திங்கள், 9 ஜூன், 2014

கோவில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கற்பக விநாயகர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, ஜூன் 8ம் தேதி, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன், முதல் காலயாக பூஜை துவங்கியது. நேற்று காலை, 2ம் காலயாக பூஜை முடிந்தவுடன், கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் கோவிந்தன், பாம்பன் பரதவகுல தலைவர் சைமன், மீனவர் சங்க தலைவர்கள் இருதயம், எஸ்.பி. ராயப்பன், ராமேஸ்வரம் தாலுகா முத்தரையர் சங்க தலைவர் சுந்தர்ராஜன், கிராம நிர்வாகிகள் களஞ்சியம், முனீஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக