வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆலங்குடி அருகே முத்தரையர் சங்க கூட்டம்


ஆலங்குடி,: முத்தரையர் சங்க கூட்டத்தில் கனிமொழி எம்பிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள திருமலைராயசமுத்திரத்தில் முத்தரையர்  சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் திருமலைநம்பி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் எந்த ஒரு பல்கலைக் கழகத்திற்கும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த யாருக்கும் துணைவேந்தர் பதவி வழங்கப்படவில்லை. எனவே பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற பல பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தரையருக்காகக் குரல் கொடுத்தமைக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக