ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில் முத்தரையர் சங்க கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
கருப்பையா, முனியசாமி,முனீஸ்வரன், ஆறுமுகம்,இளைஞர் பேரவை தலைவர் முருகேசன் உட்பட பலர் பேசினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தவும், இந்தியா-இலங்கை இருநாடுகளுக்கிடையே கடல் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாலுகா தலைவராக சுந்தர்ராஜன், துணைத்தலைவர் குமரேசன், செயலாளர் களஞ்சியராஜ், துணைசெயலாளர் குருசாமி, பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
THANKS: DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக