சனி, 19 மே, 2012

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!!

எனது அன்பிற்கினிய தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள்... !!

நாளது நாள் (23 MAY 2012), பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 ம் ஆண்டு பிறந்த தின விழா...... தமிழமெங்கும் உள்ள நமது இன சகோதர்களால் எழுச்சியோடு கொண்டாட உள்ள இந்த நேரத்தில்... நாம் கடந்த பல வருடங்களாக எதிர் நோக்கி இருந்த சாதிவாரியான கணக்கெடுப்பு இந்திய மத்திய அரசால் தொடக்கி நடந்து வருகின்றது, அதில் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இந்த கணக்கெடுப்பின் மூலம் சரியான தகவலினை பெற முடியாது என்பது கசப்பான உண்மை, காரணம் இதில் ஒருவருடைய சாதி எது என்று கேட்கப்படும் போது, அவர் எதனை கூறினாலும் எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் இதில் நிறைய தவறுகள் நடக்கவும் ( உதாரணமாக சாதிகளுக்கான இட ஓதிக்கீடில் பயன் பெற்ற ஒருவர் நான் சாதியற்றவன் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் ), நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் இதனால் முழுமையான பயனைப் பெற முடியாது என்பதனால் இந்த கணக்கெடுப்பை இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் நிராகரிக்கிறது. மேலும் தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் உள்ள சாதிகளை உள்ளது உள்ளப் படியே சரியான முறையில் கணக்கெடுப்பை நடத்தி சரியான இட ஒதிக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

மேலும் தற்சமயம் புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில், அந்த தொகுதில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டி வருமே என்ற காரணத்தால் தேர்தலைப் புறக்கணிக்கும் தி.மு.க, இனி தமிழகத்தில் நடைப் பெரும் எல்லா இடைத் தேர்தல்களையும் புறக்கணிக்குமா ? புதுக்கோட்டை தொகுதில் மட்டும் அல்லாமல் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள முத்தரையர்கள் பெரும்பாலனவர்கள் அ.தி.மு.க வில் உள்ள போது வேறு இனத்தவருக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயமா ? முத்தரையர்களை என்றுமே மதிக்காத / அவர்களின் வெற்றி வாய்ப்புள்ள எல்லா தொகுதியிலும் மாற்று இனத்தவரை வேட்ப்பாளராக்கும் தே.மு.தி.க விற்கும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் முத்தரையர் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக களம் காணும் மரியாதைக்கு உரிய திரு. சிவப்பிரகாசம் அவர்களுக்கு நிபந்தனைகள் இல்லாத ஆதரவினை என் முத்தரையர் இனம் வழங்க வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் பணிவோடு வேண்டுகிறது.

இந்த இனிய நாளில் எனது இனத்தின் அத்தனை உறவுகளுக்கும் எங்களது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த பொன்னான நேரத்தில் எமது இளைய தலைமுறை " குடி பழக்கத்தை துறப்பதாக" ஒரு சபதம் எடுத்து நாளைய தமிழகத்தை நாமே வழிநடத்த உங்களை அன்புடன் வேண்டுகிறோம் என்றும் உங்கள்....!!!



அன்புடன்....
K.சஞ்சய்காந்தி B.Com
ஒருங்கிணைப்பாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

M.காந்தி B.E.,
செயலாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9003834321

R.தேவா (எ) சுரேஷ் M.Sc.,
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9677547381

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக