ஞாயிறு, 27 மார்ச், 2011

THANKS TO DINAMANI

தஞ்சாவூர், மார்ச் 26: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான சனிக்கிழமை 40 பேர் வே ட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவிடைமருதூர் தொகுதியில் சுயேச்சையாக ஜெ. குடந்தையரசன், டி. சுபாஷ் சந்திரபோஸ், எஸ். ரவிச்சந்திரன், வி. இளையராஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கும்பகோணம் தொகுதியில் பி. சுப்பிரமணியன், ஆர். மோகன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளராகவும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் எம்.பி.எஸ். தட்சிணாமூர்த்தியும், பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக ஆர். மணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாபநாசம் தொகுதியில் ஏ. தமிழ்ச்செல்வன், ஏ.எம். ராஜா, பி. அரசன், குழந்தைவேலு, எம். ராஜ்முகமது ஆகியோர் சுயேச்சையாகவும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர். திருமேனி, பாஜக மாற்று வேட்பாளராக வாசுதேவன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவையாறு தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் டி. ராஜேஸ் கண்ணா, ஒரத்தநாடு தொகுதியில் கே. பரமேஸ்வரி ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் ராயர் விக்டர் ஆரோக்கியராஜ், அவருக்கு மாற்றாக பி. சரவண ஆனந்தன், இலங்கைத் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ. பாலு என்ற பாலன், சுயேச்சையாக ஜி. இளவரசன், கே. முத்துக்குமரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சி. இன்பரசன், சுயேச்சையாக ஏ.ஆர். யோகநாதன், எஸ். செந்தில்குமார், ஏ. சரவணன், எம். அப்துல் ரகுமான், ஆர். சண்முகம், ஏ.ஆர்.எம். கோவிந்தராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சி

சார்பில் கே. மகேந்திரன், அவருக்கு மாற்றாக ஆர். செல்வம், சுயேச்சையாக

எம். ஆறுமுகம், சி.என். சந்திரமோகன், பி. கண்ணன், டி. ஜெயகுமார், ஏ. முத்துகுமரன், எம். பாலசுப்பிரமணி, வி. பரதன், டி. தமிழ்செல்வி, கே. தங்கமுத்து ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக