வியாழன், 20 செப்டம்பர், 2012

உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?

நம் சமுகம் மக்கள் தொகையல் அதிகமாகவும்,

அரசியல் மற்றும் பொருளாதார நிலையில்.அதிகம் தாக்கம் இல்லாமல் உள்ளோம்.தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் நமக்கு உள்ள செல்வாக்கு நாம் அறிந்ததே.
இந்த நிலையேல் தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் இல்லாத இந்து மத அமைப்பினர், தங்கள் அரசியல் வளர்சிக்கு.அதிக வாக்கு வங்கிகளை உடைய நம்மை குறிவைகிறார்கள்.இதற்காக ஒரு சில மாவட்ட பொறுப்புகளை நம் இனத்தவர்களுக்கு கொடுத்து நம்மை தன் வசபடுத்துகிறார்கள்.அதிகம் உணர்ச்சி களுக்கு தகுந்து, சிந்திக்காமல் முடிவு எடுக்கும் நாம் பல மதரீதியான பிரச்சனைகளில் மாட்டவைகபடுகிறோம்..

நாம் சிந்திக்கவேண்டிய பல வினாக்கள் நம் முன் உள்ளது.
 

1) நமக்கு உண்மையேல் எதிரி யார்? முஸ்லிமா,கிறிஸ்தவர்களா ?
 
 
 
 

2 ) அப்படி அவர்கள் தான் காரணம் எனில். எனில் நாம் இத்தனை ஆண்டுகளாக அணைத்து துறைகளிலும் பின் தங்கி ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு காரணம் யார்?
 

3) நம் வளர்ச்சில் இந்த அமைபினற்கு உண்மையான கரிசனம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
 

4) உள்ளூரில் சக இந்து (சாதி அமைப்புகளிடம்)அரசியல்,பொருளாதார நிலமையல் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாத நம்மால், இந்த மிகப்பெரிய அமைப்பு ரீதியான இவர்களிடம் வெற்றி பெறுவது எளிது என்று நம்புகிறீர்களா?

நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)


5) நாம் சீரும் சிறப்பாக வாழ்ந்த நம் மன்னர்களின் காலத்தை, இருண்ட காலம் என்று ஒற்றை வரியல் சொல்லி.நம் இனத்தையே கல்வி அறிவு இல்லாமல் பல நூற்றாண்டுகள் விவசாய கூலிகளாக மாற்றிய இவர்களிடம், நாம் உண்மையான கரிசனத்தை எதிர்பார்க்க முடியுமா?

..நமக்கு எதிரி நம் அறியாமை தான்...மற்ற இனத்தவர்கள் அல்ல? .சிந்திப்போம். சிந்திப்போம், உண்மையான சுய சிந்தனையுடன்,கல்வி அறிவுடன் பொருளாதார அரசியல் வளர்ச்சியை அடைவோம்...நல்ல மரியாதையைஇகு உரிய இந்துவாக வாழும் வாய்பு கிடைக்குமா, அதற்கு மத்த சாதி அமைப்பிலிருந்து உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்று முதலில் போராடுவோம்.
வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.
இப்படிக்கு முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்கள் அமைப்பு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக