புதன், 24 செப்டம்பர், 2014

மாணவர்கள் சீரழிவதைத் தடுக்க ஆபாச இணைய தளங்களை முடக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமையில் நடந்தது.
சாமி விஸ்வநாதன், தங்கசங்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். பெரியகோபால் வரவேற்றார். தீர்மானங்களை விளக்கி மாவட்ட தலைவரும் பொது செயலாளருமான மரு.பாஸ்கரன் பேசினார்.
கூட்டத்தில் முத்தரையர்கள் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதால் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த திட்டமிட மாநில அளவிலான பிரதிநிதிகள் மாநாட்டை நவம்பர் மாதம் திருச்சியில் நடத்துவது,
முத்தரையர் சங்கம் சார்பில் மதுவின் தீமைகளை எடுத்து கூறி ஊர்கள் தோறும் பிரச்சாரம் செய்து மதுவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் இனைந்து போராட்டங்களில் கலந்து கொள்வது, திருச்சி முக்கொம்பில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணி மண்டபம் அமைத்திட தமிழக முதல்–அமைச்சரை கேட்டும்,
இளம் வயது மாணவர்கள் சீரழிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆபாச இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுப்பதுடன், போலீசார் ஆபாச படங்கைளை பதிவிறக்கம் செய்து கொடுக்கும் கம்ப்பயூட்டர் மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கேட்பது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முத்தரையர் சங்கம் எப்போதும் ஆதவராக இருப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக