திங்கள், 19 ஆகஸ்ட், 2013

15% இட ஒதுக்கீடு வேண்டும் முத்தரையர் சங்கம் வலியுறுத்தல்





கரூர், : 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட அமைப்புக் குழு ஆலோ சனைக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. சங்க பொதுசெயலாளர் மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். வெங்கட், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, காத்தவராயன், வக்கீல் சீனிவாசன், தீரன்அறிவழகன், ராமமூர்த்தி, ரமேஷ், விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். அமைப்புக்குழு தலைவராக வெங்கட், செயலாளராக சபரீசுவரன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முத்தரையர்கள் உட்பிரிவினரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண் டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அக்டோபரில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது, டிசம்பரில் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக