காரைக்குடி கழனிவாசல் பகுதியிலுள்ள மயானத்தை வியாழக்கிழமை அகற்ற முயன்ற ஊராட்சி நிர்வாகத்தினரை, அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியிலுள்ள மயானத்தை வியாழக்கிழமை அகற்ற முயன்ற ஊராட்சி நிர்வாகத்தினரை, அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.
கழனிவாசல் பகுதியில் முத்தரையர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியினர் பயன்படுத்தி வரும் மயான இடத்தை, சங்கராபுரம் ஊராட்சிக்குச் சொந்தமானது எனக் கூறி, நிர்வாகத்தினர் அப்பகுதியை சுத்தம் செய்துள்ளனர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும், காரைக்குடி வட்டாட்சியர் ராஜேந்திரன், காரைக்குடி வடக்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமரசப்படுத்தினர். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக