திங்கள், 16 மார்ச், 2015

கல்லூர் அருகே சமுதாய கொடியேற்ற முயற்சி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலங்குடி, :  புதுக் கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் அருகே சமுதாய கொடி யேற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமத்தில் கல்லூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட் பட்ட சுதந்திராபுரம் பகுதி யில் காலனி ஒன்று 1973ம் ஆண்டில் உருவாக்கப்பட் டது.  இங்கு இந்தியாவை வம்சாவழியாகக் கொண்டு இலங்கை சென்று வந்தவர்களுக்கு விவசாயத்துக்கும், வீடு கட்டவும் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஒவ்வொரு குடும் பத்தினருக்கும் தலா 3 ஏக் கர் நிலமும், வீடு கட்ட 5 சென்ட் நிலமும் அரசு வழங்கியது. இதையடுத்து, இந்த இடத்தில் இலங்கையில் இருந்து வந்த 135 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 

இவர்களில் சிலர் இங்கிருந்து பிழைப்புக்காகச் சென் றுள்ள நிலையில் புதி தாக பல்வேறு சமூ கத்தை சேர்ந்தவர்கள் குடி யேறி வசித்து வருகின்ற னர். இந்நிலையில்,  மிகவும் பின்தங் கிய நிலையில் உள்ள மக் களை ஒன்றிணைக்கும் பொருட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங் கக் கிளை யைத் துவக்கிவைக்கவும், கொடியேற்ற வும் நேற்று காலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கொடி யேற்ற வந்த அச்சங்கத்தை சேர்ந்த நடிகர் ஆர்வி பர தன் கொடியேற்றாமல் அப்பகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் கலந்துரை யாடி விட்டு சென்றார். இதனால் அங்கு ஏற் பட்ட பரபரப்பை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.


News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக