புதன், 29 ஆகஸ்ட், 2012

கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

திருச்சி, ஆக. 27: கிளிக்கூடு- இடையாற்றுமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என முத்தரையர் வளர்ச்சி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அந்த சங்கத்தின் தலைவர் ஏ. அருணாசலம் மனு அளித்தார்.

இதேபோல, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோவில் அருகே சாலையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டது.


- தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக