சனி, 6 அக்டோபர், 2012

முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07





முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
இரண்டாவது வருடமும் இதோ முடியப் போகிறது, இதுவரை யார் உண்மை குற்றவாளி என்று எமக்கு தெரியவில்லை, விசாரணை நடத்தப் படுகிறதா ? என்றும் தெரியவில்லை, யாருக்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்தாரோ அந்த மக்களும் மறந்துப் போனார்கள், யாருக்காக தன் மூச்சு நிற்க்கும் வரை விசுவாசமாக இருந்தாரோ அவர்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தும், இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்று அறிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆர்வம் கூட இல்லை, இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி யோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்தும் அது பற்றிய அக்கறையோ, ஆர்வமோ அரசாங்கத்திற்க்கு இல்லாமல் போய்விட்டது, படுகொலை நடந்த அடுத்த 15 தினங்கள் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தினை ஸ்தம்பிக்க வைத்த முத்தரையர்கள் பின்னர் ஏனோ இதனை மறந்து போனார்கள், முத்தரையர் இனத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்து இந்த மாபாதகத்தை செய்த பதருகளே, ஒன்றை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள், வீழ்வதும், எழுவதும் எமக்கு புதிதல்ல எம்மை நிரந்தரமாக வீழ்த்திவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்..!! யாம் எழும் நாள் தொலைவில் இல்லை இந்த நேரத்திலும் நாம் தமிழக அரசினையும்/ தமிழக முதல்வரையும் வேண்டுகிறோம், உங்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும்,உங்களால் அமைச்சராக்கியும், மாநில அமப்புச் செயலாளராகவும் அழகு பார்க்கப் பட்டவர், முத்தரையர் இனத்தின் பாதுகாவலனாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டு ஆகின்றது, உங்கள் மேல் இத்தனை மரியாதையையும், பாசத்தையும் வைத்தவர் யாரால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் தானே அறிந்து கொள்ள வேண்டும் ? உங்களுக்காக தானே உழைத்தார் ? இனியும் தாமதிக்காமல் இப்பொழுதாவது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதுதான் அவரால் உங்களுக்கு ஆதரவாளரார்களாக மாற்றப்பட்ட முத்தரையர்களுக்கு நீங்கள் செய்யும் பிரதிகரமாக இருக்கும், முத்தரைய பெருமக்களே...!! நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் நம்மை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டே இருக்க போகிறோம்.. ? நமக்கான அரசியல் என்ன ? நம் இனத்தவர்களுக்கு ஏன் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன ? ஊருக்கு ஊர் வெட்டிப் பெருமை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசப் போகிறோம் ? ஒருபக்கம் இளைய தலைமுறை குடிப் பழக்கத்திற்க்கு அடிமையாக்கப் படுகிறது, மறு பக்கம் நமக்கான அரசியலை ஏற்று நடத்த சரியான தலைமை இல்லை, இன்னும் சொல்லப் போனால் வருகின்ற தலைமைகள் கூட தங்களின் சுய லாபத்திற்காக நம்மை மற்றவர்களிடம் அடகு வைத்துவிடுகிறது, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன ? நாம் தெளிவடைவது எப்போது ? அக்டோபர் 7 ந் தேதியுடன் ஆண்டுகள் இரண்டு ஆகிறது, நம்முடைய மாவீரன் நம்மை விட்டு சென்று முத்தரையர் இனமே.. !! உனக்காக உழைத்திட்ட, உன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் பாதுகாக்க மறந்த மாவீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உங்களை வேண்டுகிறோம், அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..!! என்பதை நாம் அறியாததல்ல...
மாவீரனே...! உன்னை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. ! உன்னை எங்களிடமிருந்து பிரித்தவர்களை மன்னிக்கவும் மாட்டோம் என்றும் உன் வழியில் ........
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக