திங்கள், 28 மே, 2012

சோழநாடு முன்னேற்ற கழக 2ம்ஆண்டு துவக்கவிழா - நன்றி: தினகரன்

தஞ்சை: சோழநாடு முன்னேற்ற கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் அலுவலக திறப்புவிழா தஞ்சையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் தமிழரசன் வரவேற்றார். தஞ்சை நகரை உருவாக்கி தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கு தஞ்சையில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்டிற்கு பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் பெயர் சூட்ட வேண்டும் என தமிழகஅரசை கேட்டுக்கொள்வது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாரிமுத்து, அய்யப்பன், சுதாகர், ஜெயக்குமார், செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக