திங்கள், 10 நவம்பர், 2014

தமிழக காங்கிரசில் அடுத்த பிளவு: கலகலப்பூட்ட புதுகட்சி துவக்கம்

தமிழக காங்கிரசில், முன்னாள் மத்திய அமைச் சர் வாசன் தலைமையில் பிளவு ஏற்பட்டு, ஒரு வாரம் ஆகாத நிலையில், அடுத்ததாக, ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குறளரசு ஜெயபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் செங்கை செல்லப்பன் ஆகியோர் தமிழக காங்கிரசிலிருந்து விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை இன்று, துவக்குகின்றனர்.எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளோடு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலும் இருந்தவர் குறளரசு ஜெயபாரதி, தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர், செங்கை செல்லப்பன். இவர், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் தலைவராக இருந்தார். இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்.இவர்கள் இருவரும், தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புது கட்சியை துவக்குகின்றனர். கட்சின் துவக்க விழா, சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, குறளரசு ஜெயபாரதி கூறியதாவது:தமிழக காங்கிரசில், முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால், இரண்டு சமூகத்தவர்களையும் போற்றும் விதமாக, காங்கிரசிலிருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பிக்கிறோம். தமிழகத்தில், புதிய கட்சி காங்கிரசுக்கு மாற்றாக இருந்து செயல்படும்.காங்கிரசை வீழ்த்துவது தான், எங்களின் பிரதான நோக்கம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக