புதுக்கோட்டை, : புதுக்கோட்டை ஒன்றியம் வாரப்பூர் ஊராட்சி நெரிஞ்சிப்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
மாநில பேச்சாளர் மூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் வீரையா, மாநில பொதுச் செயலாளர் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர், மாணவரணி செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில பேச்சாளர் மூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் வீரையா, மாநில பொதுச் செயலாளர் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர், மாணவரணி செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
NEWS FROM : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக