காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு தண்ணிரோடு பிரச்சனைகளையும் சிலருக்கு அரசியலையும் தரும் தமிழகத்தில் ஜீவ நதிகளை கடந்து... நமக்கு தண்ணிரை தாரளமாக தருபவள் பூமித்தாய், தாய்தானே என்று அவளின் மார்பில் துளையிட்டு தண்ணீரை உரிமையோடு உறிந்து கொண்டிருக்கிறோம், சாதாரமான ஒரு சிறு கணக்கிட்டு நோக்கினால் .... தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடி சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைய பயன்பாடு 40 லிட்டர் என்று வைத்துக்கொள்வோம், 80000000 x 40 = 3,200,000,000 லிட்டர், இதில் குடி நீர், சமையல் பயன்பாடு கழித்துப் பார்த்தால் ஒவ்வறுவரும் சுமார் 25 லிட்டர் தண்ணீரை பிர பயன்பாடுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள், முன்புபோல் இப்பொழுதெல்லாம் யாரும் ஆற்று நீரையோ (வந்தால்தானே..?) குளத்து நீரையோ, குளிக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு உபயோகிப்பதில்லை, அப்படியானால் ஒவ்வருவறும் ஒரு நாளைக்கு 25 லிட்டர் நீரை ( 25 x 2,000,000,000) பூமியில் இருந்து உறியப்படும் நீரைத்தான் பயன்படுத்துகிறோம், இதற்கான மாற்றுவழி என்ன ? ஒவ்வறு வருடமும் இரண்டு லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள், இவர்களில் இவற்றைப் பற்றி சிந்திக்க தெரிந்தவர்கள் ஒருவர் கூடவா இல்லை ? கம்யூட்டரும், ஆட்டோமொபைலும் நாளைய தேவைகளுக்கு போதுமா ? தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் ? குடிக்க/ சமைக்க தவிர பிற தேவைகளுக்காக கடல் நீரை பயன்படுத்த வழி உள்ளதா ? அல்லது உபயோகித்த நீரை மீண்டும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் எளிமையாக்கப் படுமா ? இதற்கான தீர்வினை யார் தருவார் பூமிதாய் மிகவும் பொருமையானவள் எவ்வளவு வேண்டுமானாலும் உறிந்துக் கொள்ளுங்கள்.. !!!! அதே நேரம் நினைவில் கொள்ளுங்கள் அவள் பொறுமை இழக்கும்போது அவளை மனசாட்சி இல்லாதவள் என்று நா கூசாமல் நாம் தீட்ட வேண்டி வரும்..!! நாம் செய்த தவறை மறந்து...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக