னிக்கவும் நண்பர்களே நான் தற்சமயம் நிதானம் கொள்ள முடியவில்லை..! என்னால் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,  இயக்கத்தின் கொடி ஒரு வாரம் அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,

சஞ்சய்காந்தி

வியாழன், 7 அக்டோபர், 2010

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு - தினமணி

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு

வை. இராமச்சந்திரன்First Published : 02 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :


ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படுகிற வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அன்றைய காலகட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர்ஜாதி பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் அன்று ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப்போது கல்வி, வேலைவாய்ப்பு, உயர்பதவிகள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்.
இப்படி உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள் தாம் சார்ந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டினுடைய உண்மையான நோக்கம். அந்த உண்மையான நோக்கம் இன்று நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
இப்போதைய சூழ்நிலையில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டோரில் ஏராளமானோர் உயர்ந்த இடத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின்தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். காரணம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை காரணம் காட்டி ஒதுக்கிவைக்கப்படுவதால், உயர் ஜாதி வகுப்பினரிலும்கூட பலர் பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டுக்காக காரணம் காட்டப்பட்ட சமத்துவமின்மை, இன்று மாற்றுத் திசையில் பயணிக்கிறதோ என்ற ஐயமும், சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சட்டமே இன்று சமத்துவத்தை சீர்குலைத்து நாட்டை பாழாக்கிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
இந்நிலையில்தான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பதே, அரசியல் கட்சிகளைப் பொறுத்த அளவில், வாக்குவங்கியை மனதில்கொண்டே எழுப்பப்படுகிறது. இன்று அரசுத் துறைகளில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூக்குரலிடும் தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களில் ஜாதிரீதியான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று போராடத் தயாராக உள்ளனவா? ஏன், மத்திய, மாநில அரசால்தான் பகிங்கரமாக உத்தரவிட முடியுமா? முடியாது.
முக்கிய அரசியல்வாதிகள் நடத்தும் தொழில்நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அச்சமும், தேர்தல் நேரங்களில் உதவும் பண முதலைகளிடம் தேவையில்லாமல் பகைக்க வேண்டுமா என்ற அச்சமும்தான் இதற்குக் காரணம். அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களின் தொழில் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்புத் தரலாமே. ஏன் முடியவில்லை?
அரசியல் பலம் படைத்தவர்களின் நிறுவனங்களில், முக்கிய பதவிகளுக்குத் தகுதியான உயர்வகுப்பினரை வைத்துக் கொள்வர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என வாய் கிழியப் பேசும் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஏன் தொழிலதிபர்களும்கூட, தங்களது தனிச் செயலர், கணக்கு தணிக்கையாளர், வழக்கறிஞர்கள் என அனைத்திலும் உயர்வகுப்பு ஜாதியினரைப் பயன்படுத்துகின்றனரே அது எப்படி?
இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை. ஆக, அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில், அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற இடத்தில் ஒரு நிலைப்பாடும், அரசியல் ஆதாயம் இல்லாத இடத்தில் வேறு ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே எனத் தோன்றுகிறது. இன்று தாழ்த்தப்பட்டோர் ஏராளமானோர் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தும் உள்ளனர். அதேபோல உயர்வகுப்பினரில் கோயில் மணி அடித்துப் பிழைப்பை நடத்துபவர்களும், ஹோட்டல்களில் சமையல் வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்களும் உள்ளனர். அப்படிப் பார்க்கையில் இன்று ஆளுகிறவர் யார்? ஆளப்படுகிறவர் யார் என்ற கேள்வி எழுகிறது.
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்ந்தவர்களின் பிள்ளைகளும், இன்றும் அதே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் உயர்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இடஒதுக்கீடு இன்றி தவிப்பவர்களின் பிள்ளைகள் மேலும் தாழ்வு நிலைக்கே தள்ளப்பட்டு வருகின்றனர். இதுதான் இன்றைய நிலை.
இத்தகைய நிலையைத் தீர்க்க வேண்டியது ஒரு தலைசிறந்த அரசின் தலையாய கடமை. இந்த வேறுபாட்டை போக்க ஒரே வழி பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதுதான்.
கல்விநிலையங்களில் ஜாதிய அடிப்படையில் உண்டாகும் காழ்ப்புணர்வுக்கு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுதான் காரணமோ எனத் தோன்றுகிற சூழலில், இந்த காழ்ப்புணர்வை நீக்குவதற்கும் இந்தப் பொருளாதார இடஒதுக்கீடே ஓர் ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வகையில் ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே, ஜாதி அடிப்படையில் உயர் வகுப்பினர், தாழ்ந்த வகுப்பினர் எல்லோரும் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமன்றி, பொருளாதார நிலையிலும் சமநிலையை அடைய முடியும்.
பொருளாதார அடிப்படையில் பயனாளிகள் தேர்வில் பல தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்புகள் இருந்தாலும், பொதுமக்கள் தாமாக முன்வந்து, முழுமையாக, உண்மையான தகவல்களை மட்டுமே வழங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, அவர்கள் உயர் வகுப்பினராக இருந்தாலும் சரி, தாழ்ந்த வகுப்பினராக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற வழிவிட வேண்டும்.

KUWAIT JOBS

KUWAIT JOBS

Human Resource Assistant vacancy for a renowned construction company. Must
have min 1 year experience with HR recruitment.
Interested candidates please email to : lady.vinitha@gmail.com
A leading IT company urgently required office secretary, should be fluent in
English, should have min 2-3 years experience and should have transferable visa.
Kindly contact 97215782 or send your cv to sales@zenithbizsolutions.com
Looking for a young, good looking, pleasant, hard working female Office Secretary
for an aviation services Company in Farwania location . The ideal candidate should
be fluent in Arabic & English and should knows MS Office, Internet, Filing records
etc.
Only serious candidates, send CV with a recent photograph to
abeljoseph2010@gmail.com


A leading Hospital in Kuwait is urgently looking for the following candidate:
Microbiologist (Male or Female) 2 Nos.
-Must posses a master degree.
-Minimum 2-3 years experience in similar field
-Visa can be either Atricle 18 / Visit or Dependent
- Salary KD350/--KD450/-
Candidates those who are wish to apply for the above position please send CV to
vacancies2010@gmail.com


Immediate vacancies for an upcoming Hypermarket in Kuwait:
1. General Manager (( 5 to 10 years exp)
2. Purchase Manager ( 3 to 5 years exp)
3. Floor Managers ( 2-4 years Experience)
4. Accountants ( 5-8 years Experience-minimum 5 years in Food industry)
5. Marketing Manager (MBA with 2-4 years exp)
6. Sales Men/Ladies ( 2-4 years exp)
7. Cashiers (1-2 years exp)
8. IT professional-(software & Hardware expert)
Good communication skills in English with Arabic knowledge are necessary for
positions 1-6.
Candidates having minimum experience only need to apply. Apply in confidence to
interviewkuwait@gmail.com
within one week. Shortlisted candidates will be called
for an interview in the first week of October.
YK Group International WLL
B5, Safat Tower, Mirqab, Kuwait City, Kuwait
Phone(Tele/Fax:: 22467845
A KSE listed Health care and Fitness oriented company is looking for efficient and
dynamic personale to fill the following positions
1)Accountant (Min 2 years experience)
2)Data Entry
If Interested can email your CV to financerecruit@rocketmail.com

SENIOR COMMERCIAL / TENDERING MANAGER – (SALARY 600KD-700KD)
• Experience of 10-15 years in trading / tendering (not contracting) for Oil/Power
sector with minimum 5 years experience as head of trading division in Gulf
countries.
• Should have proven performance track record in trading (not contracting) /
tenders.
• Must be a team player with commitment to lead and train a team of engineers
and support staff.
• Excellent communication and presentation skills.
• Able to successfully interact with customers and foreign
vendors/suppliers/contractors.
• Able to develop new agencies and ensure approval with customers.
• Able to develop new business lines.
Forward your CV’s to ffb@ffbkuwait.net & ffb_q8@yahoo.com

URGENT VACANCY FOR THE FOLLOWING POST: RETAIL MANAGER – (SALARY
800KD-900KD)
• Required: A Post graduation Degree. Preferably in Business Administration.
• 9 – 10 years of strong Retail experience.
• Excellent customer service skills; ability to anticipate customer needs.
• Excellent communication skills: verbal and written
• Strong computer proficiency: Internet; MSOffice;
• Inventory maintenance, record-keeping (computerized) and purchase order
processing experience
• Should have handled a sizeable team of employees.
Forward your CV’s to ffb@ffbkuwait.net & ffb_q8@yahoo.com

Company Required one female Secretary Indian
With the Knowledge of M-S Office and Internet Browsing.
Fluent English.
Working Time 9.AM to 5.PM. Accepting Visa 20 or 18.
Workforce General Trading And Contracting Est.
IBN Khaldoon St.
Hawally.
Kuwait.
Please send C.V.wf.workforce@gmail.com
Office : 22636433 Mobile : 60091469
Looking for suitable candidates for the following: -
We require the following
1.Merchandiser - with Driving license & Car (Good if you are holding Health Card)
2. Heavy Drivers
3. Sales Representatives (with car for line sales) (Salary + Commission)
2.Office Boy - Arabic and English speaking
3.Labourer - to work in stores.
If you feel you are suitable candidates for above post, forward your CV to, (only
serious candidates and mentioned the post which you are appling for) Email:
atnc_q8@yahoo.com. Tel: 2 4313711/22
A Leading Contracting Company requires immediately the following:
a) HR Assistant
- Bachelors Degree
- Minimum 2-3 years experience in Payroll
- Fluent in English / Arabic
- Transferrable Visa
- Computer literate
b)Administrative Assistant
- Bachelors Degree
- Minimum 2-3 years experience
- Familiar with Residence permits, Medical Insurance and Government relation
formalities
- Bilingual.
- Computer literate
- Transferable visa
c) Female Accountant
- Bachelors Degree in Commerce
- 1-2 years experience in similar filed
- Computer literate
- Transferable visa
- Fluent in English
d) Quality Assurance Coordinator
- Bachelors of Science
- Must have knowledge of ISO, Health & Safety
- Computer Literate
- Transferable Residency
- Fluent in English
e)Engineer
- Bachelors degree in Mechanical/ Electrical engineering
- Minimum 3 years experience in Incineration
- Computer Literate
- Transferable Residency
- Fluent in English
Interested candidates may fax their CV’s to vacancies910@gmail.com

Gulfmart Supermarket :-
Vacancy : Data Entry Operators (male candidates)
Salary Range : 130 to 150 p/m
Visa : Transferable (preferred)
Age : Below 30
Qualification : Graduation / Diploma
appointment : immediate
Please send your CV to careers@gulfmartkuwait.com

LEADING FOOD & BEVERAGE COMPANY IN KUWAIT REQUIRES BEVERAGE
MANAGER AND SALES EXECUTIVES.
* Minimum Two years experience in Food & Beverage.
* Transferable Residence
* Kuwaiti Driving Licence with Car essential.
Interested applicants can send CV to Fax:24763374 or e-mail: horec-hrc-
@hotmail.com

A REPUTED COMPANY IS LOOKING FOR A YOUNG and SMART CUSTOMER CARE
EXECUTIVE (FEMALE)
should be fluent in English and Hindi, having good knowledge of computer
applications, straight shift job, ready to join immediately,
serious candidates can send their CVs to marketings.kuwait@gmail.com

ATLAS Jewellery Current Job Opening | HEALTH CARE DIVISION

ATLAS Jewellery Current Job Opening | HEALTH CARE DIVISION

Specialist in Internal Medicine – Oman

• Able to provide out‐patient and in patient health care to all medical conditions, such as Diabetes,
Hypertension etc
Qualifications:
• MD General Medicine or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist in Internal Medicine Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?

Dermatologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Dermatology
• Ability to give health care as per the formalities of insurance companies and corporate companies
Qualifications:
• MD (Dermatology) or DVD or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Dermatologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist ENT - Oman
• Able to provide surgical and medical treatment of the ears, nose and throat and the related head and neck
areas
• Ability to manage disorders of the upper pharynx and oral cavity, larynx (voice box), ears, nose and nasal
passage, and face and neck
Qualifications:
• MS (ENT)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist ENT Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Female Radiologist - Oman
• Proficient in all type of ultrasound scanning and Doppler studies
• Able to document all care provided and information given to patients within their health record, as per
professional and company standards
Qualifications:
• MD (Radiology) or DMRD or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Female Radiologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist Pediatrician - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation to infants, minors and adolescents
• Ability to counsel and guide patients, their parents and guardians
Qualifications:
• MD (Pediatrics) or DCH or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist Pediatrician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist Orthopedic Surgeon - Oman
• Able to provide medical care by performing physical exams, designing treatment and therapeutic plans
• Ability to treat muscle and skeletal problems including arthritis, congenital deformities or trauma injuries
Qualifications:
• MS (Orthopedics)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist Orthopedic Surgeon Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Obstetrician/Gynecologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Pregnancy Management, Pre Natal care & Labor
• Ability to provide surgical or medical care during child birth
• Ability to handle all Gynec procedures
• Expertise in handling infertility cases is an added advantage
Qualifications:
• MD (Gynecology) or DGO or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Obstetrician/Gynecologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


General Surgeon - Oman
• Able to examine patients and determine if surgery is necessary, evaluate the risks involved and select
appropriate surgical procedure
• Ability to repair injuries, correct deformities, prevent diseases and improve health of patients through
surgery
Qualifications:
• MS (General Surgery)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "General Surgeon Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Diabetologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Diabetes Mellitus, its complications, related
problems including diabetic emergencies
• Work in co‐ordination with other specialists like Cardiologists, Ophthalmologists, Surgeons, Dieticians etc.,
in the interest of the patient Qualifications
Qualifications:
• MD DM or Diploma in Diabetology
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Diabetologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Biomedical Engineer - Oman
• Able to maintain and monitor complex medical systems
• Ability to cooperate and communicate with specialists in other fields
Qualifications:
• BE/BTech (BME)
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Biomedical Engineer Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


General Practitioners - Oman
• Able to handle all medical and surgical emergencies
• Ability to run general outpatient department
• Ability to give health care as per the formalities of insurance companies and corporate clients
Qualifications:
• MBBS
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "General Practitioner Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Anesthetist - Oman
• Able to administer general and regional anesthetics
• Determines anesthetics to be used, records observations while administering such anesthetics
• Coordinates administration of anesthetics with surgeons during operation
• Maintains life support
Qualifications:
• MD (anesthesia) or DA or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Anesthetist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


X-Ray Technician – Oman
• Ability to evaluate the patient’s condition, explain the x‐ray procedures and achieve the most
comprehensive x‐ray view
• Ability to maintain the equipments
Qualifications:
• Plus 2 with Science, DRT or BRT
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "X-Ray Technician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Pharmacist - Oman
• Able to provide information such as drug usage, side effects and correct dosage
• Ability to understand drug composition, chemical and physical properties and conduct tests for purity and
strength
• Must be neat, clean, and orderly and pay the utmost attention to accuracy
Qualifications:
• B Pharm
• Minimum 3 years of experience in India
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Pharmacist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Assistant Pharmacist - Oman
• Duties include dispensing drugs according to prescription, ordering supplies, maintaining patient records
and billing and maintaining inventory
• Ability to receive and screen prescription drug orders for completeness and accuracy
• Knowledge of pharmacy practice and ability to use pharmaceuticals and medical terms, abbreviations and
symbols appropriately
Qualifications:
• D Pharm
• Minimum 3 years of experience in India
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Assistant Pharmacist Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Customer Care Executive - Oman
• Able to handle customer calls, sort out grievances, maintain reports, create and implement ideas for
better customer satisfaction
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in Customer Service
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Customer Care Executive Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


IT Administrator - Oman
• Able to maintain the company’s IT network, servers and security systems in good health.
• Also able to investigate and diagnose network problems, carry out routine configuration and installation of
IT solutions
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in IT
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "IT Administrator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Marketing Executive - Oman
• Able to develop marketing campaigns
• Ability to manage the production of marketing material, look for advertising opportunities and organize
events
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience
• Omani driving license – an added advantage
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Marketing Executive Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Receptionist - Oman
• Good command over English and Hindi
• Good communication skill and pleasing manners
Qualifications:
• Plus 2/Graduate
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Receptionist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Telephone Operator - Oman
• Good command over English and Hindi
• Politeness in communication with customers over phone
Qualifications:
• Plus 2/Graduate
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Telephone Operator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Billing Clerk - Oman
• Responsible for compiling and maintaining records, prepare invoice for services rendered to patients
• Ability to handle follow‐up questions from patients and resolve discrepancies or errors
• Must be highly organized, pay close attention to details, have good analytical skills and be able to work
under pressure
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in the hospital industry
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Billing Clerk Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Insurance Clerk - Oman
• Able to ensure that medical procedures are followed, verify accuracy and completeness of claims forms,
review documents and medical records and co‐ordinate with insurance companies for claims
• Ability to stay on top of constantly changing guidelines in the insurance industry
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in the hospital industry
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Insurance Clerk Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Electrician - Oman
• Multi skilled electrician with good knowledge of maintenance of electrical equipments and ability to fault
diagnose across a broad range.
• Knowledge of plumbing work – an added advantage
Qualifications:
• Diploma in relevant field
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Electrician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Hospital Administrator - Oman
• Plan, direct and coordinate medicine and health services in the hospital
• Mediate among governing boards, medical staff and department heads
• Take care of billing procedures and Insurance Issues
• Successfully intervene and mediate crises and interpret policies and make suitable decisions that positively
impact the care of patients
• Work closely with the human resources department in recruiting and hiring
• Ensuring that human and material resources are correctly utilized
• Gathering, adapting, storing and distributing information within the company using information systems
• Managing quality and cost control
Qualifications:
• 3‐5 years experience in hospital administration
• Experience in Oman preferred but not a must
• Must be fluent in English and Malayalam
• MBBS/MHA preferred
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Hospital Administrator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Accountant - Oman
• Assist in internal auditing and preparing final accounts of the company
• Conduct Internal Audit to prepare Annual Budget and Monthly Management Control Report
• Day to day transactions of Inventory, Cash A/C and Bank A/C, preparing stock register, sales invoices,
weekly and monthly sales reports, statements of accounts of Cash flow and Fund flow
• Compile and analyze financial information to prepare financial reports and entries to accounts like general
ledger accounts, documenting business transactions
• Analyzes financial information detailing assets, liabilities, and capital, and prepares balance sheet, profit
and loss statement, and other reports to summarize current and projected company financial position
• Audit contracts, orders, and vouchers, and prepares reports to substantiate individual transactions prior to
settlement
Qualifications:
• 3 years experience in the hospital industry highly preferred
• Must be fluent in English and Malayalam
• CA/CA ‐ Inter/M.Com/B.Com
• Good knowledge of computer programs in Accounting would be an advantage
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Accountant Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Attender - Oman
• For running errands in the office, hospital and the staff mess area
Qualifications:
• SSLC/Plus 2
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Attender Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Carpenter cum Attender - Oman
• Skilled Carpenter who will also work as attender
• Knowledge of plumbing work an added advantage.
Qualifications:
• SSLC/Plus 2
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.co with the
subject titled exactly "Carpenter cum Attender Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சொல்வனம் : காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி



காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி

எஸ். இராமச்சந்திரன் | இதழ் 35 | 02-10-2010 | அச்சிடு

பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.



கி.பி. 985ஆம் ஆண்டில் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தார். இது அந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதிக்குப் பிறகு நான்கைந்து நாள்களுக்குள் நடந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி கருதுகிறார். தமது சிற்றப்பன் உத்தமசோழன் ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க விரும்பியதால் க்ஷத்திரியர்களின் தர்மத்துக்கு இணங்க அவர் ஆள்வதற்கு வழிவிட்டு இராஜராஜன் விலகி நின்றதாகவும், உத்தம சோழன் ஆட்சிக்காலம் முடிந்தபின்னர்தாம் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டதாகவும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் (சுலோகம் 69-70) குறிப்பிடுகின்றன.1

இராஜராஜனுக்கு க்ஷத்திரிய சிகாமணி என்ற பட்டம் இருந்தது என்பது கல்வெட்டுகளால் தெரியவருகிறது. ஆயினும், இராஜராஜ சோழன் க்ஷத்திரிய தர்மத்துக்கிணங்கப் பதவியை விட்டுக்கொடுத்தார் என்பதெல்லாம் ஆஸ்தானப் புலவர்களின் புகழ்மொழியே தவிர வேறல்ல.

இராஜராஜ சோழன் ஆட்சி முறையில் மட்டுமின்றி, அரசியல் நெறிமுறைகளிலும் சில புதிய போக்குகளை உருவாக்கினார் என்பதில் ஐயமில்லை. அவை க்ஷத்திரிய தர்மப்படியான விட்டுக்கொடுத்தல் என்ற திருவாலங்காடு செப்பேட்டுப் புகழ்மொழிக்கு நேர்மாறான நெறிமுறைகள் என்பதுதான் விசித்திரம். இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

“சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது. இவ்வாறு அடையாளம் காணப்படுவதற்குக் காரணங்கள் இரண்டு:

1. மேற்குறித்த திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயம் இராஜராஜ சோழனின் முதல் வெற்றி தென் திசை நோக்கிய திக்விஜயம் எனக் குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை வென்று கடலினையே அகழியாகக் கொண்டதும் சுடர்விடுகின்ற மதில்களுடன் கூடியதும் வெற்றித் திருவின் உறைவிடமும் எதிரிகளால் புகமுடியாததுமாகிய விழிஞத்தை வென்றார் என்று அப்பட்டயம் குறிப்பிடுகின்றது. விழிஞம், திருவனந்தபுரத்திற்குத் தெற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதியிலுள்ள காந்தளூரை வென்றதுதான் திருவாலங்காட்டுச் செப்பேட்டால் உணர்த்தப்படுகிறது என்பது இத்தகைய பொருள்கோடலுக்கு அடிப்படை.

2. ஆய் வேளிர் ஆட்சிப் பகுதியில், அதாவது குமரி மாவட்ட – கேரள மாநில - எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கல்விச்சாலை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தப் பார்த்திவசேகரபுரம் சாலை என்பது 95 சட்டர்களுக்கு (பிராம்மண மாணவர்களுக்கு) த்ரைராஜ்ஜிய வ்யவஹாரம் (மூவேந்தர் ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகம்) குறித்த கல்வியும், பயிற்சியும் வழங்குகின்ற ஒரு நிறுவனம் (கல்விச் சாலை) ஆகும் என்று ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவசேகரபுரம் செப்பேடு (கி.பி. 866) தெரிவிக்கிறது. இச்செப்பேட்டில் காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக் கொண்டு பார்த்திவசேகரபுரம் சாலை அமைக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. காந்தளூர்ச்சாலை என்பது இராணுவப் பயிற்சி நிலையமும் நிர்வாகப் பயிற்சி நிலையமும் இணைந்த, பிராம்மணர்களுக்குரிய ஒரு முன்னோடியான பயிற்சி நிறுவனமாக இருந்திருக்க வேண்டும். காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு இத்தகைய இராணுவப் பயிற்சி நிலையத்தை இராஜராஜன் வெற்றி கொண்ட வீரச்செயலைக் குறிக்கும் என்பது இவ்வரலாற்று ஆய்வறிஞர்களின் முடிபாகும்.

கலமறுத்து என்பது “சேரர்களின் கப்பல்களை அழித்து, அதாவது சேரர்களின் கடற்படைப் பலத்தைத் தகர்த்து” என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். “வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்று முதல் இராஜாதிராஜனின் (கி.பி. 1018-1054) மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படுவதால் இவ்வாறு பொருள்கொள்வதற்கு உரிய முகாந்திரம் இருக்கிறது.2 கலம் என்ற சொல் கப்பலைக் குறிப்பதற்கு முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையே. (“அலை கடல் நடுவில் பல கலம் செலுத்தி.”) மேற்கண்ட குறிப்புகளிலிருந்து காந்தளூர்ச்சாலை என்பது சேர நாட்டின் கடற்கரையையொட்டி அமைந்திருந்த ஓர் இடம் என்று தெரிகிறது. ஆயினும், இது ஒரு கடற்படைத் தளமாக இருந்திருப்பின் காந்தளூர்ச்சாலை என்ற பெயரினைக் காந்தளூர்த் துறைமுகம் என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கும். இதற்குச் சாத்தியமில்லை.

மேலும், காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக்கொண்டு அமைக்கப்பட்ட பார்த்திவசேகரபுரம் சாலைக்கு வழங்கப்பட்ட அறக்கட்டளைச் செயல்பாடு ‘சாலாபோகம்’ என்றே மேற்குறிப்பிடப்பட்ட செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. இது கல்விச்சாலை - பயிற்சிக்கூடம்தானே தவிர துறைமுகத்துடன் இதற்குத் தொடர்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறது. மேலும், “வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டுகொண்டு அல்லவோ” என்ற கலிங்கத்துப்பரணிப் பாடல் வரிகள் உள்ளன. விழிஞம் என்பது கடற்கரையில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பது இதன்மூலம் புலப்படுத்தப்படினும், இதை வைத்துக் காந்தளூர்ச்சாலை என்ற நிறுவனம் விழிஞத்துக்கு அருகிலிருந்தது என்று பொருள்கொள்ள இயலாது. இவை சோழ மன்னனின் படை வலிமையால் வெற்றி கொள்ளப்பட்டன என்று மட்டுமே பொருள்படும்.

எனினும், இத்தகைய காரணங்களால் பாண்டிய, சேர நாடுகளின் எல்லைப் பகுதியில், திருவனந்தபுரம் அருகில் கடற்கரையில் காந்தளூர்ச்சாலை இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் முடிவுசெய்தனர். இன்றுவரை இக்கருத்தே ஏற்கப்பட்டுள்ளது. கலம் என்ற சொல்லுக்கு உண்கலம், முகத்தல் அளவையில் ஓர் அளவு, படைக்கலம் என்பன போலப் பல பொருள்கள் உண்டு. கலன் என்ற சொல்லுக்கு வில்லங்கம் என்ற ஒரு பொருளும் உண்டு. கி.பி. 1220ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்3 “இவ்வூர்க்கு எப்பேர்ப்பட்ட கலனுமில்லை; கலனுளவாய்த் தோற்றில் நாங்களே தீர்த்துக் கொடுப்போமாகவும்” என்ற வாசகம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டுவரை ஓலைச்சுவடிகளில் எழுதப்படும் நில விற்பனை போன்ற ஆவணங்களில் “இந்த சாசனத்தில் யாதொரு கலனும் இல்லை. கலன் ஏதுமிருப்பின் நானே கலன் தீர்த்துத் தருவேனாகவும்” என்று விற்பனை செய்பவர் எழுதிக் கையொப்பமிடும் வழக்கம் இருந்தது.

கலன் என்ற சொல் கலம் என்பதன் திரிபு (கடைப்போலி) ஆகும். இது கலகம், கலாம் என்ற என்ற சொற்களின் திரிபெனத் தோன்றுகிறது. பூசல், போட்டி என்ற பொருளில் புறநானூற்றில் (69:11) ‘கலாம்’ குறிப்பிடப்படுகிறது. அத்தகைய ஒரு பொருளில் கலமறுத்து என்பது வில்லங்கம் தீர்த்து என்ற பொருளிலோ, எந்த ஒரு வில்லங்கத்துக்கும் இடமில்லாத வகையில் போட்டியில் வென்று என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.4 இராஜராஜ சோழனின் தகப்பன் சுந்தர சோழனின் ஆட்சிக்காலத்தில் வேத சாக்கைகளை ஒப்பித்து விளக்கம் சொல்லிச் சில சட்ட நுணுக்கங்களை மெய்ப்பித்தல் என்பது ‘மெய்க்காட்டுதல்’ என்றும், இத்தகைய போட்டிகளில் வென்று எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் ஒரு வழக்கின் சட்டக்கூறுகளை மெய்ப்பித்தவர் “கலமறுத்து நல்லாரானார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டில் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டக்கூற்றினை மெய்ப்பிக்க வல்ல வேதமறிந்த பிராம்மண மாணவர்களிடையே போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்புகள் செய்யப்பட்டன என்ற செய்தி பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

ஜைமினிகள் சாம வேதத்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்ப்பாதத்து ஒரு துருவும் கரைப்பறிச்சு பட்டம் கடத்துப் பிழையாமே சொன்னார் ஒருகாற் கொண்டார் அல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டினார் எல்லாரும் தம்மில் அஞ்சுபுரியிலும் சொல்லிக் கலமறுத்து நல்லாரானார் ஒருவர்க்கு வ்ருத்தியான இக்காசு மூன்றும் இத்தேவரே குடுப்பாராக5

அப்படியாயின் காந்தளூர்ச்சாலை என்பது பேரரசர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வில்லங்கமாக அமைந்திருந்தது என்றும், அத்தகைய வில்லங்கத்தைத் தீர்த்துப் பேரரச விரிவாக்கத்திற்கு இருந்த தடையை நீக்கிய செயல்பாடு காந்தளூர்ச்சாலை கலமறுத்து என்று குறிப்பிடப்பட்டது என்றும் முடிவு செய்யலாம். கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டுவரை சேர நாட்டில் ஆட்சி செய்த மன்னர்கள் சேரமான் பெருமாள் என்றும், பெருமாக்கோதை என்றும் குறிப்பிடப்பட்டனர்.6 அவர்களுடைய ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற வடக்கன் பாட்டுகள் போன்ற பழங்கதைப் பாடல்களின் மூலம் சேரமான் பெருமாள் பதவி என்பது, பரம்பரையாக வருகின்ற அரச பதவி அன்று என்றும், போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பதவியே என்றும் தெரியவருகின்றன.

மலபார்ப் பகுதியில் (இன்றைய மலைப்புரம் மாவட்டம்) பொன்னாணிக்கு அருகில் அமைந்துள்ள திருநாவாய் என்ற திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறுவது வழக்கம். வியாழன் சிம்மத்தில் இருக்கின்ற ஆண்டில் மாசி மாதம் மக நட்சத்திர நாளில் மகாமகம் திருவிழா நிகழும். ‘மாமாங்ஙம்’ என்று மலையாளத்தில் வழங்கப்படும் இத்திருவிழாவின்போது க்ஷத்திரிய வர்ணத்தவர்களுக்குள் பலவிதமான போட்டிகள் நிகழும். படைக்கலப் பயிற்சி (களரிப் பயிற்சி) தொடர்பான போட்டிகளும், ஆட்சிக் கலை தொடர்பான பலவிதமான நேர்முகத் தேர்வுகளும் நடைபெறும். இப்போட்டிகளுக்கு நடுவராக இருப்பவர் 63 நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் ஆவார். இந்த நாடுவாழிகள் பதவி என்பது ஆண்வழியாக வருகின்ற பரம்பரைப் பதவியே. இத்தகைய நாடுவாழிகள் அனைவரும் க்ஷத்திரிய வர்ணத்தவரே.

திருநாவாய் அமைந்திருந்தது வள்ளுவ நாட்டில்தான். வள்ளுவ நாடாழ்வானின் தலைநகரமாகிய பெருந்தலமன்றம் – வள்ளுவ நகரம் (தற்போதைய பெரிந்தல்மன்னா - அங்காடிபுரம்) வள்ளுவ நாட்டில்தான் உள்ளது. எனவே, சேரமான் பெருமாளைத் தேர்ந்தெடுக்கிற போட்டிகள் நிகழும் இடமாக வள்ளுவ நாடாழ்வான் ஆட்சிப் பகுதியாகிய திருநாவாய் தேர்வு செய்யப்பட்டதன் பொருத்தத்தை நாம் எளிதில் உணர இயலும். திருநாவாயில் இத்தகைய நிகழ்வு நடந்து வந்தமைக்குக் கேரளோல்பத்தியிலும் சான்று உள்ளது.7 பன்னிரு ஆண்டுச் சுழற்சி, வியாழ வட்டம் எனப்படும். கேரள மாநிலக் கல்வெட்டுகளில் வியாழ வட்டம் காலக் குறியீடாகப் பயன்படுத்தப்படுவது மரபாகும். இது சேரமான் பெருமாள் மன்னர்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.

சேர நாட்டில் இத்தகைய ஒரு ஜனநாயக மரபு தென்னிந்திய அரசாட்சி முறை மரபுகளுக்கு மாறாக எவ்வாறு உருவாயிற்று என்பது ஆய்வுக்குரியது. ஆனால், அது குறித்த ஆய்வை மேற்கொள்ளும்முன் அத்தகைய ஒரு மரபில் இராஜராஜ சோழனின் குறுக்கீடு ஏற்பட்ட பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம். திருநாவாய்த் திருத்தலத்திற்கு மிக அருகில் காந்தளூர் என்ற ஊர் உள்ளதென்றும், அவ்வூரில் ஒரு பெரிய கோயில் உள்ளது என்றும், 1830-35ஆம் ஆண்டுக்குரிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி நில அளவைப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.8

இந்தக் காந்தளூரே மேற்குறித்த சாலை அமைந்திருந்த காந்தளூராக இருந்திருக்க வேண்டும். இக்காந்தளூர்ச்சாலையில் போர்ப் பயிற்சியும் நிர்வாகப் பயிற்சியும் பெற்ற மாணாக்கர்கள் க்ஷத்திரிய வர்ணத்தவராகவே இருந்திருக்க வேண்டும்.9 பார்த்திவசேகரபுரம் சாலையைப் போன்று த்ரைராஜ்ஜிய வ்யவஹாரத்துக்குரிய பிராம்மண மாணவர்களுக்குப் பயிற்சியளித்த நிறுவனமாக இது இருந்திராது என நாம் ஊகிக்கலாம். ஏனெனில், திருநாவாயில் நடைபெற்ற போட்டிகளில் க்ஷத்திரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இத்தகைய ஒரு போட்டி நடைபெறுகிற இடமாகத் திருநாவாய் தேர்வு செய்யப்பட்ட காரணம் அல்லது இத்திருத்தலம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நிகழ்கின்ற ஓர் இடமாக முன்னரே உருவாகியிருக்கும் பட்சத்தில் மகாமக விழாவின்போது இங்குப் போட்டிகளை நடத்துவதற்கு நாடுவாழிகள் முடிவுசெய்ததன் காரணம், இவ்வூர் காந்தளூர்ச்சாலைக்கு அருகில் அமைந்திருந்ததால்தான் போலும்.

காந்தளூர் வள்ளுவ நாட்டில் அமைந்திருப்பதும் நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் மேற்குறித்த போட்டிகளுக்கு நடுவராக இருந்த நிகழ்வும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல என நாம் புரிந்துகொள்ள இயலும். காந்தளூர்ச்சாலையில் பயிற்சி பெற்றோர் பிராம்மண வர்ணத்தவராக அன்றி, க்ஷத்திரிய வர்ணத்தவராகவே, அதாவது அரச குலத்தவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகமான குறிப்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்தரையர் குலச் சிற்றரசன் சுவரன் மாறனின் செந்தலை (சந்திர லேகைச் சதுர்வேதி மங்கலம்) பாடல் கல்வெட்டில் உள்ளது.

—வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர்
மண் தோற்ற வேந்தர் மனம்

“வண்டுகளுடைய ரீங்காரம் மேகத்தின் முழக்கம்போல ஒலிக்கின்ற காந்தளூரின் நில உரிமையைப் பறிகொடுத்த வேந்தர்களின் மனம்” என்பது இதன் பொருளாகும். காந்தளூர்ச் சாலை என்பது வேந்தர் குலத்துக்குரியதே என்ற பொருளை இது மறைமுகமாகக் குறிப்பதாகத் தெரிகிறது.10 இது பாண்டியர் – சேரர் கூட்டணியை எதிர்த்துப் பல்லவர்கள் சார்பாக முத்தரையர் குலச் சிற்றரசன் பங்கேற்ற போர் குறித்த பாடல் ஆகும்.

இவ்வாறு போட்டிகளின் மூலம் சேரமான் பெருமாளாக முடிசூடுபவர் தேர்ந்தெடுக்கப்படுகிற நிகழ்வு குறித்துப் பெரியபுராணத்திலும் (வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பா. 132-135) ஒரு வகையான பதிவு உள்ளது. செங்கோற் பொறையன் எனும் அரசனின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அம்மன்னன் துறவு மேற்கொண்டு தவம் செய்யச் சென்றுவிட்டான் என்றும், அமைச்சர்கள் சில நாள் கூடி ஆலோசித்துத் திருவஞ்சைக்களம் கோயிலில் சிவபெருமான் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்த பெருமாக்கோதையாரிடம் சென்று ‘மலை நாட்டுச் செய்தி முறைமை’யால் அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள் என்றும், அதன்படி பெருமாக்கோதையாரும் சிவபெருமானிடம் அனுமதிபெற்று அரசாட்சியை மேற்கொண்டார் என்றும் விவரிக்கப்பட்டுள்ளன.

போட்டிகளின் மூலம் அரசன் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய நேரடியான குறிப்பு ஏதும் பெரியபுராணத்தில் இல்லையென்பது உண்மையே. மலை நாட்டுச் செய்தி முறைமை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசராகப் பதவி ஏற்கும் முன்னர், போட்டியிடுவதற்குத் தகுதி பெற்றவர்கள் கோயிலதிகாரி எனப்படும் பதவியை வகித்தனர் என்பதற்கும் சேர நாட்டு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. கோயிலதிகாரி என்ற பதவி இளவரசர் பதவிக்குச் சமமானது என்றே கேரள வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுவர். சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களத்தில் சிவபிரான் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்ததாகப் பெரியபுராணம் கூறுவதை இத்தகைய கோயிலதிகாரி பற்றிய குறிப்பாகவே நாம் கொள்ளலாம்.11 இச்சேரமான் பெருமாள் நாயனாரின் ஆட்சிக்காலம், காடவர் கோன் கழற்சிங்கன் எனப்பட்ட இராஜசிம்ம பல்லவன் ஆட்சிக் காலமான கி.பி. 730க்கும் கி.பி. 765க்கும் இடைப்பட்ட 12 ஆண்டுக் காலமாக இருக்க வேண்டும்.

வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வாரும் (கி.பி. 800) இவ்வாறு பதவிக்கு வந்தவரே. தமது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அவர் துறவு மேற்கொண்டு திருமால் வழிபாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்து கொண்டதாக அறிய முடிகிறது. சேர (பெருமாள்) மன்னர்கள் இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தார்கள்; பதவிக் காலத்தின்போதும் அவர்கள் தமக்கென்று தனி உடைமை ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு துறவியைப் போலவே ஆட்சி நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் மாதவாச்சாரியாரின் ‘சம்க்ஷேப சங்கரக்யம்’ என்று குறிப்பிடப்படுகிற சங்கர திக்விஜயம், ஆனந்தகிரியின் சங்கரவிஜயம் ஆகியவற்றின் அடிப்படையில் சதாசிவ பிரம்மேந்திரர் (கி.பி. 16-17ஆம் நூற்றாண்டு) எழுதிய “ஜகத்குரு ரத்னமாலா” என்ற நூலில் உள்ளது. ஆதி சங்கரர் காலடியில் பிறந்தபோது கேரள ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் ராஜசேகரன் என்றும், அவன் ஆசார்யன் என்றும் யாயாவரனாக இருந்தான் என்றும் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன12.

ஆசார்யன் என்பது பிறருக்குப் போர்க் கலை, நிர்வாகக் கலை ஆகியவற்றைப் போதிக்கின்ற ஆசிரியன் என்று பொருள்படும். வியாழ வட்டக் காலக்கணக்கீட்டின்படி 12 ஆண்டுகளே ஆட்சிபுரிகின்ற அரசன் வியாழனின் (குரு) இயல்புடையவனாகத்தானே இருப்பான்? யாயாவரன் என்பது தனக்கென ஓர் உடைமையும் வைத்துக்கொள்ளாமல் சுற்றித் திரிகின்ற ஓர் ஆன்மீகவாதியைக் குறிக்கும். அத்தகைய யாயாவரன் ஓர் இல்லறத்தானாக இருக்கும்பட்சத்தில் தன் குடும்பத்திற்குரிய ஒரு வேளை உணவுக்கான பொருளை மட்டுமே சேமிக்கலாம். இல்லறத்தானாக இன்றித் தனிமனிதனாக இருக்கும்பட்சத்தில் அடுத்தவேளை உணவுக்காகக்கூட ஒரு சிறு நெல்மணியையும் சேமிக்க அனுமதிக்கப்பட மாட்டான்.13 இவ்வாறு ராஜரிஷி போன்று எவ்வித உடைமைமீதும் பற்றின்றி ஓர் ஆட்சியாளன் இருப்பது என்பது சோழ பாண்டிய நாடுகளில் நடைமுறையில் இல்லை. சேர நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் இருந்தது.

இத்தகைய நடைமுறை ஒரு பேரரசை நிறுவித் தனக்குப்பின் தனது சந்ததியினர் மட்டுமே தொடர்ந்து பேரரசர்களாக உலகாள வேண்டும் என்று விழைகின்ற தன்முனைப்பும் அதிகார வேட்கையும் படைத்த ஒரு மாமன்னனுக்கு இடையூறாகவே இருந்திருக்கும் என்பதும், அத்தகைய இடையூற்றினை முழுமையாக நீக்கினால் மட்டுமே அம்மன்னன் தன் குறிக்கோளை எய்த முடியும் என்பதும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய அடிப்படை உண்மைகளாகும். இத்தகைய நடைமுறைக்கு அடிப்படையாக இருந்த ஒரு கல்வி நிறுவனத்தைத் தம் படைபலத்தால் கைப்பற்றுவது, அல்லது அந்நிறுவனத்தையே மூடுவது போன்ற ஒரு வீரச்செயலை இராஜராஜன் புரிந்துள்ளார். இதனையே தம் முதன்மையான வெற்றியாக அவர் பறைசாற்றியுள்ளார்.

“கலமறுத்து நல்லாரானார்” என்ற கோயில் தேவராயன்பேட்டைக் கல்வெட்டு வாசகத்தைக் “காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்ற வாசகத்துடன் ஒப்பிட்டு இராஜராஜன் காந்தளூரில் இத்தகைய ஒரு போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார் எனப் பொருள்கொள்வதற்கும் சாத்தியமுண்டு என்றும், ஆயினும் இராஜராஜ சோழனின் வெற்றி படைபலத்தால் பெற்ற வெற்றி என்பதால் அது இத்தகைய போட்டியைக் குறித்திருக்க வாய்ப்பிலை என்றும் அறிஞர் தி.நா. சுப்பிரமணியம் கருதியுள்ளார்.14

கலமறுத்தல் என்பது வில்லங்கம் தீர்த்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதற்கு வேறு ஓர் எடுத்துக்காட்டும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைக்குளம் என்ற ஓர் ஊர் உள்ளது. இவ்வூரைப் பற்றிய ஒரு குறிப்பு திருநந்திக்கரையிலுள்ள கி.பி. 8ஆம் நூற்றாண்டைய கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. “திருநந்திக்கரைப் பெருமக்களும் தளி ஆள்வானும் குருந்தம்பாக்கத்துக்கூடி தலைக்குளத்து கலமற்ற யாண்டு ஸ்ரீநந்திமங்கலம் என்று பேரும் செய்து நம்பி கணபதிக்குக் குடுத்தோம்”15 என்ற குறிப்பு காணப்படுகிறது. தலைக்குளம் ஊரின் நிலவுடைமை முதலான அதிகாரங்கள் குறித்த வில்லங்கங்கள் இருந்துள்ளன என்றும், அவ்வில்லங்கங்கள் தீர்த்துவைக்கப்பட்ட நிகழ்வினை முதன்மையான நிகழ்வாகக் கருதிக் கலமற்ற யாண்டு என்று காலக்கணக்கீடு செய்யப்பட்டது என்றும் தெரியவருகின்றன.

இராஜராஜ சோழனுக்கு முன்னரே பாண்டிய நாடு சோழர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. அமரபுயங்கன் என்ற பாண்டிய மன்னன் மீண்டும் சுயாட்சி அடைய முயன்றபோது அவனை இராஜராஜன் வெற்றிகொண்டு பாண்டிய அரசுரிமையையும் தாமே மேற்கொண்டார். அப்போரில் அவர் விழிஞம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார் என்ற செய்தி இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு பெற்றிருப்பதாலும் இராஜராஜன் தமது முதன்மையான எதிரியாகப் பாண்டிய மன்னர்களையே கருதினார் என்பது “செழியரைத் தேசுகொள் கோ ராஜகேசரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவன்” என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொள்வதாலும், பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துப் பெற்ற வெற்றியே இராஜராஜனின் முதன்மையான வெற்றி என்றும், இப்போரின்போது சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை விழிஞத்தில் எதிர்கொண்டு முறியடித்திருக்கலாம் என்றும் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

இது ஏற்புடைய கருத்து ஆகாது. ஏனெனில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் விழிஞம் கைப்பற்றப்பட்டு விட்டது. அதன் பின்னர், சேரமானார் படை விழிஞத்தைக் கைப்பற்ற முயன்றபோது பாண்டியர்களால் விழிஞம் மீட்கப்பட்டுவிட்டது. இதுகுறித்த நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.16 கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆய் மன்னன் விக்கிரமாதித்த வரகுணன் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு கி.பி. 926ஆம் ஆண்டளவில் சேர மன்னன் கோதை ரவிவர்மன் விழிஞத்தைக் கைப்பற்றினான் என்பதும், முதற் பராந்தக சோழனின் பட்டத்தரசி முக்கோக் கிழானடிகள் சேர அரச குலத்தவன் என்பதும் உண்மையாக இருப்பினும், கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் விழிஞம் பாண்டியர்களால் மீட்கப்பட்டு விட்டது.17 எனவே, கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பாண்டியர்களுடைய ஆட்சிப் பகுதியாகவே விழிஞம் இருந்திருக்கிறது என்பது உறுதியான ஓர் உண்மையாகும்.

அடுத்து, பாஸ்கர ரவிவர்மன் இராஜராஜ சோழனின் சமகாலச் சேர அரசன் என்பது உண்மையே ஆயினும், அவனுடைய ஆட்சிப் பகுதியின் தென்னெல்லை, கோட்டயம் - அருகிலுள்ள பத்தனந்திட்டா – திருக்கடித்தானமே என்பதால், விழிஞமும் திருவனந்தபுரமும் பாஸ்கர ரவிவர்மன் திருவடியின் ஆட்சியில் அடங்கவில்லை என்பதை நாம் உய்த்துணர முடியும். எனவே, காந்தளூர்ச்சாலை விழிஞத்துக்கு அருகிலிருந்ததென்ற முன்முடிவின் அடிப்படையில் இராஜராஜனின் பாண்டிய நாட்டுப் படையெடுப்புடன் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வினை இணைப்பது பொருத்தமன்று. திருவாலங்காட்டுச் செப்பேடு இராஜராஜனின் சமகாலத்து ஆவணப் பதிவு அன்று என்பதையும் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகள் மட்டுமே சமகாலப் பதிவுகள் என்பதையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம். பாண்டிய நாட்டில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் அவருடைய 8ஆம் ஆட்சியாண்டுக்குப் பிறகே கிடைக்கின்றன என்பதும், காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு 4ஆம் ஆட்சியாண்டிலிருந்தே கல்வெட்டுகளில் பதிவுபெறத் தொடங்கிவிட்டது என்பதும் கவனத்துக்குரியன.

சோழர்கள் முன்னரே பாண்டிய நாட்டை வெற்றிகொண்டு விட்டதன் விளைவாகச் செழியர்களின் தேசு (ஒளி) முன்னரே குன்றிவிட்டது. சோழர்களும் இராஜராஜனுக்கு முன்னரே இருமுடிச் சோழர்களாக உருவாகிவிட்டார்கள். காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகு இராஜராஜ சோழன் மூவேந்தர்களின் முடியையும் தரித்தவர் என்ற பொருளில் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனையத் தொடங்கிவிட்டார். எனவே, சேர நாட்டு அரசியல் நடைமுறைகளை மாற்றி அமைத்த நிகழ்வுதான் இராஜராஜன் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனைவதற்கான முகாந்திரத்தை உருவாக்கித்தந்தது எனலாம்.

இராஜராஜனுடைய சேர நாட்டுப் படையெடுப்பு பற்றிய ஒரு சமகாலப் பதிவு திருக்கோவலூர் (“ஜெய ஜெயவென்று மொழி” என்று தொடங்கும்) பாடல் கல்வெட்டில்18 இடம்பெறுகிறது. “உதைகை முன் ஒள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு” என்பன அவ்வரிகள் ஆகும். உதைகை வேந்து என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவன் சேர அரசனே ஆவான். உதியன் நகர் என்பது உதியை, உதகை, உதைகை என வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது, மாக்கோதை நகர் என்பது மகோதை, மகோதகை, உதகை எனத் திரிந்திருக்கலாம். இவ்வூர், குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி எனச் சிலரால் கருதப்படுகிறது. உதகை வெற்றிக்குப் பிறகு சேரநாட்டில் தம்முடைய பிறந்த நாளாகிய சதய நட்சத்திர நாள்தோறும் விழாக் கொண்டாடப்படுவதற்கு இராஜராஜன் ஏற்பாடு செய்தார் என்றும் தெரியவருகிறது. முதற்குலோத்துங்கன் காலத்து இலக்கியமாகிய கலிங்கத்துப்பரணியில் (தாழிசை 20) இச்செயல் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

சதய நாள் விழா உதியர் மண்டிலம்
தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதயபானு வொத்துதகை வென்றகோன்

குலோத்துங்கனின் மகனான விக்கிரமசோழனின் புகழைப் பாடும் ஒட்டக்கூத்தரின் விக்கிரமசோழன் உலா (32-34) இராஜராஜனின் சேர நாட்டு வெற்றியைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

—தூதர்க்காப்
பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோன்

விக்கிரம சோழனின் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழனின்மீது இயற்றப்பட்ட குலோத்துங்க சோழன் உலா (46-48)

—சூழவும்
ஏறிப்பகலொன்றில் எச்சுரமும் போயுதகை
நூறித் தன் தூதனை நோக்கினான்

- என்று இவ்வீரச் செயலைக் குறிப்பிடுகிறது.

இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட இராசராசன் உலா (40-42) முதல் இராஜராஜனுக்குரிய இதே வீரச்செயலைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

—சூழி
மதகயத்தாலீரொன்பது சுரமு மட்டித்து
உதகையைத் தீயுய்த்த உரவோன்

உதைகை வேந்து எனத் திருக்கோவலூர்ப் பாடல் கல்வெட்டில் குறிப்பிடப்படுபவன் பாஸ்கர ரவிவர்மனாகவே இருக்க வேண்டும். அவனது தலைநகரான கொடுங்கோளூரை (திருவஞ்சைக்களம்) மகோதகை எனக் குறிப்பிடுவதுண்டு. எனவே, இராஜராஜன் ஒள்ளெரி கொளுவிய உதகை, கொடுங்கோளூரே எனத் தெரிகிறது.19 மேலும், பதினெட்டு காடுகளைக் கைப்பற்றிச் சேர நாட்டை இராஜராஜன் தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்த நிகழ்வு என்பது, கொங்கு நாட்டு வழியாகச் சென்று – பாலைக்காட்டுக் கணவாய் ஊடாகச் – சேர நாட்டிற்குள் புகுந்து திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) வழியாகவோ, பரதப்புழை ஆற்றங்கரையிலுள்ள திருநாவாய் வழியாகவோ திக்விஜயம் செய்து பெற்ற வெற்றியாகவோ இருக்க இயலும்.

காந்தளூர்ச்சாலை கலமறுத்து இராஜராஜ சோழன் மும்முடிச் சோழனாக முடிசூடிய பின்னரும், காந்தளூர்ச்சாலைப் பயிற்சிக்கூடம் மூடப்பட்டு விடவில்லை. திருநாவாய்த் திருத்தலத்தில் நிகழ்ந்துவந்த மகாமக விழாவையும் அவ்விழாவின்போது நிகழ்ந்த போட்டிகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவந்துள்ளன எனத் தெரிகிறது. அதே வேளையில், சேர நாட்டு அரசியலில் நம்பி திருப்பாத (நம்பூதிரி) பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்குவதையும் அவதானிக்க முடிகிறது.

இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் “திருமன்னி வளர” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில் 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்த புராண புருஷனாகிய பரசுராமன், சாந்திமத் தீவில் பாதுகாப்பாக ஒளித்துவைத்த கிரீடத்தினை இராஜேந்திர சோழன் கவர்ந்துவந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.20 மட்டுமின்றி, இராஜேந்திர சோழனின் புதுவை - திருவாண்டார் கோயில் கல்வெட்டின் மெய்க்கீர்த்திப் பகுதியில் “தண்டாற் சாலை கலமறுத்த கோப்பர கேசரி வர்மரான ஸ்ரீராஜேந்திர சோழ தேவன்” என்ற வரி இடம்பெற்றுள்ளது.21 இராஜேந்திர சோழனின் மகனான முதல் இராஜாதிராஜனின் ‘திங்களேர்தரு’ எனத்தொடங்கும் மெய்க்கீர்த்தியில் பின்வரும் வரிகள் இடம்பெற்றுள்ளன:

வேணாட்டரசைச் சேணாட்டொதுக்கிந்
கூவகத்தரசைச் சேவகந் துலைத்து
மேவு புகழிராம குட மூவர் கெட முனிந்து
மிடல் கெழுவில்லவன் குடர் மடிக் கொண்டுதன்
நாடு விட்டோடிக் காடு புக்கொளிப்ப
வஞ்சியம் புதுமலர் மிசைந்தாங் கெஞ்சலில்
வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து

“வேணாட்டு அரசனை வானுலகத்துக்கு அனுப்பி, கூபக அரசனின் வீரத்தையழித்து, மூஷிக குல ராமகுட மூவரை வீழ்த்தி, சேரனைக் காட்டுக்குத் துரத்தி, திருவஞ்சைக் களத்தில் வஞ்சி மாலை சூடி, கடற்கரையில் அமைந்துள்ள காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்பது இவ்வரிகள் உணர்த்தும் பொருளாகும். மூஷிக வம்சம் குறித்து ‘மூஷிக வம்ச காவியம்’ என்ற சமஸ்கிருத நூல் ஒன்று உள்ளது. மூஷிக வம்சத்தவரின் தனி ஆட்சி சேர நாட்டின் வட நாட்டில் தொடங்கிவிட்டது, ஆய்வேள் ஆட்சிப் பகுதியில் வேணாட்டு அரச வம்சம் ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டது என்றும் தெரிய வருகிறது.

இத்தகைய அரச வம்சங்களின் ஆட்சி என்பது, பரம்பரை ஆட்சி முறையே என்பதும், 12-13ஆம் நூற்றாண்டுகளில் இவ்வரசுகள் நம்பி திருப்பாத பிராம்மணர்களுடன் சம்பந்த உறவுகொண்ட மருமக்கள் தாய சாமந்த அரசுகளாக உருவாகத் தொடங்கிவிட்டன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இராஜாதிராஜனுக்குப் பிறகு, கி.பி. 1070ஆம் ஆண்டில் பதவியேற்ற முதல் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலும் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வும், சேர நாட்டுப் படையெடுப்பும் நிகழ்ந்துள்ளன. கலிங்கத்துப்பரணி (தாழிசை 370)

வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண்டல்லவோ

எனக் குறிப்பிடுவதை முன்னரே கண்டோம். முதற் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழனின்மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ‘விக்கிரம சோழன் உலா’ (கண்ணி 24) குலோத்துங்கனின் இவ்வீரச்செயல் பற்றி

சேலைத் துரந்து சிலையைத் தடிந்திருகால்
சாலைக் கலமறுத்த தண்டினான்

எனக் குறிப்பிடுகிறது. குலோத்துங்க சோழனால் மகோதைப் பட்டினம் (கொடுங்கோளூர் – திருவஞ்சைக்களம்) அழிக்கப்பட்டதாகவும், அப்போதைய சேர அரசர் ராமவர்மன் குலசேகர ராஜா தனது தலைநகரைக் காக்க முடியாததால், கொல்லத்தைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் என்றும் கருதப்படுகின்றன. சில அறிஞர்கள் இவனையே வேணாட்டு அரசர்களின் மூதாதை எனக் கருதுகின்றனர். இப்படையெடுப்பில் குலோத்துங்க சோழனின் சார்பில் பங்கேற்றவன் பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியன் ஆகலாம்.22 இம்மன்னன் குலோத்துங்கனின் தென்கலிங்கப் படையெடுப்பில் முதன்மையான பங்கேற்றதாகத் தெரிகிறது. தென்கலிங்கப் போரில் தெலுங்குச் சோழ அரசனாகிய பீமன் என்பவனுடைய ஸ்ரீகாகுளத்தைக் கைப்பற்றித் தென் கலிங்கத்தை வென்றதாக இம்மன்னன் குறிப்பிட்டுக்கொள்கிறான்.

இம்மன்னனுடைய “திருவளரச் செயம் வளர” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில் “தெலிங்க வீமன் குளம் கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத் திசையனைத்தும் உடனாண்ட ஸ்ரீபராந்தக தேவன்” என்ற குறிப்புள்ளது. இம்மெய்க்கீர்த்தியில் “சேரலனைச் செருவில் வென்று திறைகொண்டு வாகை சூடிக் கூபகர்கோன் மகட்குடுப்பக் குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.23 காந்தளூர்ச்சாலை கலமறுத்தது பற்றிய கடைசிக் குறிப்பு இதுவே எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிச் சற்றொப்ப ஒரு நூற்றாண்டு காலம் சோழர்கள் காந்தளூர்ச்சாலையைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். கேரள வரலாற்று அறிஞர்கள் இதனை “நூற்றாண்டுப் போர்” என்றே குறிப்பிடுவர்.

இந்நூற்றாண்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிற காலகட்டத்திலேயே பார்த்திவசேகரபுரம் (சாலை அமைந்துள்ள ஊர்) திருமால் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதல் இராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்றில் “காரித்துறைக் கேரளன் ஆதிச்ச வன்மனாயின ராஜாதிராஜ வள்ளுவ நாடாழ்வான்” என்ற ஓர் அதிகாரி குறிப்பிடப்படுகிறான். மலைப்புரம் மாவட்ட வள்ளுவ நாட்டுப் பகுதியிலிருந்து பூர்விக அரச குலத்தவர் பலர் சோழர்கள் ஆதரவுடன் தென்குமரிப் பகுதியில் குடியேறத் தொடங்கிவிட்டதை இத்தகைய குறிப்புகள் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.24 சேர நாட்டின் வட பகுதியிலிருந்து ஆய்வேள் நாட்டினை நோக்கிய குடியேற்றங்கள் காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக் கொண்டு, பார்த்திவசேகரபுரம் சாலை உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும்.

நிர்வாகச் சீரமைப்பு தொடர்பான இத்தகைய முயற்சிகளும், குடியேற்றங்களும், ஊர்ப்பெயர் சூட்டல்களும் புதுமையானவை அல்ல. ஆயினும், சேரர் குல க்ஷத்திரிய வர்ணத்தவர்களின் குடியேற்றம் என்ற அளவில் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகே பெருமளவு குடியேற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் வள்ளுவ நாடாள்வான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு முதன்மையான குடும்பத்தினைத் திருச்செந்தூர்ப் பகுதியிலுள்ள தென்றன்கரைப் புரவரி நல்லூர் (தென்புரையூர்) – மணத்திப் பகுதியில் குடியேற்றினர். சேர நாட்டு நில வருவாய் நிர்வாக அமைப்பாகிய தேசம் என்ற பெயரை மணத்திப் பகுதிக்குச் சூட்டினர். “வள்ளுவ நாடாழ்வான் தேசமாய இம்மணத்தி” என்றே கி.பி. 1245ஆம் ஆண்டுக்குரிய மணத்தி – குட்டித்தோட்டம் இடையாற்றீஸ்வரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வடகேரள வள்ளுவ நாட்டை ஒட்டியமைந்துள்ள கண்ணனூரைச் சேர்ந்த வீரமழகிய பாண்டிய தேவன் என்பவர் இப்பகுதியின் வள்ளுவ நாடாள்வான் தேசத்திற்கு ஸ்ரீகாரியமாக (செயலராக) இருந்துள்ளார்.25

இப்போது சேர நாட்டு க்ஷத்திரியர்கள் பற்றி ஆராய்வோம். பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சேர நாட்டில் நான்கு வர்ணத்தவர்கள் நிர்வாகத்தில் நான்கு சபைகள் இருந்தன. இரிஞ்ஞாலக்குடா சபை பிராம்மணர்களாலும், மூழிக்களம் சபை க்ஷத்திரியர்களாலும், பரவூர் சபை வைசியர்களாலும், அயிராணிக்களம் சபை சூத்திரர்களாலும் நிர்வகிக்கப்பட்டன. க்ஷத்திரிய வர்ணத்தவருக்குரிய சபை 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய திருமூழிக்களத்தினைத் தலைமையகமாகக் கொண்டதாகும்.26 திருமூழிக்களம் சபையை நிர்வகித்த க்ஷத்திரியர்கள் “மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றார்” என்று குறிப்பிடப்படுகின்றனர். சேர நாடு முழுமையிலும் கோயில்கள் அனைத்தையும் இவர்கள் வகுத்த நடைமுறைப்படிதான் நிர்வகித்து வந்தனர். இக்கச்சம் மூழிக்களக்கச்சம் எனப்பட்டது.

அதாவது, இச்சான்றார்கள் (நாடார் எனத் தற்போது அழைக்கப்படும் சாதியார்) மூழிக்களம் என்ற ஊர்ப்பெயரால் குறிப்பிடப்பட்டாலும் சேர நாடு முழுமையும் பரவியிருந்தனர். இவர்கள் ஒழுக்கவிச் சான்றார்கள் எனக் குறிப்பிடப்படக் காரணமே கோயில்களின் ஒழுக்கு அவி (நடைமுறை ஒழுங்கும் நிவேதனமும்) தொடர்பான இவர்களுடைய அதிகாரத்தால்தான். தமக்கென உடைமைகள் ஏதுமின்றி இவர்கள் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். பிச்சை என்பது புத்த பிட்சுக்களின் பிக்ஷை போன்று மிகவும் மரியாதையுடன் அளிக்கப்படுவதாகும். மூழிக்களத்துச் சான்றார் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இல்லறத்தார் வீட்டில் பிச்சை ஏற்கச் சென்றால் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாதபூஜை செய்து உணவளித்து அனுப்புவர். வீட்டிற்கு உரியோர் அழைத்தும் சான்றார்கள் அவர்கள் வீட்டில் பிச்சை ஏற்கச் செல்லவில்லை என்றால் அது அந்த இல்லத்தார்க்கு வழங்கப்படும் தண்டனையாகக் கருதப்படும். எனவே, மூழிக்களத்துக் கச்சத்தை சேர நாட்டுக் கோயில் நிர்வாக அமைப்பு சார்ந்தோர் யாரும் மீறுவதில்லை. இவ்விவரம் சேர நாட்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

இக்கச்சம் பிழைச்சார் மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றாரைப் பிழைச்சோருள் படுவது. இக்கச்சம் பிழைச்சார் இல்லத்துப் பிச்சை புகப் பெறார்.27

பெருமாக்கோதை மன்னர்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் சம காலத்துச் சேர அரசனாகிய இராஜசேகரன் யாயாவரன் என்று குறிப்பிடப்படுவதைக் கண்டோம். இத்தகைய யாயாவரர்களுக்குரிய ஒழுக்கத்தினையே முழிக்களத்துச் சான்றார்கள் பின்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. தர்ம சாஸ்திர நூல்கள் இல்லறத்தாரில் சாலின், யாயாவரன் என்ற இரு வகையினரைக் குறிப்பிடுகின்றன. இவர்களுள் யாயாவரன் ஆசார்யனாக இருக்கும்பட்சத்தில் தான் அளிக்கின்ற கல்விக்கோ, பயிற்சிக்கோ தட்சிணையாகக்கூட எதையும் பெறக்கூடாது என்பது விதியாகும்.28 சேர நாட்டுச் க்ஷத்திரிய சான்றோர்களும், பெருமாக்கோதையாகத் தேர்வு பெறுகின்ற மன்னர்களும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் உடைமையில் பற்றின்றி எத்தகைய தியாக வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கு இவை சான்றுகளாகும்.

ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்த இராஜசேகரன், ஆசார்யன் அல்லது குரு என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறான். இம்மன்னன் ஆதி சங்கரருக்குக் களரிப் பயிற்சி, வர்மக் கலை போன்றவற்றைக் கற்பித்துள்ளான் என நாம் ஊகித்துப் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய போர்க்கலைப் பயிற்சிகள் புத்த பிட்சுக்களால் பயிலப்பட்டு வந்தன என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றோர் மரபும் - அது பாகவத வைணவ மரபாகவே இருப்பினும் - புத்த சமயத்தால் தாக்கம் பெற்ற ஒரு மரபாகவே இருக்க முடியும். ஆதி சங்கரர், புத்த சமய மரபுகள் பலவற்றை வேதாந்த மரபுக்குள் புகுத்தியவர் என்ற பொருளில் அவரை வைதிக வேடமிட்ட (பிரசன்ன) பௌத்தர் என்றே விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் இராமானுஜர் குறிப்பிடுகிறார்.

ஆதி சங்கரர் இராஜசேகரனிடம் பயிற்சி பெற்றார் என்பதற்குப் பிற்காலச் சமூக வரலாற்று ஆவணப் பதிவு ஒன்று ஆதாரமாக அமைகிறது. சேலம் திருச்செங்கோடு அருகிலுள்ள கருமாபுரம் என்ற ஊரிலுள்ள சான்றோர் (நாடாள்வார் அல்லது நாடார்) சமூக மடம் ஒன்று ஆதி சைவ சிவாச்சாரியார் ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்பிரமணிய பண்டித குருசுவாமியின் தலைமையில் இயங்குகிறது. அம்மடத்திற்குரிய செப்பேடு கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் கூடியதாகும். சான்றோர் சாதியினரின் பாரம்பரியப் பெருமையைப் பட்டியலிடும் அப்பட்டயம் “மன்னர்க்கு மன்னனாம் சங்கராச்சாரியாருக்கு தயவுடன் உபதேசம் தானருளிச் செய்தவன்” என்று சான்றோர் குல மூதாதை ஒருவனைப் புகழ்கிறது.29 இம்மூதாதை சேர நாட்டுச் சான்றோனாகிய இராஜசேகரன்தான் என்பதை நாம் எளிதில் உய்த்துணர முடியும்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கேரளச் சத்திரியர்கள் பலர் குடிபெயர்ந்து சென்று, தங்களுடைய போர்க்கலை அறிவு, நிர்வாக அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பாண்டிய நாட்டு ஆட்சியமைப்பில் இடம்பிடித்தனர். ‘மூழிக்களத்துச் சான்றார்’ என்பதை ‘விழிச் சான்றார்’ என்பதன் திரிபாகிய ‘முழிச் சான்றார்’ என்று பொருள்கொண்டதன் விளைவாகவோ, இயல்பாகவே சமூகத்தின் அத்யக்ஷர் அல்லது ‘முதுகண்’ணாக இருந்தோர் என்ற பொருளிலோ, சான்று என்ற தமிழ்ச் சொல் சாக்ஷி (ச+அக்ஷி = கண்ணால் கண்ட சான்று) என வடமொழியில் குறிப்பிடப்படுவதையொட்டிச் சான்றார் குலத்து நாயன்மாரான ஏனாதிநாதரை ‘சாக்ஷி குலோத்பவர்’ என உபமன்யு பக்தவிலாசம் என்ற சமஸ்கிருத நூல் குறிப்பிடுவதை அடியொற்றியோ, ‘கேரளி மிழிச்சானார்’ என்றே தம்மைச் சிலர் குறிப்பிட்டுக்கொண்டதையும் காண முடிகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் வட்டம் ஓணான்குடி எனும் ஊரில் கூலவிராகுக்கொல்லை என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பலகைக் கல்லில் “கேரள மிழிச்சானான் தென்னவதரையன் ஆசிரியம் சுபமஸ்து” என்று கி.பி. 14ஆம் நூற்றாண்டைய எழுத்தமைதியுடன்கூடிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1311இல் நிகழ்ந்த மாலிக்காபூர் படையெடுப்புக்குப்பின் நிலை குலைந்துபோன தமிழகத்தில், போர்த் திறமையும் மக்களைப் பாதுகாத்து சுயாட்சி நடத்தும் அனுபவமும் படைத்த சிலர், தமது ஆசிரியத்தில் (பாதுகாப்பில்) சில பகுதிகளைப் பிடித்து ஆண்டுள்ளனர். தென்னவதரையன் என்ற பெயருடைய கேரளச் சத்திரியனான இம்மனிதன் ஓணன்காரிக்குடிப் (ஓணான்குடி) பகுதியைச் சில காலம் ஆண்டுள்ளான் என இக்கல்வெட்டால் புலனாகிறது.

நூற்றாண்டுப் போருக்குப் பிறகு காந்தளூரின் நிலைமை என்னவாயிற்று என்பதைப் பார்ப்போம். புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் எல்லைப் பகுதியில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுந்தர பாண்டியன் பட்டினம் என்ற ஊரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் “மலை மண்டலத்துக் காந்தளூரான எறிவீர பட்டினத்து ராமன் திரிவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண் பூமிச் சமயச் சக்கரவர்த்திகள்” என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.30 காந்தளூர் வணிகர்களின் ஆதிக்கத்திலும் வணிகர் பாதுகாப்புப் படையான எறிவீரர்கள் பாதுகாப்பிலும் நிர்வகிக்கப்பட்ட ஒரு கடற்கரைப் பட்டினமாக உருவாகிவிட்டது என்பது இதனால் தெரியவருகிறது.

இதன் பின்னர், அப்பகுதியில் மாப்பிள்ளைமார் எனப்படும் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் உருவாகி வேரூன்றத் தொடங்கியது. சமூக அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும் க்ஷத்திரியச் சான்றோர்களின் பங்களிப்பு குறித்த சுவடுகள்கூட இதற்குப்பின் இல்லாமல் போய்விடுகின்றன. நம்பி திருப்பாத பிராம்மணர்கள், அவர்களுடன் சம்பந்த உறவு கொண்ட மறக்குல அகம்படியர்களான நாயர்கள் ஆகியோரின் நிர்வாகத்தில் அனைத்துக் கோயில்களும் செயல்படத் தொடங்குகின்றன. கி.பி. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை இந்நிலையே தொடர்கிறது. கி.பி. 1780க்குப் பின் நிகழ்ந்த திப்பு சுல்தானின் படையெடுப்பின் விளைவாக வள்ளுவக் கோன் திருப்பாதம் அரண்மனை இடிக்கப்பட்டது. வள்ளுவக் கோனாத்ரி திருவிதாங்கோடு இராஜ்யத்திற்குத் தப்பியோடியது, பேரளவில் நிகழ்ந்த இஸ்லாமிய மதமாற்றங்கள் ஆகியவற்றையும் மீறி, கோயில் நிர்வாகம் இயங்கிவந்தது.

1857ஆம் ஆண்டில் நிகழ்ந்த சிப்பாய்கள் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரம் போராட்டத்திற்குப் பிறகு, ஆங்கிலேய அரசு இந்தியர்களின் மதம் மற்றும் வழிபாடுகள் தொடர்பான நடைமுறைகளில் தலையிடுவதில்லை என வெளிப்படையாக அறிவித்ததன் விளைவாக, மாப்பிள்ளைமார் இஸ்லாமியர்களின் சுயாட்சி முயற்சிகள் தீவிரமடைந்தன. இக்கால கட்டத்திற்குப் பிறகு, 1926வரை நடைபெற்ற மாப்பிள்ளைமார் கலவரத்தில் மலைப்புரம் பாலக்காடு மாவட்டங்களில், குறிப்பாக வள்ளுவ நாடாள்வானின் பூர்விக ஆட்சிப் பகுதியில் பல கோயில்கள் இடிக்கப்பட்டு, ஆவணங்கள் எரிக்கப்பட்டு, நம்பூதிரி ஜன்மிகள் - நாயர்கள் கூட்டணியினர் கொல்லப்பட்டு மிகப்பெரும் அராஜகம் அரங்கேறிற்று.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துருக்கியில் தோன்றிய கிலாபத் இயக்கத்தின் வெற்றி இப்பகுதி மாப்பிள்ளைமார் முஸ்லிமளுக்கு மிகப்பெரும் உத்வேகத்தை அளித்தது. மாப்ளாஸ்தான் என்ற பெயரில் நம்பூதிரி ஜன்மி - நாயர் கூட்டணியிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றித் தங்கள் சுயாட்சியின் கீழ்க் கொண்டுவருகின்ற ஆவேசமும், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபடுகின்ற முனைப்பும் இணைந்து ஒரு சுதந்திரப் போராட்டம் போன்ற தோரணையில் இது நிகழ்ந்தது. மாப்ளா கலவரம் என வழங்கப்படுகின்ற இக்கலவரம் ஆங்கிலேய அரசால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது என்பது உண்மையே. ஆயினும், வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இக்கலவரத்தில் வரலாற்றுத் தடயங்கள் பல அழிக்கப்பட்டமை மிகப் பெரிய சோகமான நிகழ்வே ஆகும்.

இராஜராஜ சோழனால் எந்தக் காந்தளூர்ச்சாலை ஒரு கலமாக, வில்லங்கமாகக் கருதி அழிக்கப்பட்டதோ அக்காந்தளூர்ச்சாலை மலைப்புரம் மாவட்டம் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூர்தான் என்ற உண்மை கேரள வரலாற்று ஆசிரியர்களுக்குக்கூடப் புலப்படாமல் போனதுதான் மிகப் பெரும் விந்தையாகும்.

அடிக்குறிப்புகள்:

[1] South Indian Inscriptions, Vol. III, No. 205.

[2] வரி. 5-7, பக். அ-11. பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிலையம், சென்னை-115, 1999. “பார்த்திவசேகரபுரம் என்று பேர் இட்டு காந்தளூர் மர்யாதியால் தொண்ணூற்று ஐவர் சட்டர்க்கு சாலையும் செயதான் ஸ்ரீகோக்கருநந் தடக்கன்”

[3] South Indian Inscriptions, Vol. VII, No. 430.

[4] 1836-37ஆம் ஆண்டில் ஜே.பி. ராட்லரால் தொகுக்கப்பட்ட A Dictionary Tamil and English அகராதியில் கலன் என்ற சொல்லுக்கு Controversy, Dispute, Claim, Pretension, Law suit என்றும், கலன் தீர்த்தல் என்ற தொடருக்கு Indemnify என்றும் பொருள் கூறப்பட்டுள்ளன. p. 42, Part II, Dictionary Tamil and English, International Institute of Tamil Studies, Taramani, Chennai-113, 2000.)

[5] தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன்பேட்டைக் கல்வெட்டு, South Indian Inscriptions, Vol. XIII, No. 250.

[6] பெருமகன் என்ற சொல்லின் திரிபாகிய ‘பெருமான்’ என்பதே கோதை என்ற சேர குலப் பட்டத்துடன் இணைந்து பெருமாக்கோதை எனப்பட்டது. பெருமாக்கோதை என்பது ‘பெருமாள்’ என்றும் சுருக்கிக் கூறப்படும். பெருமகன் என்ற தமிழ்ச் சொல்லே இலங்கையிலுள்ள சிங்கள பிராமிக் கல்வெட்டுகளில் ‘பருமுக’ என்ற வடிவில் இடம்பெற்றுள்ளது. இப்பட்டமே பருமன், வர்மன், பன்மன் எனப் பலவித வடிவங்களில் சத்திரிய வர்ணத்தவனைக் குறிக்கும் பட்டமாக (Surname) வழங்கிற்று. வர்மன் என்பது பிராம்மணர்களுக்குரிய பட்டமென்று தமிழக அமைச்சர் பெருமகன்(?) ஒருவர் தஞ்சையில் அண்மையில் பேசியுள்ளார். தமிழகத்தில் நிலவும் ஆய்வு வறுமையை இது உணர்த்துகிறது.

[7] கேரளோல்பத்தி, கேரளம் பரசுராம க்ஷேத்ரமாக மாறிவிட்ட பின்னர் எழுதப்பட்ட நூலாதலால், க்ஷத்ரிய வர்ணத்தவர்க்கு முதன்மையளிக்காமல், 32 பிராம்மண ஊர்ச் சபையார் மாமாங்கத்தில் (மகாமகத்தில்) சேரமான் பெருமாளாகத் தேர்வு செய்யப்படுபவரை அங்கீகரித்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும், கடைசிப் பெருமாள் அரசர், மாமாங்கம் நடத்தும் பொறுப்பினை வள்ளுவக் கோனாத்ரி (வள்ளுவக்கோன் திருப்பாதம் மருமக்கள் வழி அரசர்) வசம் விட்டுச் சென்றதாகவும், பின்னர் கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்) அவரிடமிருந்து இப்பொறுப்பினைப் பறித்துக் கொண்டதாகவும் கூறுகிறது. பார்க்க: The Special Features of Chera Inscriptions, M.G.S. Narayanan, in the Journal of the Epigraphical Society of India, Vol. XXIV, Editor: M.D. Sampath, Mysore-570012, 1998.

[8] A Descriptive Memoir of Malabar, Lieutenants Ward and Conner, Kerala Gazetteres, Govt of Kerala, 1995.

[9] கேரள வரலாற்றறிஞர் திரு. எம்.ஜி.எஸ். நாராயணன் அவர்கள் காந்தளூர்ச்சாலை என்பது பிராம்மணர்களுக்குப் போர்ப் பயிற்சி – நிர்வாகப் பயிற்சி வழங்கிய கல்விச் சாலையாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார். இக்கருத்து ஏற்புடையதாகாது. பார்க்க: Kandalur Salai – New Light On the History Of Aryan Expansion in South India, Proceedings of the Indian History Congress, 32nd Session, Jabalpur, 1970.

[10] Epigraphia Indica Vol. XIII, p. 146.

[11] பெருமாள் மன்னர்கள் தமது தலைநகரான திருவஞ்சைக் களத்தில் இருந்த கோயில்களின் நிர்வாகத்தை மட்டுமே தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என எம்.ஜி.எஸ். நாராயணன் கருத்துத் தெரிவித்துள்ளார். பார்க்க: The Special Features of Chera Inscriptions, முன் சுட்டிய கட்டுரை.

[12] Travancore Archaeological Series, Vol. II, p. 10, Editor: T.A. Gopinatha Rao, Department of Cultural Publications, Kerala, 1992.

[13] History of Dharmasastras, P.V. Kane.

[14] பக். 14-15, தென்ன்னிந்தியக் கோயில் சாசனங்கள், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, 1957.

[15] Travancore Archaeological Series, Vol III, Part 1, No. 54, K.V. Subhramania Iyer, 1921.

[16] கோமாறஞ் சடையனின் ஆட்சிக் காலத்து நடுகல். Travancore Archaeological Series, Vol. I, p. 232, Editor: T.A. Gopinatha Rao, Department of Cultural Publications, Govt. of Kerala.

[17] கல்வெட்டாய்வாளர் வி. வெங்கையா அவர்கள் இத்தகைய கருத்தினைத் தெரிவித்துள்ளார். பார்க்க: Footnotes 14, 15. Chapter IX, Colas, K.A.N. Sastry.

[18] South Indian Inscriptions, Vol VII, No. 863.

[19] ராஜராஜன் ஒள்ளெரி கொளுவிய உதகை எது? செந்தீ. நடராசன், பழங்காசு இதழ் 5, பக். 49.

[20] செருவினற் சினவி இருபத்தொரு கால் அரசு களைகட்ட பரசுராமன் மேவரும் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்…தண்டாற்கொண்ட கோப்பர கேசரி வர்மன். – முதல் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி. பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

[21] Annual Report on Epigraphy 363/1917.

[22] முதற் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை நிர்வகித்துவந்த சோழ அரச குல ஆளுநர்களாகிய கங்கைகொண்ட சோழ பெருமாக்கள் வம்சத்துச் சோழ-பாண்டியர்களை ஒடுக்குவதற்குப் பாண்டிய அரச குலத்தைச் சேர்ந்த பராந்தக பாண்டியனைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், குலோத்துங்கன் தாய் வழியில்தான் சோழனே தவிர, தந்தை வழியில் சாளுக்கியன் ஆவான். அதனால்தான் போலும், குலோத்துங்கனுக்குக் கடன்பட்டிருந்தால்கூட சுயாட்சி நடத்துகின்ற ஒரு பேரரசருக்குரிய தோரணையுடன் பராந்தக பாண்டியன் தனது மெய்க்கீர்த்தியைப் பொறித்து வைத்துள்ளான்.

[23] Travancore Archaeological Series, Vol. 1, p. 49.

[24] Travancore Archaeological Series, Vol. 1, p. 55.

[25] வரலாறு – இதழ் 6, இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சி-17.

[26] திருமூழிக்களம் குலகம் (கோயிலகம்) க்ஷத்திரிய சபையே என்பது கேரள தேச வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. P. 10, Edited: T. Chandrasekaran, Govt Oriental Manuscript Library, Chennai-5, 1960. இவ்விவரம் பற்றி மேலும் அறிவதற்குப் பார்க்க: p. 231, Chapter 6, Travancore State Manual, R. Nagamayaa; pp. 266, 274-275, 371, Vol II, Part I, Kerala State Gazetter, Adoor K.K. Ramachandran Nair, Govt of Kerala, திருமூழிக்களம் என்பது பிராம்மணக் குறுங்குழுவால் நிர்வகிக்கப்பட்ட சபை என்று கேரள வரலாற்று அறிஞர்கள் சிலர் தவறாகக் கருதுகின்றனர்.

[27] கோட்டயம் மாவட்டம் எட்டிமானூர் வட்டம் குமாரநல்லூர் பகவதி கோயிற்கல்வெட்டு – கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. Travancore Archaeological Series, Vol. III, Part I, No. 49. இத்தகைய ஓம்படைக் கிளவி கேரள மாநிலம் முழுமையும் பல கோயிற் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

[28] pp. 641-2, Vol. II, part 1, The History of Dharamsastras, P.V. Kane, Bandarkar Oriental Research Institute, Pune-411004, 1997.

[29] பக். 231, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், செ. இராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.

[30] முத்தூற்றுக்கூற்றம் கள ஆய்வு, எஸ். இராமச்சந்திரன், ஆய்வு வட்டக் கட்டுரைகள், தொகுதி-1, ஆய்வு வட்டம், சென்னை, 1995.

சனி, 2 அக்டோபர், 2010

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்
28 Sep 2010 12:29,

சிவகாசி, செப். 27: அடிப்படை வசதி கோரி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பில், சிவகாசியில் திங்கள்கிழமை உண்ணாவிதரப் போராட்டம் நடைபெற்றது. ரிசர்வ் லயனிலிருந்து ஆனையூர் வரை சாலையை செப்பனிட வேண்டும்.ஆனையூர், அய்யம்பட்டி, எ. லட்சுமியாபுரம், காந்திநகர், இந்திராநகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவேண்டும்.கிராம நிர்வாக அலுவலகம் ஆனையூரில் இயங்கவேண்டும். ஏ.லட்சுமியாபுரத்திலிருந்து ஆனையூர் ஒத்தப்புலி வரை சாலையோர மின்விளக்குகளை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் எம். முருகேசபாண்டின் தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலர் இ. ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி வி. மாணிக்கம், காந்திநகர் நாட்டாமை சுப்பையன், ஏ.லட்சுமியாபுரம் நாட்டாமை எம். தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டது.